Wednesday, October 20, 2010

பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில்

சிலருடன் போணில் பேசினால், மனதை ரீ சார்ஜ் செய்தது போல , புத்துணர்வு கிடைக்கும்..
ஆனால் பேசுவதன் மூலம் செல் போன் சார்ஜ் ஏறுமா ?

ஏறும் என்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள்..

இவர்கள் சொல்வது போல நடந்தால், நம் செல்போனின் சார்ஜ் இறங்கி விட்டால் , யாருக்காகவது போன் செய்து எந்திரன் படம் பற்றியோ, அல்லது நகுலனின் கவிதைகளில் காணப்படும் தொன்மங்கள் பற்றியோ, ஒரு பத்து நிமிஷம் பேசினால் போதும்.. சார்ஜ் ஏறி விடும்..

" ஸ்பீக்கர் என்ன செய்கிறது? எலக்ட்ரிக் சிக்னலை , ஒலி அலையாக மாற்றுகிறது... எனவே ஒலி அலை , எலக்ட்ரிக் சிக்னலாக மாறுவதும் சாத்தியம்தான்" என்கிறார்கல் டாக்டர் யங் ஜூன் பார்க், ( சாமங் உயர் தொழில் நுட்ப கழகம் ) மற்றும் சாங் வூ கிம் ஆகியோர் .. அட்வான்ஸ் மேட்டிரியல்ஸ் என்ற பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இவ்வாறு தெரிவித்து இருகின்றனர்..

" பேசுவதால் மட்டும் அல்ல.. சத்த அலைகளை எங்கு இருந்தும் பயன்படுத்தலாம்.. டிராபிக் மிகுந்த இடங்கள், வாகன இரைச்சல் என எதையும் பயன் படுத்தலாம் " என்கிறார்கள் இவர்கள்..

அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டுமானால், piezoelectricity என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
சில திட பொருட்களுக்கு பீசோ எலக்ட்ரிசிட்டி என்ற இந்த பண்பு இருக்கும்..
என்ன இந்த பண்பு ?
ஒரு பொருளை வளைக்கவோ, அழுத்தவோ செய்தால் அதில் மின்சாரம் உண்டாகும் என்பதே இந்த பண்பு.. உதாரனமாக ஒரு இடத்தில் எவ்வளவு சத்தம் இருக்கிறது என்பதை இதை பயன்படுத்தி அறியலாம்.. சத்த்சம் ஏற்படும்போது , அந்த பொருளில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது அல்லவோ.. அதற்கேற்றபடி மின்சாரம் உண்டாகும்.. அந்த மின்சாரப்பை அளப்பது எளிது..அதன் மூலம் சத்தம் எவ்வளவு கண்டு பிட்க்கலாம். இது போல பல பயன்பாடுகள் உள்ளன..
அதே போல, ரிவர்ஸ் பண்பும் இதற்கு உண்டு.. மின்சாரத்தை செலுத்தினால், அதன் வடிவ அமைப்பு மாறும்..
அதாவது, வடிவமைப்பை மாற்றினால் மின்சாரம், மின்சாரம் செலுத்தினால் வடிவ அமைப்பு மாற்றம்..

இந்த பண்புதான், மின் அலைகளை , ஒலி அலைகளாக மாற்ற பல இடங்களில் பயன் பட்டு வருகிறது..இத எதிர்பன்பில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்..
நடப்பது, ஓடுவது, ஹோட்டல்களில் நடனம், சாலை போக்குவரத்து மூலம் ஏற்படும் அதிர்வுகளால் மின்சாரம் உண்டாக்க முயன்று வருகிறார்கள்..
கொரிய விஞஞானிகள் சற்று வித்தியாசமாக யோசித்து செல் போனை சார்ஜ் செய்ய முயல்கிறார்கள்..

சின்க் ஆக்சைடை இரண்டு எலக்ராடுகள் மத்தியில் வைத்து , ஒலி எழுப்ப பட்டது.. நுறு டெசிபல் அளவில் ஒலி எழுந்த போது , மின்சாரம் உண்டானது..ஐம்பது மில்லி வோல்ட் மின்சாரம் கிடைத்து..

செல் போனுக்கு இதை விட பல மடங்கு அதிக மின்சாரம் தேவை ..
இன்னொரு பிரச்சினை ..
நாம் சாதாரமாக பேசும்போது .,ஐம்பது அல்லது அறுபது டெசிபல் அளவில்தான் ஒலி இருக்கும்... எனவே சார்ஜ் செய்ய வேண்டுமானால், காட்டு கத்து கத்தினால்தான் முடியும்..
இந்த பிரச்சினைகளை நீக்கி, சாதாரண பேச்சு சத்தத்தில் சார்ஜ் செய்யும் கருவியை கண்டு பிடிக்க முயன்று வருகிறார்கள்..

இது விரைவில் விற்பனைக்கு வரும்...

பைக் ஓட்டும்போது பேசினால் , போலீஸ்காரர் பிடித்தால், நான் பேசவில்லை, சும்மா சார்ஜ் செய்கிறேன் என சொல்லி தப்பிக்கலாம்..

வீட்டில், எத்தனை பேர் இது போல சார்ஜ் செய்கிறேன் என சொல்லி விட்டு கடலை வறுக்க போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்...

Monday, October 18, 2010

எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்

நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன்..
வெள்ளைக்காரன் நம்மை விட சிறந்தவன், "அவாள்" மட்டும் அறிவாளிகள், மற்றவர்கள் முட்டாள்கள் என ஒன்றா , இரண்டா..ஆயிரம் சிந்தனை சிறைகளில் சிக்கி தவிக்கின்றனர் நம்மவர்கள்..
இந்திரன் படத்தை சிலருக்கு பிடிக்கவில்லை..விமர்சிக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம்..
ஆனால் ஜாதி வெறியுடன் சிலர் நடந்து கொள்வது நகைப்புக்கு உரியது.. பாரம்பரியம் மிக்க ஒரு தின் பத்திரிகை கூட அப்பட்டமான ஜாதி வெறியை காட்டி இருந்தது..

அவாள் இனத்தை சேர்ந்த அனைவரும் இப்படி இல்லை... சிலர் செய்யும் தவறால் ஒட்டு மொத்தமாக அவர்கள் பெயர் பாதிக்க படுகிறது..

இன்னொன்று , பிராமணர் அல்லாதவர்களின் தாழ்வு மனப்பான்மை.. ஒரு விஷயத்தை அவாள் மட்டும்தான் சிறப்ப்பாக செய்ய முடியும் என கற்பனையாக ஒரு சிந்தனையை பரப்பி வருகிறார்கள்..

என்ன சொல்கிறார்கள் இவர்கள்..

1 கமல்- சுஜாதா கூட்டணிதான் "இயல்பான " கூட்டணி.. அவர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தால் , படம் இன்னும் பெரிய ஹிட் ஆகி இருக்கும்

2 சுஜாதா உயிடன் இருந்து இருந்தால், படம் வேறொரு உயர்ந்த தரத்தை அடைந்து இருக்கும்

3 சுஜாதாவின் திரைகதையை ஷங்கர் மாற்றி விட்டார் .. அதே திரைக்கதையாக இருந்தால், படைத்து இருக்கும்.ஆஸ்கார் கிடைத்து இருக்கும்.
4 திரைகதையில் சுஜாதா கில்லாடி.. புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார்..

இதை எல்லாம் பாதித்தால் , எந்த அளவு நம் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என புரியும்

புத்திசாலித்தனம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.. அவாள் மாட்டும் புத்தி சாலை என சொல்வது தவறு என்பதை மறந்து அவர்கள் சொல்லும் வாதத்தை கவனிப்போம்..

1 இயல்பான , புத்திசாலி கூட்டணி என இவர்கள் சிலாகிக்கும் கமல்- சுஜாதா என்ற அவாள் கூட்டணியில்தான் , விக்ரம் என்ற குப்பை படம் வந்தது... அது ஹிட் ஆகவும் இல்லை , நல்ல பெயரும் கிடைக்கவில்லை...
2 சுஜாதா உயிருடன் இருந்து இருந்தால், படத்தின் வசனங்களுக்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு கிடைத்து இருக்காது... சிவாஜி படத்தின் வசனம் வரவேற்பு பெற்றதா என்ன ? ஜாதி வெறியுடன் , தமிழர்களை சில வசங்கள் சீன்டியதுதான் அவர் செய்த சாதனை . எந்திரனுக்கு சுஜாதாவே முழு வசனமும் எழுதி இருந்தால், வசனம் இயல்பாக இருந்து இருக்காது..
கண்டிப்பாக படம் பிளாப் ஆகி இருக்கும்... super படம் ,,மக்களளுக்கு புரியவில்லை என சுஜாதா பேட்டிகொடுப்பார்..
3 சுஜாதாவின் கதைகள் அவர் உயிடன் இருந்த போதே படம் ஆக்கப்பட்டன.. அவர் வசமும் எழுதினர் அப்போது அந்த படங்கள் என்ன சாதித்தன.. ? பெரும்பாலும் பிளாப் தான் ஆகின .. அவர் ஹிட் ரேட் மிக குறைவு..
எந்திரன் படம் முழுக்க முழுக்க ஷங்கரின் கதை.. அதில் வசனம் மட்டுமே சுஜாதா..எனவே அவர் கதையை ஷங்கர் மாற்றி விட்டார் என சொல்வது அபத்தம்..

4 சினிமாவில் சுஜாதவை சும்மா ஊறு காய் ஆகத்தான் பயன் படுத்தி வந்தனர்.. அவர் உண்மையிலே கில்லாடிய இருந்தால், அவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரவில்லை? அவர் ஏன் முத்திரை பதிக்கவில்லை?
மணிரத்னம் போன்றவர்கள் இனப்பற்றுடன் வாய்ப்பு வழங்கினர் என்பதுதான் வரலாறு ..


பின் குறிப்பு.. 1 நானும் சுஜாதாவை விரும்பி படிப்பவன்.. அதற்காக ஜாதி வெறியை மறைக்க கூடாது..

2 நான் பிராமண துவேஷம் கொண்டவன் அல்ல .. ஏன் நண்பர்களில் பலர் பிராமனர்கள் தாம்.. பிராமணியம் என்பதை பற்றித்தான் பேசுகிறேன்..

எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் விட்டு வைக்காத வினோத ஆய்வுகள் ( பார்ட் - 2 )



எரிசக்தி தயாரிக்கும் எக்குதப்பான முறைகளை பார்த்து வருகிறோம்... இவையெல்லாம் உடனடியாக , பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்ல முடியாது.. ஆனாலும் ஆங்காங்கு பயன்பட்டு வருகின்றன ... காற்றாலைகள் எல்லாம் முதலில் வேடிக்கையாகத்தான் பார்க்க பட்டன,,, இன்று அது ஒரு பெரிய தொழிலாக இருக்கிறது ( நான் சில காலம் அதில் வேலை பார்த்தேன் என்பது இங்கு தேவை இல்லாத சுய தம்பட்டம்.. ஹி ஹி )சரி..மேலும் சில ஏடாகூடா தொழில் நுட்ப ஆய்வுகள்..

6 பெரிய கட்டடம் கட்டும்போது மண்ணை தோண்டுகிறார்கள்... அதெல்லாம் சகதியாகி வீணாகிறது...அதே போல , சுரங்கம் அமைக்கும் பணியிலும், நிலக்கரி போன்றவை எடுக்கும் இடத்திலும் , நிலத்தடி நீருடன் கலந்து சக்தியாகி வீணாகிறது..அல்லது சரசாரி பயன்பாட்டில் செலவாகிறது..
கலிபோர்னியாவில் மட்டும் 7 லட்சம் திட வடிவ சகதி , ஆண்டொன்றுக்கு கிடைக்கிறது.. இதன மூலம் பத்து ௦ மில்லியன் kvh மின்சாரம் தயாரிக்க முடியும் ( நாள் ஒன்றுக்கு )
ஆய்வு நிலையில் இருக்கும் இந்த முறை அமுலுக்கு வந்தால், தொழிற்சாலைகளும் பொது நிறுவனங்களும் பயன் பெறும்.
செலவு செய்து சக்தியை அப்புறபடுத்தும் நிலை மாறி , வருவாய் பெறும் நிலை ஏற்படும்..

7 ஜெல்லி பிஷ்... இருளில் ஒளிரும் தன்மை கொண்டது... அதில் இருக்கும் ஒளிரும் தனமை கொண்ட பச்சை ப்ரோட்டின்தான் இந்த ஒளிரும் தன்மைக்கு காரணம்..
இந்த ப்ரோட்டீனை வைத்து ஸ்வீடனில் ஆய்வு செய்ய பட்டது.. ஒரு அலுமினியம் கம்பியில் ஒரு சொட்டு ப்ரோட்டின் விடப்பட்டது.. பிறகு அதன் மீது , புற ஊதா கதிர்களை பாய செய்யும்போது , எலக்ட்ரான் வெளியேறியது... இதன் சர்க்யூட் வழியே செல்லும்போது , மின்சாரம் உண்டானது..
உயிரியல் பேட்டரி செய்யும் சாத்தியம் , பல மருத்துவ பயன்பாடுகளுக்கு ஏற்றது.. சில நுண் கருவிகளை நம் உடலுக்குள் பொறுத்த வேண்டிய நிலை வரும்போது, அந்த கருவிகளில் பயன்படும் பேட்டரிகலாக இந்த உயிரியல் பேட்டரிகள் பயன்படும்..( சூரிய பேட்டரி , இங்கு வேலைக்கு ஆகாது என்பது தெளிவு )
மின்மினி பூச்சி உள்ளிட்ட பல உயிரின்களில் ஆய்வு நடந்து வருகிறது

8 இப்போது காண இருக்கும் முறை எல்லா இடத்துக்கும் பொருந்தாது..

சில பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு அடிப்புற மண் இடுக்களில். மீதேன் வாயுவும் , கார்பன் டை ஆக்சைடும் அடைபட்டு இருக்கும்...
வெப்பநிலை மாறும்போது, சோடா பாட்டிலில் இருந்து கேஸ் வெளியேறுவது போல, குபீர் என இவை வெளியேறும்.. ஏரி பெரிய சத்துடன் வெடித்து சிதறுவது போல இது இருக்கும்...பல நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படலாம்... காமரூன் நாட்டில் இதுபோன்ற சம்பவத்தில் பலர் உயிர் இழந்தனர்..
ர்வாண்டா நாட்டில் , இந்த வாயுக்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கின்றனர்...

ஏரியில் இருந்து உறிஞ்சப்படும் வாயுக்கள் மூலம் 3 .7 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.. அடுத்த சில ஆண்டுகளில், நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்..
உடனே இது போல புழல் ஏரியில் அமல் படுத்த முடியுமா என அவசரப்பட கூடாது... இயற்கையாக அமைந்தால்தான் உண்டு...
9 பாக்டீரியா என்றால் படையும் நடுங்கும்.. பாக்டீரியா இல்லாத இடமே இல்லி என்பதால் , அதை வைத்து மின்சாரம் தயாரித்தல் பெரிய வெற்றி கிடைக்கும்..
ஒவ்வொரு உயிருக்கும் தற்காப்பு முறை ஒன்று இருக்கும்... பெக்டீரியவுக்கும் அது உண்டு.. உணவு கிடைக்காத போது , சமாளிப்பதற்காக, பக்டீரியா தன சக்தியை கொழுப்பு அமிலமாக மாற்றி சேகரித்து வைத்து கொள்ளும்... இந்த அமிலம்தாம் பயோ டீசல் தயாரிக்கவும் பயன் படுகிறது.. இந்த இரண்டு தனமியும் சேர்த்து பார்த்த விஞ்ஞானிகள், பேக்டீரியா மூலம் மின் உற்பத்தி சாத்தியத்தை உணர்ந்தனர்,,
பாக்டீரியாவில் இருக்கும் என்சைம்களை செயற்கை முறையில் நீக்கி , அது அமிலம் சுரப்பதை அதிகப்படுத்துதல்.. அதன் பின், அதில் ஆக்சிஜனை நீக்கி விட்டு , பயோ டிசல் உருவாக்குதல் என்பதே இந்த முறை..

பேக்டீரியா நிரப்பி வண்டி ஓட்டும் காலமும் வரலாம்... ஆனால் இப்போதைக்கு முடியாது... செலவு அதிகம் ஆகிறது... போக போக குறைந்த செலவில் தயாரிக்க முடியலாம்

10 கார்பன் பைப்புகள் மிகவும் உறுதி தன்மை வாய்ந்தவை... அதிக எடையை தாங்க வேண்டிய இடங்களில் இவை பயன்படுகின்றன..
இவற்றின் இன்னொரு பண்பு சமிபத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது.. சஊரிய சக்தியை உறிஞ்சும் ஆற்றல் இதற்கு அதிகம் என்பதே அந்த கண்டு பிடிப்பு..
இப்போது இருக்கும் முறையில், கூரை முழுதும், ஒரு தகடு போல ஒன்றை பொருத்தி , சூரிய சக்தியை உறிஞ்சுவதை பார்த்து இருப்பிர்கள்
கார்பன் பைப்புகளை பயன் படுத்தினால், குறைந்த இடத்தில் அதிக சக்தியை உறிஞ்சலாம்.. மின்சாரமும் தயாரிக்கலாம்...

********************************************************************

இது போல பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.. அவை நடைமுறைக்கு வரும் வரையாவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது..

Sunday, October 17, 2010

சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொருட்கள்- சூப்பர் ஆய்வுகள்

இயற்கை மாசு படுதல் என்பது உலகளாவிய பிரச்சினையாக உருவாகி வருகிறது.. இந்த வேகத்தில் போனால் , உலகத்தை அழித்தவர்கள் என்ற பெருமைதான் நம் தலைமுறைக்கு எஞ்சும்..
ஆனால் மனித சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது.. அழிக்கும் திறன் இருக்கும் அளவுக்கு ஆக்கும் திறனும் மனிதனுக்கு உண்டு. எனவேதான் , மாற்று எரிபொருளை கண்டு பிடிக்கும் வேலையில் பலர் இறங்கி இருக்கின்றனர்..
இப்போதிய நிலையில் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள்தான் எரிபொருளாக உள்ளன.. இதை விட்டால் அணு உலைகள்... தெர்மல் பவர் பிளாண்டை விட , அணு உலையின் திறன் அதிகம்.. ஆனால் பாதிப்பு மிக மிக அதிகம்..
நிலக்கரியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் திறன் குறைவு, சுற்றுப்புற மாசு சீர்கேடு அதிகம்.எல்லாவற்றையும் விட , இந்த எரிபொருள் சில ஆண்டுகளில் காலியாகி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
சூரிய மின்சாரன், காற்றாலைகள் என சில பிரபலம் அடைந்து வருகின்றன.. ஆனால் இதன் பயன் பாடு குறைவு.. போதுமான காற்று இல்லாத இடங்களில் காற்றாலை வேலை செய்யாது.. சில இடங்களில் சூரிய ஒளி இருக்காது..அங்கு என்ன செய்வது.. நிலத்தடியில் மின்சாரம் தேவைப்படலாம்..
எனவே மாற்று எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது..சில தீர்வுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன..
இவற்றில் சில காமடியாக இருக்கலாம், கேலியாக தோன்றலாம்.. வினோதமகவும், நடைமுறைக்கு ஒவ்வாத்தாகவும் இருக்கலாம்.. ஆனால் யாருக்கு தெரியும்,,, சர்க்கரையை பயன் படுத்தி , லாப்டாப்பை ரீ சார்ஜ் செய்யும் காலம் வரக்கூடும்..
எல்லா கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் வினோதமக இருக்கும்..பிறகு ஏற்கப்படும் என்பது வரலாறு... சில கண்டுபிடிப்புகள் , நடைமுரைக்கு ஒத்து வராவிட்டாலும், வேறு கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்...
எனவே இவற்றை தெரிந்து கொள்வது அவசியம்..

வினோதமான மாற்று எரிபொருட்கள்- டாப்10- இதோ உங்கள் பார்வைக்கு
1. சர்க்கரை ( சுகர் )


சர்க்கரை என்பது வாகனத்துக்கு தீங்கானது என்பது பலருக்கு தெரியாது.. ஆனால் இதே சர்க்க்கரையை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் , விர்ஜினா டெக் ஆய்வாலர்கள்...
சர்க்கரை, தண்ணீர், சில என்சைம்களை கலந்தால் ஹைட்ரஜன் உண்டாகும்.. இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கலனில் சேமிக்கப்பட்டு , எரிபொருளாக பயன்படும்...
வழக்கமாக ஹைட்ரஜன் தயாரித்தலை விட , குறைவான செலவில் தயாரிக்கலாம்.,.. மாசு படுதலும் குறைவு..

ஆனால் நாளைக்கே ஜீனியை அள்ளி கொட்டி வாகனம் ஓட்ட முயற்சித்து விடாதீர்கள்.... ஆபத்து...

இது நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்... குறைந்த பட்சம், சுகர் கோட்ட்ட் பேட்டரிகளாவது விரைவில் நடைமுரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது

2. சூரிய புயல்

சூரியனை சுற்றி சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகள் நடந்து வீசிக்கொண்டே இருக்கின்றன,,
சூரியனை சுற்று வருமாறு ஒரு செய்ற்கை கோளை ஏவி , அந்த கதிர்வீச்சில் இருக்கும் எல்க்ரானகளை கவர முடியுமா என பார்க்கிறார்கள்.. செய்ற்கை கோளில் இருக்கும் மின்கலம் இதை எரிசக்தியாக மாறும்... அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது பூமிக்கு அனுப்ப்படும் எனப்து திட்டம்..

ஆனால் அவ்வளவு தொலைவில் இருந்து அனுப்புவது சாதரண விஷயம் அல்ல.. வழியிலேயே இழப்பு அதிகமாக ஆகி விடும்..
குறைந்த பட்சம், இந்த எரிசக்தியை , நாம் அனுப்பியுள்ள மற்ற செயற்கைகோள்களுக்காவது பயன்படுத்த , அதிக சாத்தியங்கள் உள்ளன..

3. மனித கழிவு

பெயரை கேட்டாலே அதிருதுல.. ஆனால் இதற்கும் வாய்ப்புகள் உள்ளன.. ஏற்கனவே மாட்டு சாணம் பயன்படுத்தி எரிபொருள் , மின்சாரம் தயாரித்து வருவது நடைமுரையில் உள்ளது..
சான் பிரான்ஸிஸ்கோவில் நாய் கழிவை , மீத்தேனாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்..
நாயை வாக்கிங் அழைத்து செல்பவர்கள், அதன் கழிவை சேகரித்து ஒரு குறிப்பிட்ட இட்த்தில் கொட்ட வேண்டும்.. அது மீத்தேனாக மாற்ற்ப்பட்டு, தெருவிளக்கை ஒளிர செய்ய பயன்படுகிறது..

மனித கழிவும் இதே போல பயன்படும்... 70 வீடுகளில் இருந்து சேகரிக்கபடும் கழிவு, ஒரு கார் 10,000 மைல் செல்வதற்கான எரிசக்தியை வழங்கவல்லது
எடின்பர்க்கில் இருக்கும் ஒரு பல்கலைகழகம் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது..

சிறு நீர் கழித்தால் காசு தரும் திட்டம் வந்தால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை..

சிறிய கிராமங்கள், தொழிற்சாலைகளிலாவது, இது விரைவில் சாத்தியம் ஆகலாம்

4. உயிருள்ள உயிரற்ற மனித உட
ல்
மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை பயன்படுத்தி இன்னொரு ஆராய்ச்சி.. கூட்டம் சேரும் இடங்களில் உண்டாகும் வெப்பத்தை ஒன்று சேர்த்தால், கிடைக்கும் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுட்பம் ஆய்வில் இருக்கிறது..
உடல் சூட்டை பயனடுத்தி செல்போனை சார்ஜ் செய்ய்யும் தொழில்னுட்பம் உடனடி சாத்தியம்
பிரிட்டனில் இருக்கும் ஒரு எல்கட்ரானில் சுடுகாட்டில், மனித உடலை எரிக்கும்போது உண்டாகும் வாயுவை பயன்படுத்தி , அந்த அறைய இதமான சூட்டில் வைத்து கொள்கிறார்கள்...
வழக்கமாக , இந்த வாயுக்கள் வீணாக சென்று விடும்.. இவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்
5. நடனமாடினால் மின்சாரம்
அழாகன பெண்ணுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தாலே சூடேறும்.. நெருக்கமாக் நடனமாடினால், மின்சாரம் பாயும்... நாம் சொல்வது அந்த மின்சாரம் அல்ல...
பலர் நடனமாடும்போது, தரையில் ஏற்படும் அதிர்வை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுடபம்..பாலங்களில், சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளை பயன்படுத்தலாம்//
சோதனை முரையில் சில இடங்களில் செய்து பார்த்தனர்.. மின்சாரம் உண்டாகிறது..ஆனால் செலவு அதிகம்...
போக போக , செலவு குறையலாம்ம்

( தொடரும் )

ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்று பார்வை


ஜெர்மனி கலாச்சாரத்தை பழகி கொண்டு இருப்பதானால் இருங்கள்..இல்லையேல் வெளியேறுங்கள் . பல கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கும் தமாஷ் வேண்டாம் என்ற மன நிலை ஜெர்மனியில் தோன்றி இருப்பதை குறித்து என் கவலையை தெரிவித்து இருந்தேன்..
மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்..
செய்தியை மட்டும் படித்து நான் சொன்ன கருத்து அது.. ஆனால் அனுபவ ரீதியாக , ஆழந்த சிந்தனையுடன், பதிவர் க்க்கு – மாணிக்கம் பின்னூட்டம் இட்டு இருக்கிறார்..
அவர் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, அவரது வித்தியாசமான பார்வையை நாம் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது என்பதால் அதை தனி பதிவாக இடுகிறேன்..
இது அவரது கருத்து மட்டுமே... என் கருத்து அல்ல... அவர் கருதுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடு இல்லை.. விரிவான விவாதம் தேவை
ஒரு பின்னூட்ட்தை இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையுடன், தன் அனுபவத்தை கலந்து எழுதிய அவர் எழுத்துக்கு தலை வனங்குகிறேன் ..
இதை முரண்பாடாக எண்ணாமல் கலந்துரையாடலாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

இனி வருவது அவர் கருத்து

***********************************
கக்கு - மாணிக்கம் said...

ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று அந்நாட்டு ஆட்சியாளர் சொல்வதில் என்ன தவறு? இந்திய காலாசாரம்தான் சிறந்து என்று இந்தியர்கள் சொல்வார்கள்தானே?

இந்தியா இந்தியர்களுக்கே என்றால் கூட அதுவும் தவறா? இந்தியாவையும் ஜெர்மனியையும் இந்த தலைப்பை எடுத்துகொண்டு ஒப்பிடுவது தவறு.

சுதந்திரம் அடைந்த பின்னர் நம் நாட்டிற்கு எந்த அந்நியரும் பிற நாட்டவரும் வேலைகாகவோ அல்லது பிழைகவோ , தங்கள் நாட்டு அடக்கு முறைகள் வெறுத்து அகதிகளாகவோ கூட வரவில்லை. (இலங்கை தமிழர்களின்/அகதிகளின் நிலை வேறு.)

ஜெர்மனியில் பிற தேசத்துமக்கள் அணைவரும் வசிகின்றனர். தமிழர்களும் கூட உண்டு. அவர்கள் சிறுபான்மை எண்ணிக்கைதான். சென்ற முப்பது வருடங்களாக நிறைய அரபு நாட்டினர் அங்கு குடியேறி வசித்து வருகின்றனர்.குறிப்பாக சவூதி அரபிய நாட்டினர். அந்நாட்டு குடி உரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதற்கே உண்டான பக்க விளைவுகளும் அங்குண்டு. மசூதிகளின் எண்ணிகையும் அதிகமாகி வருகிறது. பின்னர் அந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும் சந்தர்பம் உள்ளது. இப்பவே தங்களின் மதம் சார்ந்த சட்டமான ஷரியத்தை மட்டும் பின்பற்ற அவர்கள் தீவிரமாக முயற்சி எடுகின்றனர்.

படித்துகொண்டு பகுதி நேர வேலை பார்க்கும் பல ஜெர்மானிய இளைஞர்கள் அணைவருக்கும் தற்போது அங்கு நிகழும் சூழல்கள் வெறுப்பை தந்துள்ளன. நான் முன்பு பயிற்சிக்காக சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் மாலை நேரங்களில் வந்து பணியாற்றும் பல படித்துக்கொண்டு இருக்கும் இளையவர்கள் "பிறநாட்டவர்கள் தங்களின் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்வதாக " கூறுகின்றனர்.

இதற்கு என்ன சொல்வீர்கள்? இதே நிலை இங்கு இந்தியாவில் நிலவினால் ஏற்றுகொள்வீர்களா? ஆனாலும் அதுவும் நடந்து கொண்டுள்ளது. பிற நாட்டு தெழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் அரபு நாடுகளில் அவர்கள் எல்லாம் எப்படி நடத்தபடுகிறார்கள் என்றாவது தெரியுமா?
அவர்கள் எல்லாம் தம் மதம் பரப்பவும், குடியுரிமை கேட்டும் போராட்டமா செய்கிறார்கள்? அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் ? எல்லாரும் கொண்டாடும் "நம்ம ஊர்" காஷ்மீரில் ஒரு அடி நிலம் வாங்க எந்த இந்தியனாலும் இயலுமா?
நான் சொல்லுவதெல்லாம் இதுதான்; உள்ளூர் கதையே நாறிகிடக்க, நமக்கு ஏன் ஜெர்மனி பற்றி கவலை?

இன்னுமொன்று. நாம் தான் இன்னமும் அந்த ஹிட்லரை கட்டிக்கொண்டு அழுகிறோம் வேறு வழி வழி இல்லாமல். இன்றுள்ள ஜெர்மானிய தலை முறையினர் ஹிட்லரை ஒரு மன நலம் குன்றிய மனிதனாக எண்ணியே புறம் தள்ளுகின்றனர்.

இது ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் மட்டுமே கருதப்படவேண்டும் அன்றி சண்டை போடும் முயற்சியாக இல்லாமல் இருக்க விழைகிறேன்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா