Friday, April 3, 2020

எழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்

சுஜாதா அலை வீசிய அந்தகாலகட்டத்தில் வேறு பலரும் எழுதி வந்தனர்

என்ன பெரிய சுஜாதா..  நாங்க நினைச்சா அவரு மாதிரி எழுதுவோம் என,சவால் விட்டு பலரும் அவர் மாதிரியே எழுதினர்.

இன்றும்கூட பலருக்கும்  சுஜாதா மாதிரி
எழுதுவதுதான் கனவு

அந்த சூழலில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு ஒரு விஐபி அந்தஸ்துடன் உலவினார் ஓர் எழுத்தாளர்

ஒரே நேரத்தில் பல பத்திரிக்கைகளில்
எழுதினார். வாசகர் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவியும்.

ஶ்ரீரங்கம் பொதுமக்கள் இவரை யானையில் அமர வைத்து ஊர்வலம் நடத்தி கெளரவித்தனர். இவரது பல கதைகள் திரைப்படங்களாகின

இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர் புஷ்பா தங்கதுரை..;

இவர் கதைகளை குழந்தைகள் படிக்கலாகாது என்று பெற்றோர்கள் தடுத்து வைத்ததால் இன்றைய இணையவாசிகள் பலருக்கு இவர் பரிச்சயமின்றிப் போய் விட்டார்

ஸ்டைலிஷான நடை , இயல்பான உரையாடல் இருந்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இவர் தபால் துறையில் கணக்கராக இருந்தவர். சுஜாதா போல ஒரு,அதிகாரியாக இருந்திருந்தால் அவர் வேறு லெவலில் இருந்திருப்பார்

தான்,எழுதவந்த நேரத்தில் எழுதிக்கொண்டிருந்த சுஜாதாவைப் பிடிக்கும். ஆனால் அவர் தாக்கம் என்னுள் வரக்கூடாது என கவனமாக இருந்தேன்.,,பிறரின் ஆபாச வக்கிர நடை,கூடாது என்றும் நினைத்தேன் என ராஜேஷ்குமார் ஒரு பேட்டியில் சொல்வார். அவர் சொல்லும் "பிறர்" புஷ்பா தங்கதுரைதான்

ஆபாச எழுத்தாளர் ஒருவருக்கு மக்கள் ஏன் யானை ஊர்வலம் நடத்தினர் ?

அதற்குகாரணம் ஶ்ரீவேணுகோபாலன் என்ற தன் இயற்பெயரில் அவர் எழுதிய நூல்கள்தான்

அந்த நூல்களில் ஒன்று. மதுரா விஜயம்

ஆலயங்கள் மூடப்பட்டு மக்கள் வழிபட முடியாத சூழலில் நடக்கும்கதை. தற்போது கிட்டத்தட்ட அதே சூழல். அனைத்து மத வழிபாடுகளுமே தடைப்பட்ட சூழல். இந்த தற்செயல் ஒற்றுமை ஆச்சர்யமளித்தது

  அந்நியர் கைகளில் சாமி சிலைகள் சிக்கி அழிந்துவிடக்கூடாது என மக்கள் கொண்டிருந்த உறுதி. அதற்காக செய்த,தியாகங்கள் போன்றவை கற்பனைக்கும் எட்டாதவை.

எதிரிகள் படையெடுப்புக்கு ஆளான, ஶ்ரீரங்கத்தில் இருந்து அந்த ஊர் ஆலய உற்சவ மூர்த்தியை அங்கிருந்து எடுத்துச் சென்று பல்வேறு ஊர்களை மறைத்து வைப்பதும் அவர்களை எதிரிகள் வேட்டையாட முயல்வதும் கதை.  இவர்களது அடுத்த தலைமுறையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கடைசியில் மீண்டும் மதுரையிலும் ஶ்ரீரங்கத்திலும் அதனதன்,மூர்த்திகளை ஸ்தாபிப்பதுதான் கதை

ஹரிஹரர் , புக்கர் ஆகியோரால் நிறுவப்பட்ட விஜயநகர பேரரசுதான் மதுரையை மீட்டது.

புக்கர் தமிழ் மன்னன் இல்லை. அவர் கனவில் மதுரை மீனாட்சி தோன்றி , தமிழர்களை விடுவிக்க ஆணையிட்டதால் , அதை சிரமேற்கொண்டவன் அவன்

அவனது மகன் குமார கம்பணன் இநதப்போரில் முக்கியப்,பங்கு,வகித்தான். அவனது,மனைவி கங்காதேவி மதுரை விடுவிப்பை நேரில் காணும் பொருட்டு அவன் அருகிலேயே இருந்தாள்.

அந்த அனுபவங்களை வைத்து அவள் எழுதிய காவியம்தான் மதுரா விஜயம்

அதை அழகுபடுத்தி ஶ்ரீவேணுகோபாலன் படைத்த தமிழ்க்காவியம் இந்த மதுரா விஜயம் நாவல்

அழகு தமிழ் வார்த்தைகளில் வரலாற்றைக்கண் முன் நிறுத்துகிறார்;
ஏராளமான சுவையான சம்பவங்கள்;
;ஶ்ரீரங்கத்தில் நிறுவ வேண்டியது எந்த சிலை என ஒரு பிரச்சனை வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட சிலை என்பதால் இதுதான் அந்த சிலை என சாட்சி சொல்ல யாரும் இல்லை.
கடைசியில் கண்பார்வையற்ற ஒரு,முதியவர் இதுதான் ஒரிஜினல் சிலை என லாஜிக்கலாக கண்டுபிடிக்கிறார். இப்படி சுவையான பகுதிகள் ஏரா
ளம்

இந்த அரும்பணி பலரது தியாகத்தால் சாத்தியமானது. குறிப்பாக தேவதாசி,பெண் ஒருவர் செய்த தியாகம் கண் கலஙகச் செய்யும்


ஶ்ரீரங்க காரர்களான வாலி , சுஜாதா , ராகிரங்கராஜன் போன்றோருக்கு தராத உச்சகட்ட  மரியாதையை இவருக்கு அவ்வூர் மக்கள் தந்தது இவரது எழுத்துவன்மைக்கு சான்று

இவர் கையொப்பமிட்ட மதுரா விஜயம் பிரதியைநான் அடைந்த பெரும்பேறாக நினைக்கிறேன்








2 comments:

  1. இந்நூல் தற்போது ஸ்ரீரங்கன் உலா என்ற பெயரில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.. உண்மைதான். மதுரா விஜயம் என ஶ்ரீரஙகன் உலாவின் இரண்டாம் பாகமாக,இதுவந்தது. தற்போது ஶ்ரீரங்கன் உலா என்ற பெயரில் ஒரே நூலாக கிடைக்கிறது

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா