Monday, October 18, 2010

எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் விட்டு வைக்காத வினோத ஆய்வுகள் ( பார்ட் - 2 )



எரிசக்தி தயாரிக்கும் எக்குதப்பான முறைகளை பார்த்து வருகிறோம்... இவையெல்லாம் உடனடியாக , பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்ல முடியாது.. ஆனாலும் ஆங்காங்கு பயன்பட்டு வருகின்றன ... காற்றாலைகள் எல்லாம் முதலில் வேடிக்கையாகத்தான் பார்க்க பட்டன,,, இன்று அது ஒரு பெரிய தொழிலாக இருக்கிறது ( நான் சில காலம் அதில் வேலை பார்த்தேன் என்பது இங்கு தேவை இல்லாத சுய தம்பட்டம்.. ஹி ஹி )சரி..மேலும் சில ஏடாகூடா தொழில் நுட்ப ஆய்வுகள்..

6 பெரிய கட்டடம் கட்டும்போது மண்ணை தோண்டுகிறார்கள்... அதெல்லாம் சகதியாகி வீணாகிறது...அதே போல , சுரங்கம் அமைக்கும் பணியிலும், நிலக்கரி போன்றவை எடுக்கும் இடத்திலும் , நிலத்தடி நீருடன் கலந்து சக்தியாகி வீணாகிறது..அல்லது சரசாரி பயன்பாட்டில் செலவாகிறது..
கலிபோர்னியாவில் மட்டும் 7 லட்சம் திட வடிவ சகதி , ஆண்டொன்றுக்கு கிடைக்கிறது.. இதன மூலம் பத்து ௦ மில்லியன் kvh மின்சாரம் தயாரிக்க முடியும் ( நாள் ஒன்றுக்கு )
ஆய்வு நிலையில் இருக்கும் இந்த முறை அமுலுக்கு வந்தால், தொழிற்சாலைகளும் பொது நிறுவனங்களும் பயன் பெறும்.
செலவு செய்து சக்தியை அப்புறபடுத்தும் நிலை மாறி , வருவாய் பெறும் நிலை ஏற்படும்..

7 ஜெல்லி பிஷ்... இருளில் ஒளிரும் தன்மை கொண்டது... அதில் இருக்கும் ஒளிரும் தனமை கொண்ட பச்சை ப்ரோட்டின்தான் இந்த ஒளிரும் தன்மைக்கு காரணம்..
இந்த ப்ரோட்டீனை வைத்து ஸ்வீடனில் ஆய்வு செய்ய பட்டது.. ஒரு அலுமினியம் கம்பியில் ஒரு சொட்டு ப்ரோட்டின் விடப்பட்டது.. பிறகு அதன் மீது , புற ஊதா கதிர்களை பாய செய்யும்போது , எலக்ட்ரான் வெளியேறியது... இதன் சர்க்யூட் வழியே செல்லும்போது , மின்சாரம் உண்டானது..
உயிரியல் பேட்டரி செய்யும் சாத்தியம் , பல மருத்துவ பயன்பாடுகளுக்கு ஏற்றது.. சில நுண் கருவிகளை நம் உடலுக்குள் பொறுத்த வேண்டிய நிலை வரும்போது, அந்த கருவிகளில் பயன்படும் பேட்டரிகலாக இந்த உயிரியல் பேட்டரிகள் பயன்படும்..( சூரிய பேட்டரி , இங்கு வேலைக்கு ஆகாது என்பது தெளிவு )
மின்மினி பூச்சி உள்ளிட்ட பல உயிரின்களில் ஆய்வு நடந்து வருகிறது

8 இப்போது காண இருக்கும் முறை எல்லா இடத்துக்கும் பொருந்தாது..

சில பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு அடிப்புற மண் இடுக்களில். மீதேன் வாயுவும் , கார்பன் டை ஆக்சைடும் அடைபட்டு இருக்கும்...
வெப்பநிலை மாறும்போது, சோடா பாட்டிலில் இருந்து கேஸ் வெளியேறுவது போல, குபீர் என இவை வெளியேறும்.. ஏரி பெரிய சத்துடன் வெடித்து சிதறுவது போல இது இருக்கும்...பல நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படலாம்... காமரூன் நாட்டில் இதுபோன்ற சம்பவத்தில் பலர் உயிர் இழந்தனர்..
ர்வாண்டா நாட்டில் , இந்த வாயுக்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கின்றனர்...

ஏரியில் இருந்து உறிஞ்சப்படும் வாயுக்கள் மூலம் 3 .7 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.. அடுத்த சில ஆண்டுகளில், நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்..
உடனே இது போல புழல் ஏரியில் அமல் படுத்த முடியுமா என அவசரப்பட கூடாது... இயற்கையாக அமைந்தால்தான் உண்டு...
9 பாக்டீரியா என்றால் படையும் நடுங்கும்.. பாக்டீரியா இல்லாத இடமே இல்லி என்பதால் , அதை வைத்து மின்சாரம் தயாரித்தல் பெரிய வெற்றி கிடைக்கும்..
ஒவ்வொரு உயிருக்கும் தற்காப்பு முறை ஒன்று இருக்கும்... பெக்டீரியவுக்கும் அது உண்டு.. உணவு கிடைக்காத போது , சமாளிப்பதற்காக, பக்டீரியா தன சக்தியை கொழுப்பு அமிலமாக மாற்றி சேகரித்து வைத்து கொள்ளும்... இந்த அமிலம்தாம் பயோ டீசல் தயாரிக்கவும் பயன் படுகிறது.. இந்த இரண்டு தனமியும் சேர்த்து பார்த்த விஞ்ஞானிகள், பேக்டீரியா மூலம் மின் உற்பத்தி சாத்தியத்தை உணர்ந்தனர்,,
பாக்டீரியாவில் இருக்கும் என்சைம்களை செயற்கை முறையில் நீக்கி , அது அமிலம் சுரப்பதை அதிகப்படுத்துதல்.. அதன் பின், அதில் ஆக்சிஜனை நீக்கி விட்டு , பயோ டிசல் உருவாக்குதல் என்பதே இந்த முறை..

பேக்டீரியா நிரப்பி வண்டி ஓட்டும் காலமும் வரலாம்... ஆனால் இப்போதைக்கு முடியாது... செலவு அதிகம் ஆகிறது... போக போக குறைந்த செலவில் தயாரிக்க முடியலாம்

10 கார்பன் பைப்புகள் மிகவும் உறுதி தன்மை வாய்ந்தவை... அதிக எடையை தாங்க வேண்டிய இடங்களில் இவை பயன்படுகின்றன..
இவற்றின் இன்னொரு பண்பு சமிபத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது.. சஊரிய சக்தியை உறிஞ்சும் ஆற்றல் இதற்கு அதிகம் என்பதே அந்த கண்டு பிடிப்பு..
இப்போது இருக்கும் முறையில், கூரை முழுதும், ஒரு தகடு போல ஒன்றை பொருத்தி , சூரிய சக்தியை உறிஞ்சுவதை பார்த்து இருப்பிர்கள்
கார்பன் பைப்புகளை பயன் படுத்தினால், குறைந்த இடத்தில் அதிக சக்தியை உறிஞ்சலாம்.. மின்சாரமும் தயாரிக்கலாம்...

********************************************************************

இது போல பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.. அவை நடைமுறைக்கு வரும் வரையாவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது..

4 comments:

  1. எல்லாமே செலவு அதிகம் பிடிக்கும் அல்லது நமக்கு வர இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதுவரைக்கும் ஆற்காட்டாரே துணை.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றி ராதாகிருஷ்ணன் சார்

    ReplyDelete
  4. சீக்கிரம் தேர்தல்ல நின்னு ஜெயிச்சு , பொற்கால ஆட்சி வழங்க அண்ணன் நாகராஜ சோழனை அழைக்கிறேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா