Tuesday, December 6, 2011

எக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்தக விழாவில் மதன் புகழாரம்

ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இலக்கிய உலக இதயக்கனி சாருவின் எக்சைல்  நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

எந்த ஒரு அமைப்பின் உதவியும் இல்லாமல் , முழுக்க முழுக்க சாரு வாசகர் வட்டத்தினால் நடத்தப்பட்ட விழா என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வாசகர் வட்டத்தினர் பம்பரமாக சுழ்ன்று வேலை பார்த்தனர். பார்க்கிங்கில் பைக் நிறுத்த இடம் இல்லாதபடி , திரளான மக்கள் விழாவிற்கு வந்து இருந்தனர்.

வழக்கமான மேடைபோல இல்லாமல் , மேடையில் மிக குறைவான பேச்சாளர்களே இருந்தனர்.

வாலிப கவிஞர் வாலி, இலக்கிய உலக பிதாமகன் இ பா மற்றும் அல்ட்டிமெட் ரைட்டர் .. மூன்றே பேர்தான் மேடையில்..

விழா அரங்கம் உற்சாகம் கொண்ட ரசிகர்களாலும் , மதன், ஞானி போன்ற அறிவார்ந்த பிரமுகர்களாலும் நிரம்பி இருந்தது.

விழாவை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது ஆர்வத்தை கிளப்பி இருந்தது.
ஒரு முக்கியமான நபர் விழாவை தொகுத்து வழங்கினார்.

ஆம், சாருதான் விழாவை தொகுத்து வழங்கினார்.

தன்க்கு பேச நேரம் கிடைப்பதில்லை என்பதால் இந்த பணியை ஏற்று தன் கருத்துக்களை சொல்லப்போவதாக சொன்னார்.

வாசகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்..

வாலி பேசுகையில்..

சிலர் தேவையில்லாமல் சாருவை வசை பாடுகிறார்கள்.. யார் அதிகமாக விமர்சிக்கப்படுகிறானோ அவன் அறிவாளியாகத்தான் இருக்க முடியும். மண் புழுவையும் , மரவட்டையயும் யாரும் மதிப்பதில்லை. நல்ல பாம்பைத்தான் மதிப்பார்கள். அந்த வகையில் சாரு புறக்கணிக்க முடியாதவர்.

அவர் புத்தகங்களை சமீப காலங்களத்தான் படிக்கிறேன்.

இந்த நாவல் மிக அருமையாக இருக்கிறது. நான் எழுதுவது நேக்ட் ட்ரூத் என்றால் சாரு எழுதுவது ப்ரூட்டல் ட்ரூத்,

உண்மையாக எழுதுகிறார். அருமையான நடை. சென்சார் செய்யப்படாத சினிமா பார்ப்பது போல இருக்கிறது. காமம் , காதல் இல்லாமல் மனிதன் இல்லை.. வலம்புரிஜான் ஒரு முறை சொன்னார். காமம் என்பது மூக்கு என்றால் காதல் என்பது மூக்குத்தி.

 நாவலைப் பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என சிலர் நினைக்கலாம். எனக்கு நாவல், சிறுகதைகள் பற்றி நன்கு தெரியும் . நான் சிறுகதை எழுத்தாளகத்தான் இலக்கிய உலகுக்கு வந்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்..

இ பா பேசுகையில்,  செக்ஸ் எனப்து ஆபாசம் இல்லை. நம் இந்திய கலாச்சாரத்தில் இதை  வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். ஆங்கிலேயர் பாதிப்ப்பில்தான் செக்ஸ் என்பது பாவகரமானது என்ற எண்ணம் தோன்றியது.

அந்த கால பள்ளிக்கூட புத்தகங்களில்., சில தமிழ் செய்யுள்களின் சில வரிகள் மறைக்க்கப்பட்டு இருக்கும், என்ன என்று பார்த்தால் முலை என வரும் இடங்களை புள்ளி வைத்து அழித்து இருப்பார்கள்.
இப்படி அழிப்பதால்தான், மாணவர்களுக்கு அது என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டு ஆராய்வார்கள்.

இன்று இது மாறி இருக்கிறது என நினைக்கிறேன்

இந்த் நாவலில் சாரு முக்கியமான இடங்களை தொட்டு இருக்கிறார்.

நானும் வாலியும் ராமாயணம் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். ராவனன் எத்தனையோ பெண்களுடன் பழகி இருக்கிறான். அவன் காதலில் விழுந்தது சீதையுடன் மட்டுமே..அந்த காதல் அவன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அதே போல, இந்த நாவலின் கதானாயகன் வீழ்ச்சிக்கும் காதல் காரணமாகிறது
இந்த நாவல் சாஃப்ட் போர்னோவா என சிலர் கேட்டார்கள். இது ஹார்ட் போர்னோ. செக்சை வெறுப்பவர்கள் இதை படிக்க வேண்டாம். ஹார்ட் அட்டாக் வந்து விடக்கூடும்


இவ்வாறு பேசினார்..

மதன் பார்வையாளராகத்தான் வந்து இருந்தார். சாருவின் வேண்டுகோளுக்கு இணங்கி பேசினார்.

நான் சர்வதேச புத்தகங்கள் படித்து இருக்கிறேன். அந்த வகையில் சொல்கிறேன். இது சர்வதேச தரமிக்க நாவல். இது சாருவின் கிரேட் அசீவ்மெண்ட்.  புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். நிறுத்த முடியவில்லை. சிறுனீர் கழிக்க கூட எழ மனமில்லாமல் படித்தேன்.

கடைசியாக சாரு பேசினார்.

வாசகர்களின் பெயர்களை நினைவு வைத்து இருந்து குறிப்பிட்டார். சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அன்றாட செயல்களில் ஒழுங்காக இல்லாமல் , உயர்ந்த விஷயங்களைப்பற்றி பேசுவது வீண் வேலை என்பதில்தான் , விழா ஆரம்பத்தில் பேச்சை அரம்பித்தார். அதே டாபிக்கில்தான் பேச்சை முடித்தார்..

சினிம பாடல், கோட் சூட் ஆடை என மரபான விஷ்யங்களில் இருந்து விலகியது ஏன் விளக்கம் அளித்தார்.

மொத்ததில் ஜாலியான மன நிலையில் நடந்த அறிவு பூர்வமான நிகழ்ச்சி இது.

*************************


சாரு பேச்சு குறித்த விபரங்கள், எக்ஸ்க்ளூசிவ் படங்கள் - அடுத்த இடுகையில்

6 comments:

  1. டேய் போடா .. போயி புள்ள குட்டிகள படிக்க வையு !!

    ஆயி மாதிரி இருக்கு நாவல் , மதன் சார் ரொம்ப decent !! மேடை ஏறிடோமே நு நாலு வார்த்தை நல்லதா பேசிருபார். ! அது புரியாம ....

    - Balaji

    ReplyDelete
  2. Will these people buy and give these kind of ஹார்ட் போர்னோ books to their children to read ?

    ReplyDelete
  3. Will these people buy and give these kind of ஹார்ட் போர்னோ books to their children to read ?"

    This novel is not for children

    ReplyDelete
  4. To Annamalai - Sir afer having childern will you stop having sex ?? as you cannot discuss it with your children

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா