Wednesday, May 30, 2012

ஊட்டியில் ராமாயணம், அடுத்து பாண்டிசேரியில் பகவத் கீதையா- பீதியில் இலக்கிய வாசகர்கள்

சிவகுமாரின் கம்ப ராமாயண சொற்பொழிவை கேட்டதில் இருந்து , பலருக்கும் ராமாயணத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

ஆனாலும் ஊட்டியில் அமர்ந்து கொண்டு , சிலர் ராமாயண விளக்கம் அளித்தனர் என கேள்விப்பட்டபோது நடு நிலை இலக்கிய வாசகர்கள் குழம்பி போனார்கள். எந்த இடத்தில் எதை பேசுவது , என்ன செய்வது என்று ஒரு இது இருக்கிறதா இல்லையா.

பிரபல திரைப்பட வசனகர்த்தா திரு, ஜெயமோகன் அழைப்பின் பேரில் நடந்த சந்திப்பில்தான் இந்த கூத்து நடந்தது.

இதை கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் , ஒரு வேளை பாண்டிசேரியில் , சாரு வாசகர் கூட்டம் நடத்தினால் அங்கு பகவத் கீதை பற்றி விளக்க உரை அளிக்கப்படுமா என பீதியுடன் கேட்டார்.

பகவத் கீதை படிக்க வேண்டுமானால் வீட்டில் உட்கார்ந்து படி. பாண்டிச்சேரில் ப்கவத் கீதை படிக்க பாண்டிச்சேரிக்கு ஏன் போக வேண்டும் என எரிச்சலாக கேட்டேன்.

அவர் சொல்லித்தான் , ஜெய மோகன் வெப் சைட் பார்த்தேன். கம்ப ராமாயண விபரம் அறிந்தேன்.

படித்து சிரித்து கொன்டேன்..

 அவர் எழுதுகிறார்

ஒவ்வொரு கூட்டத்துக்கும் இருபதுபேர்வரை புதியவர்கள் வருவதுண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டம் மிக அற்புதமாக நடந்தது என்று சொல்வார்கள். ஆனால் அடுத்த கூட்டத்துக்கு வருவது இல்லை.



எப்படி வருவார்கள் ?  நவீன இலக்கிய போக்குகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் அல்லது ஊட்டியின் அழகை ரசிக்கலாம்  , அல்லது ஜெயமோகனின் சினிமா அனுபவங்க்களை தெரிந்து கொள்ளலாம் என வந்து இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் கம்ப ராமாயணத்தை பற்றி பேசினால் என்ன அர்த்தம் ? அதை பேச அதுவா இடம்?


அறிவாளிகளுக்கு மட்டும்தான் இந்த நிகழ்ச்சி  நன்றாக இருக்கும் , என செக் வைத்து விடுவதால் , பலரும் நிகழ்ச்சி சூப்பர் என மையமாக சிரிக்கின்றனர். சரி, கம்ப ராமாயணத்தை விளக்குங்கள் என கேட்டால் சொல்ல தடுமாறுகிறார்கள்..


கம்ப ராமாயண உபன்யாசத்துக்கு போகிறோம் என வைத்து கொள்ளுங்க்கள் . அங்கே சினிமாவை பற்றி பேசினால் திகைப்பு ஏற்படதா?

அது போல சினிமாக்காரர் ஒருவர் நடத்தும் சந்திப்பில் , கம்பராமாயண பேசியது பலரை திகைக்க வைத்துள்ளது.

பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்று , பகவத் கீதை சொற்பொழிவு ஆற்றாமல் இருக்க வேண்டுமே என்பதே நடு நிலையாளர்களின் தற்போதைய பதைபதைப்பு..

3 comments:

  1. How desperate are you guys!!!

    ReplyDelete
  2. seems Dog barking on sun..:)

    Sorry for harsh words...
    If you dont like the other writer ( Jeyamohan), you may ignore him... writing these type of shit shows your attitude level only.

    SureshKumar

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா