Wednesday, November 9, 2011

தமிழ் நாட்டின் அவமான சின்னம் - அணிவகுக்கும் ஆதாரங்கள்

 நூலக இடம் மாற்றம் குறித்து தினதந்தியையும்  நக்கீரனையும் படித்து விட்டு, கண்கள் சிவக்க, சினிமாவில் வருவது போல நரம்புகள் புடைத்து எழ ஆவேசத்துடன் பாய்ந்த அறிவு கொழுந்துகளைப்பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் இவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அறிவு கூர்மையை காட்டி வருகிறார்கள் இலக்கியவாதிகள். இந்த விஷ்யத்தில் தெளிவான கருத்தை சொன்ன ஒரே இலக்கியவாதி அல்ட்டிமேட் ரைட்டர் சாரு மட்டுமே.. 


இந்த நூலகம் தொடர்பான ஊழல்கள், முறைகேடுகள் எல்லாம் ஆதாரத்துடம் அணி வகுத்து வருகின்றன. செலவிட்டப்பட்ட தொகையில் மிக கொஞ்சம் மட்டுமே நூல்களுக்காக சென்றுள்ளது பெரும்பாலான தொகை சிலர் பாக்கெட்டுகளுக்கு சென்றுள்ளது.  நலிவடைந்த மக்கள் மாவட்டங்களின் நூலக நிதியை முறைகேடாக எடுத்து இதற்கு பயன்படுத்தியுள்ளனர். 


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு..


*****************************************************************





  • பல புத்தகங்கள் சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிராடிகல்ஸ், ரேடிகல்ஸ் இன் எக்சைடைட் ஸ்டேட்ஸ் என்ற புத்தகம் வெளிச் சந்தையில் ரூ.89,319 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் ரூ.1,44,098-க்கு வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோலைட் ஸ்ட்ரக்சர் கோட்ஸ் என்ற புத்தகம் ரூ.70 ஆயிரம் அதிகமாகக் கொடுத்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.
  •  இதன்காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
  •  அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டதா என்று கேள்விக்கு, டெண்டர் கோரப்படவில்லை என்றும், நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
  •  அரசு விதிகளின் படி, ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக பொருள்களை வாங்கும்போது வெளிப்படையான டெண்டர் மூலமாகவே வாங்க வேண்டும். எனவே, இது விதிகளுக்கு எதிரானது ஆகும்.
  • கன்னிமாரா நூலக இயக்குனர் தான் பரிந்துரைத்துள்ளார். சட்டப்படி, அவருக்கு உரிமையில்லை. சென்னையில் நூலகச் சட்டப்படி, மாவட்ட நூலக ஆணைக்குழுவின் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் தான் நூலகம் அமைக்க வேண்டும்
 
  •  நூலகத்துக்காக தமிழக அரசு தரப்பில் ரூ.20 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.165 கோடி உள்ளூர் நூலக ஆணைக் குழுவின் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நூலக நிதிகளிலிருந்தும் இதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் விதிகளுக்கு எதிரானது.
  •  அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவுக்கு ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க ரூ.23 லட்சமும், உணவுக்கு ரூ.9.8 லட்சமும் செலவிடப்பட்டுள்ளன. 
********************************************************************************

இவ்வளவு முறைகேட்டுடன் கட்டப்ப்ட்ட கட்டடம் தமிழ் நாட்டின் அவமான சின்னம் என மக்கள் கருதுகின்றனர், இதற்கு அண்ணா பெயர் வைத்தது அவரை இழிவு செய்வது போலுள்ளது என்கின்றனர் விபரம் புரிந்தவர்கள்

5 comments:

  1. // இந்த விஷ்யத்தில் தெளிவான கருத்தை சொன்ன ஒரே இலக்கியவாதி அல்ட்டிமேட் ரைட்டர் சாரு மட்டுமே.. //

    அப்ப ஞாநி சொன்னது எதுவும் தெளிவான கருத்தில்லையா...

    ReplyDelete
  2. "அப்ப ஞாநி சொன்னது எதுவும் தெளிவான கருத்தில்லையா."

    தவறு நடந்து விட்டது என்பதில் ஞானி அவர்களும் தெளிவாகவே இருக்கிறார்.
    இதை மாற்ற வேண்டும் என்பதிலும் கொள்கை அளவில் அவருக்கு சம்மதமே. ஆனால் ஜெயலலிதா சொன்ன்படி புதிய நூலகம் அமைக்க மாட்டார் என்பதே அவர் கவலை. அங்குதான் சிறிய குழப்பம்.

    ReplyDelete
  3. ஆனால் நலிந்த மக்களின் பனத்தை திருடி இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தவுடன் திரு.ஞானியின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என நினைக்கிறேன்.

    ஆனால் இந்த ஆதாரங்கள் கிடைப்பதற்கு முன்பே தெளிவான முடிவு எடுத்தாரே.. அதுதான் சாரு..

    ReplyDelete
  4. சரி அதனால நூலகத்த தூக்கிட்டு மருத்துவமனை கட்டலாமா?அதில் ஊழல நடக்காதா?ஏதோ கட்டியாச்சு.எதுக்கு மாத்தணும்?ஆனால் ஊழல மீது நடவடிக்கை தேவை!

    ReplyDelete
  5. நூலகத்தில் பெயரை வேண்டுமானால், 'மிகுந்த மதிப்பு நூலகம்" என்று சொல்லி விடலாமா?!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா