Saturday, August 15, 2015

தங்க மீன்கள் போன்ற குப்பைகளை திட்டுவது தவறா- சாரு உருக்கம்


சுவாரசியமான ஆரம்பம் ,  நகைச்சுவை என பேச்சை ஆரம்பித்து கைதட்டல் வாங்குவது சிலர் பாணி.
ஆனால் சாரு அப்படி அல்லர்.. அவர் தொழில்முறை பேச்சாளர் போல பேச மாட்டார்... சுவையான ஆரம்பம் . ஆங்காங்கு நகைச்சுவை , கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நோக்கிச்செல்லுதல் எனும் ஃபார்முலா அவரிடம் இல்லை...

15.08.2015 அன்று விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 15 சென்னையில் நடந்தது...

இலக்கியமும் இன்றைய வாழ்க்கையும் என்ற தலைப்பில் சாரு பேசினார்...

 நல்ல கூட்டம்...  வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் இலக்கிய ரசனை கொண்டவர்கள் . ஆனால் முழு நேர இலக்கியவாதிகள் அல்லர்.. இளைஞர்கள் , பெரிய வேலைகளில் இருப்பவர்கள் , பெண்கள் என வித்தியாசமான சூழல்.. ஜிப்பா ஜோல்னா பை எனும் அந்த கால இலக்கிய கூட்ட அம்சங்கள் எதுவும் இல்லை...
சாரு தன் பேச்சில் இதை குறிப்பிட்டார்...

அந்த காலங்களில் இலக்கியம் பேச சரியான இடம் கிடைக்காது... அழுக்கு நிறைந்த ஏதோ ஒரு கட்டிடம் கிடைக்கும்..போய் விட்டு வந்தால் ரெண்டு நாள் தூசி போகாது.. வாசகர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள்.. எழுதுபவர்கள்தான் படித்தும் ஆக வேண்டும். எனவே ஒரு சின்ன கூட்டமாகவே அன்றெல்லாம் கூட்டம் நடக்கும். இப்போது நிலை பரவாயில்லை.. இத்தனை வாசகர்களை பார்ப்பதில் சந்தோஷம்.  முன்பைவிட நிலை தேவலாம் என்றாலும் இதுவும் போதாது.. இன்னும் அதிகமாக வேண்டும்.

எனக்கு பேச தெரியாது. நான் ஓர் எழுத்தாளன். என் மகனிடம்கூட அதிகம் பேசுவதில்லை. மெயில்தான் அனுப்புகிறேன்.ஆனாலும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியவாதிகளுக்கு மதிப்பில்லாத நிலையே சமூகத்தில் நிலவுகிறது. ஒரு நடிகருக்கு மேடையில் கை கொடுக்க போனேன். அவரோ என் கையை தட்டி விட்டு போய் விட்டார். இப்படி அவமரியாதை செய்வது மனித தன்மையா.. சாரு என்றாலே பலர் தீண்டத்தகாதவன் என ஒதுக்கி வைக்கும் நிலையில் என்னை துணிச்சலாக கூட்டத்துக்கு அழைத்த அழகிய சிங்கருக்கு என் நன்றி. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

உண்மை சொல்வதற்காக நான் வெறுக்கப்படுகிறேன். ஊரே பாராட்டுகிறது என்பதற்காக என்னால் பரதேசி படத்தை பாராட்ட முடியாது. அது ஒரு தப்பான படம் என்பதை நான் மட்டும் தனி ஆளாக சொல்லி பலர் வெறுப்புக்கு ஆளானேன்.. இத்தனைக்கும் டைரக்டர் பாலா மேல் எனக்கு அன்பு உண்டு.

எனக்கு இதய பிரச்சனை காரணமாக  நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது , தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு என்னை வந்து பார்த்தவர் வசந்த பாலன்.  அவர் என்  மேல் அன்பு காட்டுபவர்  என்பதற்காக அவ்ரது எல்லா படங்களையும் என்னால் பாராட்ட முடியாது. பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் விமர்சிப்பேன்..

தங்க மீன்கள் என ஒரு மோசமான படம். தற்கொலை செய்து கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் படம். கடுமையாக திட்டி எழுதினேன். இப்படி சராசரி மன நிலைக்கு எதிராக நான் இயங்குவதால் பலராலும் வெறுக்கப்படுகிறேன்.

அந்த காலத்தில் பல நல்ல சிற்றிதழ்கள் வந்தன. பலர் தம் சொத்துகளை விற்று நகைகளை விற்று இலக்கியத்தை வளர்த்தனர். சி சு செல்லப்பா ஊர் ஊராக சென்று புத்தகம் விற்றார். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் தம் பணியை செய்து கொண்டே இருந்தனர். அவர்களது நீட்சியாக  , விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் நான் எழுதி வருகிறேன்.

யாரையும் துன்புறுத்துவது என் நோக்கம் அல்ல.. என் வீட்டுக்குள்  நுழைந்து விடும் பூரான்களைக்கூட நான் கொல்வதில்லை.. எந்த காயமும் ஏற்படாமல் ஒரு பேப்பரில் எடுத்து வெளியே தூக்கி போடுவேன்

சிலர் என்னை தவறாக புரிந்து கொள்வதே பிரச்சனைக்கு காரணம். அதிகமாக செக்ஸ் எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு. பாலியல் வறட்சியில் வாடும் நாடு என்பதால் , நான் பத்து பக்கத்துக்கு பாலியல் எழுதினால் , நூறு பக்கங்களுக்கு கற்பனை செய்து கொள்கிறார்கள்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் சில கடைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என எழுதி வைத்துள்ளனர். காரணம் நம் ஆட்கள் கடைகளுக்கு போனால் , அங்கிருக்கும் பெண்களுடன் போட்டோ எடுக்க க்யூவில் நிற்கின்றனர். பஸ்ஸில் செல்லும் சுற்றுலா பயணிகள் இப்படி க்யூவில் நின்று போட்டோ எடுத்து முத்தம் கொடுத்து அதை பெருமையாக இங்கே சொல்லலாம்.. ஆனால் நம் பெயர் கெட்டு விடுகிறது. இந்தியர்கள் வர வேண்டாம் என்கிறார்கள்>.

இதற்கு காரணம் பாலியல் வறட்சி மட்டும் அல்ல...சென்சிப்லிட்டி இன்மையும் இதற்கு காரணமாகும்.  இலக்கிய பரிட்சயம் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பார்கள்.

மேம்போக்காக கருத்துகளை சொல்லும் சராசரி மனிதனைப்போலவே மெத்தப்படித்த பேராசியர்களும் இருக்கிறார்கள். ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும் எனும் மேம்போக்கான கருத்தையே ஒரு பேராசிரியரும் சொல்கிறார்.

ஒரு பேட்டிக்காக ஒரு பேராசியர் என்னிடம் கேள்வி கேட்டார்.. நீங்கள் யார் , என்ன தொழில் செய்கிறீர்கள் என்கிறார். இப்படித்தான் பொது அறிவு இருக்கிறது..

ஒரு பேராசியருக்கு மெயில் அனுப்பினேன்... டியர் மேடம் என பதில் எழுதுகிறார் அவர்..

அப்துல் கலாமிடம் உங்களுக்கு பிடித்த சிந்தனையாளர் யார் என கேட்டால் , விவேக் என்கிறார்.. நிலை இப்படி இருக்கிறது..

பலரது மானசீக குருவாக இருப்பவர் மௌனி. அவரை எனக்கு பிடிக்கும் என சொல்ல முடியாது. ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என தோன்றும் . ஆனாலும் அவரது எழுத்தாளுமையின் ரசிகன் நான். அதற்காகவே அவர் எழுத்தை படிப்பேன்.. அந்த வகையில் அவர் என் குரு. ஜெயகாந்தனும் அவரை குருவாக நினைத்தவர் .

அப்படிப்பட்ட மௌனியின் கொள்ளு  பேத்தியை சமீபத்தில் சந்தித்தேன். இலக்கியம் அளவுக்கு எனக்கு நாய்களை பிடிக்கும். வளர்ப்பு பிராணிகள் ஆர்வலர்கள் கூட்டங்களுக்கு செல்கையில் மௌனியின் பேரனோடு  பழக்கம் ஏற்பட்டது.  அவரோடு மௌனியைப்பற்றி பேசுவதை பார்த்து குழம்பிய அவள் என்ன டாப்பிக் பேசுகிறீர்கள் என கேட்டாள்/. உன் கொள்ளு தாத்தா மிகப்பெரிய ரைட்டர் என்றேன். அப்படியா எனக்கு தெரியாதே என்றாள்t; திடுக்கிட்ட நான் , ஏன் இதை மகளிடம் சொல்லவில்லை என அவரிடம் கேட்டேன்.. ஏன் சொல்ல வேண்டும் என கேட்டார் அவர்.

கலாம் அளவுக்கு மௌனி கொண்டாடப்பட்டு இருந்தால் அவர் இப்படி கேட்டிருக்க முடியுமா....  மௌனி பல்கலைக்கழகம் , மௌனி நெடுஞ்சாலை , என இருந்தால் அந்த பேத்திக்கு அவரை தெரியாமல் இருந்திருக்குமா

சம்பத் குறித்து எழுத அவரது நூல்கள் தேவைப்பட்டன. கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா... அந்த நூல்கள் வெளியிடப்படக்கூடாது என அவர் மனைவி தடை வாங்கி இருக்கிறார். அந்த அளவுக்கு குடும்பத்தார் எழுத்தாளர்களை வெறுக்கின்றனர்...

சர்வதேச அளவில் சிலாகிக்கப்படும் நூல்களை விட சிறந்த ஆக்கங்க்ளை படைத்தவர் தஞ்சை பிரகாஷ். அவரது காரமுண்டார் வூடு நாவல் கிடைப்பது இல்லை. நல்ல நூல்களை நாம் கொண்டாடுவது இல்லை. இவரது நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தால் சர்வதேச புகழ் பெற்றிருக்கும். ஆனால் நம் ஊரிலேயே இவர் நூல்கள் கிடைப்பதில்லை

சி சு செல்லப்பாவுடன் அவர் தாயார் பல ஆண்டுகள் பேசவில்லை...எழுத்துக்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

ஆனால் இப்படி கஷ்டப்படுவதற்கான பலன் குறைவுதான்.

எழுத்துக்காக பல தியாகங்களை செய்த தஞ்சை பிரகாஷ் . குறித்து சராசரி வாசகன் தெரிந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை.. அவர் உயிர் நண்பரான வெ சா என்ன எழுதுகிறார் பாருங்கள்

முப்பது வருடமாக ப்ரகாஷ் என் உயிர் நண்பர்; ஒரே தட்டில்தான் சாப்பிட்டோம். ஆனால் அவர் சாவுறதுக்குக் கொஞ்ச நாள் முந்திதான் அவர் எழுதுவார் என்றே தெரிந்தது

வெ சா எ ( வெங்கட சாமி நாதன் எழுதுகிறார் )  என ஒரு பத்திரிக்கை நடத்தியவர் தஞ்சை பிரகாஷ். அவரைப்பற்றி இப்படி எழுதுகிறார் வெங்கட சாமி நாதன்

இப்படித்தான் நம் சூழல் இருக்கிறது...


இதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது மொழி என்பது நம்மிடம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகவே மட்டும் இருக்கிறது. இது தவறு . மொழி என்பது கலாச்சார சின்னமாக பண்பாட்டு அடையாளமாக இருக்க வேண்டும்.

 நல்லா இருக்கியா ..சாப்பிட்டியா என தகவல்களை சொல்ல மட்டும் பயன்படுவது மொழி அல்ல.. நம் மரபு , பண்பாட்டின் சின்னமாகவும் மொழி இருக்க வேண்டும்.

விமானத்தில் ஒருவர் பயணித்தார். காசு எடுத்து வரவில்லை.. பசி.. ஏதாச்சும் சாப்பிட கொடுங்கள் . விமான நிலையத்தில் இறங்கிய அடுத்த நொடி காசு தந்துவிடுகிறேன் என்றார்.. படித்த ஸ்டைலிஷான் ஏர்ஹோஸ்டஸ் அதை ஏற்கவில்லை..

இதுவே கிராமமாக இருந்தால் அவருக்கு உணவு கிடைத்து இருக்கும்.

 உ வெ சா வாழ்வில்  உதாரணம் ...   அவர் வீடு அருகே ரயில் நிலையம் ... இரவில் ரயில் அங்கே வரும்.. ரயிலில் இருந்து இறங்குபவர்கள்  யாருக்காவது தேவைப்படுமே என அவரது தாயார் சோறு வைத்து இருப்பார். சில நேரங்களில் ரயில் தாமதமாக வரும்... அந்த நேரங்களில் ரயில் வரும்வரை சோற்றில் தண்ணீர்  ஊற்றாமல்
 காத்திருப்பார்



இலக்கியம் என்பது நுண்ணுணர்வை வளர்க்கும் என சொன்னேன்.. கிராமங்களில் எல்லோரும் இலக்கியம் படிப்பதில்லை. ஆனாலும் எப்படி நுண்ணுணர்வு எப்படி இருக்கிறது...காரணம் அவர்கள் அன்றாட மொழியே இலக்கியமாக இருக்கிறது.. கூத்து , நடனம் என இலக்கியம் அவர்களை அடைகிறது..

ராமாயணம் , பாரதம் என பாட்டிகள் சொல்லும் கதைகள்  அவற்றில் பல புனை கதைகள் , கட்டுக்கதைகள் . அவைகள் ஒரு மன நிலையை உருவாக்குகின்றன.. சுருட்டு புகையுடன் என் பாட்டி சொன்ன கதைகள் என்னை உருவாக்கின... 

நம் மொழியை நாம் காக்க வேண்டும்...

தன் மண்ணின் மொழியை படிக்காமல் அங்கு வாழ முடியும் என்பது இங்கு மட்டுமே இருக்கும் அபத்தம்.உலகில் எங்குமே இப்படி இல்லை..

என் மகனும் தமிழ் படிக்கவில்லை... ஏன்/?? தமிழில் மார்க் கிடைக்காது என்றான்... வேறு ஆப்ஷன் இருக்கிறது என்கிறான்..தமிழைத்தவிர வேறு ஆப்ஷன் ஏன் கொடுக்கிறீர்கள்>.. தமிழ் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை வேண்டாமா

 நான்கு பேர் கொண்ட குடும்பம் ஸ்கூட்டரில் போவதை பார்க்கையில் முன்பெல்லாம் கோபம் வரும். இப்போது அவர்களுக்கு வேறு வழி இல்லை என புரிந்து கொள்கிறேன். மெட்ரோ , பேருந்து என ஐரோப்பாவில் இருக்கும் ஆப்ஷன்கள் இங்கு இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது..

மண்ணில் தெரியுது வானம் எனும் நாவல் என்னை மாற்றிய நாவல்களில் ஒன்று. என்னிடம் இருக்கும் வன்முறையை அது ஒழித்து விட்டது.. முப்பது ஆண்டுகளுக்கு முன் இதை படித்திருந்தால் , என் வாழ்க்கை  வேறு மாதிரி இருந்திருக்கும்.. ஆனால் என் நாவல்கள் இதேபோலத்தான் இருந்திருக்கும் .பக்திமானாக இருந்து கொண்டே , பாலியலை எழுதினாரே வெங்கட்ராம். அவரைப்போல என் வாழ்க்கை இருந்திருக்கும்..

என்னை மாற்றிய இன்னொரு நாவல் , மொராக்கோ எழுத்தாளர்  தகர் பென் ஜெலுன் எழுதிய ஃபிரஞ்ச் நாவலான This Blinding Absence of Light ..இதுதான் என் ஆன்மீக பார்வையை உருவாக்கிய நாவல் எனலாம்..



தமிழ் நாட்டைப்போல இலக்கிய அறிவு இல்லாத இடம் உலகிலேயே இருக்காது என நினைத்தேன்...அதை மாற்றிய நாடுகள் துருக்கியும் தாய்லாந்தும்... நம் வாசிப்புகூட அங்கு இல்லை... அந்த எழுத்தாளர்களை ஒப்பிட்டால் நம் ஊரில் இருக்கும் சில எழுத்தாளர்களை கோயில் கட்டி கும்பிடலாம்..

சௌதி அரேபியாவில் அப்துல் ரஹ்மான் முன்ஃப் என ஒரு எழுத்தாளர் இருந்தார்.. அவர் கருத்துகள் பிடிக்காத அரசு அவரை நாடு கடத்தியது.. அங்கே அந்த அளவுக்கு எழுத்தாளர்களை குறித்த சென்சிப்லிட்டி இருக்கிறது... நம் ஊரில் எழுத்தாளனை யாரும் கவனிப்பதில்லை....பிற்காலத்தில் அவரை மீண்டும் அழைத்தார்கள்>. அவர் போகவில்லை..



இங்கே பல பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் எழுத வேண்டி இருக்கிறது..

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கண் இழந்த நிலையிலும் எழுகின்ற இன்னிசை குறித்த காட்சி வருமே... அதுதான் ஊக்கசக்தியாக இருக்கிறது...

எழுத்துக்கு ஒருவித தீவிர, தேவை.  நான் அந்த காலத்தில் அடிக்கடி தருமு சிவராமுவை சந்திப்பது வழக்கம். ஒன்றாக தேனீர் அருந்துவோம். ஒரு முறை நான் அவர் கவிதையை குறை கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக சொல்லி டீ அருந்த மறுத்தார்... உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்குமே.. நான் குறை சொல்லவில்லையே என்றேன்.. அதன் பின் வீட்டுக்கு அழைத்து சென்றார். என் கட்டுரை வந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்த பின்பே சமாதானம் ஆனார். அந்த அளவுக்கு தீவிரமாக இருந்தவர் அவர்...

கொரில்லா படைபோல எழுத்தாளர்களும் வாசகர்களும் செயல்பட வேண்டிய சூழல்தான் இங்கு இருக்கிறது..

டீவி பார்ப்பதை குறைத்தால் படிக்க நேரம் கிடைக்கும். படியுங்கள்...

இவ்வாறு சாரு பேசினார்...

சாருவின் துணிச்சலுக்கு தான் எப்பவும் ரசிகர் என்றார் அழகிய சிங்கர்

அடிக்கடி சாருவை வைத்து கூட்டம் நடத்தும் அளவுக்கு கூட்டம் வெகு சிறப்பாக நடந்ததாக அமைப்பாளர்கள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்...








Saturday, August 1, 2015

ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி


தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.
பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.
ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.
அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.

அதை தொடர்ந்து எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.

அதற்கு ரஜினி கூறிய பதில்:

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.
பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்," என்றார்.


அடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது?" என கேட்டார் ராஜா..


அதற்கு பதிலளித்த ரஜினி, "1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்றார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேட்ட இளையராஜா ஒரு கணம் அமைதியாகிவிட்டார். அடுத்து, "சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்... சூப்பர்" என்றார்.

Thursday, July 16, 2015

மணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு


12. 07.2015ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

இலக்கியம் , அரசியல் , சினிமா என விர்வாக பேசினார்..
-________________________________________


முதலில் ஞாநி பேசினார்...

அவர் பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..


___________________________________


ஷோபா சக்தி

எனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,

 நான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )

ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல  இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) .  ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..

ஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்..  எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...

அவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை

அவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..
கடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..

எனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

இத்துடன் முடிக்கிறேன்..கேள்விகள் கேட்கலாம்

-________________________________________________


 ஞாநி  - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி,  திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் ,  நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்


ஷோபா

இந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )

இவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...

11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்...  நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..

 வலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..
அந்த கேள்வி...  நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..


இப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு


 ஞா நி ...அடுத்த கேள்வி...

ஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா

( பலத்த சிரிப்பு )

 ஞா நி ( சிரித்தபடி )  என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது


  ஞாநி

    நீங்கள் நடிக்கும் ஃபிரென்சு படத்தில் ஆசிய நாட்டில் இருந்து குடியேறுபவர்கள் குறித்த பிழையான செய்திகள் இருப்பதாக உங்களை குற்றம் சாட்டுகிறார்களே..

ஷோபா

அந்த படம் இன்னும் வெளி வரவே இல்லை.. இதெல்லாம் கற்பனையான குற்றச்சாட்டு.. என் செல்வாக்கை அந்த படத்தில் செலுத்தும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.. அவர் ஏற்கனவே பல படங்கள் எடுத்தவர்.. என்னை கேட்டு அவர் படம் எடுக்க மாட்டார்.. ஆனாலும் அதில் பிழையான செய்திகள் இருந்தால் எனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதை மறுக்கவில்லை.. ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை.. வந்ததும் பாருங்கள்..

என்னைப்பற்றி கிண்டலாக நண்பர்கள் சொல்வார்கள்;. நீ ஒரு ரகசிய இயக்க ஆளாக இருந்து போலிசிடம் மாட்டினால் , உண்மையை கறக்க ஒரு க்வார்ட்டர் போதும் என்பார்கள் ( பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு ) .. எனவே ரகசிய வேலைகளில் ஈடுபடும் அளவுக்கெல்லாம் என்னிடம் திறமை இல்லை..

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதே ஒரு காமெடி...இலங்கை தமிழ் உச்சரிப்பு சொல்லித்தர என்னை நியமித்து இருந்தார்கள்>.. அவ்வப்போது போய் சொல்லித்தருவேன்... ஆனால் நேரமின்மையால் அடிக்கடி போக முடிவதில்லை,,, ஏதேனும் பொய்யான காரணம் சொல்வேன்.. நான் இப்படி நடிப்பதை பார்த்து ,  நன்றாக நடிக்கிறானே என முடிவு செய்து  என்னை நடிக்க செய்து விட்டனர்  ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு  )..

( தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்வி கேட்டனர் )

இலங்கை பிரச்சனைக்கு என்னதான் தீர்வு/?

கூட்டத்தில் யாரையாவது பார்த்தால் அவருக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்பது நம் ஆட்களுக்கே உரிய தனி பண்பு ( பலத்த சிரிப்பு ) ..இப்படித்தான் ஒரு முறை குஷ்புவிடம் அரசியல் தீர்வு கேட்டார்கள்

ஞா நி - இப்ப குஷ்பு அரசியலுக்கு வந்து விட்டார்... அரசியல் கேட்பது தப்பல்ல ( பலத்த சிரிப்பு )

இந்திரா  , ராஜிவ் , அமிர்தலிங்கம் , ஜெயவர்த்தனே என பலராலும் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு கேட்டால் எப்படி ( பலத்த கைதட்டல் )

 நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. மீண்டும் ஓர் ஆயுத போராட்டத்துக்கு  நாங்கள் தயாராக இல்லை.. ஆயுதபோர் யாருக்கும் எந்த ஒரு சின்ன நன்மைகூட செய்யவில்லை...

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்..ஆனால் ஆயுத போர் என்பது நிலத்தை மட்டும் உழவில்லை..விதைகளையும் சேர்த்து உழுதது... விதையில் இருந்து முளைக்கும் செடிகளையும் சேர்த்து உழுது நாசமாக்கியது>.

போராட்டத்துகான காரணங்களையோ அவர்கள் நோக்கங்களையோ நான் எப்போதும் குறை கூறியது இல்லை..ஆனால் வழிகள் தவறானவை


உங்கள் தமிழ் வெகு அழகாக இருக்கிறது..இப்படி பேச எங்களும் ஆசை..ஆனால் முடியாது.. தமிழகத்தில் நாங்கள் பேசும் தமிழை கேட்டால் உங்களுக்கு கோபம் வருமா


இக்கரைக்கு அக்கரை பச்சை ... இலங்கையில் காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு குறைவு... ஆங்கிலேயர்கள் காலடி படாத இடங்கள் இலங்கையில் பல உண்டு... அந்த இட அமைப்பு சிக்கலானது என்பதால் ஆங்கிலேயர்கள் அங்கு வர விரும்பாமல் இருந்து இருக்கலாம்.. எனவே தமிழகத்தை விட அங்கு ஆங்கில மோகம் குறைவு...சரி...இருட்டாகி விட்டது... ஸ்விட்ச் என்பதை தமிழில் எப்படி சொல்வீர்கள்>.

(பொத்தான் ?  தெரியவில்லையே...ஸ்விட்ச்தான் தமிழ்- கூட்டத்தினர் குரல்)

இதற்கு எங்கள் தமிழில் பொருத்தமான பெயர் உண்டு... அதைத்தான் அன்றாடம் பயன்படுத்துகிறோம்..

ஆனால் எங்கள் கலாச்சாரமும் மாறி வருகிறது..முன்பெல்லாம் வளைகாப்பு எங்களிடம் இல்லை..இப்போது கொண்டாடுகிறார்கள்>. காரணம் டீவி சீரியல்கள் ( பலத்த சிரிப்பு )..சீனிவாசன் போன்ற வைஷ்ணவ பெயர்கள் முன்பெல்லாம் இல்லை.. இப்போது உங்கள் புண்ணியத்தால் அவை பிரபலமாகி வருகின்றன..

ஃபிரான்சில் வசிக்கும் என் உறவினர் வீட்டு பையன் அப்படியே தமிழக தமிழ் பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.... பிறகுதான் தெரிந்தது...அந்த தமிழுக்கு காரணம் தமிழக திரைப்படங்கள்... இலங்கை தமிழர்கள் எடுக்கும் பல படங்களில் நல்ல தமிழ் இருப்பதில்லை

 ஞா நி - இதில் இன்னொரு விஷ்யம்.. நம் ஊரில் நடந்த ஹிந்தி எதிர்ப்பின் காரணமாக சமஸ்கிருதம் ஒழிக்கப்பட்டது.. காரியதரிசி போன்ற சொற்கள் அழிந்து விட்டன..ஆனால் இலங்கை தமிழில் சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம்.. நம் ஊரில் சமஸ்கிரித இடத்தை ஆங்கிலம் பிடித்துக்கொண்டது


ஈழ எழுத்தாளர்கள் படைப்புகள் பெரும்பாலும் போர் சார்ந்தே இருப்பது ஏன்

நான் எல்லா வகையிலுமே எழுதுகிறேன்..அவை போதிய கவனம் பெறவில்லை.. ஆண் பெண் உறவு , நட்பு , காதல் என எல்லாம் என் எழுத்தில் இருக்கும்..


மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் , கமலின் தெனாலி ஆகியவை இலங்கையின் அரசியலை சரியாக பிரதிபலித்ததாக நினைக்கிறீர்களா..

தெனாலி அரசியலைப்பற்றி எதுவும் பேசவில்லை... அந்த படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மணி ரத்னத்தை பொருத்தவரை ஒரு படைப்பாளியாக அவர் மேல் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.. காட் ஃபாதர் படத்தை காப்பி அடித்து மூன்று படங்கள் எடுத்தவர் அவர்..

ஒரு மனிதன் முட்டாளாக இருக்கலாம்.. ஆனால் போலியாக இருக்கக்கூடாது. மணி ரத்னம் ஒரு ஃபேக் படைப்பாளி... ஜே ஜே சில குறிப்புகள் படித்தபோது என்ன எரிச்சல் ஏற்பட்டதோ அதே எரிச்சல் இருவர் படம் பார்த்தபோதும் ஏற்பட்டது.. முட்டாளாக இருப்பதில் ஒரு அழகு இருக்கிறது..ஆனால் ஃபேக் என்பது அருவருப்பானது


அதிஷா - சம கால இலக்கிய சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்

கேள்வி புரியவில்லையே

இப்போது எழுதுபவர்கள் குறித்த பார்வை

ஓ.. அதிஷா , லக்கி யுவா , வினாயக முருகன் போன்ற படைப்பாளிகளைப்பற்றி கேட்கிறீர்களா...  ( சிரிப்பு )

இப்போது நிறைய புத்தகங்கள் எழுதப்படுவதும் , பலரும் எழுதுவதும்  நல்லதுதான்.. ஆரோக்கியமான சூழல் நிலவுவதாகவே நினைக்கிறேன்

அம்பேத்கர் , பெரியார் போன்ற இந்திய தலைவர்கள் தாக்கம் இலங்கையில் எப்படி இருக்கிறது,..

பெரியார் தாக்கம் இங்கு மட்டும் இருக்கிறதா என்ன .. அவர் உழைப்பு , பணி என எல்லாவற்றையும் மறந்து விட்டு , சாதி மத இயக்கங்கள் தமிழகத்தில் வளர்வதை பார்க்க முடிகிறது...இது வருந்தத்தக்கது..

சாதி வெறி அதிகம் கொண்ட யாழ்ப்பாணத்தில் அம்பேத்கர் தாக்கம் குறைவாகவே இருந்தது.. எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு பெரியார் அறிமுகம் ஆகி இருந்தார்.. சிவாஜி ரசிகர்களுக்கு அதுவும் தெரியாது ( சிரிப்பு )>.

இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கான அங்கு இருக்கிறது... ஆனால் பெரியார் , அம்பேத்கார் போன்றோர் இல்லாததால் அங்கு அது வரவில்லை..
ஜாதி ஆதிக்கம்தான் அங்கு இருந்தது..

இலங்கையில் அறப்போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை/?

அறப்போராட்டம் தோல்வி அடைந்ததால் , ஆயுதபோராட்டம் தொடங்கியதாக பலர் நினைக்கிறார்கள்>. அங்கு அறப்போராட்டம் நடக்கவே இல்லை என்பதே உண்மை... காந்தி , நேரு போன்றோர் அறப்போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறைகளில் கழித்தனர்,,, அங்கு யாரும் அத்தனை ஆண்டுகள் சிறை சென்றதில்லை... தம் செல்வாக்கை அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தினர்...






Tuesday, July 14, 2015

பிரபாகரன் வலதுசாரியா - ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு

பிரபாகரன் வலதுசாரி சிந்தனை கொண்டவர்  என எழுத்தாளர் ஷோபா சக்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது...

12. 07.2014ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

ஞாநி பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..


___________________________________


ஷோபா சக்தி

எனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,

 நான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )

ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல  இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) .  ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..

ஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்..  எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...

அவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை

அவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..
கடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..

எனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

இத்துடன் முடிக்கிறேன்..கேள்விகள் கேட்கலாம்

-________________________________________________


 ஞாநி  - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி,  திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் ,  நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்


ஷோபா

இந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )

இவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...

11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்...  நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..

 வலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..
அந்த கேள்வி...  நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..


இப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு


 ஞா நி ...அடுத்த கேள்வி...

ஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா

( பலத்த சிரிப்பு )

 ஞா நி ( சிரித்தபடி )  என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது


( சர்ச்சைக்குரிய பிரெஞ்சு திரைப்படம் , மணிரத்னம் குறித்த பார்வை , தமிழக தமிழ் இலங்கை தமிழ் ஒப்பீடு , ஃபேக் படைப்புகள் , ஜேஜே சில குறிப்புகள் - இருவர் இன்னும் பல சுவையான விவாதம் அடுத்த பகுதியில் )


- தொடரும்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா