Tuesday, April 30, 2019

அனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்


ராமனின் தூதுவனாக சீதையை சந்திக்கிறான் அனுமன்..

ஆரம்பத்தில் அனுமனை அவள் நம்பவில்லை.. ஆனால் பிறகு அவனை நம்புகிறாள் . மனம் விட்டு பேசுகிறாள்.. தன் வேதனையை சொல்கிறாள்

அனுமனுக்கும் ஆரம்பத்தில் சீதை மீது நம்பிக்கை இல்லை.. ராவணனுடம் காம்பரமைஸ் ஆகி இருப்பாள் என்றுகூட நினைக்கிறான்

பிறகுதான் ,என்னதான் ராவணன் இருப்பிடத்தில் அவள் இருந்தாலும் அவள் காதல் மாறவில்லை என்பது பிறகுதான் புரிகிறது

இருவரும் நட்புடன் பேசிக்கொள்கிறார்கள்

ஒரு கட்டத்தில் அனுமன் சொல்கிறான்...

“ கவலையை விடுங்கள்....உங்களை அப்படியே தூக்கிச்சென்று ராமனிடம் விட்டு விடுகிறேன்... யாராலும் என்னை தடுக்க முடியாது ‘

சீதைக்கு அதிர்ச்சி... ஏன் இப்படி முட்டாள் மாதிரி பேசுகிறான் என யோசிக்கிறாள்.. அவன் அன்பு அவன் அறிவை மறைக்கிறது என புரிந்து கொள்கிறாள்

அவன் தன்னை தூக்கிச்செல்வதை அவள் விரும்பவில்லை.. ஆனால் அப்படி முகதில் அடித்தாற்போல் சொல்லவும் விரும்பவில்லை

பிறகு எப்படி சொல்கிறாள்

” நீ தூக்கிசெல்லும் ஆற்றல் மிக்கவன் ..அதில் எனக்கு சந்தேகம் இல்லை.. ஆனால் வேகமாக பறக்கும்போது எனக்கு மூச்சு திணறல் ஏற்படலாம்.. அல்லது உய்ரம் காரணமாக எனக்கு மயக்கம் வரலாம்.. அல்லது என் பிடி நழுவி விழுந்து விடலாம்... அல்லது எதிரிகள் உன்னை சூழ்ந்து தாக்கும்போது , என்னதான் நீ வென்றாலும் , அவர்கள் அம்பு என் மீது பட்டு விடலாம்.. இதை எல்லாம் விட இன்னொன்று... ராமன் வந்து காப்பாற்றினால்தான் பெருமை.. இல்லையென்றால் சூழ்ச்சி மூலம் என்னை காப்பாற்றியதன் மூலம் ராவணன் மீது பயம் என்பதை ஒப்புக்கொள்வதாக உலகம் அவன் மீது பழி சொல்லும்.. எனவே உன்னுடன் வரவில்லை “ என்கிறாள்

ஒரு மேனேஜர் உயர் பதவிக்கு ஒரு பெண்ணை நியமித்தார்

உதவியாளனுக்கு சந்தேகம்

- சார்,..இந்த பெண்னை விட கல்வி , அனுபவம் , திறமை மிகுந்த பெண்கள் வந்தார்களே...இவளுக்கு ஏன் பதவி? என்றான்

அவர் சொன்னார்

“ இந்த வேலைக்கு கல்வியை விட கூர்மதி தேவை.. அனுபவம் இதை விட அதிகமாய் இருப்பது தவறு... இன்னொன்று இவள் கை எழுத்து நன்றாக இருக்கிறது... இன்னொரு முக்கியமான காரணம் இவள் ஆங்கில உச்சரிப்பு மற்றவர்களை விட அதிகம்...   இன்னொன்று இவள் படித்த கல்லூரி புகழ்  வாய்ந்தது.. கடைசி காரணம் இவள் என் மனைவியின் தங்கை “

உண்மையில் கடைசி காரணம் மட்டும்தான் உண்மை.. மற்றவை எல்லாம் சால்ஜாப்புதான்//

அந்த பாணியில் பதில் அளிக்கிறாள் சீதை

ராமாயணத்தில் வரும் அழகான இடங்களில் ஒன்று இது


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா