Tuesday, December 10, 2013

கமல்பாணி ஹீரோயிசத்தில் வந்த முதல் திரைப்படம்

உத்தம புத்திரன்  - தமிழிம்  முதல் இரட்டை வேட  ஹீரோயிச படம்

 நடிப்பு         : பியூ சின்னப்பா , எம் வி ராஜம்மா , பாலையா, என் எஸ் கிருஷ்ணன் , மதுரம் , காளி ரத்திரனம்

 இயக்கம்   : டி ஆர் சுந்தரம்

தயாரிப்பு   : மாடர்ன் தியேட்டர்ஸ்

கதை     :  அரசருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் . ஆட்சிக்கு வந்து விடும் கெட்ட சகோதரனை வீழ்த்தி நல்ல சகோதரன் ஆட்சியை பிடித்து மக்களுக்கு நல்லது செய்கிறான்..

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

**************************************************************************

தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேட படம் என கருதப்படும் படம் உத்தம புத்திரன் ( 1940 ).  ஆனால் 1935லிலேயே துருவன் என்ற படத்தில் இரட்டை வேடம் வந்து விட்டது என்கிறார் திரைப்பட அறிஞர் தியடோர் பாஸ்கரன். ஆயினும் போதிய ஆதாரங்கள் இன்மையால் , உத்தம புத்திரன் படத்தையே முதல் இரட்டை வேட படமாக அதிகாரபூர்வமாக   ஏற்று இருக்கிறார்கள்..

  நமக்கு இந்த பட பிரதிகள்தான் கிடைக்கின்றன என்பதால் , இதைத்தான் அந்த கால ரசனைக்கு ஓர் ஆவணமாக கருத வேண்டி இருக்கிறது.. மேலும் இந்த படம்தான் கமல்பாணி ஹீரோயிச நடிப்புக்கு ஒரு டிரண்ட் செண்டராகவும் அமைந்து இருக்கிறது.

கமல்பாணி ரஜினிபாணி என இரண்டு பாணிகள் என்றென்றும் நம் ரசனையில் உண்டு..இதில் எது உயர்ந்தது எது தாழந்தது என அந்தந்த ரசிகர்கள் அவர்களுக்கு சாதகமாக சொல்வார்கள்..

ஆனால் நடு நிலையுடன் பார்த்தால் , இதில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை...சிலரை காரணம் இன்றி பிடித்து விடும்..பெரிய பிளஸ் பாயிண்ட் இல்லாததேகூட அவரை நம்முடன் அடையாளப்படுத்திக்கொள்ள செய்து விடும்.. நம்மில் ஒருவராக அவரை நினைத்துக்கொள்வோம். 
அழகு , திறமை. முறையான நடிப்பு பயிற்சி , நடனம் என கமலின் ப்ளஸ்களில் ஒன்றுகூட இல்லாத ரஜினி தனது தனித்துவ திறமையால் கமலையும் மிஞ்சி ஜெயிக்கிறார் இல்லையா ...இது ஒரு பாணி..

முதல் இடம் இரண்டாம் இடம் என அலட்டிக்கொள்ளாமல் பல்துறை திறமையை தொடர்ந்து முன் வைத்து தனக்கு என ஓர் இடத்தை உறுதி செய்வது ஒரு பாணி. இன்றைக்கும் தன் பாணியை விட்டுக்கொடுக்காமல் , தொடர்ந்து கற்று , தொடர்ந்து புதிய முயற்சிகளை கமல் செய்கிறார் இல்லையா...இது ஒரு பாணி...

இந்த இரண்டாவது பாணியை தமிழ் சினிமாவில் உருவாக்கிய முதல் நடிகர்தான் பி யூ சின்னப்பா..
அன்றைய நிலையில் நம்பர் ஒன் தியாகராஜ பாகவதர்.. உங்களுடன் ஒரு நாள் மனைவியாக வாழ்ந்து விட்டு அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறேன்..என்னை ஏற்று கொள்ளுங்கள் என அவருக்கு பெண்களிடம் இருந்து கடிதங்கள் குவியுமாம்.  அவர் சீவிய சீப்பை போற்றி பாதுகாத்த ஆண்கள் , அவர் செல்வாக்கை கண்டு நேருவே வியந்தது என பல சம்பவங்கள்...
ஆனால் அவர் நடிப்பு , நடனம் . சண்டை என்றெல்லாம் பல்துறை திறமைகளை காட்டியவர் அல்லர்..  ரஜினி, எம் ஜி ஆர் போல இனம் தெரியாத ஈர்ப்புதான் அவர் பலம்..

அந்த கால கட்டத்தில் , அவருக்கு போட்டியாக இன்னொரு துருவமாக ஜொலித்தவர் பி யூ சின்னப்பா...

நடனம். சண்டை , பாடல் என இவர் ஒரு சகலகலா வல்லவர் ( கமல்போல ) ... ஆயினும் இவர் படங்கள் சரியாக ஓடவில்லை.. நல்ல பெயரும் கிடைக்கவில்லை..பேசாமல் ஊருக்கு போய் ஆன்மீக தேடலில் ஈடுபடலானார்.. மவுன விரதம் , உண்ணா நோன்பு என இறைவனை நோக்கி இறைஞ்சினார்.. காக்கா உட்கார பழம் விழுந்ததோ அல்லது கடவுள் கண் திறந்தாரோ தெரியவில்லை... மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் , இவர் வீடு தேடிப்போய் , உத்தம புத்திரன் படத்துக்கு புக் செய்தார்..அதன் பின் அவருக்கு ஏறு முகம்தான்..

அவர் ஊரான புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கிப்போட்டார்...பயந்து போன அன்றைய புதுக்கோட்டை மன்னர் , இனி யாரும் அவருக்கு வீடு விற்க கூடாது என சட்டம் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

அந்த அளவுக்கு ஒரு டிரண்ட் செட்டர் படம் உத்தம புத்திரன்..

அரசருக்கு இரட்டை குழந்தைகள் ... அரசரை கன்வின்ஸ் செய்து , ஒரு குழந்தையை பிரித்து விடுகிறான் மந்திரி...இன்னொரு குழந்தையை தன் கைப்பாவையாக வளர்த்து , ஆட்சியை அனுபவிக்கிறான்.. அந்த இன்னொரு குழந்தை வீரனாக இன்னொரு இடத்தில் வளர்கிறது..

சுயபுத்தி இல்லாமல் , கொடுங்கோலாக செயல்படும் இவனை ஒரு கட்டத்தில் சகோதரன் எதிர்க்கிறான்..இரும்பு முகமூடி அணிவித்து அவனை ஜெயிலில் தள்ளி விடுகிறான் இந்த கெட்ட மன்னன்...அதில் இருந்து தப்பி , எப்படி நீதியை நிலை நாட்டபடுகிறது...கெட்ட புத்திரனை , உத்தம புத்திரன் எப்படி வென்றான் என்பது கதை..

அந்த காலத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் , ஒரே தோற்றத்தில் இருவர் , பேசுவது சண்டையிடுவதை பார்க்கையில் நம் தாத்தாக்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது..

பாடல் , சண்டை என ஜொலிக்கிறார் பி யூ சின்னப்பா. இவர் ஒரே காட்சியில் பல வேடத்தில் தோன்றிய இன்னொரு படத்தையும் , அதன் ஒளிப்பதிவாளரைப்பற்றியும் இன்னொரு இடுகையில் பார்க்கலாம்..

அபூர்வ சகோதர்கள் படமும் இரட்டை வேட படம் என்றாலும் அதில் உணர்வுகள் , செண்டிமெண்டுகள் பிரதானமாக இருக்கும்..படம் ஷார்ட்டாகவும் இருக்கும்.

இது சற்று நீளமான படம்,..மூன்றரை மணி நேரம் ஓடுகிறது... எத்தனை பாடல்கள் என எண்ண முடியவில்லை... இரு சகோதரர்களும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து அப்படியே பாட ஆரம்பித்து விடுகிறார்கள்...காமெடியனை சிலர் விசாரிக்க , அவன் தன் பதிலை பாட்டாகவே பாடி விடுகிறான்..

ஓர் அணாவுக்கு அந்த காலத்தில் டிக்கட் வாங்கிபோய் அமர்ந்து விட்டால் , பாட்டு கச்சேரி , டான்ஸ் என பல்வித கொண்டாட்டங்கள்..ஒரே டிக்கட்டில்!!! நன்றாக எஞ்சாய் செய்து இருக்கிறார்கள்..

யுத்த காலத்தில் படத்தை இரண்டு மணி நேரமாக குறைக்க பிரிட்டிஷ் அரசு ஆணையிட்டபோது , திரையுலகம் கொதித்து போய் விட்டதாம்... சுதந்திர போராட்டத்தைவிட அதி தீவிரமாக இதை எதிர்த்து போராடினார்களாம்...

படத்தின் இன்னொரு முக்கியம் அம்சன் வில்லன் பாலையா நடிப்பு... இவர் ஒரு சகாப்தம் என்றே கருதுகிறேன்.. சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து நடித்து பல காலம் தொடர்ந்தவர்... வில்லன் , ஹீரோ , காமெடி ,, கடைசியில் தந்தை என எல்லாவற்றிலும் கலக்கியவர் இவர்... இந்த படத்திலும் அழகு..

நீளமாக வசனங்கள் இல்லை...ஷார்ட் அண்ட் ஸ்வீட் ....மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.. நீங்களோ வாயிலில் நின்று வருபவர்கள் குறித்து உரைக்கிறீர்களே..வெட்கமாக இல்லை - ஓர் எ.கா...

கெட்ட அரசனை சற்று காமெடியாக அமைத்து இருப்பது சிறப்பு... இளவரசியை ( ராஜம்மா ) சென்று பார்க்கக்கூட சோம்பல்.. தன் இரட்டை வேட சகோதரனை தன் போல நடித்து ( ?! ) காதலிக்க ( !?) அனுப்புகிறான்.. காதல் ஒர்க் அவுட் ஆனதும் கல்யாணம் மட்டும் செய்து கொள்ளலாம் என்ற ராஜதந்திரம் !!!

அந்த கால பாடல்கள் ஏராளமாக இருந்தாலும் , அனைத்தும் தரமாக இருந்தன... இன்று போல , பெண்ணின் உடலைக்காட்டி மயக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் , உண்மையான திறமைசாலிகளின் கைவண்ணத்தில் பாடல்கள் ஜொலிக்கின்றன... 

அதில் செந்தமிழ் நாடெனும் போதினேலே என்ற பாடல் சூப்பர் ஹிட்...ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த பாடலை இடம் பெற செய்து இருக்கிறார் சுந்தரம்..

கதையுடன் சேர்ந்து வரும் காளி என் ரத்தினம் காமெடி அழகு..தனி காமெடி டிராக்கில் வரும் என் எஸ் கே காமெடியோ பட்டாசு..இன்றைய சென்சார் அதை அனுமதிக்காது...டீவியிலும்கூட ஒளிபரப்ப முடியாது...உடனே ஆபாச காமெடியா என நினைக்காதீர்கள்..இல்லை...சமூக சாடல் , சீர்திருத்த காமெடி... பிளாக் ஹ்யூமர் டைப்பில் கலக்கி இருப்பார்..

மொத்தத்தில் ,
  உத்தம புத்திரன் - உள்ளம் கவர்ந்த புத்திரன்


1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா