Saturday, March 30, 2019

சொற்களை சேர்த்து எழுதுதலில் இலக்கண நூல்கள் காட்டும் நெறி


சொற்களை சேர்த்து எழுதுவது...பிரித்து எழுதுவது குறித்து தமிழில் முறையான இலக்கண வரையறைகள் உண்டு,,, ஆனால் பலர் இதை முறையாக பின்பற்றுவது இல்லை

நல்ல பெண் , நல்ல வேலை , நல்ல வெயில் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன,,, இதை இப்படியும் சொல்லலாம்.. பண்பான பெண் , கவுரவமான வேலை , கொடூரமான வெயில்... இப்படி வெவ்வேறு விதமாக வார்த்தைகளை சேர்த்து , வெவ்வேறு காம்பினேஷன் களில் எழுதுவது நெகிழுந்த்தன்மையுடனான சொற்சேர்க்கை ஆகும்

ஆனால் சிலவற்றை அப்படி மாற்ற முடியாது,,, நல்லபாம்பு , பல்கலைக்கழகம், இளங்கலை , கணிப்பொறி , எழுதுகோல்

இவற்றை பிரித்து எழுதினாலும் தனிச்சொற்களின் அர்த்தம் மாறாது எனினும் இவற்றை சேர்த்துதான் எழுத வேண்டும்...

இவை உறுதியான சொற்சேர்க்கைகள் ஆகும்

திருச்சிராப்பள்ளி , கேட்டுப்பார் , சொல்லித்தா,,, என்பது மேலும் சில உதாரணங்கள் ஆகும்

ஒன்பது வகையான கூட்டுச்சொற்கள் குறித்தும் அவற்றின் இயல்பு குறித்தும் நம் இலக்கண நூல்கள் அழகாக விவரித்து உள்ளன

மேலும் சில சொற்சேர்க்கைகளை மட்டும் பார்ப்போம்

கூட்டு வினையெச்சங்கள்

செய்யாதிருந்து,, ( செய்யா திருந்து அல்ல,,,, செய்யாது இருந்தும் அல்ல,,, செய்யாதிருந்து ) செய்யாமலிருக்க , செய்யாவிட்டால் , சொன்னபடி , பேசியவண்ணம் என்றே எழுத வேண்டும்

( தொடரும் )

Friday, March 29, 2019

பூமணியின் அம்பாரம்

ஒர் எழுத்தாளரின் அத்தனை சிறுகதைகளையும் ஒரு தொகுப்பாக ஒரே நூலாக படித்து முடிப்பது என்பது ஒரு சவாலாகும்.. காரணம் சில கதைகளை முடித்ததுமே ஒரு பேட்டர்ன் பிடிபட்டு விடும்.. எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருப்பதால் பாதியிலேயே மூடி வைத்து விடுவோம்.

பூமணியின் அம்பாரம் சிறுகதை தொகுப்பு இந்த சவாலை அழகாக சந்தித்து வெல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை..

முற்போக்கு எழுத்துகளுக்கு என ஒரு பாணி உண்டு,,, அந்த பாணியிலான கதைகள் என்றுதான் நினைத்து படிக்க ஆரமபித்தேன்.. படிக்க படிக்க பூமணியின் எழுத்து, அவர் பாணி,,, அவர்தம் அழகியல்,,, என்னை ஈர்த்து மயக்கி விட்டது.

இசை , நடனம், காபியின் நறுமணம் , எதிர்பால் ஈர்ப்பு என்று இவர் எழுத்து பயணிக்கவில்லை.. ரத்தம், சாதிய கொடுமை , வறுமை, கொலை என்றுதான் பேசுகிறது,, ஆனால் அதை படிக்க வைக்கும் நேர்த்தியுடன் , சிறுகதை என்ற வடிவை புரிந்து கொண்டு கச்சிதமாக வாசகன் முன் வைப்பதில் பூமணி ஒரு முன்னுதாரண எழுத்தாளராக மிளிர்கிறார்

தேவையின்றி ஓர் எழுத்து கூட இல்லாத கச்சிதமான நடை இவருடையது...   ஒரு வரியை ஸ்கிப் செய்தால் கூட , அந்த கதை புரியாமல் போய் விடும்

ஒரு மிகப்பெரிய கொலை , மரணம் , அழிவு சர்வசாதாரணமாக ஒரு வரியில் சொல்லப்பட்டு விடும் என்பதால் ஒவ்வொரு வரியுமே அதீத கவனத்தை கோருகிறது

பொதுவாக ஒரு தொகுப்பில் இருக்கும் ஒரு சிறுகதையின் தலைப்பையே நூலுக்கு தலைப்பு ஆக்குவார்கள்.. அல்லது இன்னாரின் சிறுகதைகள் என தலைப்பு இருக்கும்.,... ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் அம்பாரம் என வட்டார வழக்கை ஒட்டியும் , சிறுகதையில் வரும் சொல்லை வைத்தும் , சிறுகதை குவியல் அல்லது மதிப்பு மிக்க பொருள் குவியல்  , பொக்கிஷம் , களஞ்சியம் என பொருள் வரும்படி அம்பாரம் என பெயர் வைத்திருப்பது அழகு

ஒரு முடிவை மனதில் உருவாக்கிக்கொண்டு அதை நோக்கி கதையை உருவாக்குவது ஒரு பாணி.. கதையின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி வந்தால் கதை முடிவதற்குள் அது வெடிக்க வேண்டும் என்பது ஒரு கருதுகோள்... அப்படி எல்லாம் எந்த பார்முலாவும் இல்லாமல் நிஜமான வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ அப்படி இவரது கதைகள் நம் கண் முன்  நிகழ்கின்றன

ஒரு தாயையும் அவள் சின்னஞ்சிறு மகனையும் ஒருவன் அவர்கள் தலைகளை வெட்டி கொல்கிறான் என்பதை எவ்வளவு உருக்கமாக கொடூரமாக எழுதலாம்,, அந்த பெண்ணின் பார்வையில் கொலைகாரன் பார்வையில் எவ்வளவு விரிவாக எழுதலாம்

ஆனால் இவரது கசிவு கதையில் அது ஒரே ஒரு வரியில் வருகிறது

அவர் சாவும் மிகச்சுருக்கமாக சொல்லப்படுகிறது

அவர் லேசாக வாயசைத்தார்

கா ளி ய ப்பன் ம க ன்

அவனை அழைத்து அருகில் அமர வைத்தனர்

அவர் அவன் கழுத்தையே தடவிக்கொண்டு இருந்தார்

கை சோர்ந்தது... கடைக்கண்ணோரம் குளிர்ந்து போயிற்று

அவருக்கு சாவு வந்தது

--

எழுத்தாளன் தன் உணர்வுகளையோ விமர்சனங்களையோ எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் நடப்பதை அப்படியே பதிவு செய்யும்போது கிடைக்கும் பாதிப்பு செயற்கையான வர்ணனைகளில் இருப்பதில்லை

கசிவு கதை உலகின் சிறந்த கதைகளில் ஒன்று

நகைச்சுவை எள்ளலும் கூட இப்படி இயல்பாக இருந்தாக் சுவை அதிகம்

ஏட்டு ஒருவரும் கான்ஸ்டபிளும் உரையாடுவது ஓர் உதா

கடற்கரை போயிருந்தேன். அந்த அழகுல மயங்கி நேரம் போனதே தெரியல

கரண்ட் போஸ்ட்ல சாஞ்ச்சு தூங்கி இருப்பீங்க அதை மறைக்க இப்படி ஒரு கதையா'

அட அறிவு கெட்டவனே. அந்த இடத்துல எப்படிடா தூங்க முடியும்
'
உங்களுக்கு எந்த இடம்னு இருக்கு,,,ஒண்ணுக்கு இருந்துட்டு வரதுகுள்ள ஒறக்கம் போட்டு எந்திருச்சுருவீங்க்ளே

ஒருத்தன் காபி வித்துட்டு வந்தான்.,.. ரெண்டு தடவை வாங்கி குடிச்சேன்...துட்டு கொடுத்துட்டேன்

நான் அதை கேட்டேனா

உன் முழியே சரி இல்லையே

இப்படி இயல்பான உரையாயடல்களால் சித்திரிப்புகளால் நகர்கிறது கதை.

மட்டம் என்றொரு கதை

சாதி பிரச்சனை காரணமாக ஒரு சாராரை கோயிலில் நுழைய அனுமதிப்பதில்லை .. காலப்போக்கில் உரிமை குரல் எழுகிறது,, சண்டை கலவரம் என நடந்து ஒரு வழியாக அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகின்றனர்

ஆனாலும் சண்டையை இரு தரப்பாலும் மறக்க முடியவில்லை... இந்த சூழலில் இரு தரப்பிலும் மூத்தவர்கள் இருவர் ஒரு ரயில் பாதை அருகே தற்செயலாக சந்திக்கின்றனர்

தம்மை எதிராளி தாக்கிவிடுவானோ என இருவருக்குமே அச்சம். தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.. ஒரு ரயில் இருவருக்கும் நடுவே சென்று சில நிமிடங்கள் அவர்கள் பார்வையை மறைக்கிறது..ரயில் சென்றதும் ஒருவர் கையிலும் கல் இல்லை என்பதால் தாக்கும் எண்ணம் இல்லை என்பது புரிகிறது

பக்கத்து குளத்தில் கால் கழுவுகின்றனர்

ஆலய நுழைவை எதிர்த்தவர் இயல்பாக பேச்சை ஆரம்பிக்கிறார்

குளம் வத்திப்போச்சு.. குளம் நிரம்பினால்தால் வீட்டுல கிணறு நிரமபும்

அப்படி இயல்பாக பேச்சு தொடர்கிறது

ஆமா.. இரண்டிலும் நீர் மட்டம் நல்லா இருந்தால்தான் விவசாயம நல்லா  இருக்கும்

இபப்டி நட்புறவுடன் பேச்சு தொடர்கிறது

வற்றிக்கிடக்கும் குளத்தின் நீர் மட்டம் உயரர வேண்டும்...மன உயர்வு வேண்டும் என்பது போன்ற பல எண்ணங்கள் சிறுகதையை படிக்கையில் தோன்றியது

நாக்கு என்று ஒரு கதை..   அப்பாவியாக அமைதியாக இருக்கும் ஒருவன் நாக்கை பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் போலிஸ் வெட்டி விடுகிறது

அவனுக்கு நிகழ்ந்தற்கு பதிலடியாக இந்த சமூகத்தை திட்ட அவனிடம் நாக்கு இல்லை.. ஆனால் அவனே . அவன் இருப்பே நாக்கு ஆகி விடுகிறது,.. முரடனாகி வன்முறையில் ஈடுபாடு கொண்டவனாக மாறி விடுகிறான்..

பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த தொகுதியில் 51 கதைகள் உள்ளன.. ஒவ்வொன்றைப்பற்றியுமே விரிவாக பேசலாம்,

நீங்களும் படியுங்கள்..விவாதிப்போம்

Wednesday, March 27, 2019

எமமுகவும் பாக்யராஜும்


அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது என செய்தியில் படித்து இருப்பீர்கள்

அமமுக என்பது சசிகலா / தினகரன் கட்சி..ஓகே?

எமமுக என ஒரு கட்சி ... கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்

அப்படி ஒரு கட்சி இருந்தது

எமமுக - எம்ஜிஆர்  மக்கள் முன்னேற்ற கழகம்


எம் ஜி ஆர் மறைவுக்குப்பிறகு தங்கள் கட்சிதான் உண்மையான அதிமுக என சொல்லிக்கொண்டு பல கட்சிகள் உருவாகின..

பண்ருட்டியார் , அரங்க நாயகம் , நெடுஞ்செழியன் , திரு நாவுக்கரசர் , என பலரும் கட்சி நடத்தினர்

அதில் ஒரு கட்சிதான் எம முக...

இதன் தலைவர் பாக்யராஜ்.. கொள்கைப்பரப்பு செயலாளர் அவர் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த மண்ணாங்கட்டி என்பவர்

அண்ணன் சினிமாவில் பிசி என்பதால் , என்னதான் மக்கள் என்னை முதல்வராக்கினாலும் நீதான் செயல் முதல்வர் என ஆசை காட்டி கட்சியில் சேர்த்தார்..

கட்சியில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தாலும் அடுத்த முதல்வர் நான்தான் என நம்பிக்கையுடன் இருந்த இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்தன... அரசியல் செல்வாக்க்கும் உயரவில்லை

கட்சியை கலைத்து விட்டு , தன்னை காமெடியனாக பிராண்டிங் செய்து கொண்டு , கெட்ட கனவாக கட்சியை மறந்து விட்டார்

அப்போது அவர் சொன்ன அரசியல் ஆருடங்கள் , பிறகு திமுக ஆதரவாளராக மாறி அதையும் தோற்கடிதத வரலாறு என பல விஷ்யங்கள் யார் நினைவிலும் இல்லாமல் மறைந்து விட்டன

Monday, March 25, 2019

இரிடியம் நிப் - சில உண்மைகள்


பேனா ரசிகர்களுக்கு இரிடியம் நிப் என்றால் மிகவும் பிடிக்கும்., எளிதில் தேயாது.. நல்ல லைஃப் வரும்..,, எழுதுவதற்கு சூப்பராக இருக்கும்

அப்ப நான் ஒரு இரிடியம் நிப் வாங்குகிறேன் என்கிறீர்களா?

உண்மையில் இரிடியம் நிப் என்பது உலகில் இல்லை... ஒரு காலத்தில் இருந்தது... அதுவும் உலோக கலைவையின் ஒரு சின்ன பகுதியாகவே இரிடியம் இருக்கும்

அதுவும் நிப்பின் நுனிப்பாகம் மட்டுமே..

கொஞ்சூண்டு இரிடியம் இருந்தாலும் இரிடியம் நிப் என அழைத்தார்கள்.. இப்போது இரிடியமே இல்லாமல் , இரிடியம் நிப் என்கிறார்கள்

அப்படி என்றால் ஏமாற்றுகிறார்களா என்றால் இல்லை... நகல் எடுப்பதற்கு பொதுவான பெயராக ஜெராக்ஸ் இருப்பது போல , தரமான நிப் என்பதன் பொதுப்பெயராக இரிடியம் ஆகி விட்டது.. தரமான நிப் தான்.. ஆனால் அது இரிடியம் இல்லை

இரிடியம் என்பது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகமாகும்... உலகில் வெகு குறைந்த அளவே கிடைக்கிறது

இதை பயன்படுத்திதான் பல மோசடிகள் நடக்கின்றன.. அபூர்வமான இரிடியம் சிலை , ரைஸ் புல்லர் என்றெல்லாம் சதுரங்க வேட்ட பாணியில் பல இடங்களில் மோசடி நடக்கிறது

விண் கல் ஒன்று பூமியில் மோதியதாகவும்  அதனால்தான் டைனோசர் உள்ளிட்ட பல உயிர்கள் அழிந்ததாகவும் சொல்வார்கள்...

அந்த விண்கல் இரிடியத்தால் ஆனது என ஒரு தியரி உண்டு.. இப்போது பூமியில் கிடைக்கும் இரிடியத்தை விட , அந்த விண்கல்லில் இருந்த இரிடியத்தின் அளவு அதிகம்


ஒரு நண்பர் என்னிடம் தன் பென்னை கொடுத்து எழுதிப்பார்க்க சொன்னார்..,,  நன்றாக எழுதியது

இரிடியம் நிப் என்றார் பெருமையுடன்.... அவர் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாமல் , அறிவியல் உண்மையை மறைத்தேன்...


Friday, March 22, 2019

ஆல்வின் காளிச்சரண் சொன்ன அற்புத நிகழ்ச்சி


கிரிக்கெட் உலக வரலாற்று நாயகர்களில் ஒருவரான ஆல்வின் காளிச்சரண் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை ஹிந்து  நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது

அவர் எழுதி வெளியாக இருக்கும் கலர் ப்ளைண்ட் ( நிறக் குருடு ) நூலுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி இது

 பெரிய விளம்பரங்களோ அறிவுப்புகளோ இன்றி  நூல் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டமா என ஆச்சர்யமாக இருந்தது’

கேள்விகள் நிகழ்ச்சியின்போது  , பார்வையாளர்கள் ஷார்ப்பாக சுருக்கமாக கேள்விகள் கேட்டது ஆச்ச்ரயமாக இருந்தது

குறித்த நேரத்தில் ஷார்ப்பாக நிகழ்ச்சியை ஆரம்பித்தது  குறித்த நேரத்தில் பார்வையாளர்கள் அனைவரும் வந்திருந்து அரங்கை நிரப்பியது , அப்புறம்டா மச்சி என போனில் மொக்கை போடாதது என அதிசயத்து அமர்ந்து இருந்தேன்..

அதே தமிழ் நாடு.. அதே தமிழக மக்கள் ,   ஆனால் தமிழ் நூல் நிகழ்ச்சிகளில் இவர்களது வேறு விதமாகவும் ஆங்கில நூல் நிகழ்ச்சிகளில் வேறு விதமாகவும் இருப்பது ஏன் என  காரணம் தெரியவில்லை


கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய மற்ற பணிகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஏராளம் .. புலம்பெயர்ந்து கஷ்டப்பட்டு அவமானங்களை சந்தித்து மரணங்க்ளை சந்தித்து அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக மாறிப்போனவர்கள் பலர்.. மனதில் ஆழத்தில் தமிழ் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.. அந்த உணர்வை நாம் புரிந்து கொள்வது கடினம்


ஆல்வின் காளிச்சரண் பல சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்,... அவை எல்லாம் நூலில் வெளி வரக்கூடும்.. வராவிட்டால்  நான் எழுதுவேன்..


நிகழ்ச்சியில் என் ராம் அவருடன் உரையாடியது அழகு என்றால் விவி குமாரின் பேச்சும் அவர் நினைவுகூர்ந்த தகவல்களும் அருமை..

காளிச்சரண் குறிப்பிட்ட ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று

ஒரு முறை தென் ஆப்ரிக்காவில் சிலரால் கடத்தப்பட்டார் அவர்.. அப்ப்படி கடத்தப்படுபவர்கள் உயிருடன் மீள்வது அரிது... அவரிடம் இருந்த பணத்தை எடுக்க சொன்னார்கள்..  அவர் தலை மீது துப்பாக்கியை வைத்து இருந்தனர்

சங்கிலியை கழட்ட சொன்னார்களாம்.. அது சத்ய சாய் பாபா அளித்த சங்கிலி அது... பார்த்து விட்டு கொடுத்து விட்டார்கள்...என்ன தோன்றியதோ...அவரை அப்படியே விட்டு விட்டு , எதையும் திருடாமல் விட்டு விட்டனர்


பிறகு இந்தியா வந்தபோது சாய் பாபாவை சந்த்தித்தார்...

ஸ்வாமி...என் உயிரை காத்தமைக்கு நன்றி என்றார்

பாபா சொன்னாராம்... “ எந்த சம்பவத்தை சொல்கிறாய்..தலை மீது துப்பாக்கி வைத்தார்களே..அதுவா ? “ என்றாராம்

நம்மை சுற்றி எத்தனையோ அற்புதங்கள்..ஆனால் நன்றியுடன் வாழ்பவர்கள் சிலரே...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா