Monday, April 6, 2020

கம்பனும் பேரறிஞர் அண்ணாவும்

கம்பனை தமிழகத்தில் பிரபலப்படுத்த பலர் உழைத்தனர். உழைத்து வருகின்றனர்

அவர்களுள் அறிஞர் அண்ணாவுக்கு முக்கிய இடம் உண்டு

வாசிப்பு பழக்கம் அதிகமற்ற அன்றைய சூழலில் கம்பனை ஒரு விவாதப் பொருளாக்கியது அறிவுலகுக்கு பெருமை சேர்ப்பது

அவர் கம்பனின் கவித்திறனை குற்றம் சொல்லவில்லை. சில பகுதிகள் தமிழ்ப்பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்றார்
அதை வைத்து விவாதங்கள் நடந்தன. கம்பன் மக்களிடம் பரவலாக சென்றடைந்தான்

அது பழைய கதை;
ஆனால் இன்றும்கூட கம்பனை திட்டுவோர் உண்டு

இப்படி  தன்னை திட்டுவார்கள் என கம்பனே யூகித்து இருக்கிறான் என்பது,ஓர் ஆச்சர்யம்


இதோ அவனது பாடல்

.வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.


உலகம் என்னைத் திட்டும். என் மேல் மாசு கற்பிக்கும். ஆனாலும் இதைப் படைக்கிறேன். ஏன் தெரியுமா ?

பொய்மையற்ற மேதைமையால்"படைக்கப்பட்ட இந்த காவியம் மக்களை அடைய வேண்டும். அதனால்தான் திட்டுவார்கள் என தெரிந்தும் படைக்கிறேன்

சூப்பர்ல ?

இதில் இன்னொரு ட்விஸ்ட்

சிலர்,இப்பாடலுக்கு இன்னொரு,விளக்கமும் தருவதுண்டு

பொய்யில்,புலவர் என,வள்ளுவரைச் சொல்வோமல்லவா

குறள் நெறியை மக்களிடம் கொண்டு சொல்லவே இதை எழுதுகிறேன் என்ற பொருளும் இதற்குண்டு

கம்பராமாயணத்தில் குறள்,அடிப்படையிலான பாடல்கள் ஏராளம்

கொரோனாவில் தப்பி பிழைத்தால் அவற்றை எழுத ஆசை





1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா