Tuesday, December 27, 2011

சோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை

டிசம்பர் என்றால் நம் நினைவுகளில் பல விஷயங்கள் எட்டிப் பார்க்கும். அதில் நல்லவையும் இருக்கலாம் கெட்டவையும் இருக்கலாம்.
ஆனால் உலக அளவில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு டிசம்பரில் நடந்தது. அதன் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுதுமாக வெளிவரவில்லை.

12.12.1991  . இந்த நாளில்தான் பலரின் உயிர் தியாகத்தால் , பலரின் முயற்சியால் உருவான லட்சிய நாடான சோவியத் யூனியன் தன் மூச்சை நிறுத்தி கொண்டது.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், சோவியத் யூனியன் வீழ்ச்சி குறைத்து தவறான கருத்துகளே இன்று மக்கள் மனதில் இருக்கின்றன.

கம்யூனிச கொடுங்கோலாட்சி பிடிக்காமல் , மக்கள் புரட்சி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினார்கள் என நினைக்கிறோம். இது தவ்று.

சோவியத் யூனியனில் நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிந்து செல்ல விரும்பிகிறீர்களாக என்ற கருத்து கணிப்பில் , பெரும்பாலான மக்கள் ( 76 சதவிகிதத்தினர் ) சோவியத் யூனியனில் நீடிப்பதையே விரும்பினார்கள். ஆனால் சில ஆட்சி மாற்றங்கள் , பொருளாதார மாற்றங்களை விரும்பினார்கள்.  கடும் பொருளாதார நெருக்கடி, உணவு பஞ்சம் , நிர்வாக குளறுபடிகள் நிலவியபோதும் பிரிந்து செல்வதற்கு எதிராக அவர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிரிவினைக்கான போராட்டங்களும் ஆங்காங்கு நடந்தன. சில குடியரசுகள் பிரிவதாக அறிவித்தன. இந்த நிலையில், அதிகார பகிர்வுக்கு வழி செய்யும் ஒப்பந்தம் கை எழுத்தாக இருந்தது. இதன் படி, மிக சொற்பமான அதிகாரங்கள் மட்டுமே கொண்ட சோவியத் தலைமையின் கீழ் அதிக அதிகாரங்கள் கொண்ட குடிய்ரசுகள் , ஒரே நாடாக நீடிக்கும்.

ஆனால் மக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல், மூன்றே மனிதர்கள் ( ரஷ்ய அதிபர் எல்ட்சின் , யுக்ரேன் அதிபர், பெலோரஸ் அதிபர் ) தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒரு கையெழுத்து போட்டு , சோவியத் யூனியனை முடித்து வைத்தனர். சோவியத் யூனியம் அதிபராக இருந்த கார்ப்பசேவ் கையாலாகாத நிலையில் இதை பார்த்து கொண்டு இருந்தார்.

இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.


  • சோவியத் யூனியனை ஒழித்து கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாகவே வெளி நாடுகள் சதி செய்து வந்தன
  • செயற்கையான உணவு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. 
  • கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பில் இருந்த ஊடக துறை கை மாறி சென்றது. எனவே அரசுக்கு ஆதரவான செய்திகள் மக்களிடம் போய் சேரவில்லை

அப்படி என்றால் இந்த மூவர் செய்த சதிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு ஏன் ஏற்படவில்லை?

1991ல் கோர்ப்பசேவ் ஆட்சியை கவிழ்க்க ஒரு முயற்சி நடந்தது. அந்த ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில் முடிந்ததும், உடனடியாக சோவியத் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படனர், சிலர் கைது செய்யப்பட்டனர். என்வே ஆதரவாளர்கள் குரல் அமுக்கப்பட்டு விட்டது.

அப்ப்டி இருந்தும் , பிரிவினைக்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. எனவே காமன்வெல்த் ஆஃப் இண்டிபெண்டட் ஸ்டேட்ஸ் என்ற கூட்டமைப்பின் கீழ் நாம் ஒன்றாகவே இருப்போம் என சொல்லி ஏமாற்றினார்கள்.

சோவியத் யூனியன் என்ற அமைப்பு தொடர்ந்து இருந்தால், தற்காலிக சோதனைகளில் இருந்து மீண்டு என்று வலிமை பெற்ற நாடாக இருந்திருக்கும் என்றே அங்கு தற்போது நினைக்கிறார்கள்

சோவியத் யூனியனின் மறைவு என்பது இயற்கையாக நிகழ்ந்தது அன்று. சில சுய நலவாதிகள் செய்த படுகொலை என்பதே அங்கு தற்போது நிலவும் கருத்து.







No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா