Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Saturday, May 30, 2020

டிஎம்எஸ் − இளையராஜா பரஸ்பர அவமானங்கள்


ராணி மேரி கல்லூரியில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.  பெண் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
    ஒருவர் கேட்டார். உங்கள் முதல் நாட்டு வெளிநாட்டு விஜயத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்


  முதல் விஜயத்தில் எவ்வளவோ பாராட்டுகள் கிடைத்திருக்கலாம். இனிய நிகழ்வுகள் நடந்திருக்கலாம்

   ஆனால் இளையராஜா இப்படி பதிலளித்தார்

   ஆயிரக்கணக்கான மக்கள் முன் எனக்கு இசையறிவு போதாது என டிஎம்எஸ் மட்டம் தட்டி பேசி அவமானப்படுத்தினார். என் படங்களில் பாடிக்கொண்டே இப்படி பேசியதை மறக்க முடியவிநில்லை என்றார்

    வருத்தமாக இருந்தது.

டிஎம்எஸ் பின்விளைவுகள் தெரியாமல் அப்படி பேசக்கூடியவர்தான். ஆனால் ஒரு கணத்திலேயே அதை மாற்றிக் கொள்வார்

   நான் ஒரு ராசி இல்லாத பாடல்தான் தன் மார்க்கெட்டை அழித்தது என கோபமாக பேசுவார். அடுத்த கணமே , அவர்களை குற்றம் சொல்லவில்லை. என் குரல் பிடித்ததால்தான் பாட வைத்தார்கள் என்பார்

டிஎம்எஸ் அப்படி பேசி இருக்ககூடாது. இளையராஜாவும் அதை பெருந்தன்மையாக மறந்திருக்கலாம்

  ஆனால் பிற்காலத்தில் பதிலடி கொடுத்தார்

   நான் வாழ வைப்பேன் படத்தில்  எல்லோரும் பாடுங்கள் என ஒரு பாடல்.

சிவாஜியின் ஆஸ்தான பாடகர் டிஎம்எஸ் பாடினார்

உங்களுக்கு பாடத் தெரியவில்லை என சொல்லிவிட்டு அதே பாடலை எஸ்பிபி யை பாட வைத்தார் இளையராஜா.

முந்தைய அவமானத்துக்கு பதிலடி

மிக மிக வருந்ததக்க நிகழ்வு

அதன்பின் டிஎம்எஸ்சுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை

எந்தன் பொன் வண்ணமே

பூப்போலே

நல்லவர்க்கெல்லாம்

அந்தப்புரத்தில் ஒரு

அம்மா நீ சுமந்த

அன்னக்கிளி உன்னை

தேன்மல்லி பூவே

நேரமிது நேரமிது

ஐம்பதிலும் ஆசைவரும்

எனபது போல பல பாடல்களை இந்த இணை கொடுத்தது

இவர்கள் பிரிவு நிகழ்ந்திராவிட்டால் மேலும் பல நல்ல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும்








Thursday, April 23, 2020

பெரியார் பட சரச்சை இளையராஜா விளக்கம்



ஒருவர் கீழ்மட்டத்தில் இருந்து முன்னேறி வநதால் அதை பலரால் ஜீரணிக்கமுடியாது
;இளையராஜா மீதான தாக்குதல்கள் இப்படிப்பட்டவையே

சில ஆண்டுகளுக்கு,முன் பெரியார் என்ற படத்துக்கு அவர் இசையமைககக மறுத்து விட்டார் என ஒரு தரப்பு புரளி"கிளப்பியது

இதை இந்துக்கள் வரவேற்கிறாரககள் என, பிஜேபி அறிவித்தது

ஆக இரு தரப்பாலும் அவருக்கு தொல்லைதான்

அது பொய்யான தகவல் என அவரே சொன்ன பின்னும் இந்துத்துவரககளும் விடவில்லை. பிறரும் விடவில்லை

ஜீ வி இதழில் இளையராஜா அளித்த விளக்கம் இதோ..

.......

ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்த சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அது போலவே பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை!...
...பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். 'இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திர போஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே படத்தை எடுத்துக் காட்டுங்கள். பிறகு பார்க்கலாம்' என்றேன்
அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்....
....நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும் சுயமரியாதையோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.
ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.
1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?
2. பெரியாரின் வரலாறா?
3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல....வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை...
....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்..."

Thursday, April 11, 2019

பெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்



ஒருவரை எப்படி அழைக்கிறோம் என்பதில் அவர் மீதான நம் பார்வை தெரியும்

உதாரணமாக ரஜினி இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்

ஒரு முறை ஒரு பாடலை எழுத கவிஞரை அழைத்து வா என்றார் இளையராஜா

கவிஞர்னு சொன்னா எப்படி.. எந்த கவிஞர்னு சொல்லுங்கய்யா என கேட்டார் உதவியாளர்

யோவ் கவிஞர்னு நான் சொன்னா அது கண்ணதாசனைத்தான் குறிக்கும் என்றார் ராஜா..

கண்ணதாசன் எம் ஜி ஆரை ஆண்டவனே என அழைப்பார்... எம் ஜி ஆரும் இவரை ஆண்டவனே என்றுதான் அழைப்பார்

கண்ணதாசன் அண்ணாவின் மீதான அன்பு காரணமாக தன் மகனுக்கு அண்ணாதுரை என பெயரிட்டார்

ஒரு முறை அண்ணா கவிஞர் இல்லம் வந்து பேசிக்கொண்டு இருந்தார்


அப்போது சிறுவன் அண்ணாதுரை அழுது அடம்பிடித்துக்கொண்டு இருந்தார்

“ டேய் அண்ணாதுரை,,,பேசாம இருக்கியா. இல்லை அடிவாங்கப்போறியா என சத்தம் போட்டார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , என்னை திட்டுவதற்கு நல்ல வழியை கண்டு பிடித்து இருக்கிறாயே..  என்றார்

அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. என பதறினார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன என்றார் ..

ஆனாலும் அன்று முதல் தன் பையனை துரை என அழைக்கலானார் கவிஞர்... ஒரு போதும் அண்ணாதுரை என அழைக்கவில்லை

Saturday, November 10, 2018

ஓர் எழுத்தில் மாறும் அர்த்தம் - இளையராஜா குறித்து மேத்தா ருசிகரம்


கவிதை உலகில் மு மேத்தாவுக்கு என தனி இடம் உண்டு.. புதுக்கவிதைகளுக்கு என தனி இடம் உருவாக்கி கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்

அதே நேரத்தில் அற்புதமான திரை இசை பாடல்களும் தந்தவர்


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ



படிச்சவங்க விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
படிக்காதவன் விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
புத்தகம் உள்ளது பையில அங்க
வித்தைகள் உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுஷன தாண்டா



கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்



என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு

என பல அற்புதமான வரிகள் தந்தவர் இவர்

..
--------------------------

இளையராஜாவின் செல்லப்பிள்ளை இவர்,,, அவருடனான சில சுவையான நிகழ்வுகள்

ஆகாய கங்கை படத்தில் இளைய ராஜா இசையில் எழுதினார்..


தேனருவியில் நனைந்திடும் மலரோ,,, என பாடல் ஆரம்பிக்கும்... 
அந்த பாடலில் இளையராஜா ஒரு மாற்றம் செய்தார்

 நீ நிலவோ... ஏன் தொலைவோ என்பது இவர் எழுதிய வரி,

 நீ என்ன நிலவோ... எட்ட முடியா தொலைவில் இருக்கின்றனயே என பொருள் தருகிறது,,, கவித்துவமாக இருக்கிறது...   ஒரு கவிதையாக சிறப்பாக இருக்கிறது...  ஒரு தனி கவிதை என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்

ஆனால் இது பாடல்.. அதுவும் பிரிவைப்பற்றிய பாடல்...   நிலவின் குணாதிசங்களை விட பிரிவைச் சொல்வதுதான் முக்கியம்

எனவே இதை இப்படி மாற்றினார் ராஜா... 

ஏன் தொலைவோ,.... நீ நிலவோ

ஏன் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறாய்?  நீ குளிர் பொருந்திய இனிமையான நிலவு என்பதால் இந்த தொலைவோ,,,

நச் என பொருந்துகிறது அல்லவா


இதே போல இன்னொரு சம்பவம்

சிறையில் மோகன் இருக்கிறார்.. ரேவதி வெளியில் இருந்து பாடுகிறார் , 

 நிலவைப்பார்த்தபடி மோகனுக்கும் பொருந்தும்படி பாடுகிறார்

பாடு நிலாவே.. தேன் கவிதை,, பூ மலர    என்பது அவர் எழுதிய வரி

இளையராஜா கேட்டார்,.. நல்ல வரிதான்.. ஆனால் சிறையில் இருக்கும் மோகன் இதை எப்படி பாட முடியும்,, அவருக்கு நிலா தெரியாதே 

ஒரே ஒரு எழுத்து மாற்றம் இந்த சந்தேகத்தை போக்கியது

இப்படி மாற்றப்பட்டது

பாடும் நிலாவே.. தேன் கவிதை... பூ மலரே

ஹீரோயின் பாடும்போது , பூ மலர்வதற்காக பாடுவாய் நிலவே என்ற அர்த்தம் வருகிறது

ஹீரோ பாடும்போது , ஹீரோயினை நிலவு என்றும் மலர் என்றும் வர்ணிப்பது போல வருகிறது’

தமிழ் அழகு,.. இசை இனிது.... மு மேத்தா இளையராஜா போன்றோரின் திறமை இனிது






Wednesday, December 30, 2015

இசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு

கவிஞர் மேத்தாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு ஆழமாக அமைந்திருந்தது.. ஆனால் ஊடகங்கள் உரிய கவனம் கொடுக்கவில்லை..

அவர் பேசியதாவது

 நான் தனிமையில் வாழ விரும்புவவன்.. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சிக்குகூட வர வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் நான் வராவிட்டால் , விருதே வேண்டாம் என மேத்தா உறுதியாக இருந்ததால் , வந்துள்ளேன்..

படங்கள் பார்ப்பதும் இல்லை.புத்தகங்கள் படிப்பதும் இல்லை.  என் கண்ணில் குறைகள் மட்டுமே படும்.. அதை சொன்னால் வருத்தங்கள் ஏற்படும். எனவேதான் இந்த முடிவு.

கற்றதினால் ஆய பயன் என இறைவனை வணங்குவதையே குறள் சொல்கிறது... ஏன் கற்றவனுக்கு சொல்கிறது... கொஞ்சம் படித்து பெரிய ஆள் ஆகி விட்டால் பழசை மறந்து விடுவார்கள்.. கடவுளையும் மறந்து விடுவார்கள்... ஆனால் படிக்காதவன் அவன்பாட்டுக்கு தன் வேலையை செய்தபடி இறைவனை வணங்கிக்கொண்டு இருப்பார்.. படிக்காதவனே மேல் என்பதே இந்த குறள்

அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனை குறிக்கிறது.. ஒலிதான் அனைத்துக்கும் ஆதாரம். அதுதான் இசையாக வெளிப்படுகிறது..

சிந்தனை ஒருபோதும் தெளிவுக்கு அழைத்து செல்லாது. குழப்பம் என்பது சிந்தனையின் ஒரு வடிவம். சிந்தனையற்ற நிலைதான் தெளிவு,

இசையிலும் இறைவன் சன்னிதானத்திலும் சிந்தனை நின்று விடுகிறது...

'இசையின் பயனே இறைவன்தான்' என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்

Sunday, December 20, 2015

ஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை



இளையராஜா இப்படி பேசுகிறார்.

இளைஞர்கள் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பது பெருமை அளிக்கிறது.  நம்மிடம் இருக்கும் மனித நேயத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு பிரச்ச்னையை நம் மீது ஏவி விட்டானோ என தோன்றுகிறது

( இப்படி சொல்லி விட்டு நிவாரண பணிகள் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார் )

ஒரு நிருபர் சம்பந்தமே இல்லாமல் வேறொரு பிரச்சனை ( சிம்பு பாடல் ) குறித்து கேட்கிறார்...டென்ஷனான ராஜா , உனக்கு அறிவு இருக்கா,, நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்.. இந்த நேரத்தில் இதையா கேட்பது என்கிறார்..


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ போகும் இடத்தில் இப்படி கேட்டால் வேறு யாராவதாக இருந்தால் இன்னும் கடுமையாக நடந்து இருப்பார்கள்... ராஜா ஓரளவு பொறுமையாகத்தான் பேசுகிறார்..

அறிவு இருக்கா என கேட்டவுடன் , அந்த நிருபர் சாரி சொல்லி இருக்கலாம்.. ஆனால் அறிவு இல்லாததால்தான் சார் கேட்கிறேன் என தொடர்ந்து இடக்காக பேசுகிறார்...

அந்த நிருபரிடம் இதற்கு மேல் பேசி பயனில்லை என சற்று கூலாக அறிவு இல்லை என எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய் என கிண்டலாக கேட்கிறார் ராஜா...

இதை கட் எடிட் செய்து , அறிவு இருக்கா என ராஜா கேட்பதை மட்டும் ஒளிபரப்பு செய்து அவர் தேவையில்லாமல் கோபப்பட்டதுபோல பிரச்சாரம் செய்கின்றன ஊடகங்கள்..இதுதான் ஊடக அறம்போலும்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செல்லும்போது இப்படி ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்??

Saturday, August 1, 2015

ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் - இளையராஜா நெகிழ்ச்சி


தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.
பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.
ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.
அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.

அதை தொடர்ந்து எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.

அதற்கு ரஜினி கூறிய பதில்:

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.
பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்," என்றார்.


அடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது?" என கேட்டார் ராஜா..


அதற்கு பதிலளித்த ரஜினி, "1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்றார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேட்ட இளையராஜா ஒரு கணம் அமைதியாகிவிட்டார். அடுத்து, "சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்... சூப்பர்" என்றார்.

Friday, November 21, 2014

தனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்தி இயக்குனர் புகழாரம்

பா , சீனி கம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பால்கி இப்போது அமிதாப் , தனுஷ் நடிப்பில் ஷமிதாப் எனும் படத்தை இயக்கி வருகிறார். அவருடன் பேட்டி

__________________________________

இந்த படம் எப்படி நிகழ்ந்தது?

 அமிதாப் பச்சனின் 69ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல காரில் பயணித்துக்கொண்டு இருந்தேன் . பயங்கர டிராபிக்.. கார் நகரவில்லை. அவருக்கு என்ன பரிசு அளிப்பது என யோசிக்கலானேன். வைன் அளிக்கலாமா என்றால் அவர் மது அருந்த மாட்டார். பூங்கொத்து சரிப்படாது.. என்ன செய்வது என யோசிக்கும்முன் அவர் வீடு வந்து விட்டது. அப்போதுதான் இந்த படத்தின் கதையை அவருக்கு சொன்னேன். அவருக்கும் பிடித்துப்போய் நடிக்க ஒத்துக்கொண்டார். அந்த கதையே அவர் பிறந்த நாள் பரிசாக அமைந்து விட்டது. அப்போது வேறு யாரெல்லாம் நடிப்பது என தீர்மானித்து இருக்கவில்லை

இந்த படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத , காது கேளாத கேரக்டரில் நடிக்கிறாராமே?

நான் சொல்லும்வரை இது போன்ற செய்திகளை நம்பாதீர்கள். நான் தனுஷின் பெரிய ரசிகன் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிகொள்கிறேன். காதல் கொண்டேன் படத்தில் இருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். யார் மாதிரியும் இல்லாத , தனித்துவமான நடிகர் அவர். படம் பார்த்தபின் , அவரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என உங்களுக்கு புரியும். படம் எடுப்பது என்பது கடினமான வேலை. சுவையான கருவோ , கதாபாத்திரமோ அமையாமல் படத்தை ஆரம்பிக்க மாட்டேன்.

படத்தை பற்றி ஏதாவது பேசி விளம்பரப்படுத்துவதுதானே பாலிவுட் ஸ்டைல்? நீங்களோ எதுவும் சொல்ல மறுக்கிறீர்களே?

தியேட்டர் செல்லும் ரசிகனுக்கு படம் ஆச்சர்யம் அளிக்க வேண்டும். இப்போதே எல்லாம் சொல்லிவிட்டால் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது? படத்தின் சுவாரஸ்யத்தன்மைதான் ரசிகனை ஈர்க்க வேண்டும் , விளம்பரம் அன்று. யாரையும் வற்புறுத்தி படம் பார்க்க வைக்கக்கூடாது.

கமலின் மகள் என்பதால் அவர் பெயரை காப்பாற்ற வேண்டுமே என அக்‌ஷரா பதட்டமாக இருந்தாரா?

 நான் பார்த்தவர்களிலேயே அமைதியான நடிகர் என்றால் அவர் அக்‌ஷராதான். 150 படம் நடித்து முடித்தவர் போல அமைதியாக காணப்பட்டார். துளியும் பதட்டம் இல்லை. அவர் அம்மா சரிகா சில நாட்கள் துணைக்கு வந்தார். அக்‌ஷராவின் துணிச்சலைப்பார்த்து இனி தான் வர வேண்டியதில்லை என தீர்மானித்து விட்டார்.  இந்த படத்தில் மூன்று கதாநாயகன்கள். அவர்களில் அக்‌ஷராவும் ஒருவர்

இளையராஜாவுடன் உங்கள் உறவு குறித்து ?

அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அவர் விரும்பும்வரை , அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். என் படங்களில் பின்னணி இசைக்கு முக்கிய இடம் இருக்கும்.  அந்த வகையில் என் படத்துக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கிறது அவர் இசை..

தனுஷ் , இளையராஜா, பிசி ஸ்ரீராம் , அபினயா என ஏராளமான தமிழர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள்.. இது தமிழர்கள் பற்றிய படமா?

இல்லை.. இது ஹிந்தி படம். தமிழர்கள் பணியாற்றுகிறார்கள்.. அவ்வளவுதான்..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா