Monday, October 7, 2013

ரஜினிப்பட இயக்குனரை கடிந்து கொண்ட இளையராஜா-இயக்குனரின் நச் விளக்கம்

ரஜினி படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் , பாட்ஷா அண்ணாமலை அல்லது ஆறிலிருந்து அறுபது வரை என நீங்கள் சொல்லக்கூடும்.

மகேந்திரன் படங்களில் கேட்டால் முள்ளும் மலரும் , உதிரிப்பூக்கள் என சொல்லக்கூடும்.

ஆனால் எனக்கு இந்த இருவர் படங்களில் பிடித்த படம் ஜானிதான்..
பல ப்ழைய ரஜினி படங்களை மறு திரையிடல்களின்போது தியேட்டர்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஜானி படத்தை தியேட்டரில் பார்த்ததே இல்லை. ஒரு நாள் தற்செயலாக சன் டீவியில் பார்த்தேன் . லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பது போல முதல் முறையே பிடித்து விட்டது.

அதன் பின் பல முறை பார்த்து வருகிறேன்.

அந்த படத்தின் ரசிகன் என்ற முறையில் அடுத்த கட்டமாக அதன் திரைக்கதை நூல் படித்தேன். வாவ்...சினிமா அனுபவத்துக்கு சற்றும் குறைவில்லாமல் வாசிப்பு அனுபவம் இருந்தது..

படத்தின் வெற்றிக்கு இளையராஜா இசை , ஸ்ரீதேவி நடிப்பு என பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் பார்பர் ரஜினியின் கேரக்டரைசேஷன் தான். அந்த கேரக்டர் அடையும்  வளர்சிதை மாற்றத்தை காட்ட எடுக்கப்பட்ட சிரத்தை , திரைக்கதை வடிவில் படிக்கையில் துல்லியமாக தெரிகிறது.

அடி செருப்பால என கோழியை திட்டுவது போல அறிமுகமாகும் அந்த கேரக்டர் ஒரு பார்பர். பொறுப்பற்றவர் . கருமி. பின் காதல் வயப்படுவது . யாரோ செய்யும் தவறுக்காக கஷ்டப்படுவது, பிறகு உண்மையிலேயே குற்றம் செய்வது , பெண்களை வெறுப்பது , பிறகு பெண்மையின் உன்னதத்தை உணர்வது என கல்ர்ஃபுல் கேரக்டர்.

ஒரு காட்சியில் இவர் இன்னொருவருக்கு தன் பார்பர் ஷாப்பில் ஷேவ் செய்து கொண்டு இருப்பார். அப்போது உதவியாளர் ஏதோ தவறு செய்வார். அப்போது பார்பர் ரஜினி டென்ஷன் ஆகி கத்துவார்.. “ வேலையை ஒழுங்கா செய்.. அக்கறை இல்லாட்டி இங்க என்ன செரைக்கிறதுக்கா வர்ற? “ என்பார்.. இதை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது.

இந்த புத்தகத்தின் தனி சிறப்பு என்னவென்றால் , திரைக்கதையை மட்டும் கொடுக்காமல் , மகேந்திரன் ஆங்காங்கு அந்த காட்சிகள் குறித்த தன் அனுபவங்களையும் எழுதி இருக்கிறார். மிக சுவாரஸ்யம்.

ஒரு காட்சியில் ஸ்ரீதேவி தன் காதலை கூறுவார், சில காரணங்களை மனதில் வைத்து ரஜினி மறுப்பார் என்பது போல காட்சி போகும். மிகவும் பாராட்டப்பட்ட காட்சி இது.

அந்த காட்சி முடிந்தவுடன் ரஜினியும் , மகேந்திரனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போது ரஜினி சொன்னாராம் “ஸ்ரீதேவி ரொம்ப நல்ல பெர்ஃபார்ம் பண்ணாங்க சார்.  அவங்களை மிஞ்சிக்காட்டணும்னு நான் டிரை பண்ணி பார்த்தேன். முடியல சார். அவங்க என்னை தோற்கடிச்சுட்டாங்க”


மகேந்திரன் நினைத்தாராம்... சக கலைஞரை மிஞ்ச வேண்டும் என ஓவர் ஆக்ட் செய்து இருந்தால் அந்த காட்சியே கெட்டுப்போய் இருக்கும். அண்டர்ப்ளே செய்து விட்டுகொடுத்து நடித்ததால்தான் , அந்த காட்சி சோபித்தது என ரஜினியைப்பற்றி பெருமையாக நினைத்தாராம்..

அந்த காட்சியை பாருங்கள்... ரஜினி பவ்யமாக நடித்து இருப்பதையும் இளையராஜாவின் இசையையும் கவனியுங்கள்..



இந்த படத்தில் இளையராஜா ஃபுல் ஃபார்மில் இசை அமைத்து இருப்பார். எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். அதில் ஒரு பாடலை சரியாக படம் எடுக்கவில்லை என கோபித்து கொண்டாராம்.

அந்த பாடல்



அந்த பெண் பாடுவது போல எடுத்து இருக்க வேண்டும். இப்படி எடுத்தது தவறு என ராஜாவுக்கு கோபமாம். ( தன் நண்பன் இளையராஜா கோபித்தார் என உரிமையுடன் சொல்லி , மகேந்திரன் இதை சொல்கிறார்.. இசை அமைத்தோமோ போனோமா என்று இல்லாமல் , தன் இசை எப்படி படம் ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதில் அவர் காட்டிய அக்கறை வியக்க வைத்தது )
மகேந்திரன் விளக்கினாராம். அந்த பெண் தன் காதலை ஏற்கனவே மறைமுகமாக கண்ணியமாக  சொல்லி விட்டாள். இப்போது நேரடியாக பாட்டு பாடி சொன்னால் , அந்த கேரக்டரின் கண்ணியம் பாதிக்கப்படும், அதேபோல , அப்படி நேரடியாக சொன்னால் , ரஜினி கேரக்டர் அதை மறுக்கும் சூழ்னிலை உருவாகும். அதனால் அவள் மனதில் பாடல் ஒலிப்பது போல அமைத்தேன் என்று சமாதானப்படுத்தினாராம்.


ஆனால் இன்னொரு பாடல் எடுக்கப்பட்ட விதம் , அனைவருக்கும் பிடித்து பாராட்டினாலும் மகேந்திரனுக்கு அதில் திருப்தி இல்லையாம். வேறு மாதிரி எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். அது என்ன பாடல் என்பதை புத்தகத்தில் காண்க.

அதே போல , ஒரு லாஜிக் மீறல் தவறுதலாக இடம் பெற்று விட்டதாக இத்தனை ஆண்டுகள் கழித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.  ஒரு குறிப்பிட காட்சியை சொல்லி, அதற்கு சமாதானங்கள் சொல்லலாம். ஆனால் அது தவறு..என் மேல்தான் தவறு என இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிப்படையாக சொல்லும் அவர் பெருந்தன்மை மலைக்க வைத்தது.. அது என்ன காட்சி என்பதையும் புத்தகத்தில் காண்க..

அந்த படத்தின் ஆடைகளை ஓவியர் ஜெ... ( ஜெயராஜ் ) வடிவமைத்தார் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்..


ஒரு காட்சியை எடுக்க தயாராகும்போது ஒரு ஆங்கில புத்தகத்தை தற்செயலாக பார்த்தாராம். அதன் தலைப்பு அந்த சீனுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றவே அந்த புத்தகத்துக்கு ஒரு ஷாட் வைத்தாராம்.. அந்த காட்சி பவர்ஃபுல்லாக இருக்கும்.

ரஜினி தன் காதலியுடன் ஷாப்பிங் போகும்போது , ஒரு பணக்கார இளைஞன் வருவான். அந்த சூழ் நிலையில் அந்த புக் காட்டப்படும். புத்தக பெயர் FUTURE SHOCK...  :)

வழக்கமாக படம் எடுத்து முடித்த பின் பின்னணி இசை சேர்ப்பார்கள்..இந்த படத்தில் குறிப்பிட காட்சிக்க்கு முதலில் இசை அமைத்து விட்டு , அதற்கேற்ப படமாக்கினார்களாம்..

இப்படி பல சுவையான தகவல்கள்...ஒவ்வொரு சீனையும் செதுக்கிய நேர்த்தி என இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது.

சினிமாவைப்பற்றி அறிந்து கொள்ள ஒரே ஒரு புத்தகம்தான் வாங்க முடியும் என்றால் இந்த புத்தகம் வாங்குங்கள்..

வெர்டிக்ட் - ஜானி--------லவ்லி 

வெளியீடு - சாருப்ரபா பதிப்பகம்

5 comments:

  1. வெளிநாட்டில் உள்ளவர்கள் வாங்க ஏதாவது வசதி இருக்கின்றதா ?

    ReplyDelete
  2. oorukku ezuthtan solli on nai pozappa keduthukatha!

    ReplyDelete
  3. Hi,
    What is the book title...?
    Where I can buy this in chennai.?
    Please suggest.....waiting for reply.............

    ReplyDelete
  4. வணக்கம்,

    புத்தகத்தின் தலைப்பு என்ன என்று சொல்ல முடியுமா

    சென்னையில் எங்கு வாங்கலாம்

    எங்கு கிடைக்கும்.....

    புத்தக கண்காட்சியில் தேடினேன் இல்லை......

    ReplyDelete
    Replies
    1. ஜானி திரைக்கதை என்பது புத்தக பெயர்.. சாருபிரபா பதிப்பகம்

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா