Sunday, February 10, 2019

துரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்குனர் பாலா


பாலா எப்போதுமே தன்னிச்சையாக செயல்படும் படைப்பாளி என்பது தெரிந்த விஷயம்தான்

இது தெரிந்துதான் வர்மா படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

விக்ரமுக்கு எப்படி ஒரு திருப்பு முனை படம் கொடுத்தாரோ அதே போல அவர் மகனுக்கும் ஒரு திருப்பு முனையை கொடுப்பதுதான் அவர் மனதில் இருந்தது

சூர்யா , ஆர்யா என அவர் படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படங்கள் பெருமை சேர்க்கும் படங்களாகத்தான் அமைந்தன

இந்த நிலையில் , அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிட முயன்றது தயாரிப்பாளர் நிறுவனம்

பாலா அதற்கு இடம் கொடுக்கவில்லை

வேண்டுமென்றால் நான் விலகிக்கொள்கிறேன்.. எடுத்த படத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.. விருப்பம்ப்போல காட்சிகளை சேர்ப்பது , நீக்குவது உங்கள் விருப்பம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. என் பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றார்

இது தெளிவாக டைப் செய்யப்பட்டு ஜனவரி 2019 மாதம் கை எழுத்து இடப்பட்டது

 உண்மை இவ்வாறு இருக்க  , பட நிறுவனம் திடீரென ஓர் அறிவிப்பு வெளியிட்டது

எடுத்த வரையில் படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் புதிதாக எடுக்கப்போகிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டனர்

இது நடு நிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் சென்ற மாதமே சொல்லி விட்ட பிறகு இந்த அறிக்கை என்பது பாலாவை அவமானப்படுத்தும் செயல்தான்


விக்ரமும் பாலாவும் இது குறித்து பேசவில்லை

ஆனால் பாலா தன் அமைதிக்கு காரணம் விக்ரம் மகனின் எதிர் காலம் என்கிறார்.. இது அவரது பெருந்தன்மை

விக்ரம் அமைதியோ நேர்மையற்றதாகும்


ஏறிய ஏணியை உதைப்பது வெகு எளிது..ஆனால் அது நல்லதல்ல என யாரேனும் விக்ரமுக்கு சொல்ல வேண்டும்
 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா