Tuesday, April 2, 2019

ரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திரன்


என்ன படம் எடுக்கிறீர்கள்.. கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லையே என எம் ஜி ஆர் முகத்துக்கு நேராகவே விமர்சித்தவர் இயக்குனர் மகேந்திரன்

சரி.. நீதான் நல்ல படம் எடுத்துக்காட்டு பார்க்கலாம் என அவரை சென்னைக்கு வரவழைத்து சினிமாவுக்கு முயற்சி செய்ய சொன்னார் எம் ஜி ஆர்

அவரும் சென்னை வந்து விட்டார்..

ஒரு நாள் அவருடன் பேசியபோதுதான் , நண்பர்கள் அறையில் தங்குவதையும் அவர்கள் தயவில் சாப்பிடுவதையும் அறிந்தார் எம் ஜி ஆர்

வசதியான பையன் என நினைத்ததால் அவரது செலவுகளைப் பற்றி யோசிக்காமல் வரவழைத்து விட்டோமே என நினைத்த எம் ஜி ஆர் , நான் ஒரு பாவி, நான் ஒரு பாவி என கண்கலங்க தன் தலையில் அடித்துக்கொண்டார். அன்று முதல் மகேந்திரனுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கி வந்தார்

முள்ளும் மலரும் படம் பார்த்த எம் ஜி ஆர் , என்னிடம் சவால் விட்ட மாதிரி நல்ல படம் எடுத்து விட்டீர்கள்.. வார்த்தை வராமல் தவிக்கிறேன்,, பிறர் பாராட்டுகளை படித்தும் கேட்டும் மனம் பூரித்துப்போய் இருக்கிறது.. பிறர் சொல்வது என்ன.. நான் சொல்கிறேன்,,, முள்ளும் மலரும் படம் இந்திய சினிமாவின் ஒரு திருப்பு முனை எனலாம்

கடைசி காட்சியில் ரஜினி சொல்வாரே... இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கல சார்.. ஆனா அவளுக்கு பிடிச்சு இருக்கு.. 

அந்த காட்சியில் எழுந்து நின்று கைதட்டினேன்..

இப்படி மகேந்திரனை வளர்த்து விட்டு ரசித்தவர் எம் ஜி ஆர்

சிவாஜி மட்டும் என்ன,.. மகேந்திரனை கொண்டாடியவர் அவர்

தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மனைவி இறந்து விடுகிறார்.. அந்த காட்சிக்கு வசனம் எழுத வேண்டிய மகேந்திரனை அழைத்தார் சிவாஜி

தம்பி.. இது முக்கியமான காட்சி,, வசனங்கள் அருமையாக இருக்க வேண்டும்.. நன்கு யோசித்து விரிவாக எழுது என்றார்

மகேந்திரனும் யோசித்து எழுதினார்’’

அடுத்த நாள் அவர் காட்டிய பேப்பரை பார்த்த சிவாஜிக்கு அதிர்ச்சி.

என்னப்பா இது ,, பேப்பரில் எதுவுமே இல்லையே? என்றார்

இந்த காட்சிக்கு வசனமே தேவையில்லை சார்.. உங்க முகபாவமும் நடிப்புமே போதும்.. உங்கள் மனைவியை பார்த்ததும் பழைய நினைவுகளால் துடிக்கிறீர்கள்.. கதறுகிறீர்கள்..அதுபோதும் என்றார் மகேந்திரன்’

புதியவன் என நினைக்காமல் அவர் சொன்னதை மதித்து ஏற்றார் நடிகர் திலகம்.. அந்த காட்சி வெகு சிறப்பாக அமைந்தது


ரஜினியை தன் இரண்டாம் தாய் என குறிப்பிடுபவர் மகேந்திரன்.. மகேந்திரன் தன்னை தனக்கே அடையாளம் காட்டியவர் என்பவர் ரஜினி

என்னப்பா..உனக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் என சொல்லி இருக்கிறாயே..என்னை எல்லாம் பிடிக்காதா என பாலச்சந்தரே விளையாட்டாக கேட்கும் அளவுக்கு மகேந்திரனை போற்றியவர் ரஜினி

 நானெல்லாம் மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மகேந்திரன் குறித்து பேசுபவன் ,, எழுதுபவன்

ஓர் உதாரணம்.. மகேந்திரன் பழைய பதிவு


அந்த வகையில் மகேந்திரன் மறைவு பெரிய துக்கம் ..

ஆனாலும் பேட்ட எனும் மெகா ஹிட படத்தில் நடித்து தன் நண்பனின் பெரிய வெற்றியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார் என்பதில் சின்ன ஆறுதல்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா