Monday, October 18, 2010

எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்

நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன்..
வெள்ளைக்காரன் நம்மை விட சிறந்தவன், "அவாள்" மட்டும் அறிவாளிகள், மற்றவர்கள் முட்டாள்கள் என ஒன்றா , இரண்டா..ஆயிரம் சிந்தனை சிறைகளில் சிக்கி தவிக்கின்றனர் நம்மவர்கள்..
இந்திரன் படத்தை சிலருக்கு பிடிக்கவில்லை..விமர்சிக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம்..
ஆனால் ஜாதி வெறியுடன் சிலர் நடந்து கொள்வது நகைப்புக்கு உரியது.. பாரம்பரியம் மிக்க ஒரு தின் பத்திரிகை கூட அப்பட்டமான ஜாதி வெறியை காட்டி இருந்தது..

அவாள் இனத்தை சேர்ந்த அனைவரும் இப்படி இல்லை... சிலர் செய்யும் தவறால் ஒட்டு மொத்தமாக அவர்கள் பெயர் பாதிக்க படுகிறது..

இன்னொன்று , பிராமணர் அல்லாதவர்களின் தாழ்வு மனப்பான்மை.. ஒரு விஷயத்தை அவாள் மட்டும்தான் சிறப்ப்பாக செய்ய முடியும் என கற்பனையாக ஒரு சிந்தனையை பரப்பி வருகிறார்கள்..

என்ன சொல்கிறார்கள் இவர்கள்..

1 கமல்- சுஜாதா கூட்டணிதான் "இயல்பான " கூட்டணி.. அவர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தால் , படம் இன்னும் பெரிய ஹிட் ஆகி இருக்கும்

2 சுஜாதா உயிடன் இருந்து இருந்தால், படம் வேறொரு உயர்ந்த தரத்தை அடைந்து இருக்கும்

3 சுஜாதாவின் திரைகதையை ஷங்கர் மாற்றி விட்டார் .. அதே திரைக்கதையாக இருந்தால், படைத்து இருக்கும்.ஆஸ்கார் கிடைத்து இருக்கும்.
4 திரைகதையில் சுஜாதா கில்லாடி.. புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார்..

இதை எல்லாம் பாதித்தால் , எந்த அளவு நம் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என புரியும்

புத்திசாலித்தனம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.. அவாள் மாட்டும் புத்தி சாலை என சொல்வது தவறு என்பதை மறந்து அவர்கள் சொல்லும் வாதத்தை கவனிப்போம்..

1 இயல்பான , புத்திசாலி கூட்டணி என இவர்கள் சிலாகிக்கும் கமல்- சுஜாதா என்ற அவாள் கூட்டணியில்தான் , விக்ரம் என்ற குப்பை படம் வந்தது... அது ஹிட் ஆகவும் இல்லை , நல்ல பெயரும் கிடைக்கவில்லை...
2 சுஜாதா உயிருடன் இருந்து இருந்தால், படத்தின் வசனங்களுக்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு கிடைத்து இருக்காது... சிவாஜி படத்தின் வசனம் வரவேற்பு பெற்றதா என்ன ? ஜாதி வெறியுடன் , தமிழர்களை சில வசங்கள் சீன்டியதுதான் அவர் செய்த சாதனை . எந்திரனுக்கு சுஜாதாவே முழு வசனமும் எழுதி இருந்தால், வசனம் இயல்பாக இருந்து இருக்காது..
கண்டிப்பாக படம் பிளாப் ஆகி இருக்கும்... super படம் ,,மக்களளுக்கு புரியவில்லை என சுஜாதா பேட்டிகொடுப்பார்..
3 சுஜாதாவின் கதைகள் அவர் உயிடன் இருந்த போதே படம் ஆக்கப்பட்டன.. அவர் வசமும் எழுதினர் அப்போது அந்த படங்கள் என்ன சாதித்தன.. ? பெரும்பாலும் பிளாப் தான் ஆகின .. அவர் ஹிட் ரேட் மிக குறைவு..
எந்திரன் படம் முழுக்க முழுக்க ஷங்கரின் கதை.. அதில் வசனம் மட்டுமே சுஜாதா..எனவே அவர் கதையை ஷங்கர் மாற்றி விட்டார் என சொல்வது அபத்தம்..

4 சினிமாவில் சுஜாதவை சும்மா ஊறு காய் ஆகத்தான் பயன் படுத்தி வந்தனர்.. அவர் உண்மையிலே கில்லாடிய இருந்தால், அவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரவில்லை? அவர் ஏன் முத்திரை பதிக்கவில்லை?
மணிரத்னம் போன்றவர்கள் இனப்பற்றுடன் வாய்ப்பு வழங்கினர் என்பதுதான் வரலாறு ..


பின் குறிப்பு.. 1 நானும் சுஜாதாவை விரும்பி படிப்பவன்.. அதற்காக ஜாதி வெறியை மறைக்க கூடாது..

2 நான் பிராமண துவேஷம் கொண்டவன் அல்ல .. ஏன் நண்பர்களில் பலர் பிராமனர்கள் தாம்.. பிராமணியம் என்பதை பற்றித்தான் பேசுகிறேன்..

2 comments:

  1. நல்ல பதிவு... ஆனால் சுஜாதா உண்மையில் திறமைசாலிதான்... விக்ரம் படம் ஹிட் ஆகவில்லை என்று ஒப்புக்கொள்ளலாம்... ஆனால் பேர் வாங்கவில்லை என்று சொல்ல முடியாது...

    ReplyDelete
  2. அவர் திறமைசாலிதான்.. ஆனால் அவர் மட்டுமே திறமைசாலி என நினைப்பது தவறு

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா