Wednesday, April 15, 2020

நாஞ்சில் நாடனின் மழை


சிறுகதை என்பது ஒரு கருத்தைச் சொல்வதன்று.  ஓர் அனுபவத்தை கொடுத்தால் போதும்.

நாஞ்சில் நாடன் சிறுகதைகள் இந்த அனுபவத்தை தர தவறியதில்லை

பேச்சியம்மை என்ற சிறுகதையும் ஓர் அற்புதமான வாசிப்பனுபவம் நல்கியது

மழையில் ஆரம்பித்து மழையில் முடியும் கதை என்பதை மறந்துவிட்டுப் படித்தால் கதை இப்படி ஒரு புரிதலை தருகிறது

தன் மகனின் சின்ன வயதிலேயே கணவன் அவளை விட்டு எங்கோ போய்விடுகிறான்.

அவள் கஷ்டப்பட்டு , தன் உடைமைகளை விற்று , கடன் வாங்கி மகனை படிக்க வைக்கிறாள். அமெரிக்காவுக்கு வேலை கிட்டி போய்விடுகிறான் மகன்

அவனுக்கு திருமணம் செய்து பார்க்க விரும்புகிறாள்
அவனோ இங்கு வரவில்லை. உரிய பதிலும் தரவில்லை. கணவனைப்போல,மகனும் தன்னை விட்டு பிரிந்து விட்டான். பிச்சை போடுவது போல காசு அனுப்புகிறான் என,உணர்கிறாள். உன் காசு இனி வேண்டாம். இனி யாருமே
வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இனி வருமானத்துக்கு வழி இல்லை. தன் சொத்தை விற்று சாப்பிடுகிறாள். அனைத்தும் காலி,ஆனதும் வெறும் கைகறுடன் அவ்வூர் ஆலயத்தில் , கிடைப்பதை சாப்பிட்டு , யாருமற்றவளாக வாழ ஆரம்பிக்கிறாள்.

மகனின் காசை தூக்கி எறிந்த அந்த சுயமரியாதைதான் கதை என தோன்றுகிறது

ஆனால் நல்லவர் கெட்டவர் என பாராமல் எந்த எதிர்பார்ப்புமின்றி பெய்ரும் மழையின் பின்னணியில் கதையைப் படித்தால் வேறு,ஒரு புரிதலை அளிக்கிறது கதை
இங்கே இன்னொரு விஷயம்
கவிஞர் வாலி ஒரு கவிதையில் , மழை தூற்றலும் நின்றது..  பிறர் தூற்றலும் நின்றது என எழுதியிருப்பார்

அந்த நூல் வெளியீட்டுவிழாவில் பேசிய வைரமுத்து , தூற்றல் என்பது தவறு,. தூறல் என வரவேண்டும் என்றார். அநத சரச்சை சில மாதங்கள் நீடித்தது

இந்த கதையில் மழை குறித்த இந்த வர்ணனையை இந்த பின்புலத்தில் ரசித்தேன்
""""மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சரமழை, அடைமழை, பெருமழை. சிறு தூறலை, நெசவாளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள். நூலின் சன்ன ரகம் போல என்ற பொருளில்"


பேச்சியம்மையின் மனம் அந்த மழையப் போல , வாரி வழங்கும் தன்மை கொண்டது என்ற குறிப்புதான் கதை முழுதும் விரவி இருக்கிறது

ஓடிப்போன (?) கணவன் மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை அவளிடம் கிஞ்சித்தும் இல்லை
அவளது ஒரே ஆசை மகனது திருமணம்தான். அதுகூட அவளுக்காக அல்ல.  தன் கடமையை முடித்துவிட்டு ஆலய கைங்கர்யங்கள் செய்யலாமே என்பதுதான் திருமண ஆசைக்கு காரணம்

அது நடக்காது என தெரிந்தபின் அதை மறந்துவிட்டு தன்னால் இயன்ற அளவு பொதுப்பணிகள்"செய்து கொண்டு பற்றற்று வாழ ஆரம்பிக்கிறாள் அவள்

அவள் மகன் நன்றி மறந்தவன் அல்லன். இந்திய வாழ்க்கை பிடிக்காதிருக்கலாம். மண வாழ்வு ஈடுபாடின்மை , சுயபால் திருமண ஆசை என அவன் இங்கு வராததற்கு நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அவை கதையில் வருவதில்லை . அவளால் கிழிக்கப்பட்ட கடிதங்களில் காரணங்கள் இருக்கலாம்

வழக்கமான பெற்றோர்கள் அவனது ஆசையை தெரிந்து கொண்டு , அவை தவறு என கன்வின்ஸ் செய்ய முயல்வாரககள். அல்லது அமெரிக்காவில் பையன் இருக்கிறான் என்ற பெருமையுடன் அவன் காசில் வசதியாக வாழ்வார்கள்.
பொதுவாக இவர்களை வெற்றியாளர்கள் என நினைப்போம்

ஆனால் வேறு எந்த உயிரியுமே இப்படி பிறர்வாழ்வை கட்டுப்படுத்த முயல்வதே இல்லை

எப்படி கணவனை இயல்பாக மறந்து தன்பாதையில் நடக்கலானாளோ அதே போல மகனையும் இனி வர வேண்டாம் , கடிதமோ காசோ வேண்டாம் என விலக்கி வைத்து விட்டு நடைபோடும் பேச்சியம்மைதான் வாழ்வில் ஜெயித்தவள் என தோன்றுகிறது


மழையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள் எனற குறிப்புடன் கதை முடிகிறது;


""கச்சான் சற்று வலுத்து அடித்தது. அடைமழையுடன் காற்று கலகலத்துப் பேசியது.
நனைந்துவிடாமல், சுவரும் திண்டும் கூடும் இடத்தில் குறுகி உட்கார்ந்து, வலுக்கும் மழையை ஊடுருவிப் பார்த்தவாறு இருந்தாள் பேச்சியம்மை"

அவள் தரிசித்த மழையை நாம் தரிசிக்க அவளாக மாறினால்தான் முடியுமோ!!











No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா