Thursday, April 25, 2019

சிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ? - மகேந்திரன்


இயக்குனர் மகேந்துரனும் சிவாஜியும்


தங்க பதக்கம் படத்துகு நான் வசனம்..  சிவாஜியின் மனைவி இறந்ததை அறிந்து அவர் எதிர்வினைக்கேற்ப வசனம் எழுத வேண்டும்

இதற்காக ஒரு நாற்பது பக்க நோட்டு தேவைப்படும் என நினைத்தார்கள்.. நானோ ஒரே ஒரு வரி எழுதி கொடுத்தேன் ..அனைவருக்கும் அதிர்ச்சி

நான் விளக்கினேன்

சார்.. உங்க நடிப்புக்கேற்ற காட்சி இது.. வசனம் அதை கெடுக்கலாகாது.. மவுனமாக பார்க்கிறீர்கள்.. பழைய சம்பவங்கள் மனதில் விரிகிறது... உங்கள் உணர்வுகளை முகபாவத்திலும் உடல் மொழியிலும் காட்டுகிறீர்கள்.. வசனம் வேண்டாம்

இப்படி சொன்னதும் சிவாஜி உற்சாகமாகி விட்டார்.. அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு பிரமாதமாக நடித்தார்

ஒரு மகா கலைஞன் அப்போது புதியவனான என் பேச்சுக்கு மதிப்பளித்தது என் வாழ்வின் பொன்னான தருணங்களில் ஒன்று

பிறகு ஒரு நாள் கேட்டேன்

இவ்வளவு இயல்பாக நடிக்கும் உங்களை ஓவர் ஆக்ட் செய்வதாக சொல்கிறார்களே என்றேன்

அவர் சிரித்தார்

வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தின் புகழ்பெற்ற காட்சியான வானம் பொழிகிறது வசனத்தை இயல்பான தொனியில் பேசினார்

அசந்து போனேன்

இதை நீ ரசிக்கலாம்... ஆனால் அன்றைய கால கட்டம் அப்போதுதான் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு நகர்ந்து கொண்டு இருந்த்து.. அதற்கேற்ப சற்று நாடக பாணியில் நடித்தேன்

என் கையில் ஒரு பென்சில் கொடுத்தால் அதற்கேற்ப எழுதுவேன்,, பேனா கொடுத்தால் வேறு பாணி
அதுபோல காலத்துக்கு ஏற்ப கதைக்கேற்ப என் நடிப்பு பாணி அமைகிறது என்றார் அந்த மேதை

--

நானும் சினிமாவும்  - மகேந்திரன்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா