Showing posts with label சிவாஜி கணேசன். Show all posts
Showing posts with label சிவாஜி கணேசன். Show all posts

Wednesday, May 13, 2020

பிண மனிதனாக சிவாஜி நடித்த படம்


தேடல்தான் மனிதனை இந்த அளவு உயர்த்தியுள்ளது.  தன்னை விட வலுவான விலங்குகளை மட்டுமன்று, சக மனித இனங்களைக்கூட வென்று ஹோமோசெப்பியன்ஸ் என்ற இனம் உலகை ஆள்வதற்கான காரணம் அதன் தொடர்தேடல்கள்தான்.
இந்த தேடலே அவனுக்கு அழிவையும் கொண்டு வந்துவிடுகிறது என்பதுதான் 

அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நல்லதுதான் என்றாலும் , இதன் விளைவாக சுறுச்சூழல் சீர்கெட்டு புதிய கிருமிகள் உருவாகி மனிதனையே அழித்து விடுகிறதல்லவா

இந்த கருவை அடிப்படையாக வைத்து மேரி ஷெல்லி எழுதிய நாவல் பிராங்கன்ஸ்டீன் உலக புகழ் பெற்ற கிளாசிக் ஆகும்
இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இருந்தாலும் இன்றும் சுவையாக பொருத்தமாக உள்ளதுதேடலுடன் பயணிக்கும் கப்பல் கேப்டன் வால்டன் தன் சகோதரிக்கு எழுதும் கடிதங்கள் வாயிலாக  நம் முன் விரிகிறது 
பயணத்தின் போது உயிருக்கு ஆபத்தான"நிலையில் சந்திக்கும் விக்டர் பிராங்கன்ஸ்டீன் தன் கதையை சொல்கிறான் 


பல்வேறு பிணங்களின் உறுப்புகளை சேகரித்து மனித உருவமாக்கி அதற்கு உயிர் கொடுப்பதும் , அதன் அடுத்தடுத்த கொலைகளால் மனம் நொந்து அதை அழிக்க முயல்வதும் இவன் பார்வையில் சொல்லப்படுகிறது
என்னால் அழிக்க முடியவில்லை. நீங்களாவது இதை செய்யுங்கள் என சொல்லிவிட்டு இறக்கிறான் அந்த ஆராய்ச்சியாளன்

தான் ஏன் கொலைகாரன் ஆனேன் என்ற பிணமனிதனின் தன்னிலை விளக்கமும் சொல்லப்படுகிறது

தன்னை உருவாக்கியவன் இறந்ததை அறிந்து மனம் உருகி கண்ணீர் விட்டு , தானும் சாகப்போவதாக சொல்லி
கிளம்புகிறான் அந்த பிரேத மனிதன்

மனித இனமே அழிந்து விட்டால் வைரஸ் மட்டும் தனியாக இருந்து செய்யப்போகிறது என இன்றைய சூழலில் தோன்றுகிறது. அணு குண்டு வீச்சால் உலகம் அழியும் தறுவாயில் படித்தால் வேறுவிதமாக தோன்றலாம்
இதனால்தான் இக்கதை காலம் நடந்து நிற்கிறது

இது திரைப்படமாக வந்துளளது.  இதை தழுவி பல படங்கள் வந்துள்ளன

அந்த நாள் போன்ற சோதனை முயற்சிகளில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டிய சிவாஜி கணேசன் , இந்த படத்தில் வரும் குரூரமான பிரேதமான நடிக்க ஒப்புக்கொண்டார்.  நான் வணங்கும் தெய்வம் படத்தில் ஆராய்ச்சி மூலம் உயிர் கொடுத்தல் என்ற கான்செப்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு , அதன்மேல் வேறு விதமான கதையை உருவாக்கினர்.; பேசாமல் அந்த கதையை அப்படியே எடுத்திருக்கலாம்

பிரேதமனிதன் என்ற பெயரில் வெகு அற்புதமாக புதுமைப்பித்தன் மொழி ஆக்கம் செய்துள்ளார்.  

கதையின் சாரத்தை உள்வாங்கி சுருக்கமாக தன் பாணியில் எழுதியிருக்கிறார்

முழுமையான மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன  

வாய்ப்பு,கிடைத்தால் சுவையுங்கள்



Tuesday, January 21, 2020

சிவாஜியுடன் சிறப்பு அனுபவங்கள்

சின்ன வயதில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் அன்னையின் ஆணை என்ற படம் பார்த்தேன். சின்ன வயது என்பதால் படம் அவ்வளவாக நினைவில்லை . ஆனால் ஒரு காட்சி மனதில் பசை போட்டு உட்காரந்து விட்டது
அதில் சிவாஜியின் மனைவியாக வரும் சாவித்ரி , கணவனை கடுமையாக திட்டுவார். சிவாஜியின் நெஞ்சில் நகத்தால் பிராண்டி காயப்படுத்துவார்.சிவாஜி எந்த எதிர்வினையும் காட்டாமல் வாஷ்பேசின் சென்று காயத்தை கழுவிக் கொள்வார். நிதானமாக துண்டால் துடைப்பார். எதிர்பாரா ஒரு கணத்தில் திடீரென ஆக்ரோஷத்தை காட்டுவார். பிரமிப்பாக இருக்கும்

இந்த காட்சி பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று என்ற தகவல் இந்த நூலை எனக்கு நெருக்கமாக்கியது ....  நான் சுவாசிக்கும் சிவாஜி _ஒய் ஜீ மஹேந்திரா

வரலாற்றுச் சம்பவங்களும் நேரடி அனுபவங்களும் கலந்து எழுதப்பட்ட நூல் என்பது இதன் தனித்துவம்

நூலாசிரியர் சிவாஜியுடன் அவர் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் என்பதால் பல அபூர்வ தகவல்களைத் தருகிறார். ஒரு சராசரி ரசிகனாக தான் ரசித்த காட்சிகளையும் சொல்கிறார்

அதாவது என்பதை வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்வது , ஒரே பாடலை வெவ்வேறு பாணியில் வெளிப்படுத்துவது , இரண்டு கண்களில்,இருவேறு உணர்ச்சிகளைக் காட்டுவது . அதற்கான ஷாட் என இவர் சொல்லும் காட்சிகளை இன்றைய தொழால்நுட்ப வளர்ச்சியால் நாம் உடனே யூட்யூபில் கண்டு ரசிக்க முடிவது கூடுதல் அனுகூலம்

களைப்பாக இருப்பதுபோல நடிப்பதற்காக பயிற்சி செய்யும் நடிகரிடம் களைப்பாக இருப்பது போல நடிக்க பழகுங்கள் , நிஜமாகவே களைப்பது நடிப்பல்ல என பாடம் எடுப்பது , காஞ்சிப் பெரியவரின் ஆசி , கவுரவம் படத்தில் மகன் வேடத்தில் முத்துராமன் போன்ற பிற நடிகர்களை நடிக வைக்காமல் தந்தை மகன் என இரண்டு வேடங்களையும் செய்ததற்கான காரணம் , ரஜினியின் அனுபவம் , பாலு மகேந்திரா சேரன் போன்றோர் சிவாஜிக்காக கதை சொன்ன நிகழ்வுகள் என சினிமாத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் அரிய பொக்கிஷமாக வந்துள்ளது புத்தகம்

கண்ணதாசன் பதிப்பகம் வெகு ஸ்டைலிஷாக நூலை வெளியிட்டுள்ளனர். வண்ணப்படங்கள் உட்பட ஏராளமான படங்கள் , பிழைகளற்ற தமிழ் என கவியரசருக்கு மரியாதை செய்துள்ளது பதிப்பகம்

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்

Monday, October 29, 2018

நடிக்க மறுத்த சிவாஜி - சினிமா ஃபிளாஷ்பேக்



ஒவ்வொரு எழுத்தாளர்க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று

அந்த காலத்தில் கல் தூண் என்று படம் வந்தது,,, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார்

ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும்,   எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார்..

ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை

சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி,, மேஜர் அசந்து போனார்...  நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டார்

   என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி


சாதனை என்றொரு படம்.. அதில் சிவாஜிக்கு இயக்குனர் வேடம்... பிரபுவுக்கு நடிப்பு சொல்லித்தருவது போல காட்சி


 எப்படி நடப்பது என பிரபுவுக்கு சொல்லித்தருவது போல காட்சி ... நீங்கள் அவருக்கு நடந்து காட்ட வேண்டும் என்றார் இயக்குனர்

இந்த காட்சியை நாளை எடுக்கலாமா என பணிவுடன் கேட்டார் சிவாஜி


ஏன் என வியப்புடன் கேட்டார் இயக்குனர்

பிரபுவுக்கு நடப்பதற்கு சொல்லித்தரும் முன் , முதலில் நான் நடந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் சிவாஜி


இந்த சிரத்தைதான் சிவாஜி...

Thursday, December 12, 2013

சிவாஜி கணேசன் மிகை நடிப்பு கலைஞரா?- ஞாநி விளக்கம்

திரு ஞாநி அவர்கள் பொது மக்களுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பம் உள்ளவர்... வி ஐ பி முதல் சாமான்யன் வரை யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பேசக்கூடியவர்..  ஃபேஸ் புக்கில் அவர் முன் வைக்கும் கருத்துகள் , அதிலேயே முடங்கிப்போகக்கூடாது என்பதால் சிலவற்றை இங்கு பதிவேற்றுகிறேன்...


****************************************************************

        என் கேள்வி : முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலன் என்ற சொற்பிரயோகம் எனக்கு எப்போதுமே குழப்பம்தான் . நாம் காதலிக்கும் ஒருவரை காதலிப்பதை என்றாவது ஒரு நாள் நிறுத்துதல் சாத்தியமா ? காதல் என தவறாக நினைத்த உறவில் இருந்து வெளி வந்த பின் சம்பந்தப்பட்டவரை முன்னாள் காதலன் என்றோ காதலி என்றோ எப்படி சொல்வது ? It was never a love at all .







ஞாநி
இதில் ஒரு சிக்கலும் குழப்பமும் இல்லை. ஒரு காலகட்டத்தில் அன்பு காட்டியவர் மீது இன்னொரு காலகட்டத்தின் வெறுப்பே ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அன்பு காட்டிய தருணத்தில் அது பொய் என்றோ இப்போதைய வெறுப்பு பொய் என்றோ அர்த்தமல்ல. அந்தந்த நேரத்தில அதுவே நிஜம், உண்மை. எனவே முன்னாள் நண்பர், முன்னாள் எதிரி போல முன்னாள் காதலரும் சாத்தியமே.

           செய்தி : 
அந்த காலத்தில் எல்லாம் முதல் நாளே படத்துக்கான வசனத்தை கொடுத்து விடுவார்கள் . இவன் (பாரதிராஜா) எனக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட வசனம் கொடுக்கவில்லை . கை வீசி நடங்க . அப்படி பாருங்க . எதுவும் பேசாதீங்க அப்படீனான் . என்னடா பண்றான் இவன் அப்படினு நெனச்சேன் . ஆனா படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன் - முதல் மரியாதை குறித்து சிவாஜி கணேசன்

அருண் வேந்தன் :சிவாஜி மீது சொல்லப்பட்ட மிகை நடிப்பு என்ற குறைபாட்டை தூக்கி எறிந்த படம்...பாரதிராஜாவும் மிகை நடிப்பு பிரியர்தான்...எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..


Kirubasankar Manoharan : .எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..//எல்லா கலைவடிவத்திலும் இது போன்ற மிராக்கில் நடந்துகொண்டுதான் .இருக்கின்றன.. மோனோலிசா புகைப்படம் கூட அப்படி தானோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்...

ஞாநிஅந்தப் படம் மொத்தமாகவே ஒரு மிகை உணர்ச்சிப் படம்தான். வேறு படங்களில் சிவாஜி மட்டும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்போது மிகையாக தோன்றும். இதில் எல்லாமே மிகைப் பாத்திரங்கள். அதை யதார்த்தப்படம் என்று நம்பவைத்தது மட்டுமே பாரதிராஜாவுக்கு வெற்றி.இதே கதையை மகேந்திரன் கையாண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். உதிரிப்பூக்களில் விஜயன் பாத்திரத்தையும் அஸ்வினி பாத்திரத்தையும் அவர் கையாண்ட தொனி முதல் மரியாதையில் இருந்திருந்தால் அது நல்ல முயற்சி என்று சொல்லியிருக்கலாம். சிவாஜி நடிகராக தன்னை முழுக்கவும் இயக்குநருக்கு ஒப்புக் கொடுப்பவர். மிகை தோன்றினால் அதற்கு அவர்களே பொறுப்பு. துளியும் மிகை இன்றி சிவாஜி நடித்த பல படங்கள் உள்ளன.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா