Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, March 31, 2020

இளம் பாடகியும் பிரதமரும்

(இது கற்பனைக் கதை)

 " ஏன் என்னை வரச் சொன்னீர்கள்" கேட்டாள் அவள். அழகான முகம். பாடுதல் அவள் தொழில் என்பதை அவள் இனிமையான குரல் உணர்த்தியது

" வெளி நாட்டு அமைச்சரை தே""" *** என திட்டினாயாமே. என்ன அசிங்கம் "
காபமாக கேட்டார் பிரதமர்

அவர் செய்த காரியம் அப்படி என்றாள்

அப்படி என்ன செய்திருக்கப் போகிறார். இப்ப நான் பேசுவதுபோல பேசியிருப்பார். அதற்கு திட்டுவதா ?? பொரிந்தார் பிரதமர்

பேசியதோடு விடவில்லை என்றாள் அவள்

என்ன இப்படி கையைப்பிடித்தாரா ? கேட்டபடி மிருதுவான அவள் கைகளைப்பிடித்தார்

அதற்கு மேல் சென்றார் என்றாள். அவள் ஆரஞ்சு சுளை உதடுகள் படபடத்தன

பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதழ்களில் இதழ் பதித்தார்

இப்படி அவர் செய்தாரா.. அதனால்தான் திட்டினாயா .. கேட்டார் பிரதமர்

இல்லை அதற்குப்பின் அவர் ஒன்று சொன்னார் அதனால்தான் திட்டினேன்


உதடுகளை துடைத்தபடி கேட்டார்

அப்படி என்ன சொன்னார்

அவள் சொன்னாள் ..   தனக்கு கொரானா என்றார்


இப்பொது பிரதமர் கத்தினார்

தேxxxx  xxxxxx

Monday, August 11, 2014

புரோக்கராக மாறிய எழுத்தாளர்

பேசாமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என நினைத்தபோது பலரும் அந்த திருமண புரோக்கரையே சிபாரிசு செய்தனர். அவரை பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டமாம். எப்படியோ கஷ்டப்பட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டு அவர் அலுவலகம் சென்றேன்.  வரவேற்பு அறை முதல் பார்க்கிங் வரை ஏசி செய்யப்பட்ட கல்லூரி போல அம்சமான இருந்தது. “ சார், உள்ளே வரலாங்களா “ என பவ்யமாக கேட்டு விட்டு உள்ளே நுழைந்தேன்.

அட. இவன் நம்ம சுப்புணியாச்சே... பார்த்ததும் திகைத்தேன். என கல்லூரி நண்பன்.  லேசாக தொப்பை விழுந்து இருந்தது. நெற்றியில் பொட்டு வைத்து இருந்தான். ஆனால் அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்.

“ எப்படிறா மாப்ளே இருக்கே.. எழுத்தாளன் ஆவப்போவதா சொன்னே.. மேரேஜ் புரோக்கரா எப்படி மாறின? “ கேட்டேன்..

அவன் கொசு வர்த்தி சுருளை எடுத்தான். தக்காளி . ஃபிளாஷ்பேக்கா?

ஆமாண்டா... எனக்கு நாவல் எழுத ரொம்ப ஆசை,, எழுதியும் முடிச்சுட்டேன். ரிலீஸும் பண்ணிட்டேன். அன்று ஞாயிற்று கிழமை . குவார்ட்டர் அடித்து விட்டு குப்புறக்க படுத்து இருந்தேன். அப்ப ஒரு போன் வந்தது . அதுதான் என் வாழ்க்கையை புரட்டி போட்ருச்சு.

போனை அட்டெண்ட் செய்தேன்.

“ ஹலோ , சார் நான் உங்க தீவிர ரசிகன் “

“ ம்ம்.. ரொம்ப சந்தோஷம் “

“ உங்க புக் படிக்க துடிக்கிறேன்.. எங்கே கிடைக்கும் ? “

“ கடைல கிடைக்கும் “

“ அது இல்லை சார்/// லிங்க் கிடைக்குமா? “

“ தெரியலையே.. ஆன்லைன்ல இருக்கானு தெரியல..கடைல கேட்டு பாருங்க “

” வாங்க ஆசைதான் சார்... ஆனா புக் விலை அய்ம்பது ரூபாய்.. அவ்வளவு காசு கொடுத்து வாங்க வசதி இல்லை”

“ சரி. லைப்ரரில போய் படிங்க”

” போனேனே...அங்கே இல்லை “

” எந்த லைப்ரரி? “

“ எங்க தெருவுல இருக்கிற நகராட்சி நூலகம் சார் “

“ சரி.. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற நூலகம் போய் பாருங்க”

“ சார்,,, அவ்வளவு தூரம் செலவழிச்சி போக வசதி இல்லை “

“ அப்ப பரவாயில்லை... படிக்காதீங்க...அது அப்படி ஒண்ணும் பெரிய இலக்கியம் இல்லை ... நானே அதை படிக்கல”

“ சார் சார்.. நான் உங்க ரசிகன்.. படிக்கலைனா என் ஆத்மா சாந்தி அடையாது “

” அப்ப படிங்க “

“ சார் ,, அதுக்கு வசதி இல்லை.. “

“ ஏன்? “

“ சம்பளம் இல்லை “

“ ஏன் சம்பளம் இல்லை “

“ ஏனா எனக்கு வேலை இல்லை “

“ அடப்பாவி... சரி நானே வேலை வாங்கி தந்து தொலைக்கிறேன். கொக்ரே மாக்ரேனு ஒரு கம்பெனி உங்க ஏரியால இருக்குல...அங்கே ஆள் எடுக்கிறாங்க..போய் பாருங்க”

“ போனேன் சார்... ஆனா எனக்கு வேலை இல்லையாம் ?”

“ ஏண்டா ராசா ? “

“ ஏனா அங்கே கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் வேலையாம் “

“ சரிடா..கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியதுதானே”

“ முடியாது சார் “

“ ஏண்டா “

“ வேலை இருந்தால்தான் பொண்ணு தருவாங்களாம் “

“ தக்காளி , நீ ஆணியே பிடுங்க வேணாம்”

“ சார்..சார்..அப்படி சொல்லாதீங்க... நான் உங்க தீவிர ரசிகன் ..உங்க புக்கை படிச்சே ஆகணும் “

“ சரி சரி.. நானே உனக்கு பொண்ணு பார்த்து , கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”

இப்படித்தான் நான் புரோக்கர் ஆனேன்.. நல்ல காசு...இப்படியே செட்டில் ஆயிட்டேன் என்றான் நண்பன்..




Wednesday, May 29, 2013

எதிர்கால மனிதன் நிகழ்காலத்திற்கு வந்தபோது ....


" காலேஜ்ல நாம ரெண்டு பேரும்தான் டாப் ராங்க் ஸ்டூடன்சா இருந்தோம் . நாம கண்டிப்பா பெரிய கண்டுபிடிப்புகள் , பெரிய சாதனைகள் செய்வோம்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனால் இந்த போர்ட்டபிள் அணுகுண்டு கண்டுபிடிச்சது பெரிய சாதனையா அல்லது தீமையானு புரியல “

புலம்பிய ராஜேஷை நட்பு கலந்த அனுதாபத்துடன் பார்த்தான் ஜேம்ஸ்.

” ஒரு தீப்பெட்டி சைஸ் பெட்டி. சரியான காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்தினால் , உலகமே அழிஞ்சுடும் , ஆளில்லாத விமானம் , ஏவுகணை எதுவுமே வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தை அழிக்கலாம்.

கண்டிப்பா இது அறிவியல் சாதனை. ஆனால் இதனால் தீங்கு ஏற்படாது. உலகிலேயே மிக மிக புத்திசாலியான ,ஓர் ஐடியல் மனிதனால்தான் இந்த காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்த முடியும். ஆனால் அப்படி ஒரு மனிதனின் இருப்பு சாத்தியமில்லை. அதனால் பயம் வேண்டாம்”


ராஜேஷுக்கு நம்பிக்கை வரவில்லை.

” அதெப்படி சொல்ற. நீ சொல்லும் புத்திசாலி இப்ப இல்லாம இருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் அப்படி ஒரு புத்திசாலி தோன்றலாமே “

ஜேம்ஸ் சிரித்தான்.

“ கண்டிப்பா பரிணாம வளர்ச்சியில் அப்படி ஒரு மனிதன் தோன்றலாம்தான். ஆனால் அப்படி ஒரு மனிதன் தோன்றுவதற்கு...”

தன் கணினியை உற்று பார்த்தான், அவன் எண்ணம் அறிந்து கணினி இயங்கியது. ஸ்க்ரீனில் தெரிந்த தகவலை பார்த்து சொன்னான்.

 “ ..... இன்னும் 127 ஆண்டுகள் , 7 மாதங்கள் ஆகும். அதற்குள் இதற்கு மாற்று , எதிர் ஆயுதங்கள் எல்லாம் வந்து விடும். சோ , டோண்ட் வொர்ரி “

“ அப்பாடா “ பெரு மூச்சு விட்டான் ராஜேஷ்..

“ அவசரப்பட்டு பெருமூச்சு விடாதே. நான் இன்னொரு அபாயம் குறித்து கவலைப்படுறேன் “

கவலையுடன் சொன்ன ஜேம்ஸ் முகத்தை என்ன என்பது போல பார்த்தான் ராஜேஷ்.

“ ஒரு வேளை அந்த எதிர்கால புத்திசாலி மனிதன் , தன் புத்தி சாலித்தனத்தால் நிகழ் காலத்துக்கு வந்தால் , நமக்கு பிரச்சினைதான் “

உச்சகட்ட புத்திசாலித்தனத்துடன் ஒருவன் இருக்க முடிந்தால் , அவனால் காலம் கடந்து வர முடிவது சாத்தியம்தானே.

கவலையுடன் ஜேம்சை பார்த்து ராஜேஷ் கேட்டான்.

“ ஆராய்ச்சியின் முடிவை , அந்த ஆராய்ச்சியே தீர்மானிக்கிறது என ஒரு தியரி உண்டு. அதாவது தன் இயல்புபடி இயங்கி கொண்டு இருக்கும் நுண் பொருட்கள் , அதை ஆராயும்போது கொஞ்சம் விசித்திரமாக இயங்க தொடங்குகின்றன, எனவேதான் முழு உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஆராய்ச்சி கருவிகள் , ஆராய்ச்சி செய்பவர்கள் நோக்கம் , ஆராய்ச்சி நடக்கும் கால கட்டம் -இதெல்லாம் கூட ஆராய்ச்சி முடிவை மாற்ற கூடும்.

எதிர்கால மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சி இது வரை வெற்றி பெறாததற்கு காரணம் இதுதான். அந்த ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டிய தேவை இது வரை இல்லாமல் இருந்தது.

ஆனால் நமது இந்த அணுகுண்டு கண்டுபிடிப்பு , எதிர்கால மனிதனுக்கு ஒரு தேவையை உருவாக்கி அவனை வர செய்து விட வாய்ப்பு இருக்கிறதா ? “


ஜேம்ஸ் முகத்தில் மெல்ல கவலை ரேகைகள் படர்ந்தன.


” நீ சொல்வது ஓரளவு உண்மைதான். ஒன்றை புரிந்து கொள். அவன் நம் கண் முன் தோன்றினால் பயந்து விடாதே.. அவன் இருப்பு என்பது ஹைப்போதீசிஸ் போலத்தான்.. அதாவது ஒரு சாத்தியம்தான் நம் கண் முன் தெரியும்.

அதை அலசி ஆராய்ந்தால் அதில் இருந்து விடுபட்டு விடலாம்.. பீதி அடைந்து விடாதே”

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , வெளியில் யாரோ வந்திருப்பது சென்சார்கள் மூலம் தெரிந்தது. உள்ளே வர அனுமதி கேட்டு அவன் உணர்வு அலைகளை அனுப்பினான்.

அனுமதி கிடைத்து உள்ளே வந்தான்.

பார்ப்பதற்கு மிக வசீகரமாக இருந்தான். ஆரோக்கியமாக இருந்தான். குறிப்பாக புத்திசாலித்தனம்!! கண்கள் ஒளிவிட்டன.

” உங்க கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு வந்தேன். உண்மையில்யே இது அதிசயம்தான்... எங்கள் காலத்தில் , அதாவது 100 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க வேண்டியதை, இப்போதே கண்டுபிடித்து விட்டீர்களே”

” ஓ...எதிர்கால மனிதன்”

இருவருக்கும் வியர்த்து போனது.

இல்லை..இது வெறும் கனவு..மாயத்தோற்றம் -  தைரியம் வரவழைக்க முயன்றனர்.

“ உங்க பேர் ? “

அவன் புன்னகைத்தான்.

” எதிர்காலத்தில் எந்த மொழி இருக்கும். எந்த நாட்டினன் இருப்பான், இந்த இனம் நீடிக்கும் என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. பரிணாம வளர்ச்சியில் புத்திசாலித்தனம் , தீய உணர்வு எல்லாமே வளரும். அப்படி வளர்ந்த உச்ச நிலைதான் நான்.”

சொல்லிக்கொண்டே  தீப்பெட்டி அணுகுண்டை எடுத்தான்.

காம்பினேஷன் பட்டன்களை தட்ட தொடங்கினான்.

“ ஹேய் .. நிறுத்து “ அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான் ஜேம்ஸ்.

பல ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட அவனை குண்டு தொட முடியவில்லை.

அவன் சிரித்தான்.

” இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து ஸ்பேஸ்- டைம் துப்பாக்கி கண்டுபிடுத்தார்கள்..அதை வைத்து வருங்கால மனிதனை கொன்று பயிற்சி எடுத்தார்கள்”

ராஜேஷ் முகம் ஒளிர்ந்தது..

” ஹேய் ,,இவன் சொல்வது தவறு...ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பார்கள் என சொல்ல வேண்டும். ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தார்கள் என எப்படி சொல்ல முடியும் ? “

அவன் எதையும் கண்டுகொள்ளாமல் , பட்டனை அழுத்தி கொண்டு இருந்தான்.

“ சரியாத்தான் சொல்றான், நமக்குதான் ஐம்பது ஆண்டுகள் கழித்து என்பது எதிர்காலம் .. இவன் நூறு ஆண்டுகள் கழித்து பிறந்தவன். அவனுக்கு ஐம்பது ஆண்டுகள் என்பது இறந்த காலம்தான் “  ஜேம்ஸ் அலுப்புடன் சொன்னான்.

இன்னும் இரண்டு பட்டன்கள்தான். அது வெடித்து விடும்.

“ ஹேய்....   இதை எப்படி கவனிக்காமல் போனோம். இவன் அந்த கடைசி பட்டனை அழுத்தினால் உலகம் அழிந்து விடும். அதன் பின் இவன் எப்படி நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க முடியும். ஆக இவன் இருப்பு என்பதே பாரடக்ஸ் தானே”

ராஜேஷ் அலறினான்.

“ அட ..ஆமா.. லாஜிக்கலான கேள்விதான் “

ஜேம்ஸ் பெருமூச்சு விட்டான்.

அந்த எதிர்கால மனிதன் ஒரு கனவு போல மறைந்தான்.

“ ம்ம்ம்.. எதிர்கால மனிதன் என்பது ஒரு தவறான முன் யூகம் “ சிரித்த ராஜேஷ் ,” சரி வா...ஃப்ரெஷா கொஞ்சம் ஆக்சிஜன் அடிச்சுட்டு வரலாம்” என்றான்.

இருவரும் ஆக்சிஜன் பாட்டிலை எடுத்து கொஞ்சம் உறிஞ்சினார்கள்.

மூளை முன்பை விட நன்றாக யோசித்தது.

“ சரி.. லாஜிக் என்பதே  இருப்பு சார்ந்ததுதானே.. நாம் இல்லாவிட்டால் லாஜிக் ஏது ..  இல்லாமையில் இருந்து இருப்பு தோன்ற முடியாது என்பது லாஜிக்..ஆனால் நாமெல்லாம் தோன்றுவதற்கு முன்பு , ஒரு லாஜிக் மீறலில்தான் உலகம் தோன்றி இருக்கிறது.

நாம் இருப்பதற்கு முன்பும் லாஜிக் இல்லை.. நாம் இல்லாமல் போன பின்னும் லாஜிக் இல்லை.

எனவே வருங்கால மனிதன் வந்து உலகை அழிப்பது லாஜிக் மீறல்தான் என்றாலும் , சாத்தியமான ஒன்றா”

ராஜேஷ் கேட்க, ஜேம்ஸ் சற்று குழம்பினான்.

“ இதில் குழப்பம் என்ன இருக்கு, இந்த லாஜிக் மீறல் லாஜிக்கலாத்தானே இருக்கு “

எதிர்கால மனிதன் அவனுக்கே உரிய புன்னகையுடன அந்த அறையில்தான் அவ்வளவு நேரம் இருந்தது போல , அவர்களை பார்த்தான்.

மெதுவாக கடைசி பட்டனை அழுத்தினான்

************************************************************************



Monday, January 3, 2011

உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!

இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே...

***************************************************************


- அவர் எனக்கு நல்லா தெரிஞ்சவரு.. தைரியமா பொண்ணு கொடுக்கலாம் “ என் குரலில் அபார நம்பிக்கை...
என்னை நம்பிக்கையுடன் பார்த்தார் பெண்ணின் தந்தை .

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா