Saturday, April 4, 2020

போலி அறிவுஜீவிகளுக்கு கிடைக்காத அறிவு போல . கம்பன் பாடல்

நம் ஆட்கள் பலருக்கு ஞானத் தேடலோ அறிவுத் தேடலோ அறிவியல் ஆர்வமோ இருப்பதில்லை

தனக்கு ஒரு அடையாளம் தேவை
என்பதற்காக இந்து முஸ்லிம் கிறிஸ்தவன் நாத்திகவாதி ஆத்திகவாதி மொழிஆர்வலன் என ஒரு லேபிளை தேடுகிறார்கள்

உண்மையான அறிவுத் தேடலில் இருப்போருக்கு இந்த லேபிள்கள் அவசியமில்லை

கம்பர் வெகு அழகாக ஒரு பாடலில் இதைச் சொல்கிறார்.  ஒரு பிரச்சாரமாக அல்லாமல் வெகு இயல்பாக சொல்வது மனதை கவர்கிறது;

அருந்ததி மலை என்ற மலை குறித்து சுக்ரீவன் தன் கூட்டத்தாருக்கு சொல்கிறான்

அந்த மலைக்கு சென்று சேர்வது கஷ்டம். எப்படிப்பட்ட  கஷ்டம் தெரியுமா ,,

என் கடவுள் பெரிது.  என் சித்தாந்தம்தான் பெரிது என அடித்து்க் கொள்கிறார்களே.  அவரகள் உருப்படுவது எவ்வளவு கஷ்டமோ அந்தஅளவு கஷ்டம் என்கிறார்

பாடலைப் பாருங்கள்

அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்''
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல்,
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடு மலையை வணங்கி, அப்பால்.

சிவன் பெரியவன் பெரியவன் திருமால்
பெரியவன் என சண்டையிடும் மூடர்கள் அடைய முடியாத ஞானம்போல அந்த,மலை அடைவதற்கரியது
வானளாவிய சிகரம் கொண்டது. வேண்டிய வரம் தரவல்லது. அப்படிப்பட்ட அருந்ததி மலையை வனங்கி பயணத்தை  தொடருஙகள்

எப்படி ,பாடல்





No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா