Wednesday, April 29, 2020

லங்காராணி .. நிகழாமல்,போன அற்புதம்


சில நூல்களை படிக்கலாம். சிலவற்றை படிக்க வேண்டும். சிலவற்றை படித்தேஆக வேண்டும்

படித்தே ஆக வேண்டிய சில நூல்களுள் ஒன்றுதான் " லங்காராணி" 
அருளர்  எழுதிய இந்த நாவல் , ஈழப் போராட்டத்தின் அரியதொரு ஆவணமாகவே கருதப்படுகிறது.

1977ல் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் நடந்தது. வசதியாக வாழ்ந்த பலர் அகதிகளானார்கள். ஏற்கனவே துன்பத்தில் உழல்வோரும் அகதிகளானார்கள்.
இப்படிப்பட்ட 1200 அகதிகளை சுமந்து கொண்டு கொழும்பு துறைமுகத்தில் இருந்து லங்காராணி என்ற கப்பல் யாழ்ப்பாணம் நோக்கி கிளம்பியது.

இது இரண்டு நாள் பயணமாகும். இந்த இரண்டு நாட்களில் கப்பலில் நடக்கும் சம்பவங்கள் , விவாதங்கள் , போர்த்திட்டங்கள் , பிரச்சனை குறித்தும் தீர்வு குறித்தும் அலசல்கள்.. இவற்றை அடக்கியதுதான் இந்த நூல்

விடுதலைப்புலிகள் , டெலோ , ப்ளோட் , ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் என பல போராட்டக்குழுக்கள் இருந்தாலும் இன்றைய சூழலில் தமிழகத்தில் பலருக்கும் புலிகளையும் பிரபாகரனையும்தான் தெரியும்
ஆனால் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் பிரபலமாக இருந்தது ஈரோஸ் இயக்கம்தான்

அதன் தலைவர்களில் ஒருவர்தான் லங்காராணி அருளர்

லங்காராணியில் பேசப்பட்ட விஷயங்களை ஆககப்பூர்வமாக விவாதித்து முன்னெடுத்திருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். ஆனால் ஆரம்பத்தில் சித்தாந்த ரீதியான போராட்டத்தை ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் பிற்பாடு தன்னிச்சையாக செயல்படத்தொடங்கி அழிவைத்தேடிக் கொண்டதை முன்னுரையில் வருத்தத்துடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர்

   நூலில் கவித்துவமான தருணங்கள் , மானுட கீழ்மையை கண்முன் நிறுத்தும் தருணங்கள் ஏராளம்

   அகதிகள் அனைவருக்கும் கப்பலில் உணவு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட குடும்பத்துக்கு வழங்கும்போது ஒரு பெரியவர் குறுக்கிடுகிறார் " அவர்களெல்லாம் பசி பட்டினிக்கு பழகியவர்கள்.  அவர்களுக்கு என்ன அவசரம் " 
இந்த கீழ்த்தரமான பேச்சு பலரை டெனஷனாக்குகிறது

யாழ்ப்பாணத்துக்கு செல்வதை வெளிநாடு செல்வதாக நினைக்கும் அறியாமை , கபிச்சத்தீவை ஒரு தேசமாக நினைக்கும் அறிவீனம் போன்ற பலவற்றை நூல் ஆவணப்படுத்துகிறது

தனியொருவனாக பகைவர்களை கலங்கச் செய்த சிவகுமாரன்தான் ஈழப்போரில் முதன்முதலாக சயனைட் அருந்தி உயிர்தியாகம் செய்தவர். இவரைப்பற்றிய பகுதிகள் சிறப்பாக உள்ளன


 சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கி தமிழனை இரண்டாம்தர குடிமகனாக்கியது மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்

ஆனால் அது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழகத்தில் இருந்து வேலை செய்ய அழைத்துச்செல்லப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட கொடுமைதான் இதற்கெல்லாம் ஆரம்பம்

அது நடந்தபோது இலங்கையின் பூர்விக தமிழர்கள் இதை பெரிதாக நினைக்கவில்லை. அப்போதைய தமிழ்க்கட்சிகளும் அதை பெரிதாக எதிரக்கவில்லை

ஈரோஸ் இயக்கம் அந்த காலகட்டத்தில் இல்லை. 70 களில்அது தொடங்கப்பட்டபோது , ஈழப்போராட்டம் என்பது மலையகத்தமிழர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தது

இது மொழிப்பிரச்சனை அல்ல. இது வர்க்கப்போராட்டம் , தேசிய இனங்களின் போராட்டம் என்பதை விவாதங்கள் வழியாக சொல்கிறது நூல்

  ஒரு குறிப்பிட்ட பகுதியினரை எதிரிகளாக சித்தரிப்பது ஓட்டு வாங்க பயன்படும் குறுக்குவழி.

தமிழ் நாட்டில் , ஆரிய பிராமண வெறுப்பு வாதமெல்லாம் கைதட்ட உதவுமேதவிர வாக்குகளாக மாறாது..  ( பாகிஸ்தான் எதிர்ப்பு வாதம் வட மாநிலங்களில் வாக்குகளாக மாறுகிறது)

ஆனால் இலங்கையில் தமிழர் வெறுப்புவாதம் சிஙகள அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப்பெற்றுத்தருகிறது. அப்பாவி சிங்களனின் வாழக்கைத்தரத்தை உயர்த்தமனமின்றி தமிழ் வெறுபபு வாதத்தை வைத்து தம்மை வளமாக்கிக் கொள்கின்றனர் சிஙகள அரசியல்வாதிகள்.
ஆக . சிங்கள அரசு என்பது சிங்கள பாட்டாளிக்கும் எதிரானதுதான்

சில சுயநல தமிழ் அரசியல்வாதிகளும் இந்த சுரண்டலில் பங்கேற்றவர்கள்தான்

சிங்கள அரசின் இந்த சுரண்டலை ஆயுதப்புரட்சி மூலம் சிங்கள போராளிகள் சிலர் வீழ்த்த முயன்று தோற்றனர். ஏராளமான சிங்கள இளைஞரகள் கொன்று குவிக்கப்பட்டனர்;

அரசியல்வாதிக்கு சிங்களன் தமிழன் என்பதில்லை. அனைவரையும் சுரண்டுவான்

எனவே அங்கு அனைவரும் ஒன்றிணைந்த பாட்டாளி வரக்க புரட்சி நடந்திருந்தால் ,  அப்போது வலுவாக இருந்த தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் , அப்போது வலுவாக இருந்த கம்யூனிச அகிலத்தின் ஆதரவுடன் உலகின் முன்மாதிரி தேசம் உருவாகி இருக்ககூடும்

லங்காராணி நூல் நிகழாமல் போன ஓர் அற்புதத்தின் ஆவணமாக என்றும் நிலைத்திருக்கும்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா