Tuesday, April 7, 2020

உலக வரலாறை எழுதும் கிருமிகள். ஜெயமோகனின் ஆடகம்

ஜெயமோகனின் ஆடகம் என்றொரு சிறுகதை படித்தேன்

ஆடகம்..  வித்தியாசமான பெயர்.  தூய பொன் என்று பொருள்

ஆனால் கதை விஷத்தைப் பற்றி பேசுகிறது.. உண்மையில் விஷமும் அமுதமும் ஒரே மூலப்பொருட்களால் ஆனதுதான்.  மூலப்பொருட்களின் அளவைப் பொருத்து விஷமென்றோ,அமுதமென்றோ ஆகிறது

கதை நாயகனுக்கு வாழ்வில் எந்த ஆர்வமும் இல்லை. மரணத்தைப் பற்றியே கனவு காண்கிறான்..
மழைப்பொழிவு,மிகு ஆகும்பே என்ற ஊருக்கு தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு செல்கிறான்

யானையையே கொல்லத்தக்க ,,கடும் விஷமிக்க ராஜநாகங்கள் அங்கு இருப்பதை அறிந்து நாகம் கடித்து சாக விழைகிறான்

விரும்பியபடி பாம்பு கடித்து நினைவிழக்கிறான்.

அந்த விஷம் அவனை கொல்லவில்லை. அமுதமாக செயல்பட்டு அவனுக்கு,புதிதொரு வண்ணமயமான வாழ்க்கை வழங்கி இருப்பதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம்;

மழைமிகு பிரதேசம் , வனம் , பாம்பு ஆகியவை இயற்கையின் குறியீடுகள் என வாசித்தால் மெல்லிய திடுக்கிடல் ஏற்படுகிறது
Guns, Germs, and Steel என்றொரு நூல்

ஏன் ஐரோப்பா உலகை ஆள்கிறது . ஏன் கருப்பின மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர்.   எல்லா வளமும் செல்வங்களும் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏன் குவிந்தது.  ஆப்ரிக்கா ஏன் வறுமையில் வாடுகிறது.

என்பது போன்ற கேள்விகளை நூல் ஆகிறது

அனைவரும் சமமான மனிதர்கள்தான். ஆனால் இந்த சமநிலையை குலைத்து வெள்ளையர்களை உயரத்துக்கு எடுத்துப் போனதில் நோய்க்கிருமிகளுக்கு முக்கிய பங்குண்டு என்கிறது நூல்

இயற்கை ஏதோ,ஒரு கணக்கிட்டு அவர்களை செல்வந்தர்களாக வல்லரசுகளாக மாற்றிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள்தான் அவர்களை வாழ வைத்த தெய்வம் என்பது நூலின் செய்தி

ஆடகம் கதையில் , சாக விரும்பும் ஒருவனை வளம்பட வாழ வைக்க இயற்கை முடிவு செய்து விட்டது. அவனை அந்த பாம்பு சற்று அதிகம் கடித்திருந்தால் அவன் செத்திருப்பான். கடிக்காது போயிருந்தால் வேறு வகைகளில் தற்கொலை செய்திருப்பான்.  சரியான அளவு கடித்து சரியான விஷத்தை இறக்கி அவனை வாழ வைத்து விட்டது

உண்மையில் அவன் இதைக் கேட்கக்கூட இல்லை

   ஒரு கணத்தின் ஒரு துளியில் இவ்வளவு விஷம் போதும் என நாகம் முடிவெடுக்கும் அந்த ஒரு சொல்லற்கரிய ஒரு காலாதீத இடைவெளியில்தான் உலக வரலாறே நிகழ்கிறது போலும்


1 comment:

  1. Dear pikku,
    my son,
    superb. i too want to read guns,germs, steel book.

    i just remember 'bheeman*

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா