Friday, April 5, 2019

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா? பிரார்த்தனை குறித்து சாய்பாபா


புட்டபர்த்தி சாய் பாபா என்றால் , சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்த்தது ,,  அவர் செய்யும் மந்திர ஜாலங்கள் போன்றவைதான் பலர் நினைவுக்கு வரும்.. ஆனால் வெளி நாட்டினர் அவருடன் ஆழமான விவாதங்கள் நிகழ்த்தியுள்ளனர்

-------------------------


ஒருவரின் கர்மா ஒத்துழைத்தால்தான் அவரது பிரார்த்தனை ஏற்கப்படுமா?

பாபா- இல்லை... ஒருவரது இதயம் , சிரத்தை ஆகியவற்றை பொருத்து கர்மாவையும் மீறி இறையருள் வேலை செய்யும்

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்.. எனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா... அவரிடம் ஏன் பிரார்த்திக்க வேண்டும்?

பிரார்த்தனை என்பது ஒரு ஆன்மிக பயிற்சியாகும்.. எல்லாம் உன் செயல்... நீ பார்த்து எனக்கு நல்லது செய் என கேட்குமபோது ஈகோ அழிகிறது,,, இதயத்தில் அன்பு மலர்கிறது... கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் நீ கேட்க வேண்டும் என்பது உன் நல்லதற்காகத்தான்... உதாரணமாக குழந்தை சின்ன வயதில் வாய் விட்டு அழுவது ஒரு வகை உடற்பயிற்சிதான்... ஒரு தாய்க்கு குழந்தையின் பசி தெரியாது என்பதல்ல்... ஆனால் அழுதவுடன் பால் கொடுப்பதுதான் நல்லது

பிரார்த்தனை என்பது ஒரு வகையில் பிச்சை எடுப்பது போல தோன்றுகிறதே?

இல்லவே இல்லை... உன்னை விட பெரிய மகான்கள் , இறைசக்தியுடன் நீ நடத்தும் உரையாடல்தான் , பிரார்த்தனை என்பது... பெரியவர்களுடன் உரையாடுகையில் நீயும் அவர்கள் அளவுக்கு உயர்கிறாய்...  இன்னொரு வகையில் பார்த்தால்  , கடவுளிடம் உனக்கு வேண்டியதை கேட்கும் முழு உரிமை உனக்கு இருக்கிறது.... உன் உரிமையைத்தான் நீ கேட்கிறாய்


எனக்கு எந்த தேவையும் இல்லாதபோது என்னவென பிரார்த்திப்பது?

மன அமைதி வேண்டும் என்று கேள்

மன அமைதி என்பது என்ன?

உண்மையில் மனம் என ஒன்றும் இல்லை... வெயிலின் இயல்பு சுடுவது , பனியின் இயல்பு குளிர்வது என்பது போல மனதின் இயல்பு என்பது அலைவது... அலையாத அமைதியான மனம் என பேச்சு வழக்கில் சொல்கிறோம்... உண்மையில் மனம் அழிவது என்பதுதான் விரும்பத்தக்கது




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா