Sunday, April 5, 2020

ராவணனுக்காக ஒரு பாடல்

கம்பராமாயணத்தில் பல இடங்கள் வெகு அழகு

உதாரணமாக வாலி மீது ராமனுக்கு பகை ஏதும் இல்லை. சொல்லப்போனால் வாலியின் நட்புதான் அவனுக்கு நல்லது

ஆனால் சூழல் காரணமாக சுக்ரீவனை நண்பனாக ஏற்று உனக்காக எதையும் செய்வேன் என கமிட் ஆகி விடுகிறான்.

இந்த நட்புக்காக நெறியை மீறி வாலியை கொல்கிறான்.

ஆயுதமற்ற எதிரியை கொல்லக்கூடாது என ராவணனை கொல்லாமல் , தன் விஷயத்தில் நெறியைப்பேணும் ராமன் , நண்பனுக்காக நெறியை மீறுகிறான் என்பது ஒரு சுவையான முரண்

ராவணனுக்கு இது போல ஒரு பில்ட்அப் காட்சி

லட்சுமணால் அவமானப்படுத்தப்பட்டு ராவணனிடம் வருகிறாள் சூர்ப்பனகை. அவள் நிலையைக் கண்டு ராவணன் துடிக்கிறான்..  அது ஒரு மனிதனின் இயல்பான எதிர்வினைதான்

ஆனால் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு ஒரு மன்னனாக மாறி , விசாரிக்கிறான் என்பது அவனது,பாத்திரத்தை மேன்மையாக்குகிறது

சும்மா இருக்கும் உன்னை யாரும் தண்டிக்கப்போவதில்லை. நீ ஏதோ அத்துமீறி இருக்கிறாய். என்ன குற்றம் செய்தாய் என சீறுகிறான்,என அழகாக எழுதுகிறார் கம்பர்

ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
     துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின்,
     சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
     நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
     அவர் கொய்ய?' என்றான்




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா