Sunday, October 6, 2013

அபூர்வமான நூறு திரைப்படங்கள் இலவசமாக -சென்னையில் சினிமா விருந்து


  நான் ஆரம்ப காலத்தில் வேலை செய்த நிறுவனத்தில் , இயந்திரவியல் துறையில்  தரக்கட்டுப்பாடு பிரிவில் இருந்தேன்.. சம்பந்தம் இல்லாத துறைகளில் தலையிடுவது , ஆர்வக்கோளாறு காரணமாக புதிதாக ஏதாவது முயன்று உள்ளதையும் கெடுப்பது என எதையாவது செய்து சீனியரை டென்ஷன் ஆக்குவது என் இயல்பு.

அவர் காச் மூச் என கத்துவார். “ ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க..உங்க படிப்புக்கு மதிப்பு கொடுக்குறேன்.. அதை கெடுத்துக்காதீங்க “ என சத்தம் போடுவார்.

அந்த டென்ஷனான நிலையிலும் என் படிப்பை சிலாகிப்பது ஒரு கெத்தாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லோரும் படித்தவர்கள்தான் என்றாலும், எக்ஸ்ட்ராவாக படிக்கிறோம் அல்லவா.. அதற்கு என ஒரு மதிப்பு உண்டு.   இசை , ஓவியம் போன்ற கலைகள் தெரிந்து இருந்தால் , கண்டிப்பாக அதற்கும் ஒரு மதிப்பு உண்டு.

வாசித்தல் நம் புரிதலை , மொழி ஆளுமையை , வாழ்க்கை குறித்த புரிதலை கண்டிப்பாக உயர்த்துகிறது.

ஆனால் அந்த படிப்பு எதை கற்றுதருகிறதோ , அதை விட அதிகமாகவே நல்ல சினிமாக்கள் நமக்கு கற்றுத்தர முடியும். வாழ்க்கையைப்பற்றி , மனிதர்களைப்பற்றி , மரணத்தைப் பற்றி , நல்ல சிந்தனைகள் பற்றி புத்தகங்களை விட அதிகமாக சினிமா நமக்கு கற்றுத்தர முடியும்.
ஆனால்  நம் ஊரைப் பொருத்தவரை சினிமா என்பது வெறும் கேளிக்கையாகவே கருதப்படுவதால் , வெற்று கேளிக்கை படங்கள் மட்டுமே வருகின்றன.

ஓவியம் , இசை , சிற்பம் போல சினிமாவுக்கு கலை அந்தஸ்து  கிடைக்கவே இல்லை.
சினிமா துறையில் இருப்பவர்கள் அதை பணம் செய்யும் மெஷினாக நினைக்கிறார்களே தவிர , அதில் இருப்பது குறித்து பெருமிதம் ஏதும் இல்லை. சினிமா பார்ப்பவர்களும் ஒரு கலையனுபவம் பெறும் ஆர்வத்தில் இருப்பது இல்லை.

ஆனால் நல்ல வேளையாக எல்லோரும் இப்படி இருப்பதில்லை. சினிமாவை ஒரு கலைப்படைப்பாக எண்ணி தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.. அவற்றை தேடி தேடி ரசிப்பவர்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

 நல்ல படம் எடுக்கத்தயார் , பார்க்க ஆளில்லை என வருத்தப்படும் கலைஞர்கள் ஒரு புறம். நல்ல படம் பார்க்க நாங்கள் தயார்.. ஆனால் நல்ல படங்கள் வருவதில்லையே என வருத்தப்படும் ரசிகர்கள் ஒரு புறம்.

டிமாண்ட் அண்ட் சப்ளையில் ஓர் இடைவெளி.

இப்படி ஒரு சூழலில் , நல்ல ரசிகர்களுக்கு ஓர் அற்புத விருந்தாக , தமிழ் ஸ்டுடீயோ அமைப்பு சார்பில் , இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக , தினமும் ஒரு சினிமா வீதம் , நூறு படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

திரையிடப்பட இருக்கும் ஒவ்வொரு படமும் மிக மிக முக்கியமான படங்களாகும்.
இதற்கான தொடக்க விழா 5.10.2013 சனிக்கிழமை நடந்தது.

திரை உலக அறிஞர்களான  அம்ஷன் குமார் , அறந்தை மணியன் , ஆர் ஆர் சீனிவாசன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இப்படி ஒரு நிகழ்வில் , சிலர் அமர இடம் இன்றி நின்று கொண்டு கலந்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது..

இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திரா திரையிடப்பட்டது. அது குறித்து , சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.

நாடக உலகம் ஃபேமசாக இருந்த அந்த கால கட்டத்தில் சினிமா என ஒன்று எடுக்கப்பட முடியும் என்பதையே பலர் நம்பவில்லையாம். பால்கே இதற்காக எவ்வளவோ முயன்றும் யாரும் படம் எடுக்க நிதி உதவி செய்ய முன் வரவில்லை.

திரைப்படம் என்றால் என்ன என டெமோ கொடுக்க முடிவு செய்த அவர் , தன் தோட்டத்தில் விதை ஒன்று நட்டு அதை படமாக்கினார். அது வளரத்தொடங்கும் ஒவ்வோரு ஸ்டேஜையும் படம் ஆக்கி. அது செடியாகி கொடியாகி படரும் வரை பொறுமையாக ஒவ்வொரு காட்சியாக எடுத்தார். அதை மொத்தமாக திரையிட்டு காட்டியபோது, அனைவரும் அதிசயித்துபோனார்கள். பிறகு ஒருவர் படம் தயாரிக்க நிதி அளித்தார்.

 நிதி கிடைத்ததே தவிர நடிக்க ஆள் கிடைக்கவில்லை..குறிப்பாக பெண் வேடத்தில் நடிக்க யாரும் வரவில்லை. ரெட் லைட் பெண்களை அணுகினாராம். என்ன வேண்டுமானாலும் செய்வோம் , சினிமா மட்டும் முடியாது என்று சொல்லி விட்டார்களாம்.

அதன் பின் கஷ்டப்பட்டு , நஷ்டப்பட்டு ஆண்கள் சிலர் கைகாலில் விழுந்து பெண் வேடம் போட்டு நடிக்க வைத்தார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்தாலும், தான் செய்வதன் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்து இருக்கிறது.. தான் வரலாறு ஒன்றை படைக்கிறோம் என்ற பிரஞ்ஞை அவருக்கு இருந்து இருக்கிறது.

அதனால் தான் படம் எடுப்பதை ஒரு டாக்குமெண்ட்ரியாக அந்த காலத்திலேயே பதிவு செய்து இருக்கிறார், அது இன்று ஒரு வரலாற்று ஆவணமாக திகழ்கிறது.


அந்த படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து த கிரேட் டிரெய்ன் ராபரி படம் திரையிடப்பட்டது.

மவுனப்பட யுகத்தில் நாமெல்லாம் இருந்திருக்க மாட்டோம். ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து , பெரிய திரையில் மவுனப்படம் பார்த்தது கால இயந்திரத்தில் அந்த காலத்துக்கே சென்றது போல் இருந்தது..
அந்த காலத்தில் மவுனப்படம் ஓடும்போது , விளக்கம் சொல்ல ஒருவர் அமர்த்தப்பட்டு இருப்பாராம்..அந்த பணியை இந்த திரையிடலில் , அறந்தை மணியன் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்தார்..


இரண்டாம் நாளான இன்று 6.08.2013 தோ பிகா ஜாமீன் என்ற படம் திரையிட்டபட்டது .சினிமா என்றால் இதுதான் சினிமா.. விரிவாக பிறகு எழுதுவேன்.

தொடர்ந்து இன்னும் 98 படங்கள் திரையிடப்பட உள்ளன.

இனிமையான சூழல் , நகரின் மையப்பகுதி, போக்குவரத்து வசதியுள்ள பகுதி என கவனித்து இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

எங்கே?

இடம்: ட்ரீம்ஸ் இந்தியா , 41 சர்குலர் ரோட், கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் பூங்கா அருகில்)
நேரம்: மாலை 7மணி. (7 PM)

எப்படி வருவது?

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வருவதாக இருந்தால் , லிபர்ட்டி/ மீனாட்சி கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்து பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கும், அதை ஒட்டி இடது புறம் செல்லும் சாலையில் திரும்புங்கள்... முதல் ரைட் எடுங்கள்.. உங்கள் வலது பக்கம் ட்ரீம்ஸ் இந்தியா என்ற பெயர் பலகையை பார்க்கலாம்..

போரூர் , சாலிகிராமம் , வடபழனி கோயில் மார்க்கத்தில் வந்தால் , டிரஸ்ட் புரம் ஸ்டாப்பிற்கு அடுத்தாற்போல் , சந்திர பவன் ஹோட்டலை ஒட்டி வலது புறம் செல்லும் சாலையில் திரும்பி, ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுங்கள்.. சிறிது தூரத்தில் உங்கள் இடது பக்கம் ட்ரீம்ஸ் இந்தியா என்ற பெயர் பலகையை பார்க்கலாம்..

மின் தொடர் வண்டியில் வந்தால் கோடம்பாக்கம் நிலையத்தில் இறங்க வேண்டும்.


டிக்கட் கட்டணம்?

கட்டணம் ஏதும் இல்லை...  
















தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன் கேரளாவில் நடந்த திரையிடல் குறித்து பேசினார். ஒரே நாளில் பல படங்கள் தொடர்ந்து திரையிடப்படுமாம். சாப்பிட்டு வரக்கூட நேரம் இருக்காதாம்.,எனவே தேவையான உணவை கையோடு கொண்டு போய் விடுவாராம்.

ஆனால் இந்த திரையிடலில் ஒரு படம்தான் என்பதால் , உணவெல்லாம் கொண்டு வர வேண்டியதில்லை.. தேவைப்பட்டால் ஸ்னேக்ஸ் , தண்ணீர் , ஜூஸ் மட்டும் கொண்டு வந்து ரிலாக்சாக படம் பார்க்கலாம். 



வரும் வாரம் திரையிடப்பட இருக்கும் படங்கள்..


****************************************************************************


07-10-2013 திங்கள் - அவன் அமரன் (தமிழில் வெளிவந்த முதல் கம்யுநிசத் திரைப்படம்)
----------------------------------------------
08-10-2013 செவ்வாய் - மர்மயோகி (தமிழின் முக்கியமான இயக்குனரான கே. ராம்னாதின் திரைப்படம், இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
----------------------------------------------
09-10-2013 புதன் - திக்கற்ற பார்வதி ( சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் முதல் திரைப்படம் இது. தமிழக முதல்வர் ராஜாஜி அவர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம்)
----------------------------------------------
10-10-2013 வியாழன் - ஒரே ஒரு கிராமத்திலே (தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடைவிதித்த திரைப்படம், இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை வாலி எழுதியிருந்தார்)
----------------------------------------------
11-10-2013 வெள்ளி - சாசனம் (இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் நிதியுதவி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். கந்தர்வனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
12-10-2013 சனிக்கிழமை - யாருக்காக அழுதான் (எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய திரைப்படம், நாகேஷின் பிரமாதமான நடிப்பிர்காகவே போற்றப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
13-10-2013 ஞாயிறு - ஏழை படும் பாடு - கே. ராம்நாத் இயக்கிய இந்த திரைப்படம் தமிழின் முக்கியமான திரைப்படம். லெஸ் மிசரப்லஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்.

14-10-2013 திங்கள் - ஓர் இரவு - அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.

Contact: 9840698236

15-10-2013 செவ்வாய் - மதன காமராஜன் (நிகழ்கால பார்வையாளர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த திரைப்படம், பழங்கால வாழ்க்கை முறை, தெரிந்துக் கொள்ள உதவும்.

16-10-2013 புதன் - நந்தனார் - நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.









2 comments:

  1. பேசமா சென்னை வந்து ஒரு படம் பாத்துட்டு போயிரலாம் போல

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா