Wednesday, November 30, 2011

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.








3 comments:

  1. OK what about other religious books like veda,bible,thamma badha,kiranth sahib,torah?
    the also have science or not?
    you express your opinion

    ReplyDelete
  2. Tuesday, January 3, 20120 இஸ்லாமிய அறிவியல் (பூமி தட்டை) - 1


    அல்லா 1400 வருடங்களுக்கு முன்பே ஒரு விஞ்ஞானியாக இருந்து அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் குரானில் சொல்லியிருக்கிறான் என்று கூறுவது நமது மூமின்களின் வேலை. எந்த ஒரு குரான வசனத்தை எடுத்தாலும் அதை மாற்றி , இல்லாத ஒன்றை கூறி மக்களை ஏமாற்றுவதுவே தலையாய கடமையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.



    சஹிஹ் முஸ்லிம்

    1387
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும் போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்''என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
    இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



    1386
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

    ReplyDelete
  3. இந்த ஹதிஸை சாதாரணமாக படிக்கும் போது ஆகா அல்லா நமக்காக அவனின் அரியாசனத்தில் இருந்து கீழ்வானத்துக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான் என்று தோன்றும். இது எப்போது சாத்தியம் ? அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்” அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது? இங்கேயே பூமியிலேயே பிச்சை எடுப்பது போல் என்னை தொழுபவர் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான். இது தான் குரானில் உள்ள அறிவியலும் அல்லாவின் அறிவும், முகமதுவின் அறிவும் ஆகும். இந்த முகமதுவின் அறிவுதான் குரானிலும் வெளிப்பட்டு இருக்கிறது. இனி மேல் குரானில் இருக்கும் அறிவியலை இந்த மாதிரி ஹதிசுடன் இணைத்துப்பார்க்கலாம். அப்போது தான் அந்த காலத்து குரானிய அறிவு என்ன என்பது தெரியும்.


    15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.


    இந்த குரான் வசனத்தை எடுத்தால், அல்லா இதில் கூறுவது பூமியை தட்டையாக விரித்து அது ஆடாமல் இருக்க (துணி பரந்து போகாமல் இருக்க கல்லை பாரத்துக்கு வைப்பது போல்) மலைகளை அல்லா வைத்துள்ளானாம்! .


    இந்த வசனத்துக்கு ஐந்து வசனம் முன்னாடி அல்லா சொன்னது தான் கீழே வருவது. இதில் அல்லா சொல்வது தட்டையான பூமியின் மேலே இருக்கும் வானத்தில் சுவர்கத்தின் கதவை திறந்து அதில் ஆட்கள் ஏணிவைத்து மேலே ஏறி போனாலும் மனிதர்கள் நம்பமாட்டார்களாம்?
    (ஏணியில் ஏறி செல்வது பற்றி - புகாரி ஹதிஸ் - 349.
    இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான்ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) )
    (அல்லாவுக்கு எஸ்கலேட்டர்,லிஃப்ட், விமானங்கள், ஹெலிக்காப்டர் போன்றவை இருப்பது எதுவும் தெரியாது, முகமதுவுக்கு தெரிந்தது ஏணிமட்டும் தான், அது மட்டுமா இந்த கணணி யுகத்தில் அவன் அவன் வோர்ட் டாக்குமெண்ட்ல அடிச்சு ப்ரிண்ட் கலர் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறான். அல்லா என்னடாவென்றால் எழுதுகோல் உபயோகித்துக்கொண்டு இருக்கிறான்.)


    15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).


    [ இந்த அல்லா கேரக்டர என்ன வென்று சொல்வது . சுவர்க்க வாசல திறந்து மனிதர்கள் அதில் ஏறிபோனாலும் , மனிதர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உளறும் அல்லா , எதை வைத்து இந்த குரான் உளறலை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - அப்படி நம்பாதவர்களை கொல்லவேண்டுமாம்??!! . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவுளுக்கு தெரியாதா? இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் ? இதில் வேற தான் நினைத்தால் தான் மனிதர்கள் ஈமான் கொள்ளமுடியும் என்று ஏறுக்குமாறான உளறல் வேற, இதை மூளைசெத்துப்போன முஸ்லிம்கள் மட்டும் தான் நம்பமுடியும். இது மனிதர்களை ஏமாற்றி நம்பவைக்க முகமதுவாக உளறியது]


    (14. And even if We opened to them a gate to the heavens and they were to continue ascending through it (all day long).) (15. They would surely say (in the evening): "Our eyes have been (as if) dazzled (we have not seen any angel or heaven). Nay, we are a people bewitched.'')



    இதில் நாள் முழுவதும் எங்கே இருந்து ஏறிச்செல்வது. பூமிதான் சுற்றுமே?(இல்லை சுவர்ககமும் பூமிகூடவே சுத்துமா?) அப்போ சுவர்க்கத்தின் வாசல் வேற எங்கோ அல்லவா போய் விடும். அல்லாவுக்கு பூமி சுற்றும் விஷயமே தெரியாது போல பாவம் அதனால் தான் ஏதேதோ உளறி விட்டு காஃபிர்களின் கண்டு பிடிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் பூமியின் மேலேயே சுத்திக்கொண்டு இருக்கிறான். அதே சமயத்தில் இந்த குரான் வசனங்களையும் , இத ஹதிசையும் , தட்டையான பூமி மற்றும் பூமியை சுற்றும் சூரியன் என்று முகமது/அல்லா நினைத்த மாதிரி கற்பனை செய்து பாருங்கள் சரியாக இருக்கும். இவை எல்லாமே முகமதுவின் உளறலே.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா