Friday, January 13, 2012

கட்டை விரலை கடித்து துப்பினாரா?- புத்தக விழா அடிதடியும் , மனுஷின் சின்னத்தனமும்

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை கனிமொழியை உலக மகா கவி என அவர் பின் வாலாட்டிய படி சென்று கொண்டு இருந்தார் பெருங்கவிஞர் மனுஷ்.  அரசி கவிதை எழுதி ஜெயலலிதாவை நக்கல் அடித்தார்.

இன்று காலம் மாறிய நிலையில், திமுகவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளார். அவ்வப்போது சமரசம் செய்து கொண்டு வயிறு வளர்க்கும் இவர் போன்றவர்களை , நம் நடுத்தர வர்க்கம் புத்திசாலி என மெச்சுகிறது.

 ஆனால் தமது நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்களை , இளிச்சவாயர்கள் என்றுதான் இந்த நடுத்தர வர்க்கம் மதிப்பிடுகிறது..


புத்தக கணகாட்சியில், கவிஞர்கள் சங்கர் ராம சுப்ரமணியனுக்கும் , வசுமித்திரவுக்கும் இடையே தேவ தச்சன் எழுத்து குறித்து கருத்து மோதல் ஏற்பட்டது.

ஷேக்ஸ்பியர் பெரிய கவிஞர் என நாம் நினைக்கிறோம். யாராவது அவர் நல்ல கவிஞர் இல்லை என்றால் , சரி சொல்லி விட்டு போ என விட்டு விடுவோம். ஆனால் தமது கவிதை மேல் உயிராக இருப்பவர்கள் இப்படி மேம்போக்காக நடந்து கொள்ள மாட்டார்கள்.

அந்த வகையில், தேவ தச்சன் மீதான விவாதம் சற்று எல்லை மீறி கைகலப்பில் முடிந்தது..


இதை என்னவோ குழாயடி சண்டை போல மனுஷ் நக்கலடித்து இருக்கிறார்.

கவிதைக்காக, தமிழுக்காக சண்டையிட்ட அவர்களை போற்ற வேண்டுமே தவிர தூற்றுவதில் அர்த்தம் இல்லை.

பொது இடத்தில் சண்டை போடுவது தவ்று என்றாலும், தமிழுக்காக சண்டையிட்ட அவர்களை போற்றுவது நம் கடமை..

கட்டை விரலை கடித்து துப்பியதாக சின்னத்தனமாக மனுஷ் பிரச்சாரம் செய்கிறார் .. அது தவறானது ,, பொய்யானது ,, அற்பத்தனமானது...

சில பதிவர்கள் விபரம் புரியாமல் இந்த விவகாரத்தை நக்கலடிப்பது வேறு.. ஆனால் மனுஷ் நக்கலடிப்பது விஷமத்தனமானது.. முன் விரோதத்தை அடிப்படையாக கொண்டது

"இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன்."


என்று எழுதி இருக்கிறார்..
அதாவது வசுமித்ரா என்பவர் யாரென்றே தனக்கு தெரியாதது போல நாடகம் ஆடுகிறார்..


இந்த வசுமித்ர அந்த காலத்தில் உயிர்மையில் ஏராளமாக எழுதி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனுஷின் கேவலமான புத்தி தெரிய வந்ததும், மனுஷின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு , உயிர்மையை விட்டு வெளியேறினார் என்பது வரலாறு.


இப்போது சங்கருக்கு போன் செயததாக சொல்கிறாரே.. இதே சங்கரையும் தனக்கு யாரென்றே தெரியாது என்றவர்தான் இந்த மனுஷ்..


ஆக இவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை...


காலச்சுவட்டு, கனி மொழி, , சாரு என இவர் துரோகப்ப்ட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..


ஒரு சம்பவத்தை , பொய் கலந்து , ஒரு நான்காம் தர செய்தி தாள் போன்று ரிப்போர்ட் செய்யும் அவசியம் அவருக்கு ஏன் வந்தது?


கட்டை விரலை கடித்தாரே, வேறு எதையும் கடிக்கவில்லையா.. என்றெல்லாம் நரகல் நடையில் எழுத வேண்டிய அளவுக்கு மனதில் ஏன் அவ்வளவு வக்கிரம்? 


இதை எல்லாம் பார்த்தால், படிப்பு என்பதன் அர்த்தம் என்ன , புத்தகங்களின் பயன் என்ன என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.  




4 comments:

  1. “இதை எல்லாம் பார்த்தால், படிப்பு என்பதன் அர்த்தம் என்ன , புத்தகங்களின் பயன் என்ன என்ற ஆயாசமே மிஞ்சுகிறது”...இந்த இரு வரி போதும் ...அனைத்திற்க்கும்!!

    ReplyDelete
  2. what about Charu.. who was wagging his tail for kanimozhi earlier.. now does the same for Jaya..
    Its like.. Yokkiyan varran.. somba edutthu ulla vai"

    ReplyDelete
  3. what about Charu"

    தி மு க ஆட்சியில் இருந்த போதே தி மு கவுக்கு எதிராக எழுதியவர் சாரு என்பதை சிறுவர்கள் கூட அறிவார்களே

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா