Saturday, November 10, 2018

எம் ஜி ஆர் திரைப்படங்களும் அரசியலும்


சினிமா மூலம் எம் ஜி ஆர் வளர்ந்ததாக நினைத்து பலர் அரசியல் படங்கள் எடுக்கின்றனர்..

ஆனால் இந்த ஃபார்முலா ஒரு போதும் வெற்றி அடைந்ததில்லை.. எம் ஜி ஆரே கூட , தன் படங்களில் அரசியல் விளக்க படங்களாக எடுத்தது கிடையாது..

தன் படங்கள் நன்றாக இருக்க வேண்டும் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது.. அவர் முதல்வராக ஆசைப்பட்டு இருந்தால் , அண்ணா மறைவுக்கு பின் எளிதாக அதை அடைந்திருக்கலாம்.. அவருக்கு சினிமாதான் முக்கியமாக இருந்தது

அவரது ரசிகர்களுக்கு திமுக தொல்லை கொடுக்க ஆரம்பித்தபோது ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கிதான் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

தேர்தலில் வென்ற பின்பும் கூட , படப்பிடிப்பை முடித்த பின்புதான் முதல்வராக பதவியேற்றார்...

முதல்வரான பின்பும்கூட ஒரு படம் நடக்க பேச்சு நடந்தது... விளம்பரங்களும் வெளியாகின.. இசை : இளைய ராஜா...

அந்த அளவுக்கு சினிமாவை காதலித்தார் அவர்

இப்போது பலர் சினிமாவை , அரசியலுக்கான ஒரு விசிட்டிங் கார்டாக நினைக்கின்றனர்

அப்படி நினைத்து எடுக்கப்படும் படங்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை... இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன







Friday, November 9, 2018

குடியின் கேடு- கண்ணதாசன் வாழ்வில் ருசிகரம்


மாபெரும் கூட்டம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது.. பெரிய தலைவர்கள் , வி ஐ பிகள்,. திரை உலக பிரபலங்கள் குழுமி இருந்தனர்

ஆனால் நிகழ்ச்சி தொடங்கவில்லை.. கண்ணதாசன் வந்துதான் துவக்க உரை ஆற்ற வேண்டும் என்பதால் காத்திருந்தனர்..

அனைவருக்கும் டென்ஷன்   கோபம்

இரண்டு மணி நேரங்கள் தாமதமாக அவர் வந்தார்

வந்ததும் மன்னிப்பு கேட்டார்

- நண்பர்கள்.. இவ்வளை மக்களை  பெரியோர்களை காத்திருக்க செய்தது மாபெரும் தவறு .. மன்னித்து விடுங்கள்.. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காரணம் குடிதான்.. நேற்று இரவு முழுக்க குடி.. அதனால்தான் தாமதம்.. மதுவின் தீமைக்க்கு நானே ஓர் உதாரணம் என்பதை கண்கூடாக பார்த்து விட்டீர்கள்

தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள்... நானும் குடிக்க மாட்டேன் என்றார்

அனைவரும் கைதட்டினர்

- ஆனால் ஒன்று.. இப்போது நான் துவக்க உரை ஆற்ற வேண்டும்.. கொஞ்சம் சரக்கு உள்ளே போனால்தான் என்னால் பேச முடியும்.. தயவு செய்து இன்று மட்டும் குடித்துக் கொள்கிறேன்.. நாளை முதல் குடிக்க மாட்டேன் என்றார்

கூட்டத்தில் பயங்கர சிரிப்பு கைதட்டல்


அதன் பின் லேசாக சரக்கு அடித்து விட்டு , அதன் பின் சிறப்பாக பேசினார்

பிரச்சினைகளுக்கு தீர்வு யாதென கேட்டேன் - பிரசுரம் ஆகாத கண்ணதாசன் கவிதை



 கேவலமான சாலைகளுக்கு

தீர்வு யாதெனக் கேட்டேன்

ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு

அபராதம் போடுவோம் என்றார்

அரசாங்க பிரதிநிதி

ஆலைகள் , புகை என சுற்றுச்சூழல்

சீர்கேடுகளுக்கு தீர்வு என்ன என்றேன்

தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும்

குழந்தைகளை சிறை வைப்போம் என்றார் அரசு அதிகாரி

வேலை இல்லா திண்டாடத்துக்கு தீர்வு கேட்டேன்

வேலை இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்க

யோசிக்கிறோம் என்றார் அவர்


பிளாஸ்டிக் குப்பை மலைகளை

எப்படி சமாளிப்பீர்கள் என கேட்டேன்

பிளாஸ்டிக் பையில் பொருட்கள் வாங்க

கூடுதல் கட்டணத்தை உங்கள் மீது திணிப்போம் என்றார் அவர்

தக்காளி... எல்லா பிரச்சனைகளுக்கு பலி ஆடுகள் நாங்கள் என்றால்

அரசு என ஒன்று எதற்கு என கேட்டேன்

அரசாங்க பிரதி நிதி அருகே வந்து ரகசியமாய் சொன்னார்..


அந்த பிரச்சனைகளை உருவக்குவதற்கு ஆள் வேண்டாமா

அவற்றை உருவாக்குவதே நாங்கள்தானே 

Thursday, November 8, 2018

பேனா - சில சிந்தனைகள்


  ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்..  ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கினார்..    நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்ப்போது அவரிடம் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டார்.. பேனா கொடுங்க என அவர் அருகில் இருந்தவர்களிடம் கை நீட்டினார்..  யாரிடமும் இல்லை.. பேனா என்பதே சற்று வழக்கொழிந்த சாதனமாகி விட்டது என்பதால் பலரிடம் இல்லை...

எனது இங்க் பேனாவை எடுத்து கொடுத்தேன்... எனக்கு ஒரு நண்பர் பரிசளித்த அழகான இங்க் பேனா அது...  அதில் கையொப்பம் இட்டார்.. அந்த பேனா குறித்த விபரங்கள் கேட்டார்..சொன்னேன்..

அத்தனை பேருக்கு நடுவில் பேனா சரியாக எழுதாமல் தகராறு செய்திருந்தால் , தர்ம சங்கடமாக போயிருக்கும்...  ஆனால் என் பேனா தகராறு செய்யாது என நன்கு தெரிந்திருந்தால்தான் அதை அளித்தேன்

 பந்து முனைப்பேனாவுக்கும் இங்க் பேனாவுக்கும் இதுதான் வித்தியாசம்..  பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவோம்.. ஆனால் இங்க் பேனா பல மாதங்களாக  நம்முடன் இருப்பவை,,, பல ஆண்டுகளாக ஒரே பேனாவை பயன்படுத்துவோரும் உண்டு... எனவே நம் பேனா குறித்து நமக்கு நன்றாக தெரியும்.. ஒரு வித உறவு அல்லது நட்பு அல்லது புரிதல் அதனுடன் ஏற்பட்டு விடும்

இங்க் பேனாவை முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கையில் சற்று முரண்டு பிடிக்கும்.. எழுத எழுத நம் கைகளின் அழுத்தம் , எழுதும் கோணம் , வேகம் என பலவற்றை அது புரிந்து கொள்ளும்.. அதற்கேற்ப அதன் நிப் மாறும்.. நாமும் பேனாவை புரிந்து கொண்டு அதற்கேற்ப எழுதுவோம்..

இந்த உறவு பந்துமுனைப்பேனாவில் இல்லை.. ஆனால் பந்து முனைப்பேனாவுக்கு என சில பயன்பாடுகள் உண்டு.. எனவே அதை தவிர்க்க இயலாது.. உதாரணமாக டெலிவரி சலான், பில் போன்றவை எழுதும்போது கார்பன் நகல் சரியாக வருவதற்கு பந்து முனைப்பேனாவின் அழுத்தம் முக்கியம்

  ஆனால் சிறப்பான சேவையை தருவது மசி பேனாக்கள்தான்... இங்க் பேனா வாங்கினால் ஒருபோதும் மலிவானவற்றை வாங்க கூடாது.. அது எழுதும் இன்பத்தையே கெடுத்து விடும்.. தரமானவற்றை மட்டுமே வாங்க வேண்டும்..

பைக் , கார் போன்றவற்றை அவ்வப்போது சர்வீஸ் செய்வது போல , பேனாவை மாதம் ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்...  ஒருவர் பயன்பாட்டில் பேனா இருக்க வேண்டும்

ஐந்து அல்லது 10 ரூபாய் விலையில் கிடைக்கும் பந்து முனைப் பேனா ஒன்றை ஓசி கொடுப்பதற்கு என வாங்கி வைத்து கொள்ள வேண்டும்

வெளியூர் செல்கிறோம்.. ரொம்ப நாள் பயன்படுத்தப்போவதில்லை என்றால் முழுமையாக மசியை வெளியேற்றி வைக்க வேண்டாம்.. இல்லாவிட்டால் மசி அடைப்பு ஏற்படலாம்

பேனா வாங்கும்போது , ஒல்லி பேனாவா  குண்டு பேனாவா என நம் கை வாகுக்கு ஏற்றபடி வாங்க வேண்டும்

இப்படி கவனமாக தேர்ந்தெடுத்து ஒழுங்காக பராமரித்தால் கை எழுத்து மாறாமல் சிறப்பாக இருக்கும்.. கல்லூரி தேர்வெழுத பயன்படுத்திய பேனாவை , பணிகளில் பயன்படுத்துவோர் உண்டு என்பது ஆச்சர்யமான உண்மை





Friday, November 2, 2018

கலைஞரின் பெருந்தன்மை


எந்த தகுதியும் இன்றி யாரும் வாழ்வில் உயர முடியாது...   வாழ்வில் வென்றவர்களின் நற்பண்புகளை கவனித்து , அவற்றை நாமும் பின் பற்ற முயல வேண்டும்


கார்ட்டூனிட்  மதி பல்வேறு அரசியல் கார்ட்டூன்களுக்காக புகழ் பெற்றவர்.. பல்வேறு பத்திரிக்கைளில் வரைந்தாலும் இவரது துக்ளக் கார்ட்டூன்களுக்கு தனி இடம் உண்டு....

இவர் பல கட்சியினரை கேலி செய்வது போல , இவரையும் அரசியல் தலைவர்கள் கேலி செய்வதுண்டு.. மதி கெட்டவர்.. அறிவற்றவர் என பலர் விமர்சிப்பது வழக்கம்தான்


 திமுகவை இவர் சற்று அதிகமாகவே விமர்சித்துள்ளார்

இவரது கார்ட்டூன்களின் தொகுப்பு நூல் திமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்டது,, நூலை வெளியிட , முதல்வர் கலைஞரை இவர் அழைத்து கடிதம் அனுப்பினார்

 நூலை படித்த கலைஞர் பதில் அனுப்பினார்


  நூலில் பல்வேறு கட்சிகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.. அதில் திமுகவும் உண்டு... அதில் வருத்தமில்லை

எங்களை விமர்சித்துள்ள நூலை வெளியிட்டுப் பேசுவதில் ஒரு முதல்வராக எனக்கு எனக்கு பிரச்சனை இல்லை

ஆனால் நூலின் அட்டைப்படத்திலேயே அழகிரி நாடு, ஸ்டாலின் நாடு’ எனக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இதை நான் வெளியிட்டால் எனது கழக உடன்பிறப்புகள், ‘தலைவரே இதை வெளியிடலாமா?’ என வருத்தப்பட வாய்ப்பு உண்டு

இது தர்மசங்கடமான சூழலை உருவாக்கும்... எனவே நூலை வெளியிட முடியாத நிலையில் உள்ளேன் என தன் மறுப்பை தெரித்தார்

நூல் வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள் முரசொலியில், `வசைபாடும் கார்ட்டூனிஸ்ட் மதிக்கு வாழ்த்துகள்' என ஒரு பெரிய தலையங்கம் வடிவில் கட்டுரை எழுதி, பாராட்டி யிருந்தார்  ,, அதில் நாசூக்கான கேலிகளும் இருந்தன


 தன்னை விமர்சித்த நூலுக்கான வெளியீட்டு விழா அழைப்பை , அவர் மறுக்க எல்லா உரிமையும் உண்டு,,, அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை.. அவர் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் , அந்த அழைப்பு தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து கோபப்பட்டு இருப்பார்

ஆனால் கலைஞரோ  தன் மறுப்பை நாகரிகமான சொன்னது மட்டும் அன்றி. இதை நினைவு வைத்து முரசொலியிலும் எழுதி இருக்கிறார்

  இவர் போன்ற ஒரு தலைவர் இனி பிறப்பதரிது என எஸ்கேப் ஆகாமல் , அவரது நற்பண்புகளை பிறரும் பின்பற்ற வேண்டும்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா