Wednesday, May 29, 2013

எதிர்கால மனிதன் நிகழ்காலத்திற்கு வந்தபோது ....


" காலேஜ்ல நாம ரெண்டு பேரும்தான் டாப் ராங்க் ஸ்டூடன்சா இருந்தோம் . நாம கண்டிப்பா பெரிய கண்டுபிடிப்புகள் , பெரிய சாதனைகள் செய்வோம்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனால் இந்த போர்ட்டபிள் அணுகுண்டு கண்டுபிடிச்சது பெரிய சாதனையா அல்லது தீமையானு புரியல “

புலம்பிய ராஜேஷை நட்பு கலந்த அனுதாபத்துடன் பார்த்தான் ஜேம்ஸ்.

” ஒரு தீப்பெட்டி சைஸ் பெட்டி. சரியான காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்தினால் , உலகமே அழிஞ்சுடும் , ஆளில்லாத விமானம் , ஏவுகணை எதுவுமே வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தை அழிக்கலாம்.

கண்டிப்பா இது அறிவியல் சாதனை. ஆனால் இதனால் தீங்கு ஏற்படாது. உலகிலேயே மிக மிக புத்திசாலியான ,ஓர் ஐடியல் மனிதனால்தான் இந்த காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்த முடியும். ஆனால் அப்படி ஒரு மனிதனின் இருப்பு சாத்தியமில்லை. அதனால் பயம் வேண்டாம்”


ராஜேஷுக்கு நம்பிக்கை வரவில்லை.

” அதெப்படி சொல்ற. நீ சொல்லும் புத்திசாலி இப்ப இல்லாம இருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் அப்படி ஒரு புத்திசாலி தோன்றலாமே “

ஜேம்ஸ் சிரித்தான்.

“ கண்டிப்பா பரிணாம வளர்ச்சியில் அப்படி ஒரு மனிதன் தோன்றலாம்தான். ஆனால் அப்படி ஒரு மனிதன் தோன்றுவதற்கு...”

தன் கணினியை உற்று பார்த்தான், அவன் எண்ணம் அறிந்து கணினி இயங்கியது. ஸ்க்ரீனில் தெரிந்த தகவலை பார்த்து சொன்னான்.

 “ ..... இன்னும் 127 ஆண்டுகள் , 7 மாதங்கள் ஆகும். அதற்குள் இதற்கு மாற்று , எதிர் ஆயுதங்கள் எல்லாம் வந்து விடும். சோ , டோண்ட் வொர்ரி “

“ அப்பாடா “ பெரு மூச்சு விட்டான் ராஜேஷ்..

“ அவசரப்பட்டு பெருமூச்சு விடாதே. நான் இன்னொரு அபாயம் குறித்து கவலைப்படுறேன் “

கவலையுடன் சொன்ன ஜேம்ஸ் முகத்தை என்ன என்பது போல பார்த்தான் ராஜேஷ்.

“ ஒரு வேளை அந்த எதிர்கால புத்திசாலி மனிதன் , தன் புத்தி சாலித்தனத்தால் நிகழ் காலத்துக்கு வந்தால் , நமக்கு பிரச்சினைதான் “

உச்சகட்ட புத்திசாலித்தனத்துடன் ஒருவன் இருக்க முடிந்தால் , அவனால் காலம் கடந்து வர முடிவது சாத்தியம்தானே.

கவலையுடன் ஜேம்சை பார்த்து ராஜேஷ் கேட்டான்.

“ ஆராய்ச்சியின் முடிவை , அந்த ஆராய்ச்சியே தீர்மானிக்கிறது என ஒரு தியரி உண்டு. அதாவது தன் இயல்புபடி இயங்கி கொண்டு இருக்கும் நுண் பொருட்கள் , அதை ஆராயும்போது கொஞ்சம் விசித்திரமாக இயங்க தொடங்குகின்றன, எனவேதான் முழு உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஆராய்ச்சி கருவிகள் , ஆராய்ச்சி செய்பவர்கள் நோக்கம் , ஆராய்ச்சி நடக்கும் கால கட்டம் -இதெல்லாம் கூட ஆராய்ச்சி முடிவை மாற்ற கூடும்.

எதிர்கால மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சி இது வரை வெற்றி பெறாததற்கு காரணம் இதுதான். அந்த ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டிய தேவை இது வரை இல்லாமல் இருந்தது.

ஆனால் நமது இந்த அணுகுண்டு கண்டுபிடிப்பு , எதிர்கால மனிதனுக்கு ஒரு தேவையை உருவாக்கி அவனை வர செய்து விட வாய்ப்பு இருக்கிறதா ? “


ஜேம்ஸ் முகத்தில் மெல்ல கவலை ரேகைகள் படர்ந்தன.


” நீ சொல்வது ஓரளவு உண்மைதான். ஒன்றை புரிந்து கொள். அவன் நம் கண் முன் தோன்றினால் பயந்து விடாதே.. அவன் இருப்பு என்பது ஹைப்போதீசிஸ் போலத்தான்.. அதாவது ஒரு சாத்தியம்தான் நம் கண் முன் தெரியும்.

அதை அலசி ஆராய்ந்தால் அதில் இருந்து விடுபட்டு விடலாம்.. பீதி அடைந்து விடாதே”

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , வெளியில் யாரோ வந்திருப்பது சென்சார்கள் மூலம் தெரிந்தது. உள்ளே வர அனுமதி கேட்டு அவன் உணர்வு அலைகளை அனுப்பினான்.

அனுமதி கிடைத்து உள்ளே வந்தான்.

பார்ப்பதற்கு மிக வசீகரமாக இருந்தான். ஆரோக்கியமாக இருந்தான். குறிப்பாக புத்திசாலித்தனம்!! கண்கள் ஒளிவிட்டன.

” உங்க கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு வந்தேன். உண்மையில்யே இது அதிசயம்தான்... எங்கள் காலத்தில் , அதாவது 100 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க வேண்டியதை, இப்போதே கண்டுபிடித்து விட்டீர்களே”

” ஓ...எதிர்கால மனிதன்”

இருவருக்கும் வியர்த்து போனது.

இல்லை..இது வெறும் கனவு..மாயத்தோற்றம் -  தைரியம் வரவழைக்க முயன்றனர்.

“ உங்க பேர் ? “

அவன் புன்னகைத்தான்.

” எதிர்காலத்தில் எந்த மொழி இருக்கும். எந்த நாட்டினன் இருப்பான், இந்த இனம் நீடிக்கும் என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. பரிணாம வளர்ச்சியில் புத்திசாலித்தனம் , தீய உணர்வு எல்லாமே வளரும். அப்படி வளர்ந்த உச்ச நிலைதான் நான்.”

சொல்லிக்கொண்டே  தீப்பெட்டி அணுகுண்டை எடுத்தான்.

காம்பினேஷன் பட்டன்களை தட்ட தொடங்கினான்.

“ ஹேய் .. நிறுத்து “ அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான் ஜேம்ஸ்.

பல ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட அவனை குண்டு தொட முடியவில்லை.

அவன் சிரித்தான்.

” இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து ஸ்பேஸ்- டைம் துப்பாக்கி கண்டுபிடுத்தார்கள்..அதை வைத்து வருங்கால மனிதனை கொன்று பயிற்சி எடுத்தார்கள்”

ராஜேஷ் முகம் ஒளிர்ந்தது..

” ஹேய் ,,இவன் சொல்வது தவறு...ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பார்கள் என சொல்ல வேண்டும். ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தார்கள் என எப்படி சொல்ல முடியும் ? “

அவன் எதையும் கண்டுகொள்ளாமல் , பட்டனை அழுத்தி கொண்டு இருந்தான்.

“ சரியாத்தான் சொல்றான், நமக்குதான் ஐம்பது ஆண்டுகள் கழித்து என்பது எதிர்காலம் .. இவன் நூறு ஆண்டுகள் கழித்து பிறந்தவன். அவனுக்கு ஐம்பது ஆண்டுகள் என்பது இறந்த காலம்தான் “  ஜேம்ஸ் அலுப்புடன் சொன்னான்.

இன்னும் இரண்டு பட்டன்கள்தான். அது வெடித்து விடும்.

“ ஹேய்....   இதை எப்படி கவனிக்காமல் போனோம். இவன் அந்த கடைசி பட்டனை அழுத்தினால் உலகம் அழிந்து விடும். அதன் பின் இவன் எப்படி நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க முடியும். ஆக இவன் இருப்பு என்பதே பாரடக்ஸ் தானே”

ராஜேஷ் அலறினான்.

“ அட ..ஆமா.. லாஜிக்கலான கேள்விதான் “

ஜேம்ஸ் பெருமூச்சு விட்டான்.

அந்த எதிர்கால மனிதன் ஒரு கனவு போல மறைந்தான்.

“ ம்ம்ம்.. எதிர்கால மனிதன் என்பது ஒரு தவறான முன் யூகம் “ சிரித்த ராஜேஷ் ,” சரி வா...ஃப்ரெஷா கொஞ்சம் ஆக்சிஜன் அடிச்சுட்டு வரலாம்” என்றான்.

இருவரும் ஆக்சிஜன் பாட்டிலை எடுத்து கொஞ்சம் உறிஞ்சினார்கள்.

மூளை முன்பை விட நன்றாக யோசித்தது.

“ சரி.. லாஜிக் என்பதே  இருப்பு சார்ந்ததுதானே.. நாம் இல்லாவிட்டால் லாஜிக் ஏது ..  இல்லாமையில் இருந்து இருப்பு தோன்ற முடியாது என்பது லாஜிக்..ஆனால் நாமெல்லாம் தோன்றுவதற்கு முன்பு , ஒரு லாஜிக் மீறலில்தான் உலகம் தோன்றி இருக்கிறது.

நாம் இருப்பதற்கு முன்பும் லாஜிக் இல்லை.. நாம் இல்லாமல் போன பின்னும் லாஜிக் இல்லை.

எனவே வருங்கால மனிதன் வந்து உலகை அழிப்பது லாஜிக் மீறல்தான் என்றாலும் , சாத்தியமான ஒன்றா”

ராஜேஷ் கேட்க, ஜேம்ஸ் சற்று குழம்பினான்.

“ இதில் குழப்பம் என்ன இருக்கு, இந்த லாஜிக் மீறல் லாஜிக்கலாத்தானே இருக்கு “

எதிர்கால மனிதன் அவனுக்கே உரிய புன்னகையுடன அந்த அறையில்தான் அவ்வளவு நேரம் இருந்தது போல , அவர்களை பார்த்தான்.

மெதுவாக கடைசி பட்டனை அழுத்தினான்

************************************************************************



Tuesday, May 21, 2013

வலைப் பதிவர்களுடன் என் அனுபவங்கள்- வலைச்சரத்தில்...

வலைச்சரத்தில் பதிவர்கள் சிலருடன் என் அனுபவங்களையும் , சில பதிவுகளையும் பற்றி எழுதி வருகிறேன். படித்து பாருங்கள்

****************************************************************

நானும் அவர் தவறு செய்ததாக கருதினேன். அவரை விமர்சித்து எழுதலானேன். ஒரு கட்டத்தில் எல்லை மீறி விமர்சித்தேன்.

அதன் பின் யோசித்தபோது , என்னுள் ஏன் இவ்வளவு கோபம் , வன்மம் என திகைத்தேன். இது நல்லதல்லவே என மன சாட்சி சுட்டி காட்டவே அந்த பிரச்சினையில் இருந்து மெல்ல விலகினேன். மறந்தும்போனேன்.


பதிவர்கள் ஆதிமூல கிருஷ்ணனும் , பரிசல்காரனும் ஒரு சிறுகதை போட்டி நடத்தினார்கள். அதில் எனக்கு பரிசு கிடைத்தது, சுய தம்ப்பட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, அந்த சுட்டிகளை இங்கு தர இயலவில்லை.

தொடர்ந்து பல நண்பர்கள் மெயிலிலும் , போனிலும் வாழ்த்து சொன்னார்கள். புதிய எண்ணில் இருந்து ஒரு கால் வந்தது. யாரோ ஒருவர் பேசினார்.. நான் கேட்டிராத குரல்.

வாழ்த்துகள்.. நன்றாக எழுதுகிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.

சார்... நீங்க யாரு... குரல் கொஞ்சம் அடையாளம் தெரியல..என தயங்கிவாறு கேட்டேன். யாரவது நெருங்கிய நண்பர் அழைத்து , குரல் தெரியாமல் போய் விட்டதா என்ற குழப்பம்.

எதிர் முனை சிரித்தது.. என்னை உங்களுக்கு பிடிக்காது...ஆனால் உங்களை எனக்கு பிடிக்கும்..அதனால்தான் அழைத்தேன் என்றார் அவர்.

உங்க பேர் ? என்றேன்,

யார் அவர்? என்ன சொன்னார்?

*************************************************************************************8


சென்னை புத்தககண்காட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் பாஸ்கருடன் சென்று இருந்தேன்.   அந்த நேரத்தில் சாரு நிவேதிதாவும் அங்கு வந்து இருந்தார்.

பாஸ்கருக்கு சாருவுடன் நல்ல பழக்கம். நான் அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்

 “ கொஞ்சம் இருங்க..பேசிட்டு வருகிறேன் “ என்றார் பாஸ்கர்.. நானும் வருகிறேன் என சொல்லி விட்டு சாருவிடம் சென்றோம்.

போனோமோ , கை குலுக்கினோமோ... ஆட்டோகிராப் வாங்கினோமா என இருந்திருக்க வேண்டும். ஆனால் விதி வலிது.

தொடர்ந்து படிக்க


Sunday, May 19, 2013

இரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்

1.   இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க .....


சில நேரங்களில் சில பதிவர்கள்- ஓர் அறிமுகம்

இன்னும் ஒரு வார காலத்துக்கு வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன். பதிவர்களைப்பற்றிய என் பார்வையை பகிர இருக்கிறேன்.

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

2. எல்லா விஷ்யங்களுமே முழுமையை நோக்கி  அழைத்து செல்வதாக இருக்க வேண்டும் என்பது ஒரு பார்வை. எல்லா விஷயங்களுமே அதன் அளவில் முழுமையானதுதான் என்பது ஒரு பார்வை.

இரண்டு பார்வைகளுமே எனக்கு பிடித்தவைதான்.
sanshiro sugata என்ற அகிரா குரோசாவின் படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன் ஆரம்ப கால படத்திலேயே தன் ஆளுமையை காட்டி இருப்பார் அவர்.
தற்காப்பு கலையை கற்க ஆரம்பிக்கும் நாயகன் , அதன் மூலம் வாழ்க்கையையே அறிந்து கொள்கிறான் என்பது கான்சப்ட்.

தீவிரமாக ஒரு செயல் உயர்னிலை அடைந்து நம்மை வேறு ஓர் இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது ஒரு பார்வை.  உதாரணமாக பாலுணர்விலேயே சிக்கி கிடைக்காமல் , அதன் மூலம்கூட உயர்னிலை அடைய முடியும் என்பதற்காகத்தான் கலைகள் , சிற்பங்கள், சில தியான முறைகள்.

ஆனால் ஒரு வேலையை முழுமையாக செய்தால் ,ஓர் உணர்ச்சியை முழுமையாக துய்த்தால் அதுவே போதும். அதன் மூலம் வேறு எதையும் அடைய வேண்டியதில்லை என்பதும் ஏற்கத்தக்கதாகவே இருக்கிறது.

லாஸ்ட் டெம்ப்டேஷன் படத்தின் கான்சப்ட் இதுதான், அன்பு செலுத்து ..அன்பு செலுத்தினால் உனக்கு நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல.  எதையும் எதிர்பாராமல் ஒரு ரோஜா , தன் இயல்புப்படி மணம் வீசுகிறதே ..அது போல..


ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் என்ற படமும் இந்த பார்வையையே முன் வைக்கிறது. காதல் வெற்றி , காதல் தோல்வி என்றெல்லாம் சொல்கிறேமே..

காதலின் இலக்கு என்ன,,,  ஊர் சுற்றுவதா? கல்யாணமா? புலனின்பமா?  எதை அடைந்தால் காதல் வெற்றி என சொல்ல முடியும்?

காதலுக்கு இப்படி இலக்கு தேவை இல்லை. காதலிக்க , அன்பு செலுத்த தெரிந்து விட்டால், அந்த உணர்வை அனுபவித்து விட்டால் போதும், அதன் மூலம் எதையும் அடைய வேண்டியதில்லை என்ற பார்வையை முன் வைக்கிறது படம். காதல் அதன் அளவில் பரிபூரணமாக இருக்கிறது.


இன்னும் சில நல்ல படங்களை பார்த்து வருகிறேன். விரைவில் எழுதுவேன்.


3. அறிவியல் புனைவுகளை பலர் ரசித்து பாராட்டி இருந்தார்கள். மேலும் சில எழுத இருக்கிறேன்.

4. போரும் அமைதியும், எல்லை காந்தியின் சுய சரிதம் போன்ற சில புத்தகங்கள் படித்து முடித்தேன். அதைப் பற்றியும் எழுதுவேன்.

Saturday, May 18, 2013

இறந்தவர்களிடம் பண மோசடி ( அறிவியல் புனைவு )


 கண்டிப்பாக அவன் ஏதோ ஃபிராடு செய்கிறான் என புரிந்தது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை.

கணேசன் எனக்கு பள்ளிகாலத்தில் இருந்தே பழக்கம்.  நான்கூட அவ்வப்போது லீவு எடுப்பேன். ஆனால் அவனோ ஒரு நாள் கூட லீவு எடுக்கவே மாட்டான். அந்த அளவுக்கு படிப்பில் ஆர்வம் என அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள். லீவு எடுக்காமல் வந்து விடுவானே தவிர வகுப்பறைக்குள் வர மாட்டான். கால்பந்து மைதானம் அருகே ஒரு புளிய மரம் இருக்கும். அங்கே அமர்ந்து சினிமா பத்திரிக்கைகளையோ , சீன் படங்களையோ பார்த்து கொண்டு இருப்பான்.

அப்போதெல்லாம் இண்டர்னெட் கிடையாது. எனவே யாருக்கும் கிடைக்காத சீன் படங்கள் அவனிடம் இருப்பது அபூர்வமானதாக கருதப்பட்டது. மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அதை காட்டுவான். விலைக்கும் விற்று வந்தான். அந்த வகையில் அந்த வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.

காசின் அருமை அப்போதே அவனுக்கு புரிந்து விட்டது, சம்பாதிக்கும் லாகவமும் கை வந்து விட்டது.

ஆனால் ஆசிரியர்கள் அவனை அவ்வளவாக கண்டிப்பதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கி விடுவான்.

எனவேதான் நன்றாக படிக்க கூடிய எனக்கு பி ஏ தமிழ் பிரிவு கிடைத்தது அவனுக்கோ ஆர் ஈ சீயில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் கிடைத்தது.

    இதில் கொடுமை என்னவென்றால் நான் பி ஏ படித்தாலும் ஒரு வொர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக இயந்திரவியலில் பல நுணுக்கங்களை கற்று , பொறியியல் துறையில் செட்டில் ஆகி விட்டேன்.

அவனோ பொறியியல் துறையில் பட்டம் பெற்றாலும் அந்த துறை தவிர மற்ற துறைகளில்தான் ஆர்வம் காட்டி வந்தான்.

ஒரு நாள் ஓர் ஆர்டர் விஷ்யமாக சென்னை வந்தபோது, மூர் மார்கெட்டுக்கு வழி கேட்டு கொண்டு இருந்தேன். பென்ஸ் கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது, அருகில் சென்றேன்..

“ சார்..இங்கே மூர் மார்க்கெட் பக்க்கதில், கெஜேஃப் எஞ்னினியரிங் எங்கே இரு..” கேட்ட்கும்போதே முகத்தை பார்த்து விட்டேன்.

அட.. நம்ம கணேஷ்,.

“ “டேய்...கணேஷ்... நீயா ,,, நல்லா இருக்கியா?”

அவனுக்கும் என்னை தெரிந்து விட்டது.

“ அட ... நீயா.... வாடா வா... பார்த்து எத்தனை நாள் ஆச்சு... ம்ம்...காரில் ஏறு “

அழைத்து கொண்டு பெசண்ட் நகரில் இருக்கும் அவன் வீடு நோக்கி காரை பறக்க விட்டான்.

“ மச்சான்.. ஹார்ட் வொர்க்  , ஸ்மார்ட் வொர்க் என இரண்டு இருக்கு,,, நான் அந்த காலத்தில் இருந்தே , ஸ்மார்ட் வொர்க்கைத்தான் நம்புறேன்.. பாரு.. இந்த மாதிரி என்னிடம் நாலு காரு இருக்கு. சொந்தமா மூணு வீடு இருக்கு. எல்லாம் மூளைடா.. “ சிரித்தான்.

அவன் என்ன தொழில் செய்கிறான் என யூகிக்க முடியவில்லை.. ஏதோ தப்பான வழி என புரிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என புரியவில்லை. சீட்டு , காந்த படுக்கை , பிரமிடு போன்று லோக்கலாக இறங்கும் ஆளும் இல்லையே.

என்னை பார்த்து புன்னகைத்தான்.

” ஆசை கண்களை மறைக்கும்,இந்த கான்சப்டை மட்டும் மனதில் வச்சுக்கிட்டா, எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம்டா.. :

“ டேய்..மத்தவங்க ஆசையை பயன்படுத்தி ஏமாத்துறது தப்பு,,, என்னிக்கு இருந்தாலும் மாட்டிக்குவ”

மறுபடி சிரித்தான்.

“ தம்பி... நான் ஏமாத்துறது ஏற்கனவே இறந்து போனவங்களை... அவங்க எப்படி என்னை மாட்ட வைக்க முடியும்??”

” என்னடா சொல்ற” அதிர்ச்சி அடைந்தேன்.

“ம்ம்.... அட்வான்ஸ்டு அறிவியல் எப்படி கைகொடுக்குதுனு உனக்கு மட்டும் நேரடியா காட்டுறேன்...  நீயே பாரு.. இதை வேறு யாரிடமும் சொன்னதில்லை... உனக்கு சொன்னாலும் நீ இதே போல செய்ய மாட்டேனு எனக்கு தெரியும்.,உனக்கு தைரியம் பத்தாது..  என்னை காட்டி கொடுக்கவும் முடியாது,, ஏனா இதை யாரும் நம்ப மாட்டாங்க..உள்ளே வா”

அறைக்குள் அழைத்து சென்றான்..

விதவிதமான வித்தியாசமான கருவிகள்..  கெமிக்கல் வாசனை. அமிலம் ஒன்று ஆவேசமான மணம் வீசிக்கொண்டு இருந்தது.

“ இதோ பார்..இதுதான் டை மெஷின்...இதன் மூலம் கடந்த காலத்துக்கு மெசேஜ் அனுப்பலாம்..   அந்த கால மனிதர்களுக்கு கனவு மூலம் இந்த மெசேஜ் கிடைத்து , சிலர் நேரில் வரக்கூடும். அவர்களுடன் நான் வியாபாரம் செய்வேன். இதில் எனக்கு ஒரு போதும் நஷ்டம் வராது. லாபம் மட்டுமே வரும்.. எப்படி என நீயே பார்ப்பாய்.. வெயிட் “ என்றான்.

“ என்ன வியாபாரம் ? “

“ என்றுமே டிமாண்ட் இருக்கும் ஒரே வியாபாரம் ஆயுத வியாபாரம்..  இப்ப பாரு..  நவீன ஆயுதம் விற்பனைக்கு அப்படீனு ராஜராஜ சோழன் காலத்துக்கு மெசேஜ் அனுப்புறேன்.  விளைவுகளை பாரு.”


என்னவோ டைப் செய்தான்.. மானிட்டரை அட்ஜஸ்ட் செய்து டெஸ்டினேஷன் காலம் என்பதை நிரப்பினான். message sent  என மானிட்டர் அறிவித்தது.

கொஞ்ச நேரம் ஏதும் நிகழவில்லை.. எதிர்பார்ப்புடன் காத்து இருந்தேன்.

கதவு தட்ட்டப்பட்டது.

’திறந்துதான் இருக்கு..வாங்க”

உள்ளே ஒருவர் நுழைந்தார்.

பழைய காலத்து ஆள் போல இருந்தார். வேட்டி அணிந்து இருந்தார். உடலில் ஒரு துண்டை சுற்றி இருந்தார்.

“ என் பேர் பரமேஸ்வரன்..சோழர் ஆட்சியை கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்..  ஆயுதங்கள் கிடைப்பதாக கேள்வியுற்றோம்”

கணேஷ் ஒரு துப்பாக்கியை காட்டினான்.

“ இதன் பெயர் துப்பாக்கி. இதில் குண்டுகளை நிரப்பி எதிரிகளை சுடலாம். வில் , அம்பு போன்றவற்றை விட சக்தி வாய்ந்தது.

சட் என அங்கிருந்த கண்ணாடி குடுவையை சுட்டான். உடைந்து சிதறியது.

பரமேஸ்வரன் ஆச்சர்யமாக பார்த்தார்.

“ இதன் விலை ? “

கணேஷ் மர்மமாக புன்னகைத்தான்.

“இதற்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.  இதை வைத்து நீங்களே புதிய கருவிகளை உருவாக்க முடியும், உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.. ஆயிரன் பொற்காசுகள் “

பரமேஸ்வரன் அதிர்ந்தார். “ஆயிரம் சற்று அதிகம் அல்லவா?”

”பேரம் பேச நேரம் இல்லை.. உங்கள் காலத்துக்கு விரைவில் சென்றாக வேண்டும்.. நீண்ட நேரம் இருக்க முடியாது “

முடிவு எடுத்து ஆயிரம் பொற்காசுகளை மேஜையில் வைத்தார்.

அவர் கையில் துப்பாக்கி வைக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் மறைய தொடங்கினார்.

அவர் உடைவாள், ஆடை, குடுமி , உடல் என மறைய தொடங்கியது.

ஆனால் துப்பாக்கி மறையவில்லை.

தொப் என தரையில் விழுந்தது.

கணேஷ் அதை எடுத்து பத்திரப்படுத்தினான்.

“ நான் சொன்னேனே,,,ஆசை கண்ணை மறைக்கும் என...அதுதான் இது.... கடந்த கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியும்.. ஆனாலும் ஒரு போதும் எதிர்கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியாது...  இது தெரியாமல் பலர் ஏமாறுகிறார்கள்.

இப்படி பல அரசர்கள், ராபர்ட் கிளைவ் போன்றவர்களை ஏமாற்றித்தான் இவ்வளவு சொத்து சேர்த்தேன்..ரிஸ்க் இல்லாத தொழில் “ சிரித்தான்.

சரி..போதும் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானேன்,\

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

உள்ளே வந்தவர் பரமேஸ்வரன் காலகட்ட ஆள் போலவே இருந்தார். என் பெயர் ரவிதாசன் என்றார்.


**********************************************

கணேஷை பேய் அடித்து கொன்று விட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசி கொண்டார்கள்.  ஹார்ட் அட்டாக் என போலீஸ் கேசை முடித்தது.
ஆனால் ஆசை கண்ணை மறைக்கும் என்ற கணேசின் கான்சப்ட் அவனுக்கே எமன் ஆனது எனக்கு மட்டுமே தெரியும்.

இப்போதைய பொருட்களை கடந்த காலத்துக்கு எடுத்து செல்ல முடியாது... ஆனால் கடந்த கால பொருட்களை இப்போது பயன்படுத்தலாம் எனற அவனது புரிதல் சரிதான்.

ஆனால் அவன் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை.

பிரச்சினை வந்தால் , கடந்த கால ஆட்களை நாம் கொல்ல முடியாது., ஏனென்றால் அது பாரடக்ஸ். கடந்த கால ஆளான நம் தாத்தாவை நாம் கொன்று விட முடிந்தால் , நாம் எப்படி பிறந்து இருக்க முடியும். கடந்த காலத்தில் கொலை என்பது paradox.

ஆனால் கடந்த காலத்தின் விளைவுகளால் நாம் இறப்பது என்பது இயல்பானது.

 நவீன ரக ஆயுதங்கள் யாவும் ரவிதாசன் முன் பயனற்று போய் , ஆயுதம் ஏதும் இன்றி வெறும் கைகளால் ரவிதாசன் கணேஷை கொன்றதை நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?
:

Thursday, May 16, 2013

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?



அன்புள்ள பதிவர் அறிவியல் வெறியனுக்கு..

உங்களுடைய சமீபத்திய இடுகையான “ டைம் டிராவல் “ சாத்தியமா என்ற கட்டுரை படித்தேன்.   அருமை..

ஸ்பேஸ் போன்றதே காலம் என்பதையும் , ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எந்த திசையிலும் செல்லலாம். அதே போல காலத்திலும் எந்த திசையிலும் செல்ல முடியும். அதாவது 2010 ல் இருந்து 2020 க்கு செல்வதை போல 2020ல் இருந்து , 2010க்கும் செல்ல முடியும். 1947க்கு வேண்டுமானாலும் கூட செல்ல முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி இருந்தீர்கள். சூப்பர் என வியந்தேன்.

ஆனால் இதே தலைப்பில் ஒரு கட்டுரையை , வரிக்கு வரி இதே போல , 2013ஆம் ஆண்டிலேயே , பிச்சைக்காரன் என்ற பதிவர் கட்டுரை எழுதியாக கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.

இந்த பிழைப்புக்கு... சே..

வெறுப்புடன்,
 நிர்மல்
15.05.2090

அன்புள்ள நிர்மல்.

உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன், திடீரென கடைசியில் கவிழ்த்து விட்டீர்களே... ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் வலைப்பதிவுகள் எதுவும் படித்ததில்லை. பிச்சைக்காரன் என்ற பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

உங்கள்க்கு யாரோ தவறான தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

அன்புடன்,
அறிவியல் வெறியன்
17.05.2090

நண்பருக்கு,

எனக்கு தகவல் தந்தவர் அவர் குற்றச்சாட்டு உண்மைதான் என்கிறார். ஆனால் பிச்சைக்காரனின் பதிவுகள் ஏதும் இணையத்தில் கிடைக்கவில்லை. ஒரு அச்சில் இருக்கிறதா என தெரியவில்லை. எதற்கும் தேடிப்பாருங்கள். அவர் கட்டுரைக்கும் , உங்கள் கட்டுரைக்கும் இருக்கும் வேறுபாட்டை சுட்டிக்காட்டி , உங்கள் நேர்மையை உலகுக்கு உணர்த்துங்கள்.

அன்புடன்,

நிர்மல்
20.05.2090

நிர்மல்,

கதைகள் , கவிதைகள் என சொந்தமாக எழுதி வருகிறேன். ஒரு போதும் காப்பி அடித்ததில்லை. ஆனால் அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது மட்டும் , பிச்சைகாரன் கட்டுரை போல இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். யார் அந்த பிச்சைகாரன் என நானும் தேடிப்பார்த்து விட்டேன், அவர் கட்டுரைகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு வேளை உங்களுக்கு கிடைத்தால் சொல்லுங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கி கொள்கிறேன். ஒரு வேளை பிச்சைக்காரனின் ஆவி என் மேல் புகுந்து எழுதிகிறதோ என ஐயுறுகிறேன். பயமாக இருக்கிறது.

அன்புடன்,
அறிவியல் வெறியன்

23.05.2090

நண்பரே.

ஒரு நல்ல மன நல மருத்துவரை சென்று பாருங்கள்.

அன்புடன் ,

நிர்மல்.

25.05.2090


மரியாதைக்குரிய இந்திய அறிவியல் கழக தலைவருக்கு,

வணக்கம்,

ஸ்பேஸ் , டைம் குறித்த பார்வைகள் வெகுவாக மாறி இருப்பதை அறிவீர்கள். டைம் என்பதை ஸ்பேஸ் போலவே கருத முடியும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன, இறந்த காலத்தில் இருந்து , நிகழ் காலத்துக்கோ. அல்லது எதிர்காலத்தில் இருந்து நிகழ் காலத்துக்க்கோ பயணம் செல்ல முடியும் என்பது ஆய்வு நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இதை நேரடியாக உணர்கிறேன்.
2013ல் வாழ்ந்த பிச்சைக்காரன் என்பவர் , டைம் டிராவல் மூலம் என் வீட்டுக்கு வருகிறார் என நினைக்கிறேன். அப்படி வந்து , நான் என்ன எழுதுவது என்பதை அவரே முடிவு செய்கிறார். இதனால் என் பெயர் கெடுகிறது.

அனுமதி இல்லாமல் என் இடத்துக்கு வருவது எப்படி குற்றமோ அதே போல அனுமதி இல்லாமல் என் நேரத்துக்கு வருவதும் குற்றம்தானே..

இதற்கேற்ப சட்டம் கொண்டு வர அறிவியல் துறை ஆவன் செய்யுமா?

இத்துடன் , என் முழு கடித தொடர்புகளை இணைத்துள்ளேன்.

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது என என் கடித தொடர்புகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறேன்

அன்புடன்.
அறிவியல் வெறியன்

27.05.2090


நண்பரே..

எங்கள் நேரத்தே வீணடிக்காதீர்கள்.

2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறுகதையை எங்களுக்கு அப்படியே அனுப்பி இருக்கிறீர்கள்..எங்களை முட்டாள் என நினைக்க வேண்டாம். இப்படி செய்தால் உங்கள் மேல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

 நீங்கள் சொல்வது எதுவும் உண்மை சம்பவங்கள் அல்ல. 2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு கதை.. அந்த கதை உங்கள் பார்வைக்கு...

பிச்சைக்காரன்: அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?

உங்கள் சேவையில்,

இந்திய அறிவியல் கழகம்

30.05.2090

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா