Sunday, April 5, 2020

ராவணனுக்காக ஒரு பாடல்

கம்பராமாயணத்தில் பல இடங்கள் வெகு அழகு

உதாரணமாக வாலி மீது ராமனுக்கு பகை ஏதும் இல்லை. சொல்லப்போனால் வாலியின் நட்புதான் அவனுக்கு நல்லது

ஆனால் சூழல் காரணமாக சுக்ரீவனை நண்பனாக ஏற்று உனக்காக எதையும் செய்வேன் என கமிட் ஆகி விடுகிறான்.

இந்த நட்புக்காக நெறியை மீறி வாலியை கொல்கிறான்.

ஆயுதமற்ற எதிரியை கொல்லக்கூடாது என ராவணனை கொல்லாமல் , தன் விஷயத்தில் நெறியைப்பேணும் ராமன் , நண்பனுக்காக நெறியை மீறுகிறான் என்பது ஒரு சுவையான முரண்

ராவணனுக்கு இது போல ஒரு பில்ட்அப் காட்சி

லட்சுமணால் அவமானப்படுத்தப்பட்டு ராவணனிடம் வருகிறாள் சூர்ப்பனகை. அவள் நிலையைக் கண்டு ராவணன் துடிக்கிறான்..  அது ஒரு மனிதனின் இயல்பான எதிர்வினைதான்

ஆனால் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு ஒரு மன்னனாக மாறி , விசாரிக்கிறான் என்பது அவனது,பாத்திரத்தை மேன்மையாக்குகிறது

சும்மா இருக்கும் உன்னை யாரும் தண்டிக்கப்போவதில்லை. நீ ஏதோ அத்துமீறி இருக்கிறாய். என்ன குற்றம் செய்தாய் என சீறுகிறான்,என அழகாக எழுதுகிறார் கம்பர்

ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
     துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின்,
     சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
     நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
     அவர் கொய்ய?' என்றான்




Saturday, April 4, 2020

அழிவும் நீயே அன்பும் நீயே

ஶ்ரீருத்ரம் குறித்து எழுதியிருந்தேன் அல்லவா.

இன்றைய சூழலுக்கு பொருத்தமாக சில மந்திரங்களை படிக்க ஆச்சர்யமாக இருந்தது.

அதன் பொருள் பின்வருமாறு

மக்களும் பசுக்களும் நோய்ப்பட வேண்டாம்

நாங்கள் வாழ்வாங்கு வாழ்வோமாக


எங்கள் ஆயுள் மீது , விலங்குகள் மீது , பணியாட்கள் மீது கோபம் வேண்டாம்

உரிய பூஜைகள் செய்வோம்


ருத்திரரே  எங்கள் பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தாதீர்கள்

வாலிபர்களை துன்புறுத்த வேண்டாம்

சிசுக்களை துன்புறுத்த வேண்டாம்

தந்தைமார்களை தாய்மார்களை துன்புறுத்த வேண்டாம்

எங்கள் உடல் அவயங்களை துன்புறுத்த வேண்டாம்;

அழிவும் ஆக்கமும் உன்னால் விளைவது

கோப முகம் வேண்டாம். அன்பு முகத்தை எஙகள்பால் காட்ட இறைஞ்சி வேண்டுகிறோம்

கோபத்தால் ஏவப்பட்ட உன் கணைகள் எங்களை விட்டு விலகிச் செல்லட்டும்;

எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதங்களை வைத்துவிட்டு . அழகுக்காக மட்டும் அதை ஏந்திக் கொள்வீராக


பூமியிலும் பூமிக்கடியிலும் பூமிக்கு மேலும் உலவும் உனது ருத்திர கணங்கள் எங்களை அழிக்கலாகாது என வேண்டுகிறோம்




போலி அறிவுஜீவிகளுக்கு கிடைக்காத அறிவு போல . கம்பன் பாடல்

நம் ஆட்கள் பலருக்கு ஞானத் தேடலோ அறிவுத் தேடலோ அறிவியல் ஆர்வமோ இருப்பதில்லை

தனக்கு ஒரு அடையாளம் தேவை
என்பதற்காக இந்து முஸ்லிம் கிறிஸ்தவன் நாத்திகவாதி ஆத்திகவாதி மொழிஆர்வலன் என ஒரு லேபிளை தேடுகிறார்கள்

உண்மையான அறிவுத் தேடலில் இருப்போருக்கு இந்த லேபிள்கள் அவசியமில்லை

கம்பர் வெகு அழகாக ஒரு பாடலில் இதைச் சொல்கிறார்.  ஒரு பிரச்சாரமாக அல்லாமல் வெகு இயல்பாக சொல்வது மனதை கவர்கிறது;

அருந்ததி மலை என்ற மலை குறித்து சுக்ரீவன் தன் கூட்டத்தாருக்கு சொல்கிறான்

அந்த மலைக்கு சென்று சேர்வது கஷ்டம். எப்படிப்பட்ட  கஷ்டம் தெரியுமா ,,

என் கடவுள் பெரிது.  என் சித்தாந்தம்தான் பெரிது என அடித்து்க் கொள்கிறார்களே.  அவரகள் உருப்படுவது எவ்வளவு கஷ்டமோ அந்தஅளவு கஷ்டம் என்கிறார்

பாடலைப் பாருங்கள்

அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்''
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல்,
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடு மலையை வணங்கி, அப்பால்.

சிவன் பெரியவன் பெரியவன் திருமால்
பெரியவன் என சண்டையிடும் மூடர்கள் அடைய முடியாத ஞானம்போல அந்த,மலை அடைவதற்கரியது
வானளாவிய சிகரம் கொண்டது. வேண்டிய வரம் தரவல்லது. அப்படிப்பட்ட அருந்ததி மலையை வனங்கி பயணத்தை  தொடருஙகள்

எப்படி ,பாடல்





Friday, April 3, 2020

கவுண்டமணியும் கம்பனும்

நான்கு வரிகளில் ஒரு குறும்படம்

கம்பன் எனும் கலைஞன்

ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான்

ராமனால் வஞ்சகனால் வீழ்த்தப்பட்ட வாலி , ராமா , உன் தகுதிக்கு நீ இப்படி செய்திருக்ககூடாது என நாகரிகமாக பேசுகிறான். கடைசியில் சொல்கிறான்

ஓவியம் போன்ற அழகனே. எனக்கொரு வரம் கொடு. என் "தம்பி நல்லவன்தான். ஆனால் மது அருந்தினால் கொஞ்சம் அடாவடி செய்வான். தவறிழைக்காத என்னை கொன்றது போல , தவறேசெய்தாலும் அவனை கொன்றுவிடாதே

ராமன் , வாலி , சுக்ரீவன் ஆகிய மூவரின் குணநலன்களும் வந்து விடுகிறதல்லவா

ஒரு படத்தில் கவுண்டமணியை செந்தில் பெண்வீட்டாருக்குஅறிமுகம் செய்வார்

மாப்பிளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. தங்கமானவரு

அவர்கள்  கேட்பார்கள்

வெத்தல பாக்குகூட போட மாட்டாரா

போடமாட்டார் எப்பவாச்சும் தம் அடிக்கும்போது வாசனய மறைக்க போடுவார்

தம்  அடிப்பாரா ?

எப்பவும் இல்ல. எப்பவாச்சும் "தண்ணி அடிக்கும்போது லேசா தம் அடிப்பார்

என்னது தண்ணியா ?

அட .. இவரு என்ன குடிகாரரா. எப்பவாச்சும் பொண்ணுங்ககூட போகும்போது தண்ணி அடிப்பார்


இதைக்கேட்டு பெண் வீட்டார் துரத்தி அடிப்பார்கள்

அதுபோல எப்பவாச்சும்
தண்ணி அடிப்பதைத்தவிர சூதுவாது தெரியாத தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறான் வாலி

எழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்

சுஜாதா அலை வீசிய அந்தகாலகட்டத்தில் வேறு பலரும் எழுதி வந்தனர்

என்ன பெரிய சுஜாதா..  நாங்க நினைச்சா அவரு மாதிரி எழுதுவோம் என,சவால் விட்டு பலரும் அவர் மாதிரியே எழுதினர்.

இன்றும்கூட பலருக்கும்  சுஜாதா மாதிரி
எழுதுவதுதான் கனவு

அந்த சூழலில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு ஒரு விஐபி அந்தஸ்துடன் உலவினார் ஓர் எழுத்தாளர்

ஒரே நேரத்தில் பல பத்திரிக்கைகளில்
எழுதினார். வாசகர் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவியும்.

ஶ்ரீரங்கம் பொதுமக்கள் இவரை யானையில் அமர வைத்து ஊர்வலம் நடத்தி கெளரவித்தனர். இவரது பல கதைகள் திரைப்படங்களாகின

இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர் புஷ்பா தங்கதுரை..;

இவர் கதைகளை குழந்தைகள் படிக்கலாகாது என்று பெற்றோர்கள் தடுத்து வைத்ததால் இன்றைய இணையவாசிகள் பலருக்கு இவர் பரிச்சயமின்றிப் போய் விட்டார்

ஸ்டைலிஷான நடை , இயல்பான உரையாடல் இருந்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இவர் தபால் துறையில் கணக்கராக இருந்தவர். சுஜாதா போல ஒரு,அதிகாரியாக இருந்திருந்தால் அவர் வேறு லெவலில் இருந்திருப்பார்

தான்,எழுதவந்த நேரத்தில் எழுதிக்கொண்டிருந்த சுஜாதாவைப் பிடிக்கும். ஆனால் அவர் தாக்கம் என்னுள் வரக்கூடாது என கவனமாக இருந்தேன்.,,பிறரின் ஆபாச வக்கிர நடை,கூடாது என்றும் நினைத்தேன் என ராஜேஷ்குமார் ஒரு பேட்டியில் சொல்வார். அவர் சொல்லும் "பிறர்" புஷ்பா தங்கதுரைதான்

ஆபாச எழுத்தாளர் ஒருவருக்கு மக்கள் ஏன் யானை ஊர்வலம் நடத்தினர் ?

அதற்குகாரணம் ஶ்ரீவேணுகோபாலன் என்ற தன் இயற்பெயரில் அவர் எழுதிய நூல்கள்தான்

அந்த நூல்களில் ஒன்று. மதுரா விஜயம்

ஆலயங்கள் மூடப்பட்டு மக்கள் வழிபட முடியாத சூழலில் நடக்கும்கதை. தற்போது கிட்டத்தட்ட அதே சூழல். அனைத்து மத வழிபாடுகளுமே தடைப்பட்ட சூழல். இந்த தற்செயல் ஒற்றுமை ஆச்சர்யமளித்தது

  அந்நியர் கைகளில் சாமி சிலைகள் சிக்கி அழிந்துவிடக்கூடாது என மக்கள் கொண்டிருந்த உறுதி. அதற்காக செய்த,தியாகங்கள் போன்றவை கற்பனைக்கும் எட்டாதவை.

எதிரிகள் படையெடுப்புக்கு ஆளான, ஶ்ரீரங்கத்தில் இருந்து அந்த ஊர் ஆலய உற்சவ மூர்த்தியை அங்கிருந்து எடுத்துச் சென்று பல்வேறு ஊர்களை மறைத்து வைப்பதும் அவர்களை எதிரிகள் வேட்டையாட முயல்வதும் கதை.  இவர்களது அடுத்த தலைமுறையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கடைசியில் மீண்டும் மதுரையிலும் ஶ்ரீரங்கத்திலும் அதனதன்,மூர்த்திகளை ஸ்தாபிப்பதுதான் கதை

ஹரிஹரர் , புக்கர் ஆகியோரால் நிறுவப்பட்ட விஜயநகர பேரரசுதான் மதுரையை மீட்டது.

புக்கர் தமிழ் மன்னன் இல்லை. அவர் கனவில் மதுரை மீனாட்சி தோன்றி , தமிழர்களை விடுவிக்க ஆணையிட்டதால் , அதை சிரமேற்கொண்டவன் அவன்

அவனது மகன் குமார கம்பணன் இநதப்போரில் முக்கியப்,பங்கு,வகித்தான். அவனது,மனைவி கங்காதேவி மதுரை விடுவிப்பை நேரில் காணும் பொருட்டு அவன் அருகிலேயே இருந்தாள்.

அந்த அனுபவங்களை வைத்து அவள் எழுதிய காவியம்தான் மதுரா விஜயம்

அதை அழகுபடுத்தி ஶ்ரீவேணுகோபாலன் படைத்த தமிழ்க்காவியம் இந்த மதுரா விஜயம் நாவல்

அழகு தமிழ் வார்த்தைகளில் வரலாற்றைக்கண் முன் நிறுத்துகிறார்;
ஏராளமான சுவையான சம்பவங்கள்;
;ஶ்ரீரங்கத்தில் நிறுவ வேண்டியது எந்த சிலை என ஒரு பிரச்சனை வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட சிலை என்பதால் இதுதான் அந்த சிலை என சாட்சி சொல்ல யாரும் இல்லை.
கடைசியில் கண்பார்வையற்ற ஒரு,முதியவர் இதுதான் ஒரிஜினல் சிலை என லாஜிக்கலாக கண்டுபிடிக்கிறார். இப்படி சுவையான பகுதிகள் ஏரா
ளம்

இந்த அரும்பணி பலரது தியாகத்தால் சாத்தியமானது. குறிப்பாக தேவதாசி,பெண் ஒருவர் செய்த தியாகம் கண் கலஙகச் செய்யும்


ஶ்ரீரங்க காரர்களான வாலி , சுஜாதா , ராகிரங்கராஜன் போன்றோருக்கு தராத உச்சகட்ட  மரியாதையை இவருக்கு அவ்வூர் மக்கள் தந்தது இவரது எழுத்துவன்மைக்கு சான்று

இவர் கையொப்பமிட்ட மதுரா விஜயம் பிரதியைநான் அடைந்த பெரும்பேறாக நினைக்கிறேன்








Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா