Wednesday, December 11, 2013

நடிகரின் வாழ்க்கையை முடித்து வைத்த திரைப்படம்

ரத்தினக்குமார் - நேரம் சரியில்லாத படம்

 நடிப்பு         : பியூ சின்னப்பா , எம் ஜி ஆர், பானுமதி , மாலதி, என் எஸ் கே, துரைராஜ் , மதுரம்
 இயக்கம்   : கிருஷ்ணன் பஞ்சு
இசை           : ஜி ராம நாதன் , சுப்புராமன்
தயாரிப்பு    : முருகன் டாக்கீஸ்
பாடல்கள்   : பாப நாசம் சிவம் , சுரபி
வசனம்        : வேலாயுதம்



கதை     :  பிச்சைக்காரனுக்கு அதிர்ஷடவசமாக ராஜயோக வாழ்க்கை கிடைக்கிறது..  நன்றி இல்லாமல் நடந்து கொண்டு , மீண்டும் பிச்சைக்காரன் ஆகிறான்

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்

***********************************************************************

சில படங்களில் சில நடிகர்கள் நடித்து இருக்க கூடாது.. சில பாடல்களை சில பாடகர்கள் பாடி இருக்க கூடாது என சொல்வார்கள்...அறிவியல் பூர்வமானது அன்று என்றாலும் வியப்பளிப்பது...

 நான் ஒரு ராசி இல்லாத ராஜா என்ற பாடலில் இருந்து டி எம் எஸ் வீழ்ச்சியை சந்தித்தார் ( ஒரு தலை ராகம் )

கே ஆர் ராமசாமி , நான் பாட மாட்டேன் என்றொரு படத்தில் பாடினார். அதுவே அவர் கடைசி பாடலாக அமைந்தது..( துளி விஷம் படம் )

ராசாத்தி என் உசிரு என்னதில்லை என்ற பாடலை பாடிய - அப்போது வேகமாக முன்னுக்கு வந்துகொண்டு இருந்த - ஷாகுல் ஹமீது விபத்தில் காலமானார் (  திருடா  திருடா )

அந்த வரிசையில் வரும் படம்தான் ரத்தினகுமார் ( 1949)..தோல்விகளால் துவண்டு இருந்த பியூசின்னப்பாவுக்கு , உத்தம புத்திரன் படம் வாழ்வளித்தது என முன்பு பார்த்தோம். இந்த படம் கதையே சரி இல்லை... ஓரளவு இவர் வாழ்க்கையை பிரதிபலிப்பது போலவும் , வீழ்ச்சியை காட்டுவது போலவும் இருந்தது..

இந்த படத்தில் பானுமதி என் எஸ் கே போன்றோர் இருந்தும் , அருமையான பாடல்கள் இருந்தும் , படம் ஓடவில்லை... அவர் வீழ்ச்சி தொடங்கியது... இது வந்து இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். இதன் பின் வந்த வனசுந்தரி படமும் சராசரி படம்தான்.. அவர் இறப்புக்கு பின் இன்னொரு படம் கடைசியாக ரிலீஸ் ஆனது.

அவருக்கு வீழ்ச்சியளித்த படம் என்றாலும் , படம் நன்றாகவே உள்ளது.

ஹீரோ ரத்னகுமார் ஓர் அனாதை...பிச்சை எடுக்கிறான்... இன்னொரு அனாதை பிச்சைக்காரியை மணம் செய்து கொண்டு ஓரளவு முன்னேறி வருகிறார்கள்..இந்த நிலையில் தன் மகனை சின்ன வயதில் பறிகொடுத்த மன்னர் தன் தங்கை மகளை இளவரசியாக முடிசூட்டுகிறார்.. ரத்னாவுக்கு சில மந்திர சக்திகள் கிடைக்கின்றன... அதனை வைத்து இளவரசியை கைக்குள் போட முடிகிறான்..தன் மனைவியை துரத்தி அடிக்கிறான்.. ஒரு கட்டத்தில் அந்த சக்தி போய் விடுகிறது... தவறை உணர்கிறான்.. தூக்கு தண்டனை விதிக்கபடும் கடைசி நேரத்தில், இவனே தொலைந்து போன இளவர்சன் என தெரிய வந்து காப்பாற்ற படுகிறான்..

மொத்தம் இருபது பாடல்கள் !!! அனைத்தும் அருமை...

எங்கிருந்தோ வந்தான் என்ற பாரதி பாடல் சாயலில் ஒரு பாடல்..கேலி மிக செய்வாள் என்ற அந்த பாடல் அருமை..

இளவரசியை காதலிக்க முயலும் நபர் ஒரு பிச்சைக்காரன் என கண்டுபிடிக்கும் கடமை தவறாத வீரர் யார் தெரியுமா?

ம்ம்.. எம் ஜி ஆர் தான் அந்த சின்ன வேடத்தில் வருகிறார்..

படத்தில் சுவையான ஒரு காட்சி..

பாழடைந்த சத்திரத்தில் ஒரு பேய் ஹீரோவை துரத்தும்... ஒரு பாறையை கையில் வைத்துக் கொண்டு போட்றுவேன்..என மிரட்டும்...கெஞ்சி பார்க்கும் ஹீரோ ஒரு கட்டத்தில் ., சரி போட்டு தொலை என்பார்..
அது பாறையை தூக்கி போடும்..உள்ளே பார்த்தால் வைரங்கள் , வைடூரியங்கள். தங்கம் என இருக்கும்...

என் எஸ் கே வழக்கம்ப்போல அழகான காமெடி...

பானுமதியும் , மாலதியும் இரு ஹீரொயின்கள்..அழகு..

இந்த படத்தை தயாரித்தது மதுரையை சேர்ந்த முருகன் டாக்கீஸ் நிறுவனமாகும்...

ரத்தினக்குமார் - ரம்பம் இல்லை 

4 comments:

  1. ஒரு பாட்டு போட்டு இருக்ககூடாதோ !!

    இருபது பாட்டு இருக்குதா !!

    எங்கேனாச்சும் இந்த சி.டி. கிடைக்குமா ?
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. இருபது பாடல்களுன் அருமை என்பதால் , எதை போடுவது என குழம்பி விட்டேன்

      Delete
  2. பாவம் டி.எம்.எஸ், கே.ஆர்.ராமசாமி, ஷாகுல் ஹமீது, பி.யு.சின்னப்பா

    ReplyDelete
    Replies
    1. இவர்களைப்போல மேலும் சில உதாரணங்கள் உங்களைப்போன்றோருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும் :)

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா