Thursday, April 11, 2019

பெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்



ஒருவரை எப்படி அழைக்கிறோம் என்பதில் அவர் மீதான நம் பார்வை தெரியும்

உதாரணமாக ரஜினி இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்

ஒரு முறை ஒரு பாடலை எழுத கவிஞரை அழைத்து வா என்றார் இளையராஜா

கவிஞர்னு சொன்னா எப்படி.. எந்த கவிஞர்னு சொல்லுங்கய்யா என கேட்டார் உதவியாளர்

யோவ் கவிஞர்னு நான் சொன்னா அது கண்ணதாசனைத்தான் குறிக்கும் என்றார் ராஜா..

கண்ணதாசன் எம் ஜி ஆரை ஆண்டவனே என அழைப்பார்... எம் ஜி ஆரும் இவரை ஆண்டவனே என்றுதான் அழைப்பார்

கண்ணதாசன் அண்ணாவின் மீதான அன்பு காரணமாக தன் மகனுக்கு அண்ணாதுரை என பெயரிட்டார்

ஒரு முறை அண்ணா கவிஞர் இல்லம் வந்து பேசிக்கொண்டு இருந்தார்


அப்போது சிறுவன் அண்ணாதுரை அழுது அடம்பிடித்துக்கொண்டு இருந்தார்

“ டேய் அண்ணாதுரை,,,பேசாம இருக்கியா. இல்லை அடிவாங்கப்போறியா என சத்தம் போட்டார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , என்னை திட்டுவதற்கு நல்ல வழியை கண்டு பிடித்து இருக்கிறாயே..  என்றார்

அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. என பதறினார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன என்றார் ..

ஆனாலும் அன்று முதல் தன் பையனை துரை என அழைக்கலானார் கவிஞர்... ஒரு போதும் அண்ணாதுரை என அழைக்கவில்லை

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா