Sunday, May 3, 2020

கோயம்பேடு மலர்கள் மைக்ரோ கதை

அவன ஏண்டி பூ வாங்க கோயம்பேடு அனுப்பிச்ச ?  கோபமாக கத்தினார் அவர்

வீட்டுலயே சிம்பிளா கல்யாணம் நடத்துறோம். பூ இல்லைனா எப்படிங்க ? தயக்கமாக சொன்னாள் மனைவி

ஊர் கெட்டு கிடக்கு..  நேத்துகூட  நாலூபேருக்கு கொரானா.  இப்ப  போயி அனுப்பிஞ்சு இருக்கியே என திட்டும்போதே பையன் வந்தான்

அப்பா  பூ கிடைக்கல என்றான் பையன்;


கடவுள்  காப்பாத்திட்டாரு  மகிழ்ந்து கொண்டாள் மனைவி


ஏண்டா பூ கிடைக்கல  கேட்டார் அவர்


அல்லாத்தையும் அரசாங்கம்  வாங்கிருச்சுப்பா என்றான் பையன்;


அரசாங்கமா, அவங்களுக்கு  ஏண்டா  அவ்வளவு பூ   ..  குழப்பமாய் கேட்டார்


நாட்டு மக்கள்  ஊரடங்கை சிறப்பா கடைபிடிக்கிறத பாராட்டி எல்லா வீட்டு மேலயும் விமானம் மூலமா பூ தூவறங்களாம். குறிப்பா  நம்ம தெருவுல அதிகமா தூவறாங்களாம் என்றான் பையன்

என்னடா  சொல்ற  என அவர் திகிலுடன்  கேட்கும்போதே கோயம்பேடு மலர்கள் அவர்கள் தலையில் விழத்தொடங்கின



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா