Thursday, November 11, 2010

இதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ சிறுகதை )

எட்கர் ஆலன் போ…  ஒவ்வொரு வரியையும் ரசிக்க வைப்பவர் இவர்.. திகில் கதை மன்னர்….
இவர் எழுததை படிப்பது ஒரு தனி அனுபவம்… ஒவ்வொரு விஷயதையும் கவனித்து எழுதி, அவற்றை மறக்க முடியாமல் செய்பவர்..
அவர் கதைகளில் , ஒன்றை இங்கே தமிழில் தருகிறேன்
*************************************************************
இதயம் பேசுகிறது
***********************************************************************************

என்னை பைத்தியக்காரன் என நீங்கள் நினைப்பது தவறு,
வினோதமான ஒரு நோயால் நான் பீடிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நோய் எனக்கு நல்லதுதான் செய்து இருக்கிறது.
ஏதாவது காய்ச்சல் வந்தால் , நம் புலன்கள் பாதிக்கப்படும், மந்தமாகும்.
ஆனால் இந்த நோய் என் புலன்களை மேன்மைபடுத்தி இருக்கிறது.
குறிப்பாக கேட்கும் சக்தி எனக்கு நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது.
உங்களால் கேட்க முடியாதவற்ரை கூட என்னால் கேட்க முடியும். பூமியின் ஆழத்தில் இருந்தும், வானத்துக்கு அப்பால் இருந்தும் பல விஷ்யங்கள் என் செவியை அடைந்தவண்ணம் உள்ளன.
என்னைபோய் பைத்தியக்காரன் என்கிறீர்கள்.
நடந்ததை எவ்வளவு தெளிவாக, விரிவாக சொல்கிறேன் என்று பாருங்கள். அதன்பின் நீங்களே முடிவு செய்யுங்கள். நானா பைத்தியக்காரன்?
ஒரு பைத்தியக்காரன் இவ்வளவு தெளிவாக செய்ததை சொல்ல முடியுமா ?
அந்த எண்ணம் முதன்முதலில் எப்போது ஏற்பட்டது என சொல்வது கடினம்.ஆனால் அந்த எண்ணம் ஏற்பட்டபின், இரவுபகலாக அந்த எண்ணம் என்னை ஆக்கிரமித்து விட்டது.
அந்த கிழவன் மேல் எந்த கோபமும் இல்லை. எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவன் எனக்கு எந்த தீங்கும் செய்ததில்லை. எந்த இழிவும் செய்ததில்லை. அவன் சொத்து மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. வேறு கொடுக்கல் வாங்கல் தகறாரும் இல்லை.
பிறகு என்ன?
அவன் கண்கள்.
அதுதான் பிரச்சினை என நினைக்கிறேன். ஆமாம். அதேதான்.
பிணம் தின்னி கழுகின் பயங்கரமான கண்களை பார்த்து இருக்கிறீர்களா? இல்லை என்றால் அவன் கண்ணை பார்த்தால் போதும்.
அவன் கண்களில் ஒன்று .. வெளிறிய நீல நிறத்தில், மெல்லிய ஒரு திரையால் மூடப்பட்டு , பயங்கரமாக இருக்கும்.
அந்த கண் என் மேல் படும்போதெல்லாம், என் ரத்தம் உறைந்து விடுவது போல இருக்கும். உடம்பு நடுங்கும்.
மிகவும் யோசித்த பின் தான் அந்த முடிவுக்கு வந்தேன்.
அந்த கண்ணில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.. அந்த கிழவனை போட்டு தள்ளுவதுதான்..
இதை சொன்னதுமே முடிவு கட்டி இருப்பீர்கள்.. நான் ஒரு பைத்தியக்காரன் என்று.
ஒரு பைத்தியக்காரனுக்கு எதுவும் தெரியாது. என் திட்டமிடலையும், முன் யோசனையும், மிகுந்த கவனத்துடன் நான் நினைத்தை செய்து முடித்ததையும் நேரில் பார்த்து இருந்தால் , என்னை பைத்தியக்காரன் என சொல்ல மாட்டீர்கள்.
ஒரு வாரமாகவே அவனை கொல்ல முயன்று வந்தேன். ஒவ்வொரு இரவிலும், நள்ளிரவில், அவன் அறைக்கதவை மெதுவாக- மிக மெதுவாக திறப்பேன். கையில் இருக்கும் விளக்கை அணைத்து வைத்து இருப்பேன்.
எவ்வளவு கவனமாக செயல்படுகிறேன் என்பதை நீங்கள் பார்த்து இருந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.அவன் தூக்கத்தை கெடுத்து விடாத அளவுக்கு மிக கவனமாக எனது ஒவ்வொரு அசைவும் இருக்கும்.
போதிய அளவு கதவை திறந்ததும் , மெதுவாக கைவிளக்கை ஆன் செய்வேன். ஆன் செய்யும் சப்தம் எனக்குகூட கேட்காது.. மெதுவாக… கவனமாக…
கைவிளக்கின் ஒளிக்கற்றை அந்த வல்லூறு கண்ணில் படுமாறு செய்வேன்.
இது போல ஏழு இரவுகள்- நள்ளிரவு – செய்தேன். ஒவ்வொரு முறையும் அந்த கண் மூடியே இருந்தது. எனவே என் பணியை என்னால் செய்ய முடியவில்லை.
மீண்டும் சொல்கிறேன். எனக்கு அந்த கிழவன் மீது எந்த கோபமும் இல்லை. அந்த கண் தான் என் பிரச்சினை. .  கண் மூடிய நிலையில் அந்த கிழ்வனை எதுவும் செய்ய விரும்பவில்லை. கண் மேல் இருக்கும் கோபத்தில் அவனை எதுவும் செய்ய விரும்பவில்லை.
பகல் பொழுதில் அவனுடன் ஜாலியாக பேசுவேன்.. அரசியலில் இருந்து, சிறுமிகளிடம் கொடுரமாக நடக்கும் அப்பாவிகளுக்கு நடக்கும் அநீதிகள் வரை பல விஷயங்களில் கருதுக்களை பரிமாறிக்கொள்வோம்.
கிழவனுக்கு என் மேல் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை.
எட்டாவது நாள். வழக்கத்தைவிட கூடுதல் கவனமாக இருந்தேன். கதவை மெதுவாக திறந்தேன். கடிகாரத்தின் நிமிட முள் மெதுவாக நகரும் அல்லவா. அதை விட மெதுவாக என் கரங்கள் செயல்பட்டன,
கண்டிப்பாக என் எண்ணம் நிறைவேறும் என தோன்றியது. என் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளாமல் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தான் அவன்.
இல்லை ..  நான் வருவதை அவன் உள்ளுணர்வு மூலம் அறிந்து விட்டான் என நினைக்கிறேன். வேகமாக அசைந்தான். புரண்டு படுத்தான்.பயந்து போய் நான் பின் வாங்கி இருப்பேன் என நினைப்பீர்கள்..
இல்லை..அந்த இருட்டில் அவன் என்னை கவனிக்க முடியாது என எனக்கு தெரியும். மெதுவாக கதைவை திறந்து, விளக்கை ஆன் செய்தே,, ஆன் செய்வதற்கு முன் கை அதில் மோதி மெல்லிய சப்த்ம் எழுப்பி விட்டது..
“ யாரது ? “ கிழவன் திகிலடைந்த குரலில் கேட்டான்.. படுக்கையில் அமர்ந்து கொண்டான்.,
நான் ஒன்றும் சொல்லவில்லை..  ஒரு மணி நேரம்.. ஒரு சிறிய அசைவு கூட இல்லாமல் காத்து இருந்தேன், அவனும் படுக்கவில்லை. அமர்ந்தபடியே தூங்காமல் இருந்தான். ஒவ்வொரு நாளும் நான் இப்படித்தான் இருக்கிறேன் என்பது அவனுக்கு தெரியாது.
ஒரு மெல்லிய புலம்பல் ஓசை சத்தம், தேம்பி அழும் ஓசை கேட்க தொடங்கியது. இது வலியாலோ , துன்பத்தாலோ எழும் ஓசை அல்ல . துன்பம் வரப்போவதை அறியும் உயிர் தன் ஆன்மாவின் அடித்தளதில் இருந்து எழுப்பும் அவல ஓசை.
இந்த சத்ததை நான் நன்றாக அறிவேன். ஊர் உறங்கிய பின், நிலவும் உறங்கிய பின், நள்ளிரவு நேரங்களில் என் ஆன்மா இப்படி வேதனை குரல் எழுப்புவதை நான் பலமுறை கேட்டு இருக்கிறேன்.
இப்போது அதே பயங்கரமான , தேம்பல் ஒலி. கிழவன் தற்போது எந்த அளவுக்கு நடுங்கி கொண்டு இருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.. வரப்போகும் அழிவை நினைத்து அவன் உயிர் துடிப்பதை நினைத்தால் பாவமாக இருந்தது.
மெல்லிய சத்தம் கேட்டு எழுந்த அவன் பிறகு தூங்கவே இல்லை. சிறிதாக ஆரம்பித்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவ்னை ஆக்கிரமிது விட்டது.
“ ஒண்ணும் பயப்பட வேண்டாம். எலி எதாவது ஓடி இருக்கும் . அதுதான் அந்த சப்தம். “ “ காத்து அடிச்சி இருக்கும்..இதுக்கு போயி பயப்படலாமா “ அவன் ஏதேதோ சமாதானம் சொல்லி தைரியப்படுதிகொள்ள முயன்றான்.
வீண் முயற்சி. எல்லாமே வீண். சாவு அவனை நெருங்கி கொண்டு இருக்கி்றது, தன் இருள் கரங்களால் மரணம் அவனை தழுவ துடிக்கிறது.
வெகு நேரம் காத்து இருந்த பின், கைவிளக்கை ஆன் செய்தேன், மிக மெதுவாக.
ஒளிக்கற்றை அவன் கண் மீது விழுந்தது…  அந்த வல்லூறு கண் திறந்து இருந்தது,.,, அதை பார்த்ததுமே என் முதுகுத்தண்டு சில்லிட்டது.. ரத்தம் உறைந்து விட்டது.
அவன் இதய துடிப்பு அதிகரித்ததை என்னால் கேட்க முடிந்தது…
அமைதியாக இருந்தேன், இதய் துடிப்பு ஓசை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது.. பயந்து விட்டான் என நன்றாக தெரிந்தது.
பழைய வீட்டின் பயங்கர அமானுஷ்ய அமைதி, நள்ளிரவு ..இதை மீறி கேட்கும் இதய ஒலி— திகிலுடன் கவனித்து கொண்டு இருந்தேன்.
இதயம் வெடித்து விடுமோ என நினைத்தேன்.. இதய் ஒலி அண்டை வீட்டார்க்ளுக்கு கேட்டு வந்து விடுவார்களோ எனவும் பயமாக இருந்தது..
இனி தாமதிக்க கூடாது. கிழவனின் நேரம் நெருங்கிவிட்டது.. அறையில் பாய்ந்து நுழைந்தேன்..
அவனை இழுத்து தரையில் போட்டேன். அவன் என்னுடன் போராட முடியவில்லை. அவன் முகத்தில் தலையணையை வைது அழுத்தினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இதய துடிப்பு நின்றது.
அவன் இறந்து விட்டான்.
பிணத்தை சந்தோஷமாக பார்த்தேன். இதயதில் கை வைத்து பார்த்தேன்.. இல்லை .. அது இயக்கத்தை நிறுத்தி இருந்தது.
ஆம், அவன் இறந்து விட்டான், இனி அந்த கண் என்னை தொல்லை செய்யாது.
முன்பே யோசித்து வைத்த படி, பிணத்தின் தலை, கை கால்களை வெட்டி , தனிதனியாக பிரித்தேன்.
அதே அறையில் புதைத்து , முன்பு இருந்தது போல அதன்  மேல் விரிப்பை வைத்து மூடினேன். எந்த ரத்த கறையும் இல்லாமல் செய்தேன்.
என்னை பைத்தியம் என சொல்ல முடியுமா? எவ்வளவு கச்சிதமாக முடித்து இருக்கிறேன்.
யாராலும் நடந்த்ததை கண்டுபிடிக்க முடியாது.. அந்த கழுகு கண்ணால் கூட என்னை கண்டுபிடிக்க முடியாது.. ஹா ஹா..
***********************************
மறு நாள் காலை மூன்று போலீஸ் அதிகாரிகள் வந்தனர். ஏதோ சப்தம் கேட்டு அண்டை வீட்டினர் சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்து இருப்பதாக சொன்னார்கள்.
அட இதுதானா என சிரித்து கொண்டு வரவேற்றேன்..  நேற்று தூங்கும்போது , ஒரு காமகொடூரனுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் ஆறு மாதம் தண்டனை விதித்தது போல கனவு கண்டு , நான் தான் அலறினேன்.. இதற்கு போய் இவ்வளவு தூரம் வர வேண்டுமா என காஷுவலாக அவர்களுடன் பேசினேன்.
எனக்கு என்ன பயம்..
வீடு முழுதும் சுற்றி காட்டினேன்.. சந்தேகப்படும்படி எதுவும் இல்லை..
உற்சாகமாக அவர்களுடன் பேசிக்கொண்டே நாற்காலியில் அமர செய்தேன். கிழவனை புதைத்த இடத்தின் மீது என் நாற்காலியை வைத்து தைரியமாக அமர்ந்தேன்.
அவர்களுக்கு என் பேச்சு திருப்தி அளித்தது.. சந்தேகப்பட எதுவும் இல்லை என முடிவு செய்து , மற்ற விஷ்யங்களை பேச ஆரம்பித்தனர்..
மனித உரிமை, எந்திரன், அரசியல், குழந்தைகளை கொலபவர்களுக்கு தேவையான சட்ட பாதுகாப்பு என் ஜாலியாக பேச்சு சென்றது.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை பயம் சூழ ஆரம்பித்தது… அவர்கள் எப்போது போவார்கள்..
தலை வலிப்பது போல இருந்தது..ஏதோ வினோதமான சபதங்கள் மெதுவாக கேட்க தொடங்கின.
என் முகம் பயத்தில் வெளிர தொடங்கியது.. மெதுவான, அமைதியான, விரைவான சப்தம்.. மரணத்தின் ஒலி போல இருந்தது..
என் பயத்தை மறைக்க அவர்களுடன் பேச்சை தொடர்ர்ந்தேன்,, வாய்க்கு வந்ததை பேசினேன்.. ஏன் பேச்சை வளர்க்கிறார்கள்?
சத்தம் மேலும் மேலும் அதிகரித்தது.. புதைக்கப்பட இடத்தில் இருந்து வரும் சத்ததை அவர்கள் கேட்டதாக தெரியவில்லை…முகத்தில் எந்த சந்தேகமும் இல்லை.
அய்யோ.. நான் என்ன செய்வேன்.. ஏன் இவர்கள் போக மறுக்கிறார்கல்.. சத்தம் அதிகரித்து கொண்டே செல்கிறதே.. இவர்களுக்கு கேட்டு விட்டால் என்ன ஆவது..
திடீரென எனக்கு சந்தேகம்… ஒருவேளை சத்தம் இவர்களுக்கும் கேட்டு விட்டதோ… ஒன்றும் தெரியாதது போல நடித்து என்னை கிண்டல் செய்கிறார்களோ..
சத்த்ம் தாங்க முடியாத அள்வுக்க்கு அதிகரித்தது… இன்னும் எவ்வளவு நேரம் ஏமாற்ற போகிராய் என அவர்கள் கேட்பது போல அவர்கள் பார்வையில் கிண்டல் நிரம்பி வழிந்தது..
என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது… அவர்கலின் வஞ்சக சிரிப்பை பார்த்து கொண்டிருப்பதை விட சாவது கூட மேல்..
சத்தம் மேலும், மேலும், மேலும்,மேலும் அதிகரித்தது..
எழுந்து அவர்களை நோக்கி கத்தினேன்..
“ சிரிப்பை நிறுத்துங்கடா, நாய்களா..உங்களுக்கு எல்லாம் தெரியும் என எனக்கு தெரியும்.. நான் தான் அந்த கிழவனை கொன்று விட்டேன். இந்த, இந்த இடத்தை தோண்டி பாருங்கள்..இந்த அறையை தன்  சத்ததால் நிரைக்கும் அந்த ஓசை, அந்த பிணத்தின் இதய துடிப்பு ஒலிதான் .. அது இங்கேதான் இருக்கிறது “

8 comments:

  1. அருமையான சிறுகதை..

    நான் அகதா கிஸ்டி,ஆர்தரோட சில நாவல்கள் தான் படிச்சுருக்கேன். எட்கர் ஆலன் போ, இவர் கதைகள் நான் படித்ததில்லை. இனிமேல் கண்டிப்பா தேடி பிடிச்சு படிக்கனும்.

    பகிர்விற்க்கு நன்றி.

    ReplyDelete
  2. கண்டிப்பா படிங்க ..படித்து விட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..

    ReplyDelete
  3. ரொம்ப பெருசா.. இருக்கு முழுவதும் படிச்சிட்டு வரேன்..!!

    ReplyDelete
  4. ரொம்ப பெருசா.. இருக்கு "

    ஒரிஜினல் இன்னும் பெருசு.. ஆனால் ஒவ்வொரு வரியையும் ரசிக்கலாம்

    ReplyDelete
  5. ராஜேஸ்குமார் கிரைம் கதை போல் உள்ளது.கிரைம் கதைகள் காலம் எப்போதும் ஒன்றை மட்டுமே சொல்லிச்செல்கிறது

    ReplyDelete
  6. ஆங்கில நாவல்கள் படிக்குமளவிற்கு எனக்கு ஞானம் இல்லை... ஆனால் ஆர்வம் இருக்கிறது.... தமிழில் மொழிபெயர்த்து சொன்ன உங்களுக்கு நன்றி... இரவு நேரத்தில் இந்தக் கதையை படித்துவிட்டு உறங்கப்போகும் எனக்கு என்னென்ன கனவுகள் வரப்போகிறதோ...

    ReplyDelete
  7. கிரைம் கதைகள் காலம் எப்போதும் ஒன்றை மட்டுமே சொல்லிச்செல்கிறது"

    உங்க தமிழ் நடை அபாரம்

    ReplyDelete
  8. ஆனால் ஆர்வம் இருக்கிறது”

    ஆர்வம் இருந்தால் போதும்... எதுவும் கைகூடும்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா