Tuesday, September 28, 2010

அயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைமேக்ஸ் 30ந்தேதி

அயோத்தி பிரச்சினையை இழுத்து கொண்டே போவதில் அர்த்தம் இல்லை.
மசூதியா , கோவிலா என முப்பதாம் தேதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வட மா நிலங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இன்று நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பிரச்சினையில் இருக்கும் இடம்தான் இது. இப்போது கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது..
கிளைமேக்ஸ் வேண்டாம் என நினைத்தவர்களும் அதிகம் பேர் உண்டு. அவர்கள் தீர்ப்புக்கு தடைவரும் என எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு இனி வேலையில்லை..

ரமேஷ் சந்திர திர்பாதி என்பவர் , தீர்ப்பு ஒத்தி போடப்பட வேண்டும்,கோர்ட்டுக்கு வெளியே பேசி முடிக்க முயல வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதன் மேல் விசாரணை நடந்த்து..
கோர்ட்டுக்கு வெளியே முடித்து கொண்டால் நல்லத்துதான். அதற்காக சும்மா ஒத்தி போட்டுகொண்டே இருக்க முடியாது என்று முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் வந்து விட்ட்து. ஒரு நீதிபதி ஓய்வு பெற போகிரார் எனப்தால், உடனடியாக தீர்ப்பை வழங்குமாறு ஸ்பெஷல் பெஞ்சுக்கு கோர்ட் உத்தரவிட்ட்து..
சம்பந்தப்பட்டவர்கள் தீர்ப்பு உடனடியாக வருவதை வரவேற்கின்றனர். தீர்ப்புவந்தால் சமூக அமைதி குலையும் என பயந்தால் எந்த தீர்ர்ப்புமே வர முடியாது என அவர்கள் வாத்திற்கு வெற்றி கிடைதுள்ளது..
எனவே அலஹாபாத் உயர் நீதிமன்றம் , முப்பதாம் தேதி ( வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க இருக்கிறது..
எந்த தீர்ப்பு வந்தாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. அப்பீல் எல்லாம் இருக்கும்.. எனவே இப்போது பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்து கொளவதே அரசின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்...

1 comment:

  1. என்றாவது ஒரு நாள் இந்தப் பிரச்சினையை சந்தித்தே ஆகவேண்டும்.வரலாறு அதன் வழியில் நடக்கட்டும்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா