Thursday, May 28, 2020

யதார்த்த வாதமும் சாருவும் . விவாதம் தேவை


 எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது சாரு பாணி

எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு , அவரது சிறுகதைகள் பிரமாதம் என்றும் ஆனால் அந்த வகை கதைகளுக்கான தேவை முடிந்து விட்டது என்றும் பேசினார். யதாரத்தவாத பாணி காலாவதியாகிவிட்டது என்றார்

வாசகனை கவர வேண்டுமென்றால் யதார்த்தவாதம் நல்ல பாணிதான். பிரபலமான கதைகள் பல யதார்த்தவாத கதைகள்தான்.

இன்று பிரபலமாக பேசப்படும் பல கதைகளை விட உங்கள் கதைகள் சிறப்பாக உள்ளன என்ற தெளிவுடன் சொல்கிறேன்.  மீண்டும் மீண்டும் இதேபாணியில் எழுதுவதில் அர்த்தமில்லை என்றார் சாரு

மிகை நடிப்பு படங்களை ஒரு காலத்தில் ரசித்தோம். இன்று அப்படி நடிக்கமுடியுமா ? மிகை நடிப்பு படங்கள் இழிவானவை என்பதல்ல. அந்த பாணிக்கான காலம் முடிந்து விட்டது .

அதுபோல யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஆக்கப்பூர்வமாக தன் விமர்சனத்தை முன் வைத்தார் சாரு;

அதன்பின் கார்ல் மார்க்ஸ் பேசினார்

எனக்கு இப்படி எழுதுவதுதான் வசதியாக இருக்கிறது என்றோ , யதார்த்தவாதத்தின் தேவை இன்றும் இருக்கிறது என்றோ சாருவை வெட்டி அவர் பேசியிருக்கலாம். அல்லது சாருவை ஒட்டியும் அவர் பேசியிருக்கலாம். ஆனால் அவர் பேச முனைந்தபோது மனுஷ்யபுத்திரன் சம்பந்தமில்லாமல் பேசி பேச்சை வேறு திசைக்கு மாற்றினார். கடைசியில் இந்த விவாதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என சாருவிடம் கேட்டபோது விவாதமே நடக்கவில்லையே என சிரித்தபடி சொன்னார். என் கருத்து அடித்து துவைத்தாலும் , அல்லது ஏற்றாலும் எனக்கு சம்மதமே என அவர் சொல்லியும் அது விவாதிக்கப்படவில்லை

ஆனால் நாஞ்சில் நாடன் தன் கருத்தை அழகாக எடுத்து வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து வரும்போது , ஊருக்கு வந்தால் மது அருந்தமுடியாது என்பதால் பயணம் முழுக்க மதுவில் திளைத்தோரைக் கண்டேன்

அதுபோல விடுமுறை முடிந்து கிளம்புகையில் இனி இரண்டு ஆண்டுகள் பிரிவு என்ற நிலையில் சூழலை மறந்து தன் மனைவியின் இதழ்களில் முத்தமிட்ட கணவனைக் கண்டேன் என்றார்

இதுபோன்ற தருணங்கள்தான் முக்கியம். யதார்த்தவாதம் , பின்நவீனத்துவம் என்ற பிரிவுகள் தேவையில்லை என்றார்

அவரது கூற்று அங்கே விவாதிக்கப்படவில்லை.

ஆனால் நண்பர்கள் சிலர் அவர் கூறிய தருணத்தை , உணர்ச்சி மல்க எப்படி எல்லாம் எழுதியிருக்க முடியும் என விவாதித்தோம். ஒரு நல்ல தருணத்தை செண்டிமெண்ட் குப்பையாக்கி வீணடிப்பது தவறு என்றால் அது எழுதவும் எளிது. படிப்பதும் எளிது என்பதால் பலர் யதார்த்தவாத எழுத்தையே கைக்கொள்ள விரும்புகின்றனர் என்பது தெளிவு
இது நிற்க

அங்கே விவாதம் நடக்காவிட்டாலும் இன்னொரு சூழலில் விவாதம் நடந்தது

அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலில் இப்படி ஒரு வரி வருகிறது

குத்தவே நினைத்துக்கூட பார்க்க முடியாத அம்மனின் கைகளில் சூலத்தைக் கொடுப்பது எவ்வளவு பெரிய வக்கிரம்


இது தனக்குப் பிடிக்கவில்லை என கார்ல் மார்க்ஸ் இப்படி மாற்றுகிறார்

அவள் குத்துவாள் என்பதை  கற்பனை செய்தே பார்க்க முடியாத அம்மனின் கைகளில் சூலத்தை தந்தது எவ்வளவு பெரிய வக்கிரம்

  மேலோட்டமான பார்வையிலேயே இரண்டின் அர்த்தமும் வேறு வேறு என புரிகிறது அல்லவா

நாவலின் முதல் வரியில் இருந்து கடைசிவரி வரை கன்சிஸ்டண்ட்டாக , இலகுவாக , படிப்பவரைக்கவரும் வண்ணம் எழுதுவது ஒரு பாணி

பண்டித நடை , இலகு நடை , திருகல் நடை என கதம்பமாக எழுதுவது பின்நவீனத்துவ கூறுகளில் ஒன்று. சில பகுதிகளில் பிரஞ்ஞைப்பூர்வமாக தப்புதப்பாக எழுதுவதும் உண்டு. எந்த பாத்திரத்தின் கூாற்று , கதையின் சூழல் என பல விஷயங்களைக்கவனித்தாக வேண்டும்

பொண்டாட்டி நாவலில் ஆரம்பத்தில் ஒரு பகுதி அப்படி இருக்கும் . அதற்கு ஒரு காரணம் உண்டு.

மேடையில் சொல்லாததை கார்ல் மாரக்ஸ் இந்த விவாதத்தில் தெளிவு படுத்தினார். அவருக்கு யதார்த்தவாத கதைகள்தான் பிடித்திருக்கிறது.  அதற்கான தேவை இருப்பதாக நினைக்கிறார்.

நல்லதுதான்.  ஆனால் அதற்காக சாருவையோ சாருவின் வாசகர்களையோ எதிரிகளாக நினைக்க வேண்டியதில்லை.

சாருவைப் பொறுத்தவரை அவர் , வழக்கமான சிறுகதை வடிவான , ஆரம்பம் ஒரு முடிவு ஓர் உச்ச கணம் என்ற மரபான கதைகளும் எழுதியதுண்டு.  பெரும்புகழ் பெற்ற அந்த கதைகளுக்காகவே அவரை நினைவுகூர்வோரும் உண்டு
பவராலும் பாராட்டப்படும் பிளாக் நம்பர் 27 த்ரிலோக்புரி என்ற தனது
கதையையே கடுமையாக விமர்சிக்ககூடியவர் சாரு

சமீபத்தில் பீச் என்ற சிறுகதை குறித்துப் பேசினார்.  கதாபாத்திர அறிமுகம் , அதற்கு சிக்கல் , அதன் முடிவு என்பது அதில் இருக்காது. அதாவது அதில் கதை என ஒன்று நிகழாது
ஆனால் அது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக போற்றப்படுகிறது

ராசலீலாவில் இத்தகைய தருணங்கள் ஏராளமாக இருக்கும்

த்ரிலோக்புரி கதையை சீக்கியர் படுகொலை சம்பவத்தின்போது அங்கு இருந்த யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். உன்னத சங்கீதம், நேனோ நட்சத்திரங்களிடம் இருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணத்தின்னிகளும் போன்ற கதைகளை எழுதுவதற்குதான் சாரு தேவை என்பார் அவர்

யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்பது தனது வாழ்வை வேள்வியாக்கி தன்னையே அவியாக்கி அவர் அடைந்த தரிசனம்.

அதை ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதே சாரு என்ற கலைஞனுக்கு நாம் காட்டும் நன்றியாக இருக்க முடியும்















No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா