Saturday, September 1, 2012

சோடா மூடி திரைப்படமும் , சோர்ஸ் கோட் திரைப்படமும்

ப்ளூ ஃபிலிம் இயக்குனர் ஒரு காலி பெருங்காய டப்பா என வெகு நாட்களாகவே சொல்லி வருகிறேன். சாரு விவகாரத்தினால் ஏற்பட்ட வெறுப்பினால்தான் அவரை குறை சொல்வதாக பலரும் கருதுனார்கள்.

தற்போதைய சோடா மூடி படத்தை பார்த்ததும் , என கருத்துக்கே பலரும் வந்து விட்டார்கள்.

கொஞ்சம் தாமதம் ஆனாலும் வாய்மையே வெல்லும் என்பதை அறிய மகிழ்ச்சி.

பிரபஞ்ச நாயகம், ப்ளூ ஃபில்ம் இயக்குனர் போன்றவர்கள் , ஹாலிவுட் தரத்தில் படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு , சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் காப்பி அடிப்பதே அவர்கள் தோல்விகளுக்கு காரணம்.

நம் மண்ணின் பிரச்சினைகள், சோகங்கள் , சந்தோஷங்கள் போன்றவற்றை படமாக்க வேண்டும். இல்லையா , நம் மண்ணின் சிந்தனைகளை படமாக்கலாம். சம்பந்தே இல்லாமல் , எதையாவது காப்பி அடித்தால் என்ன அர்த்தம்.,

இன்சப்ஷன் , மேட்ரிக்ஸ் , சோர்ஸ் கோட் போன்ற பல படங்கள் , நம் இந்திய சிந்தனை மரபை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளன என்பது கவனித்து பார்த்தால் தெரியும்.,
இந்த படங்களை நம் இயக்குனர்கள் , நல்ல எழுத்தாளர்கள் துணையுடன் எடுத்து இருந்தால் , படங்கள் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்.

இதில் இன்சப்ஷனும் , மேட்ரிக்ஸும் ஏற்கனவே சிறப்பாகத்தான் வந்து இருக்கின்றன. ஆனால் சோர்ஸ் கோட் படம் கொஞ்சம் சறுக்கி விட்டது என படம் பார்த்த போது தோன்றியது.

எடுத்து கதைக்களன் அருமை. சொல்ல நினைத்ததும் சரியானதுதான். ஆனால் திரையில் முழுமையான ரிசல்ட் கிடைக்கவில்லை. இயக்குனர் பேட்டிகள் மூலம் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்.

இன்சப்ஷன் , மேட்ரிக்ஸ் போன்ற படங்களில் , ஏதாவது ஒரு கதாபாத்திரமே விளக்கங்கள் கொடுத்து விடும். சோர்ஸ் கோட் படத்தில் அப்படி இல்லை.

படத்தின் கான்சப்ட் என்ன ?

ஒரு மனிதன் இறந்து விட்டாலும் , அவன் மூளையில் சில நினைவுகள் பதிவாகி இருக்கும். இந்த நினைவுகளை டவுன் லோடு செய்து கொண்டு, இந்த நினைவுகளில் இன்னொருவனை சஞ்சரிக்க வைத்தால் சில விஷயங்களை சாதிக்கலாம்.

அதாவது அந்த மனிதன் இறப்பது முந்தைய எட்டு நிமிடங்களில் என்ன நடந்தது என பல கோணங்களில் பார்க்க முடியும்.

ஒரு தொடர் வண்டியில் குண்டு வெடித்து எல்லோரும் இறந்து விடுகிறார்கள். குண்டு வைத்தவன் யார் என கண்டு பிடித்து , அவன் மேலும் சதி திட்டம் தீட்டுவதை தடுக்க வேண்டும்.

இதற்காக கால்ட்டர் ஸ்டீவன்ஸ் என்ற ராணுவ கேப்டனை , தொடர் வண்டி விபத்தில் இறந்து போன ஒருவரின் ( சான் வெண்ட்ரஸ் ) கடைசி எட்டு நிமிடங்களை வாழ செய்கிறார்கள்.இறந்து போன ஒருவரிடம் கடைசி நிமிடங்களில் என்ன என்ன நடந்தது என விலாவரியாக விசாரிக்க முடியாது.

நமக்கு தெரிந்த ஒருவரை அந்த கடைசி நிமிடங்களில் வாழ செய்து, அந்த விபத்து நடந்த பின் , அதைப் பற்றி விசாரித்தால் தேவையான விபரங்கள் பெறலாம் அல்லவா. அதைத்தான் கால்ட்டர் ஸ்டீவன்ஸ் மூலம் செய்கிறார்கள். அவரை கால இயந்திரத்தின் மூலம் , விபத்து நடந்த கடந்த காலத்துக்கு அனுப்பவில்லை. அவர் எண்ணங்களை , இறந்து போன ஒருவரின் நினைவுகளுடன் இணைத்து , கட்ந்த கால நிகழ்ச்சிகள் மீண்டும் நடப்பது போன்ற எஃபக்டை உருவாக்குகிறார்கள். இதுதான் சோர்ஸ் கோட் எனும் முறை,

ரயில் ப்யணத்துடன் படம் துவங்குகிறது. கால்ட்டர் ஸ்டீவன்சுக்கு தான் எப்படி இங்கு வந்தோம் என்றே தெரியவில்லை. அவனை  சான் என்று அழைத்தே மற்றவர்கள் பேசுகிறார்கள். க்றிஸ்டினா என்ற பெண் அவனை நன்கு தெரிந்தவள் போல பேசுகிறாள். அவனுக்கோ அவள் யார் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் குண்டு வெடித்து ரயில் விபத்துக்கு உள்ளாகிறது. கால்ட்டர் வேறு ஓர் அறையில் ஒன்றும் புரியாமல் திகைக்கிறான்.  தொடர் வண்டியில் பயணம் செய்தது தான் அல்ல. இன்னொருவனின் உடலில் தான் புகுந்து பயணம் செய்தததை உணர்கிறான்.

உண்மையில் கால்ட்டர் ஸ்டீவன்சும் கிட்டத்தட்ட இறந்து போனவன் தான் . ஆய்வு கூடத்தில் அவன் முற்றுலும் இறந்து போகாமல் பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள். அவன் எண்ணங்கள் மட்டும் செயல்படுகின்றன. அந்த எண்ணங்களை வைத்துதான் இதை செய்கிறார்கள் . அதாவது அவன் உடல் தொடர் வண்டிக்கு செல்லவில்லை. தொடர் வண்டியில் செல்வது போன்ற ஒரு கற்பனை உலகம் உருவாக்கப்படுகிறது.

இந்த பாணியில் , மீண்டும் ரயிலுக்கு அனுப்பட்டுகிறான். மீண்டும் விபத்து. இப்படி மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்டு, புதிய புதிய தகவல்கள் சேகரித்து , கடைசியில் சதிகாரனை கண்டு பிடித்து விடுகிறான். இதனால் , மேற்கொண்டு ஏற்படும் சதி செயல்கள் தடுக்கப்படுகின்றன.

சூப்பர்.

இப்போது அடுத்த கிளைமேக்ஸ்.

இப்படி மீண்டும் மீண்டும் ஒரே பயணத்தை செய்வதன் மூலம் அடிக்கடி பார்க்கும் க்ரிஸ்டினா மேல் காதல் வயப்படுகிறான் கதானாயகன். அவளை காப்பாற்றும் பொருட்டு, அந்த ரயில் குண்டு வெடிப்பையே தடுத்து விடுகிறான். அவனை அனுப்பிய்வர்கள், எதிர்கால சதிகளை தடுப்பதற்காகத்தான் அவனை அனுப்பினார்கள். அவனோ கடந்த காலத்தையே , கட்ந்த காலத்தில் நடந்த சம்பவத்தையே மாற்றி விட்டான். அதன் பின் தன் காதலியுடன் காலம் முழுக்க இன்புற்று வாழ்ந்தான். ஆய்வு கூடத்தில் இருந்த உடலை அழிக்க சொல்லி விடுகிறான்.

படம் விறுவிறுப்புடன் இருந்தாலும் , ரசிகர்கள் கேள்வி கணைகளால் இயக்குனர்களை துளைத்து எடுத்து விட்டார்கள்.  அவரும் சளைக்காமல் பதில் சொன்னார்.

****************************************************

“ இறந்து போனவரின்  நினைவுகளில் தான் , கதா நாயகன் வாழ முடியும் என்பது கான்சப்ட். ஆனால் இறந்து போனவனின் நினைவுகளில் பதிய வாய்ப்பு இல்லாத சில காட்சிகளை கதா நாயகன் எப்படி பார்க்கிறான் ? “

” கதா நாயகனின் எண்ணம் புதிதாக ஓர் உலகை சிருஷ்டி செய்து கொள்கிறது. இறந்தவனின் எண்ணம் அடிப்படை மட்டுமே. அதை வைத்து கொண்டு , கதா நாயகனின் கற்பனை உலகம் தன்னிச்சையாக இயங்கும் . உண்மை உலகைபோல அது மெய் நிகர் இணை உலகம் “

“  கதா நாயகன் கடந்த காலத்தை மாற்றி விடுகிறானே ?  குழப்பமாக இருக்கிறதே  ? “

” கதா நாயகன் உருவாக்கிய மெய் நிகர் உலகில் விபத்தே நடக்கவில்லை. எனவே  சோர்ஸ் கோட் என்பதற்கு வேலையும் இல்லை. ஆய்வு கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கும் கேப்டன் அங்கேயே இருக்கிறான். ”

“ விபத்தே நடக்கவில்லை என்றால் , தொடர் வண்டியில் யாரும் இறக்கவில்லை. க்றிஸ்டினாவுடன் பயணம் செய்த சான் என்ன ஆனான்? தேவையே இல்லாமல் , கேப்டன் அவன் உடலில் புகுந்து கொண்டு சானை வெளியேற்றி விட்டானா ? “

“ கேப்டனின் மனம் உருவாக்கிய உலகம் அது. அதில் கேப்டனை தன்னையே சான் என்பவனாக உருவகித்து கொள்கிறான்.  ரயிலில் க்றிஸ்டினாவுடன் அவன் வருகிறான். சதிகாரனை கண்டு பிடித்து , விபத்தை தடுத்து விடுகிறான். இதில் கேப்டன் என்ற கேரக்டருக்கு வேலையே இல்லை. ஆனால் உண்மையான உலகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால் , இது எல்லாமே கேப்டனின் கற்பனைதான் “

” எட்டு நிமிடங்கள்தான் மெய் நிகர் வாழ முடியும் என முதலில் சொல்கிறார்கள் . கிளைமேக்சில் காலம் முழுக்க தன் காதலியுடன் மெய் நிகர் உலகில் வாழ்வதாக படம் முடிகிறதே ?

“ எட்டு நிமிடம்தான் வாழ முடியும் என அவன் பணியை துரிதப்படுத்த சொல்லி இருக்கலாம் அல்லவா ? ஒவ்வொரு முறையும் அவன் இறந்த பின்புதான் மெய்  உலகுக்கு வருகிறான். சில காட்சிகளில் எட்டு நிமிடங்களுக்கு மேலும் அவன் வாழ்கிறான் “

“ அவன் உருவாக்கி கொண்டது கற்பனை உலகத்தில் இருந்து , மெய் உலகத்தில் இருப்பவர்களுக்கு மெயில் எப்படி அனுப்பினான்”

“ அதுவும் அவன் கற்பனையே “

*************************************************

இந்த சால்ஜாப்புகள் தேவை இல்லாமலேயே படம் நன்றாக ஓடியது. ஆனால் எடுத்து கொண்ட கான்சப்டை இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்து இருந்தால் , cult ஸ்டேட்டஸ் கிடைத்து இருக்கும்.

 நாம் கனவு காண்கிறோம். இப்போது நாம் வாழும் வாழ்க்கை உண்மையா அல்லது வேறு யாரும் கனவா என்ற தாக்கத்தை உருவாக்காமல், வெறும் மசாலா படமாகிவிட்டடது.

கனவு உலகம் , மறு பிறவி , மாயை போன்ற கீழை நாட்டு சிந்தனைகளில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நம் ஆட்கள் ஆங்கில படங்களை காப்பி அடிக்க முயல்கிறார்கள். சில சமயங்களில் இரண்டுமே தோல்வி அடைவதுண்டு,

இக்கரைக்கு அக்கரை பச்சை.




1 comment:

  1. I could recognize "Prabanja naayagan" with my tiny brain. But who is that bluefilm director?

    Pls give me a hint.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா