Wednesday, December 25, 2024

பிரிப்பு - சாந்தன் சிறுகதை ...

 பிரிப்பு  - சாந்தன் சிறுகதை 

...

க ல்யாண வீட்டிற்குத் தென்னங் குருத்து அலங்காரஞ் செய்யக் கூடாதென்றுதான், பெரியவர்கள் எல்லோ ரும் வாது பண்ணினார்கள். திரு, ‘அதெல்லாம் முட்- டாள் தனம்' என்று சண்டை போட்டு, பச்சை ஓலைத் தோர ணங்கள் கட்ட வழி பார்த்தான். தனது கல்யாணத்திற் கென்றே மினைக்கெட்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டுத் தென்னிலங்கையிலிருந்து வந்த தன் கூட்டாளிமாரின் அலங் காரத் திறமையை - யாழ்ப்பாணத்திற்கு அவ்வளவு அறி முகமில்லாத - சிகரம் போன்று வாசலை அணைத்து எழுகிற- தென்னோலைத் தோரண வாயிலை, இந்தச் சந்தர்ப்பத்தைச் காட்டி, இங்கு கட்டுவது அவன் ஆசையாயிருந்தது.


பொன் உருக்குவதிலிருந்து, கோவிலில் தாலிகட்டு முடிந்து, புதுத் தம்பதிகள் வீடு திரும்புவது வரை விதவித மான ஃபோட்டோக்கள். திரு தான் அவற்றில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறான்! முகங்கொள்ளாத மகிழ்ச்சி. பக்கத் தில் அதேபோலக் கமலாவும்.


கொழும்பிலிருந்து வந்த நண்பர்கள்தான் பந்தலையே பார்த்துக் கொண்டார்கள். தோரணம் பின்னுவதிலிருந்து, காகிதப் பூச்சரங் கட்டுவதுவரை அவர்கள் கவனித்த எல்லா வேலைகளையும், தம்பி ஒவ்வொன்றாகத் தன் 'கமரா' வுக்குள் அடக்கியிருந்தான். அந்தப் படங்களுங்கூட, இந்தப் படத்தொகுப்பில்—‘அல்ப’த்தில் தான் இருக்கின்றன.


சில்வாவும், அவர் மனைவியும் ஒரு குழந்தையின் ஆர்வம் முகமெல்லாம் வழிய, ஒவ்வொரு படமாக இரசித் துக்கொண்டிருந்தார்கள். படங்களை விளக்குவதற்கு, ஒரு தமிழ்-இந்துத் திருமணத்தின் சடங்குகள், தாற்பரியங்கள் எல்லாவற்றையும் விளக்க வேண்டியிருந்தது, திருவுக்கு. சில்வா ஏற்கெனவே ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், அவர் மனைவிக்கு இவை யெல்லாம் மிகவும் புதிய விஷயங்கள்.


ஏழெட்டு ஆண்டுக்கால கொழும்பு வாழ்வைவிட்டு இந்த இடத்திற்கு மாற்றலாகி, திரு வந்தபோது, புதிய அலுவலகத்தில் சில்வாவைச் சந்தித்தான். தன் நண்பர் களின் ‘உள்ளுடனை’ இவரினுள்ளும் அவன் கண்டதானது, இப்புது நட்புக்கு அடிகோலி வேரூன்ற வைத்தது. இன்று, இந்த மத்தியான விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்ட வேளையில், அல்பத்தைக் காட்டுவதும், உபசாரங்களில் ஒன்றா யமைந்தது.


சோடனைகளின் போது மட்டுமல்ல; மாப்பிள்ளை வீட் டின் பலவிதமான சடங்குகளின் போதுங்கூட-இதோ இந்தத் திருமதி சில்வாவின் ஆர்வத்தையொத்த, அதே துடிப்புடன் - எல்லோருக்கும் முன்னால் துருத்திக்கொண்டு வந்து, மாப்பிள்ளையின் பின்னால்--தோளுக்கு மேலால் எத் தனை இடங்களில் நிற்கிறார்கள், அவன் நண்பர்கள்.


‘இவர்களெல்லாம் என் சிங்கள நண்பர்கள்’ இப்படி அந்தப் படங்களைக் காட்டி, சில்வாவுக்குச் -சொன்னால், அவர் வியப்பும், தன்மேல் மதிப்பும், மகிழ்வுங் கொள்ளக் கூடும் என்கிற எண்ணம்-ஆசை-அவனுள் எழுந்தது.


‘நண்பர்கள்’ என்கின்றபோது, 'சிங்கள நண்பர்கள்’ என்று சொல்வது எந்தளவு அசட்டுத்தனம் என்கிற உண் மையும் அடுத்த கணத்திற்குள்ளேயே அவனுக்கு உறைத் தது. ‘...இதில் பெருமைப்படவோ குறிப்பிட்டுச் சொல் லவோ ஒன்றுமிருக்கக் கூடாது. இந்தக் குட்டி நாட்டுக்குள் இருந்து கொண்டு, பரஸ்பரம் இப்படியான உறவுகளில்லா மல் இருப்பது தான் புதுமையாக இருக்க வேண்டும். இப்படி இருப்பதையும், அப்படிச் சொல்லிக் காட்டப்போய், அதனா லேயே அந்தப் பிரிவு அநாவசியமாய் உணர்த்தப் படக் கூடாது .........


தோரணங்களை நண்பர்கள் கட்டுகிற ஒரு படத்தைக் காட்டி; “உங்கள் நண்பர்கள்தான் அலங்காரங்கள் எல் லாம் செய்கிறார்கள் -போலிருக்கிறதே?''-என்று சில்வா. கேட்டபோது, அவன் மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்த வாறே, “ஆமாம்” என்று மட்டுந்தான் சொன்னான்.


...

1974 மல்லிகை இதழ் 

Tuesday, December 24, 2024

உயர் மனிதனை உருவாக்கும் குணம் எம் ஜி ஆர் பற்றி சரோஜா தேவி

எம்.ஜி ஆரிடம் இருந்து பல விஷயங்களை க ற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, யார் வந்தாலும் முதலில் தன்னை அறிமுகப் கொண்டு தான், தானே பேச ஆரம்பிப்பார் இந்த பண்பு இன்று பலரிடம் இல்லை. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முதலில் நாம் அறிமுகம் செய்து கொண்டால், எதிர் இருப்பவர் மகிழ்ந்து சகஜமாக பேசுவதற்குத் தயாராகிவிடுவார். இதை சின்னவர் இன்று வரை அவரை நான் இப்படித்தான் அழைப் பேன். (பெரியவர் எங்கள் எல்லோருக்கும் சக்ரபாணி அண்ணன் தான்) பலமுறை செய்து நான் பார்த்துள் ளேன்.


என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7. அவருடைய பிறந்த நாள் 17. அவர் என்றுமே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அவரது ரசிகர்கள் தா ன் கொண்டாடுவார்கள். பலமுறை அவரது பிறந்த நா ளில் அவர் படப் பிடிப்பில் இருந்துள்ளார்.


என்னுடைய பிறந்த நாள் அன்று காலையில் எனக்கு வரும் முதல் தொலைபேசி வாழ்த்து எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வரும். என் வீட்டில் எனது தாயார் சத்யநாராயணா பூஜை செய்வார். ஒரு முறை என் பிறந்த நாளில் நேராக மனைவி ஜானகி அம்மாவுடன் காலையிலேயே வந்துவிட்டார். எனக்கு கையும் ஓட வில்லை; காலும் ஓடவில்லை. என் அம்மா சத்யநாராயணா பூஜை செய்து கொண் டிருந்தார். ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன் றுதான் என்று என் அம்மா சொன்னவுடன் ஒன்றும் சொல்லாமல் என்னை வாழ்த்தி விட்டு சென்றார்.


நான் என் அம்மா சொன்னால் என்றுமே தட்ட மாட்டேன். ஒரு முறை 'நான் ஆணையிட்டால்' படம் என்று நினைக்கிறேன். நான் நைட் ஷூட்டிங் கில் பிரேக் விட்டதும், அசதியாக வந்து உட்கார்ந் தேன். எனக்கு அசைவ பிரியாணியை அளித்தார் எம்.ஜி.ஆர். ‘இன்று சனிக்கிழமை அதனால் நான் அசைவம் சாப்பிட மாட்டேன். இது அம்மா சொன் னது' என்று கூறினேன்.


'ஷூட்டிங் பன்னிரண்டு மணியை தாண்டிவிட் டது. இப்பொழுது சாப்பிடலாமே!' என்றார். 'எங் களைப் பொருத்தவரை சூரியோதயமானால்தான் அடுத்த நாள். காலையில் 6 மணிக்குத்தான் அடுத்த நாளே பிறக்கும். இதுவும் என் அம்மாதான் சொல் லியுள்ளார்கள்' என்றேன். தன்னுடன் அமர்ந்திருந்த பலரிடம், 'இந்த சின்ன வயசிலே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேக்குறா பாரு!' என்று சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண் டிருக்கிறது.


அவர் எப்பொழுதுமே நமது கலாசாரம், பண்பாடு இவைகளைப் பின்பற்றினால் பெருமைப்படுவார். அவரிடம் எந்த ஒரு தீய குணத்தையும் நான் பார்த்த தில்லை. அதேபோல் மற்றவர்களை தவறாக பேசியதும் இல்லை 

நடிகர்கள் வெளியே போனால் கூட்டம் கூ டிவிடுகிறது சாலைகளிலோ கடை தெருவிலோ ந டந்து போக முடியவில்லை' என்று நாங்கள் அவரிடம் குறை பட்டோம். இதை மனதில் கொண்டு ஒருநாள் முழுவதும் பல்வேறு கடைகளை கோல்டன் ஸ்டுடியோவில் அமைத்தார். அவர்களும் சந்தோஷ மாக வர நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்றோம்.


ஒரு நகைக்கடையையும், அதில் உள்ள ஒரு நெக்லஸையும் (Necklace) பார்த்து ஆசைப்பட்டு நான் வாங்க விரும்பினேன். கடைக்காரர் 'இந்த நெக்லஸை சாவித்திரி அம்மா முதலிலேயே வாங்கி விட்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார்' என்றார். இதைக் கேட்ட என் முகம் சுருங்கி விட்டது. எனக்கு அந்த நெக்லஸை வாங்க முடியாததில் ரொம்ப வருத்தம்.


அதற்குப் பிறகு நாங்கள் நடித்த படம் 'தாயை காத்த தனயன்'. படத்தை தயாரித்தது தேவர் பிலிம்ஸ். ஆனால் அதை வாங்கி வெளியிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ். அதன் வெற்றி விழாவில் எனக்கு முன் மேடைக்குச் சென்ற அசோகன் ஒரு சின்ன பெட்டி யுடன் இறங்கி வந்தார். என் பெயர் அழைத்தபோது நான் சென்று மேடையில் நின்றேன். ஒரு பெரிய பெட்டி என் கையில் கொடுக்க நான் வாங்கி வந் தேன். கீழே வந்து உட்கார்ந்தவுடன் மெல்ல திறந்து பார்த்தேன். என் கண் பார்ப்பதை என்னாலே நம்ப முடியவில்லை. எந்த நெக்லஸை நான் வாங்க முடிய வில்லை என்று வருத்தப்பட்டேனோ, அந்த நெக்லஸ் எனக்குப் பரிசாக மேடையில் தரப்பட்டவுடன் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.


என்னைப் பொருத்தவரையில் சொந்த தாயை விட ஒரு படி மேலே சென்று அன்பை பொழிபவர் எம்.ஜி.ஆர். அவர் முதலமைச்சரான பிறகும் கூட நான் அழைத்தால் உடனேயே என்னை தொடர்பு கொண்டு பேசும் அன்பாளர், கடைசி வரை என்னை தனது கட்சியில் சேரவேண்டும் என்று அவர் சொன் னதே இல்லை. எம்.ஜி.ஆர். இன்று அல்ல என்றுமே வாழ வைக்கும் தெய்வம் 




Monday, December 23, 2024

வித்தியாசமான இயக்குனர் வித்தியாசமான காதல்

 படித்ததில் ரசித்தது 

.....


ரொம்ப வித்தியாசமான டைரக்டர் அவர். எப்போது நோக்கினாலும் அப்போதுதான் நாலு நாள் சேர்ந்தாற் போல உறங்கி விழித்தது மாதிரியிருப்பார். அந்தக் கண்களில் இனம் புரியாத சோகம் தாண்டவமாடும். கதை விவாதம் என்ற ஒன்று தினந்தோறும் நடக்கும் சில வாரங்களோ, பல மாதங்களோகூட அது நீளும். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சொல்கிற எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார். அப்புறமெதற்கு அவர்கள்? தான் சொல்வதைக் கேட்பதற்காகத்தான்.



அட அவராவது அதை கோர்வையாகச் சொல்வாரா என்றால், மண்ணாங்கட்டி அவர் பேசுவதை அவரே நவீன தொல்காப்பியர்களை வைத்து தமிழில் ரீமேக் செய்தால்தான் உண்டு.


அதுவே அவரிடம் இருக்கும் பெண் உதவி இயக்குனர்கள் என்றால், அவர்களுக்கு சீன் சொல்கிற சுதந்திரம் உண்டு. அதைப் பயன்படுத்துவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் படமாகி வருகிற வரைக்கும் புரிந்துகொள்ள முடியாத ரகசியம். தன்னுடன் மாய்ந்து மாய்ந்து கதை விவாதம் செய்யும் உதவி இயக்குனர்களுக்கும் உயிர் இருக்கும். பசி இருக்கும். பிள்ளைக்குட்டிகள் இருப்பார்கள். பஸ் இருக்கும். பஸ்சில் டிக்கெட் இருக்கும். என்பதெல்லாம் எதுவுமே தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத ஏகாந்தி அவர்.


இல்லையென்றால், மதியம் இரண்டு மணி வரை பேசிக் கொண்டேயிருக்கிற அவர், தனக்கு மட்டும் சிக்கன், மட்டன் ஐட்டங்களை வரவழைத்து வெட்டுவதையும் சரியாக இரண்டு பத்துக்கு வாட்சைப் பார்த்துவிட்டு, 'போய் சாப்ட்டுட்டு வந்திடுறீங்களா? என்று ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவதையும் எந்த மனிதாபிமானத்தில் சேர்ப்பது?


ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தன. அதெப்படி? அதுதான் அவரது தனிப்பட்ட திறமை. இளமை துள்ளுகிற வயசில் அண்ணன் தம்பிகளாகப் படமெடுக்க வந்தவர்கள் இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூத்திரமாகிவிட்டார்கள். இருந்தாலும் இந்த அண்ணன் மட்டும் பிச்சு பிச்சு போட்ட பிகாசோ ஓவியம் போல யாருக்கும் புரியாத படைப்பாளி.


இல்லையென்றால், இவர் இயக்கிய பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆன அந்த வருத்தப்படாத வாலிபர், 'ஆளை விடுங்கடா சாமீ என்று பாதியிலேயே ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து ஓடி வந்திருப்பாரா? இத்தனைக்கும் அது அவரே வளர்வதற்காக நாலு ஆபீஸ் கதவைத் தட்டி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த நேரம். அவருக்கே பொறுக்க முடியாத அவஸ்தை அது என்றால் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.


அட.. அது எப்ப? இரு வேறு உலகங்கள் பற்றிய கதை அது. சினிமாவில் நீண்ட கால தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால் இது நீண்ட காலத்திற்கும் முந்திய அந்தக் கால தயாரிப்போ என்று அஞ்சுகிற அளவுக்கு வருஷக்கணக்காக நீண்டது. அதில் ஹீரோவுடன் படம் முழுக்க

டிராவல் ஆகிற கேரக்டர் வருத்தப்படாத வாலிபருக்கு இருபத்தைந்து நாள் நடித்திருந்தார். ஒவ்வொரு நாளும் பிரசவ வார்டில் சேர்த்து பிள்ளையை கிழித்தெடுக்கிற மாதிரியே, எல்லாரிடமும் நடிப்பை வாங்கிக் கொண்டிருந்தார் டைரக்டர்.


'அந்தாளு என்ன நினைக்கிறாருன்னு நமக்கும் புரிய மாட்டேங்குது. நமக்கு புரியற மாதிரி சொல்லித் தொலையவும் மாட்டேங் குறாரு. அட.. நாம எந்த ஸ்பாட்ல நிக்குறோம்னு தெரிஞ்சா அதை வச்சாவது புரிஞ்சுக்கலாம்னா, சுத்தி பச்சை துணியை தொங்க விட்டுட்டு கிரீன்மேட் ஷாட்டுன்னு எடுத்துகிட்டு இருக்காரு. மண்டையிலயிருக்கிற பல்பை பீஸ் போக வைக்காம விட மாட்டாரு போலிருக்கே' என்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தவர்தான்.அதற்கப்புறம் அந்த திசைக்கே போகவில்லை அவர். நல்லவேளை... அங்கிருந்து ஓடி வந்தவருக்குதான் ஒன்பதாம் இடத்துல குரு. அதற்கப்புறம் அவர் செல்வாக்கு உயர்ந்து இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு டாப் ஹீரோவாகிவிட்டார்.


இவரென்ன ஆனார்? படம் வெளிவந்தது. அட்டர் பிளாப். கொல்லன் பட்டறையில கோடாலி செய்யுறவர்கூட, பிரிப்ரேஷன் இல்லாமல் போவதில்லை. கரி எவ்வளவு வேணும்? சம்மட்டி சைஸ் என்ன? அடிக்கிற ஆளுக்கு எனர்ஜி போதுமா? அல்லது பாதியிலேயே பல்ஸ் இறங்கிடுமா? என்றெல்லாம் பார்த்துப் பார்த்துதான் ஒரு கோடாலி செய்வார். இவர் அப்படியா? சுமார் பதினேழரை கோடி லாஸ், நஷ்டத்தை இவர் தலையில் கட்டிவிட்டது நிறுவனம்.


இவர் பண்ணிய ராவடியில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஓடிப்போன ஒளிப்பதிவாளர், தனக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல் ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அறையிலிருக்கும் லேன்ட் லைன் போனையும் துண்டித்துவிட்டு படுத்துவிட்டார். சுமார் ஒன்றரை நாள், யூனிட் முழுக்க, பிரேக் டவுன் ஆன அரசு பஸ்சை போல, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. அப்புறம் ஓட்டல் நிர்வாகத்திடம் கெஞ்சி வேறொரு சாவி போட்டு உள்ளே போய், ஆளை அமுக்கிக் கொண்டு வந்தார்கள்.


'அந்தாளு ஒழுங்கா வேலையைப் பார்க்கலேன்னா இப்படித்தான் என்றார் கேமராமேன். இவங்க ஈகோவுல நம்ம தலையை உருட்றானுங்களே...என்ற கடுப்பில்தான் நம்ம நேரம் வரட்டும் என்று காத்திருந்தது நிறுவனம். சரியாக கத்தி வைத்தார்கள். இன்னும் கடன் தீர்ந்தபாடில்லை.


சூடான இஸ்திரி பொட்டியில சுள்ளுன்னு தண்ணீர் துளியை வீசுன மாதிரிதான், அவ்வளவு மனக்குடைச்சலுக்கு நடுவிலும் காதல் வந்தது இவருக்கு. கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு ஆயிருச்சேன்னு ஒதுங்கிப் போற உலகமா இது? முதல் மனைவி விவாகரத்து பெறுவதற்குக் காரணமான அந்த நடிகை வெகு காலம் கழித்து மீண்டும் கிராஸ் ஆனார் இவர் வாழ்வில். ஏதோ ஒரு வார இதழின் வண்ணப்பக்கத்தில் அவர் புகைப்படம் வந்திருந்தது.


பக்கோடா போட்றவன் பார்சல் கட்ற பேப்பரையும் நினைச்சுகிட்டா மாவை எண்ணெய் சட்டியில போடுவான்? அப்படியொரு பக்கோடா பார்சலோ, அல்லது வரவழைத்த சஞ்சிகையோ? கரெக்டாக அந்த அட்டைப்படம் அவர் கண்ணில் பட்ட நேரம், ஆந்தையே ரெஸ்ட் எடுக்கப் போகலாமா என்று நினைக்கிற நடுராத்திரி இரண்டு மணி. காதலால் கசிந்துருகிய இருவருக்கும் திடீர் சண்டை வந்தது. ஏன்? எதற்கு? என்பதற்கெல்லாம் ஒரு காரணம் வேண்டுமா என்ன? வந்தது. அவ்வளவுதான். திடீரென தனது கதவோரம் நாலு தெருநாயைக் கட்டி வைத்து டைரக்டரு வரும்போதெல்லாம் காதே கிழிகிற அளவுக்கு குரைக்க விட்டார் நாயகி.



From.. கோடம்பாக்கம் செக்போஸ்ட் ஆர் எஸ் அந்தணன் 

முரகாமியும் சம கால எழுத்துச்சூழலும்

முரகாமியின் The City and The Uncertain walls குறித்த விமர்சனம் இந்தியன் எக்ஸ்பிரசில்  படித்தேன். நாவலின் போதாமைகள் குறித்த கச்சிதமான பார்வை.


இன்றைய எழுத்துச் சூழலின் முக்கியமான பிரச்சனைகள்தான் இவை..  ஊடு பாய்தல் என்ற கலை  "in someone's shoes" என்ற அனுபவம் பலருக்கு இல்லை.


நானூறு பக்க நாவல் என்றால் நானூறு பக்கமும் ஒரே அரசியல், ஒரே ஃபேண்டசி, எதிர் பாலனரைப் பற்றி ஒரே பார்வை..


இங்குதான் சாருவின் நான் தான் ஔரேங்ஸேப் போன்றவை தனித்து நிற்கின்றன.. ஔரங்ஸேப் குறித்து அதில் குறைந்தது மூன்று விதமான கதையாடல்கள் உண்டு. சாருவுக்கு எதிரான அவருக்குப் பிடிக்காத கோணமும் உண்டு

ஒகே.. முரகாமி குறித்த விமர்சனம் உங்கள் பார்வைக்கு


...................

முரகாமியின் உலகில் ஒரு பெண்ணின் உண்மையான இருப்பு இல்லாதது நாவலை ஹலோசென்ட்ரிக் ஆக்குகிறது மற்றும் ஆணின் ஈகோ, கற்பனைகள் மற்றும் துக்கம் அடிப்படையில் அமைந்துள்ளது


. அவனது வருத்தம் ஒரு பிரச்சனை இல்லாவிட்டாலும், பெண்களின் இருப்பை பலி கொடுத்து அது உருவாக்கப்பட்டுள்ள விதம்,  ஆரோக்கியமான கதை சொல்லல் இன்மையை  வாசகனை மிஸ்செய்ய வைக்கிறது.


நாவலை படித்து முடுப்பது அலுப்பூட்டும் அனுபவமாக உள்ளது.


  நாவல் மிகவும் பெரியது, கதைக்கு சம்பந்தமற்ற பல விவரிப்புகள் மீண்டும் மீண்டும் தேவையற்று இடம்பெறுகின்றன. கதைக்களத்தில் சிறிது சேர்க்கும் பல மறுபடியும். 


ஆர்வமூட்டும் வாசிப்பு அனுபவத்தை தருவதைவிட , 200 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களாக நாம் ஏற்கனவே அறிந்துள்ள அவனது தனிமை, தேக்கம் மற்றும் தனிமை ஆகியவற்றை   பலமுறைகள் சொல்லிம்   வாசகனை களைப்படைய வைக்கிறது.


 முரகாமி மார்க்வெஸ் மற்றும் ப்ரூஸ்ட் போன்ற பல்வேறு எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் கேள்வி எஞ்சியுள்ளது: நாவல் அதன் மகத்துவத்தை அதன் வாசகர்களை நம்ப வைக்க தன்னை காட்டிக்கொள்கிறதா? இல்லை என்பதே பதில். மார்க்வெஸ் தனது படைப்புகளில் இல்லாததாக கருதும் எல்லைகளை   மங்கலாக்க்கல் என்பது  அடிக்கடி நிகழ்ந்து நாவல் தட்டையாக்குகிறது


. இதேபோல், ப்ரூஸ்டியன்  புலனின்ப கோட்பாடும்  குழப்பியடிக்கப்பட்டுள்ளது, ஏனெனில்,In Search of Lost Time  கதையில் நிகழ்ந்த மேஜிக் இதில் செயல்படாமல் , முரகாமியின் கதையோட்டம்  முழு பலத்துடன் வாசகரிடம் வந்து சேரவில்லை.

முரகாமி கதையாடலில் , ஒரு புத்திசாலித்தனமான வாசகன் இறுதியில் ஒரு புள்ளிக்கு வந்து விட்டான், அவருடைய கதைக்களங்கள், அவரது யூகிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் திருப்பங்கள் போன்றவை இப்படித்தான் இருக்கும் தெருந்து விட்டது

. இந்நாவலில் பேய் கதை சொல்லிடம், 'இன்னொரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும்-நம்பிக்கையை கைவிடாதே. நீங்கள் எதையாவது உறுதியாக, ஆழமாக நம்பினால், முன்னோக்கி செல்லும் பாதை தெளிவாகிவிடும்' என்று  சொல்கிறது


முரகாமி தனது வாசகரிடம் அவரைப் பற்றியும் அவரது புத்தகங்களைப் பற்றியும் இதைதான் சொல்ல விரும்புகிறாரோ என தோன்றுகிறது.


 . அவரது எழுத்தின் மகத்துவத்தின் மீதான நம்பிக்கை இல்லையென்றால், அவரது நாவல் இனியும் வெற்றி பெறுமா?

.......




Friday, December 20, 2024

சென்ரியு

 சென்ரியு ஆயிரம் -ப. குணசேகர்

....



அரசியல்வாதிகள் நாய்கள் 

சிறுநீர் கழிக்கும் 

சிறு உறுமல் செய்யும் நாய்கள்

-பார்பாரா காப்மேன்

.........

பிரிஸ்கேம்பெல் 

தெரு ஓவியக்கலை 

நிர்வாணப் பெண்கள் காலில் 

மிதிபட்டு அழிந்தனர்

..........

இருண்ட இரவு 

மறுபடியும் மறுபடியும்

 எண்ணிய கறுப்பு ஆடுகள்

- பார்பாரா காப்மேன்

.........

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் 

தெரிவாரா ஏசு!


-பீட்டர் நியூட்டன்

.........

தாத்தாவிற்குப் பேரன்

 கற்றுக் கொடுத்த பாடம் 

பந்தை அடிக்க! 

- பார்பாரா காப்மேன்

.......

கோடையின் உச்சம் 

போக்குவரத்து காவலர் 

தலையில் வெயில்!

.....

ஐரிஷ் குழம்பு

 ஞாபகக் கலவையில் 

எனது பாட்டி

,- பார்பாரா காப்மேன்

......

டிரோன் கண்காணிப்பு

 நான் விலக்கிய

 நேர்த்தியான அச்சு.

.......

அபின் சொட்டில் மூழ்கிய 

பாடல் 

தாய்க்கு 

நான் பார்த்த 

அதிசயம்

.........

இரத்தம் சொட்டும் 

இருக்கைகள்

 பீர்கடைக்காரர் அழைத்தார் முதலாளி என்று!


-சேஸ்க்காகனன்

......


......

மதுக்கடையில் அட்டை

 நான் உணர்ந்தேன்

 இளமைப் பார்வை!


-சேஸ்க்காகனன்

.....

மெழுகுவர்த்திச் சுடர் 

முன்னோக்கி சாய்த்த

 எனது பேச்சு.

......


ஞாயிறு சில மணி நேரம் 

தெருப் பாடகர் முழங்கினார்

 முக்கிய ராகம் மதுக் கடையில்! 

டேவிட்ரீட்

......

இந்தியச் சந்தையில் எல்லா வெள்ளைக்காரிகளும் - யாரோ


இயக்க வீழ்ச்சி

 பழையதைப் புரட்டினார் 

பதவியில் பங்கு வகிப்பவர். டேவிட்ரீட்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா