Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Tuesday, June 16, 2020

இயக்குனர்கள் பாக்யராஜ் & "முகவரி"துரை.. தரையில் இறங்கிய விமானங்கள்


ஒரு காலத்தில் வெற்றி என்பதற்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால் பாக்யராஜ் என்று இருக்கும்.  அந்த அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தவர் அவர். வேறு மொழிகளில் யாரேனும் வெற்றிகளைத் தந்தால் அவர்களை கேரள பாக்யராஜ் , கன்னட பாக்யராஜ் என்பார்கள். அந்த அளவுக்கு வெற்றிகளை கொடுத்தார்.  கட்சி , சித்தாந்தம் போன்றவைகளில் ஆர்வமற்ற வெள்ளந்தி மக்கள்தான் இங்கு அதிகம். அவர்களின் நாயகனாக திகழ்ந்தார் அவர்

இந்த,நிலையில்தான் தன் இமேஜை சீர்திருத்தவாதி என்ற அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார்.  
அதில் தவறு ஏதும் இல்லை

கண்டதேவியில் தேர் இழுப்பதில் பிரச்சனை , திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடூரம் ,  ஆணவக்கொலைகள் , ரிசர்வ் தொகுதிகளில் தன் வேலையாட்களை நிற்க வைத்து வெல்ல வைத்து , மக்கள் பிரதிநிதி தன் வீட்டு வேலை செய்கிறார் என இழிவு படுத்துதல் , அல்லது வென்றதும் உடனடியாக ராஜினாமா செய்ய வைத்து , தேர்தலை கேலிக்குள்ளாக்குவது போன்றவற்றை கண்டிக்க இவருக்கு துணிவு வரவில்லை

வம்பே வேண்டாம் என பிராமணர்களை விமர்சித்து படமெடுக்க நினைத்தார்.
அதிலும் தவறில்லை. இது பலரும் செய்வதுதான்

ஆனால் கீழ்மையான செயல் ஒன்றை அரங்கேற்றியதுதான் பிரச்சனை.  பிராமணர்களை திட்டினால் தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படுமோ என நினைத்து , பிராமணர் ஒருவரையே படத்துக்கு டம்மி இயக்குனராக்க முடிவு செய்தார்.  சூதுவாது தெரியாத பாலகுமாரனை நைச்சியமாக பேசி சம்மதிக்க வைத்தார்

படம் முழுக்க பாக்யராஜின் கைவண்ணம்தான். பெயர் மட்டும் பாலகுமாரன்

படம் அபாரமான வெற்றி பெற்றது. நல்ல காசு பார்த்தார்.

ஆனால் அந்த அறமற்ற செயல் அவரை அத்துடன் முடக்கியது.  அதற்குப் பிறகு அவரது எந்தப் படமும் பழைய வெற்றியை பெறவே இல்லை. 

பாலகுமாரன் இது குறித்து பலமுறை வயிறெரிய குமுறியுள்ளார். தந்திரமாக என்னை ஏமாற்றி விட்டார்.  நான் எளியவன். என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று அனைத்தையும் கவனிக்கிறது என குமுறினார்

இது நிற்க

அஜித்துக்கு திருப்புமுனை தந்த நல்ல படங்களுள் ஒன்று. தரமான நடிகர்கள் , இயல்பான கதை என படம் சிறப்பாக இருந்தது

படத்தின் ஒன்லைன்

தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இசையில் சாதிக்க முயலும் நாயகன் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் இது. அனைத்து டிவி சானல்களும் இதற்கு நல்ல தரவரிசை அளித்தன

படத்தின் வசனம் பாலகுமாரன். படத்தில் ரகுவரன் சொல்லும் தன்னம்பிக்கை கதை இன்றும் பிரபலம்

ஆனால் , படத்தின் கதை இந்துமதியின் தரையில் இறங்கிய விமானங்கள் போல இருக்கிறதே என்ற பேச்சும் எழுந்தது

இந்த கதையின் ஒன்லைன்


தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இலக்கிய உலகில் சாதிக்க முயலும் விஸ்வம் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

நாயகனின் பெயர் வேறு .  இலக்கியம் என்பது இசை ஆகி விட்டது

மற்றபடி குடும்ப சூழல் , பெருந்தன்மையான அண்ணன் , இனிய காதல் என அனைத்துமே ஒன்றுதான்

படத்தில் பணிபுரிந்த பாலகுமாரன் , இந்துமதியின் நண்பர் என்பதால் . இந்துமதியின் அனுமதியுடன்தான் படம் எடுக்கப்பட்டதாக பலரும் நினைத்ததால் , யாரும் அதை பெரிதாக்கவில்லை

ஆனால் சமீபத்தில் , தன்னிடம் அனுமதி வாங்காமல் கதையை திருடிவிட்டனர் என இந்துமதி குமுறியுள்ளார்

அவரது நாவலை கையில் வைத்துக்கொண்டுதான் கதை விவாதமே நடந்ததாம்

இப்படி திருடியதற்குபதில் முறைப்படி அனுமதி வாங்கி , அண்ணி கேரக்டரை நாவலில் இருப்பதுபோல அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் படம் வேறொரு உயரம் தொட்டிருக்கும்

இயக்குனர் துரை தொடர் வெற்றிகளை அளித்திருப்பார்
அஜித்துக்கு இந்த விவகாரம் தெரிய வாயப்பில்லை. ஆனால் துரைக்கு தார்மீக பொறுப்பு உண்டு

பரவலாக பாராட்டுப்பெற்று , அஜித்தை வைத்து வெற்றாப்படம் கொடுத்து ,உயரத்தில் பறந்த இயக்குனர் அதன் பின் ஒரு போதும் வெற்றியை தர முடியவில்லை

அறிவுலகில் அறம்தவறுவது அழிவையே தரும்
,
முகநூல் பதிவுகளை காப்பி பேஸ்ட்செய்வது , பிறர் கதைகளை திருடுவது என படித்தவர்கள் பலரே செய்வது வருந்தத்தக்கது

அனைத்துக்கும் எதிரவினை உண்டு என்பதை படைப்புலகம் புரிந்து கொள்ளவேண்டும்

Monday, May 4, 2020

பிரசாந்த் இழந்ததை கைப்பற்றிய அஜித்


சில படங்களை எப்போது பாரக்க நேர்ந்தாலும் முழுமையாக பார்ப்போம். அப்படி ஒரு படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

மம்முட்டி , அஜித் , அப்பாஸ் , ரகுவரன் , ஐஸ்வர்யா ராய் , தபு என இன்று நினைத்துப் பார்க்க முடியாத மல்ட்டிஸ்டார் படம்.  அப்பாசுக்கு குரல்கொடுத்தவர் விக்ரம். இசை ரகுமான்.  சுஜாதா இயக்குனர் ராஜிவ் மேனனுக்கு முழு பக்கபலமாக இருந்தார்


 இப்படி ஒரு அபூர்வமான படத்தில் நடிக்க வேண்டியவர் பிரசாந்த்.  அவர் அப்போது விஜய் அஜித் ஆகியோரைவிட பெரிய நிலையில் இருந்தார். அந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க் இருந்தவர். அவர் எனக்கு ஜோடியாக வேண்டாம். மம்முட்டி கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் ஐஸ்வர்யாராயை என்னுடன் நடிக்க வையுங்கள் என்றார் பிரசாந்த்

டென்ஷனான இயக்குனர் அஜித்தை அணுகினார். இப்படித்தான் அஜித் இதில் நடித்தார்.  படம் ரிலீசாவதற்கு முன்பே பிரசாந்த்தை விட பெரிய நிலைக்கு வந்து விட்டது வரலாறு

தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ராணுவ வீரர்கள் செய்கிறார்கள். ஆனால் கார்கில் வீரர்களுக்கு , பங்களாதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் மோதிய வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் இலங்கையில் நுழைந்த இந்திய அமைதிக்குப் படைக்கு கிடைக்கவில்லை.  சிங்களர்கள் இந்தியரககள் என அனைவரும் திட்டினார்கள்.  எதற்காக போரிடுகிறோம் , ஏன் சாகிறோம் என தெரியாமலேயே போரிட்ட வீரர்களில் ஒருவராக நடித்திருப்பார் மம்முட்டி. அவர்களைப்பற்றிவெளிவந்த ஒரே படமாக இது இருக்கக்கூடும்

தயார் நிலையில் இருப்பவனுக்குதான் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக அஜித்தும் பிரசாந்தும் இருப்பதற்கு சாட்சியாக இந்த படம் இருக்கிறது


Tuesday, January 22, 2019

அஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்


வசூலில் விஞ்சி நிற்பது பேட்டயா விஸ்வாசமா என விவாதம் அனல் பறக்கிறது,,,   டீனேஜ் பருவத்தில் இது சுவையான விவாதமாகும்..  வரவேற்கத்தக்கதும் கூட.. காரணம் எல்லோருமே இதை கடந்துதான் வந்திருப்போம்

ஆனால் சில வியாபாரிகள் இந்த விவாதத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது தவறு...

காரணம் இதில் எல்லாம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை,, வசூல் வெற்றி என்பது படத்துக்கு பெருமையோ சிறுமையோ அல்ல

உதாரணமாக நாயகன் படத்தை விட மனிதன் படம்தான் அதிக வசூலைப் பெற்றது.,,,,அதனால் நாயகன் படத்தின் பெருமை குறைந்து விட்டதா என்ன? இரண்டு படங்களையும் விட விஜய்காந்தின் உழவன் மகன் பல இடங்களில் நல்ல வசூல்...  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மனிதன் மாபெரும் வெற்றிப் படம்.. நாயகன் என்றும் நினைவுகூரப்படத்தக்க முக்கியமான படம் ....

அவ்வளவு ஏன் ? தளபதி குணா ஆகிய படங்களை விட சில இடங்களில் “ தாலாட்டு கேட்குதம்மா “ “ பிரம்மா “ படங்களின் வசூல் அதிகம்,,  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தளபதி மெகா ஹிட்... குணா மிகச்சிறந்த கிளாசிக்

அவ்வளவு ஏன் ? பல சந்தர்ப்பங்களில் ராமராஜன் படம் அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவரையுமே வசூலில் மிஞ்சியதும் உண்டு... எனவே வசூல் அக்கப்போர்கள் எல்லாம்  நீண்ட கால நோக்கில் எந்த முக்கியத்துவமும் அற்றவை.. ஆனால் அவை தவறு என்பதல்ல.. சின்ன வயதில் அது சிறந்த பொழுதுபோக்குதான்

ரசிகர்கள் இப்படி சண்டையிட்டாலும் கலைஞர்கள் அப்படி இருப்பதில்லை.

இயக்குனர் பேரரசு எழுதிய ” என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் “ என்ற நூல் படித்தேன்..   ரஜினி , கமல் , அஜித் , விஜய் , எம் ஜி ஆர் , கலைஞர் , ராஜேஷ் , மனோரமா , பாரதிராஜா , பாக்யராஜ் உட்பட பலர் குறித்து எழுதியுள்ளார்.


கமல் , ரஜினியை இயக்கிய எஸ் பி எம் போல விஜய் அஜித் என பணிபுரிந்தவர் அவர்..  அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம் .. ஆனால் குடும்ப பிரச்சனைகள் அவர் வளர்ச்சிக்கு தடை போட்டன,,  மீண்டு வருவார் என எதிர்பார்ப்போம்...


அந்த புத்தகத்தில் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன...


இவர் எழுதிய சிறுகதை ஒன்றை தாய் இதழில் படித்துதான் ராம நாராயணன் இவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்

அதன் பின் தனியா பிரிந்த பின்னும் கூட , ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் மீண்டும் வா என் அன்பாக கூறி அனுப்பிய அன்புள்ளம் கொண்டவர் ராம நாராயணன்.. ஏன் எப்போதும் மிருகங்களை வைத்து எடுக்கிறீர்கள்.. சமுதாய சிந்த்னைகளை காட்டலாமே என்று கேட்டதற்கு “ சோறு “ என்றொரு நல்ல படம் எடுத்து பல மாதங்கள் சோற்றுக்கு கஷ்டப்பட்ட கதையை சொன்னாராம் அவர்


நடிகர் விஜய் பல நல்ல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார்.. எந்த சிபாரிசும் இல்லாமல் , தான் சொன்ன கதையை மட்டுமே நம்பி தனக்கு திருப்பாச்சி பட வாய்ப்பை  அளித்ததை நன்றியுடன் பதிவு செய்துள்ளார்..  அடுத்து சிவகாசி பட வாய்ப்பும் அளித்து , படம் வென்றதும் கார் ஒன்றை பரிசளித்ததையும் சொல்லி இருக்கிறார்



அப்போது ஏ வி எம் நிறுவனம் இவரை அழைத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது... விஜயால் அறிமுகம் ஆன தன்னை அஜித் ஏற்பாரா என அச்சத்துடன் ,  நான் தான் இயக்குனர் என அஜித்திடம் சொன்னீர்களா என கேட்டார்,.,, ஆமாம் ..,,சொன்னோம்.. அவருக்கும் மகிழ்ச்சிதான் என்றது ஏவி எம் நிறுவனம்


எதற்கும் விஜயிடம் இதை சொல்லிவிடுவோம் என அவரிடம் சொன்னதற்கு “ ரொம்ப மகிழ்ச்சினா.,,, நல்ல விஷ்யம்.... இதை எல்லாம் என்னிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டியதில்லை... எனக்கு சந்தோஷம்தான் “ என சொன்னது மட்டும் அன்றி , பட பூஜைக்கு வந்து வாழ்த்தினார் விஜய்..

அஜித் வீட்டுக்கு பல முறை டிவி எஸ் 50யில் சென்றிருக்கிறார் பேரரசு,,, ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ராம நாராயாணன் படத்தில் நடித்தபோது பழக்கம் என்பதால் ஒரு துணை இயக்குனராக குடும்ப நண்பராக சென்றிருக்கிறார்... இப்போது இயக்குனராக , அவரிடம் கதை சொல்வதற்கு அவர் வீட்டுக்கு விஜய் பரிசளித்த காரில் சென்றதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்


பாரதிராஜாவை கிரக பிரவேசத்துக்கு அழைத்தபோது அன்றைய தேதியில் பிசி என்றார் பாரதிராஜா... உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று கேட்டு அந்த தேதியில் கிரகபிரவேசத்தை வைத்தார் பேர்ரசு..

பாரதிராஜா வந்து பார்த்தபோது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் வேறு விருந்தினர்கள் யாரும் இல்லை... என் விழாவுக்கு நீங்கள் மட்டும் வந்தால்போதும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.,,காரணம் உங்களைப் பார்த்து உருவானவன் நான் என சொல்லி அவரை நெகிழச்செய்திருக்கிறார் பேர்ரசு

ரஜினி ரசிகனான இவர் சின்ன வயதில் 60 கிமீ சைக்கிள் மிதித்து மதுரையில் ரஜினி படம் பார்த்தவர்

அப்படிப்பட்ட ரஜினி இவர் படங்க்ளை பார்த்து விட்டு ( திருப்பாச்சி , சிவகாசி ) போன் செய்து பாராட்டியதை பெருமையாக நினைக்கிறார்.,,  ரஜினிக்கு பிரத்யேகயமாக திருப்பதி படம் திரையிட்டப்பட்டு அவருடம் படம் பார்த்ததையும் சொல்லி இருக்கிறார்


வாலி , வைரமுத்து போன்றோருடனான அனுபவம் , இவர் பாடால் குறித்து விஜ்யின் கமெண்ட்,,,  நெகிழ வைத்த எஸ் பி எம்  , ஆச்சர்ய்படுத்திய மணிர்த்னம் என பல தகவல்கள்’

கண்டிப்பாக படியுங்கள்


என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள் - இயக்குநர் பேரரசு
பக்.160; ரூ.110; 
கற்பகம் புத்தகாலயம்

Wednesday, February 11, 2015

சூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரபரப்பு பேச்சு


 சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த ஆன்மிக கண்காட்சியில் விவேக் கலந்து கொண்டார்.  மரம் நடு விழாவில் கலந்து கொண்ட அவர் , ஆன்மிகம் குறித்தும் இந்திய ஞான மரபு குறித்தும் சுவையாக பேசினார்.

அஜீத் பெயரை அவர் சொன்னபோதெல்லாம் அரங்கில் கைதட்டல் கேட்டது.... அதனால் மகிழ்ந்த அவர் அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி பேசினார்...

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது டாக்டர் பட்டம் போல ஆகி விட்டாலும் அவர் பேச்சு சுவையாகவே இருந்தது..

இரண்டு வருடங்களாக ஏன் நடிக்கவில்லை...என்னை அறிந்தல் படம் , குரு என்பதன் அர்த்தம் என விரிவாக பேசினார்..


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா