Monday, December 5, 2011

எல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்

உலகம் கெட்டு போய் விட்டது என அங்கலாய்க்கிறோம். சுய நலமற்ற தலைவர்கள் இல்லையே என ஏங்குகிறோம். ஆனால் எத்தனையோ நல்ல தலைவர்களை மறந்து வருகிறோம்..

அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்த்தான் “ கான் அப்துல் கஃபார் கான் “

அவன் இறந்த போது நான் சின்ன பையன். ரேடியோவில் அவர் மரண செய்தியைக் கேட்டு பெரியவர்கள் சோகமாக பேசிக்கொண்டதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தது நினைவு இருக்கிறது. இன்று யோசித்து பார்த்தால் வெளினாட்டை சேர்ந்த  இங்கும் பிரபலமாக இருந்து இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

1890 ல் ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார்.  நன்றாக படித்த அவர் வெளி நாடு சென்று படிக்க விரும்பினார் , ஆனால் இயலாமல் போய் விட்டது.


அதன் பின்  திருமணம் , மக்கள் சேவை , அவர் சார்ந்த பஷ்தூன் மக்களின் முன்னேற்றம் என அவர் வாழ்க்கை சென்றது.


உண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தார் அவர். 


பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராட கடவுளின் சேவகர்கள் என்ற இயக்கத்தை தொடங்கினார். மாபெரும் மக்கள் இயக்கமாக அது திகழ்ந்தது


நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது 


என்பது அந்த இயக்க உறுப்பினர்களுக்கு அவர் வழங்கிய செய்தி. சத்தியாகிரக வழியில் அவர் இயக்கம் செயல்பட்டது.


இந்திய பிரிவினைக்கு எதிராக அவர் இருந்தார். பிரிவினை கோரிய ஜின்னாவின் இயக்கத்தை மீறி அவர் சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று இருந்தார்.


1945 பொதுத் தேர்தலில் கபார்கான் கீழான காங்கிரஸ் , வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீகை தோற்கடித்து பெரும்பான்மை பந்திரி சபையை அமைத்தது..


அவர் நினைத்து இருந்தால் , அகில இந்திய காங்கிரசுக்கு கூட தலைவர் ஆகி இருக்கக் கூடும் . ஆனால் அவர் விரும்பவில்லை. 


காந்தியின் முடிவுகளை காங்கிரசில் சிலர் ஏற்காதபோதுகூட , இவர் காந்திக்கு உறுதுணையாக இருந்தார்.


எல்லை காந்தி என பாசத்துடன் இவருக்கு பிரிட்டிஷ் அரசி, காங்கிரஸ் இயக்கம் , முஸ்லீம் லீக என அனைவரும் ஏமாற்றத்தையே வழங்கினர்.


 இவர் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை. அப்படியே பிரிந்தால் தான் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனியாக பிரித்து பஷ்தூனிஸ்தான்
என்ற நாடு வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.


ஆனால் காந்தியோ, நேருவோ இவர் கோரிக்கைகளை சரியான முறையில் பிரிட்டிஷாரிடம் எடுத்து சொல்லவில்லை.


எனவே இந்தியாவில் பிரிய விருப்பமா இல்லையா என்பதை மட்டும் முக்கிய கேள்வியாக்கினர் பிரிட்டிஷார். எல்லை காந்தியின் தனி நாட்டுக்குள் தனி நாடு என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்பட்டவே இல்லை.


இதன் விளைவாக பிரிவினை ஓட்டெடுப்பில் தம் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் என சொல்லி விட்டார்.  இப்படி செய்த்தன் மூலம் அந்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார். 


சொந்த இன மக்களாலேயே தாக்கப்பட்ட்ட அவலமும் நடந்தது..


அதன் பின் பாகிஸ்தான் அரசு ஏற்பட்டு, இவர் கட்சி ஆட்சி நட்ந்த மகாணத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது..


எங்களை கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என காந்தியிடம் வேதனையிடம் முறையிட்டார். 


ஜின்னா அர்சு இவரை காரணமே இல்லாமல் சிறையில் வைத்தது. வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கழித்த இவர் 1988ல் வீட்டு சிறையில் , பெஷாவரில் மரணமடைந்தார்.


அவர் விருப்பப்படி, ஆஃப்கானிஸ்தானில் , அவர் பிறந்த ஊரில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அப்போது ஆஃப்கனில் போர் நிறுத்தம் செய்ப்பட்டது. ( அந்த நேரத்தில் கடும் போர் அங்கு நடந்து வந்தது )


அவர் விருப்பப்படி தனி நாடு வாங்கி கொடுத்து இருந்தாலோ, அவர் செல்வாக்கு உட்பட்ட பகுதியை இந்தியாவுடன் சேர்த்து இருந்தாலோ , உலக வர்லாறு வேறு மாதிரி இருந்திருக்க கூடும். அதை செய்ய த்வறியது காங்கிரஸ். 


*****************************************



  • அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவை சேராத ஒருவர் இதை பெறுவது அதுவே முதல் முறை
  • நோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
  • அவர் மகன் அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.





9 comments:

  1. “எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 1.
    எல்லைக் காவல் தனியொருவன்.

    எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான் ,சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான காந்தியர்களில் ஒருவர்

    இந்தியக்குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா?? (1987)
    கான் அப்துல் கஃபார் கான்.

    ராமகிருஷ்ணரை போன்ற முக அமைப்பும், தாடியும் கொண்ட மனிதர். எல்லை காந்தி என்ற பெயரை எடுத்தவர். பாஷ்டுன் இனத் தலைவர்.

    ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

    பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

    1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான கான் அப்துல் கஃபார்கான் தான்.

    ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

    இளமைக் காலம் :-

    1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார்.

    நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

    பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது.

    அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

    அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார்.

    ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

    பாட்சா கான் ஆதல்..
    தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது.

    இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை.

    இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார்.

    அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர்.

    1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை “பாட்ஷாகான்” என அழைக்கப்பட வைத்தது.

    திருமணமும் குழந்தைகளும்
    முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர்.

    இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

    குதாய்கித்மத்கர்.

    காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

    தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார்.

    கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார்.

    அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..
    “நான் உங்களுக்கு தரப்போகும் ஆயுதத்திற்கு எதிராக காவல்துறையும் இராணுவமும் எதுவுமே செய்ய இயலாது.

    இது இறைதூதரின் ஆயுதம், ஆனால் உங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை.

    சகிப்புத்தன்மையும் அற உணர்வுமே அவ்வாயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதை எதிர்த்து நிற்க முடியாது.”


    இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது,

    CONTINUED…..

    ReplyDelete
  2. “எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 2.

    பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது.

    அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார்.

    பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.

    இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-
    தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான்.

    அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது.

    இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.

    ஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார்.

    அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர்.

    மிதவாத அகிம்சா வழிகளைப் பற்றி ஆராய்சி செய்த ஜீன் ஷார்ப் இந்நிகழ்வைப் பற்றி இவ்வாறு எழுதினார்:

    “முன்வரிசையில் இருந்தவர்கள் குண்டு பாய்ந்து சரிந்து விழுகிறார்கள். பின்னால் நிற்பவர்கள் வெற்று மார்புடன் முன்னால் வந்து நின்று துப்பாக்கி சூடுக்கு தயாராக நிற்கிறார்கள்.

    சிலர் மார்பில் 21 குண்டுகள் துளைத்தெடுக்கிற அளவுக்கு தாக்குதல் நடக்கிறது. கண்முன் சரிந்து விழுவதைக் கண்டும் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்களே தவிர யாரும் பயந்து ஓடவில்லை.

    அரசு சார்பான லாகூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பத்திரிகையே, ‘ மக்கள் ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி சூட்டின்போது வரிசையாக வந்து நின்றார்கள்.

    சரிந்து விழுந்தவர்களை இழுத்துப் போட்ட பின் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்.

    இப்படி பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடந்தது.

    சடலங்கள் குவிந்த பிறகு அரசாங்கத்தின் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து அவற்றை அள்ளிச் சென்றன’ “

    (மொழிப்பெயர்ப்பு: கல்பனா சோழன், திண்ணை)

    இந்திய படையினரில் ஒரு சாரார் இனி சுட மாட்டோம் என மறுத்த பிறகே இவ்வன்முறை நின்றது. உத்தரவை மீறியமைக்காக இவ்வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

    கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார்.

    வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

    அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார்.

    காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

    தேசப்பிரிவினை:-
    தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத் தடுத்துவிட முனைந்தார்.

    -இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்த கான், இந்தியப்பிரிவினையை வன்மையாக எதிர்த்தார்.

    இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவதை அவர் வன்மையாக கண்டித்தார்.

    பாகிஸ்தான் உருவானதும், பாஷ்தூன்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

    இந்நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு கித்மத்கர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கியது. இவ்வமைப்பு தடைசெய்யப்பட்டு, கான் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலடைக்கப்பட்டார்.

    இவரது செயல்கள் தேச விரோதமானவை என பாகிஸ்தான் கருதிய காரணத்தாலேயே இவரது வரலாறு பாகிஸ்தான் அரசினால் ம(றை)றக்கப்பட்டது.

    கான், காந்தி அளவிற்கு அதிகம் எழுதியதில்லை. இவை காரணமாக காந்தி அளவிற்கு கானின் பெயர் அதிகம் பிரபலம் அடையவில்லை.

    கான் அப்துல் கஃபார் கான், 1988ல் தனது 98வது வயதில் பெஷாவரில் உயிர்நீத்தார்.

    காந்தி,மார்ட்டின் லூத்தர் கிங் வரிசையில் அகிம்சை போரட்ட முறையின் நடைமுறை பயன்பாட்டையும் திரனையும் எடுத்துக்காட்டிய 20ஆம் நூற்றாண்டு தலைவர்களும் மிக முக்கியமானவர் கான் அப்துல் கஃபார் கான்.

    CONTINUED......

    ReplyDelete
  3. “எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 3.

    அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது.

    அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா.

    தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார்.

    காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும்.

    எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

    உதவி:
    http://en.wikipedia.org/wiki/Khudai_Khidmatgar

    http://en.wikipedia.org/wiki/Khan_Abdul_Ghaffar_Khan

    http://progressive.org/mag_amitpalabdul

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20202171&edition_id=20020217&format=html

    ReplyDelete
  4. எல்லை காந்தியை மேலும் அறியத்தந்த,
    ஞாபகமூட்டிய தோழருக்கும், வா.அப்பாவுக்கும்
    நன்றிகள் பல‌

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.பார்வையாளன்,
    //அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.//
    ஒரு பாக்கிஸ்தானிக்குப்போய் பாரதரத்னாவா..?
    அதுவும் எந்த எதிர்ப்புகளும் இன்றியா..?
    ...என்ற கேள்விகளுக்கெல்லாம் மிக்க நல்லதொரு தெளிவான பதில் கிடைக்கக்கூடிய சிறந்த பதிவு, நன்றி சகோ.

    ReplyDelete
  6. எல்லைகாந்தி பற்றி அதிகமான விஷயங்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    வாஞ்சூர் அப்பாவிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. நான் அறியாத தகவல்.. எல்லை காந்தி கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அவரை பற்றி இன்றுதான் படிக்கிறேன்.. இப்படி எத்தனை தியாகிகள் மறக்கப்பட்டார்களோ??

    ReplyDelete
  8. எத்தனையோ தமிழர்களின் பண்கும்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டது!அதையும் எழுதுங்கோ!இஸ்லாமியர் என்பதற்காக ஜால்ரா அடிககதே!

    ReplyDelete
  9. இந்து மதம் பற்றி எழுது!ஹிந்து மதத்தை கேவலபடுத்தவும் இஸ்லாமை தூக்கி பிடிக்கவும் ஆயிரம் தளங்கள் உள்ளன!ஹிந்து மதத்தின் பெருமையை எழுதலாமே?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா