Saturday, September 22, 2012

பிரபஞ்ச நாயகன் எடுப்பது நல்ல படமா? உண்மையான நல்ல படம் - சாரு பேச்சு


ஏதாவது நல்ல படத்தை பார்த்து விட்டு , அதை கேவலமாக மொழி மாற்றம் செய்யக்கூடியவர் பிரபஞ்ச நாயகன்.  உதாரணமாக பல்ப் ஃபிக்‌ஷன் படத்தை அவர் பார்க்கிறார் என வைத்து கொள்ளுங்கள். அது நல்ல படம் என அவருக்கு புரிந்து விடும். ஆனால் அது ஏன் நல்ல படம் என அவருக்கு புரியாது. அந்த படத்தில் அடிக்கடி வரும்  f**  வார்த்தையால்தான் அதை நல்ல படம் என பாராட்டுகிறார்கள் என நினைத்து கொண்டு, அந்த வார்த்தையை அப்படியே அப்படி தமிழில் மொழியாக்கம் செய்து படம் எடுப்பார். உலக தரத்தில் படம் எடுத்து இருக்கிறேன் என்பார், நாமும் ஆவலாக சென்று பார்ப்போம் . பார்த்தால் , பல்ப் ஃபிக்‌ஷன் படத்தின் தரத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் அவர் படம் இருக்கும்.  f** என்ற வார்த்தை மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கும். இதை தவிர எந்த சம்பந்தமும் இருக்காது. படம் ஃப்ளாப்பாகும் . தயாரிப்பாளர் புலம்புவார். ரசிகர்களுக்கு தன் அறிவு புரியவில்லை என பிரபஞ்ச நாயகன் அறிக்கை விடுவார்.

இது கால காலமாக நடப்ப்பதுதான்.

இந்த நிலையில் உண்மையிலேயே உலக தரத்திலான ஒரு படத்தை பற்றி சாரு நிவேதிதா விண் டிவியில் பேசினார். மிக அழகான பேச்சு. 

ஆரண்ய காண்டம். 

மிக சிறந்த படத்தைப் பற்றி ஆழ்ந்த புரிதலுடன் அவர் பேசியது சிறப்பாக இருந்தது .  நல்ல சினிமா உருவாக வேண்டுமானால் , சினிமாவைத்தாண்டி மற்ற துறைகளிலும் ஆழ்ந்த அறிவு வேண்டும் என்ற அவர் கருத்து சிந்திக்க வைத்தது. படத்தின் சில காட்சிகளைப் பார்க்கையில் , ஓவிய காட்சிகளை நினைவு படுத்தும் வகையில், ஒளி ஓவியமாக ஒளிப்பதிவு இருந்ததாக சொன்ன சாரு, அதன் பின் இயக்குனரிடம் பேசியதாகவும் , ஓவியம் போல காட்சிகள் இருக்க வேண்டும் என திட்டமிட்டு அந்த காட்சிகளை அமைத்ததாக இயக்குனர் சொன்னதாகவும் சொன்னார்.

கண் மூடித்தனமாக காப்பி அடிக்கும் நம் ஆட்கள் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தால் நல்ல படங்கள் வரும் என தோன்றியது.

தேவர் மகன் படம் பார்க்கையில், பல் வேறு ஆங்கில படங்கள் நினைவு வந்ததாகவும் , ஆரண்ய காண்டம் எந்த படத்தையும் நினைவு படுத்தாத அசல் தமிழ் படம் என்றும் சொன்னார்.

மார்க்கெட்டிங் சரியில்லாதது மட்டுமே ஆரண்ய காண்டம் படத்தில் தோல்விக்கு காரணம் என தோன்றியது. காப்பி படங்களும் , மாறு வேட போட்டிக்கான படங்களும் வெற்றி அடையும் தமிழ் நாட்டில், நல்ல படங்கள் தோல்வி அடைவது வருத்தமே.

intertextuality , self-reflexivity போன்ற பின் நவீனத்துவ கூறுகள் ஆரண்ய காண்டத்தில் இருப்பதை அழகாக சுட்டி காட்டினார். 

சரி, ஆரன்ய காண்டம் என்ன சொல்கிறது?

 கலை என்பது எதையும் பிரச்சாரம் செய்வதில்லை. அது ஓர் அனுபவம். அது அளிக்கும் அனுபவம் மரண படுக்கை வரை நமக்கு மறக்காது. அந்த வகையில் , மறக்க முடியாத படம் ஆரண்ய காண்டம் என்றார் சாரு. 


5 comments:

  1. Tamilanukku ethiri Tamilan thaan. Charu periya medhaingrathala avar solurathu ellam blinda yethukka mudiyathu. Tamil padam target pannurathu 7 kodi tamilana satisfy panna oungalappola 7 latcham perukku padam ydukkanumna Charuum Karundhel thaan edukkan. Ponga sir poi pulla kuttingalukku (Charu puthakatha kuduthu) padikka vainga!!!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. ஆரண்ய காண்டம் ஆங்கிலத்தில் வெளிவந்த “Bound" படத்தின் தழுவல்

    ReplyDelete
  4. Marudhan Sir ivarkalukku Kamal padam yedutha thaan copy. Charu sollita athu yenna thaan mokkaiyo illa copy padamo adhu oru aagachirantha padaippu. Sir ungal charuvin novelkalai mattra mozhikalil mozhi peyarpadhu yevlo sariyou adhupol ulaga padangalai tamilil yaar kondu vanthal parpom. Oru mokka novela 4 naal paditha life waste akkaratha vida 3 mani mera padam periya waste illa sir.

    No Offensive. thangalin kinatru thavalai simthanai vitu veliyil vaarum

    ReplyDelete
  5. முறைப்படி அனுமதி வாங்கி மொழியாக்கம் செய்யட்டுமே... ஆட்சேபணை இல்லையே

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா