Sunday, November 21, 2010

மரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை

             imageன்ன நடந்தது என்ன சம்பந்தப்பட்ட நாங்கள் யாரும் சொல்ல விரும்பவில்லை.. சொன்னாலும்  யாரும் நம்பப்போவதில்லை . நடந்தது நமப முடியாத ஒன்றுதான் ,, நாங்களே எதிர்பாராத ஒன்றுதான்..
        

 நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் , சிலர் அவரவர்கள் மனம்போன போக்கில் பல கட்டுக்கதைகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர்.. விஷ்யம் கொஞ்சம் கசிந்து விட்டது..அதை மட்டும் வைத்துக் கொண்டு கதைகள் பரவ ஆரம்பித்தன.,,..
          இது என் அடிப்படை நோக்கத்தையே கொச்சைப்படுத்துவது போல இருக்கிறது..
          இதை தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் நடந்ததை நானே சொல்ல வேண்டியது அவசியமாகிறது..
        கடந்த சில வருடங்களாக , மெஸ்மெரிசம் குறித்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டு அதில் ஈடுபட்டு வந்தேன்… ஹிப்னாடிசத்தை ஏற்றுக்கொள்ளும் பலர் மெஸ்மெரிசத்தை ஏற்பதில்லை..
             உண்மையில் இதில் இருந்துதான் ஹிப்னாடிசம் பிறந்தது, உயிர் காந்த சக்தியை பயன்படுத்தி , ஒருவரின் உடல்னிலை மன நிலையை குணப்படுத்தும் ஒரு விஞ்ஞானம் இது.. தொடுதல் மூலமே கூட ஒருவரை குண்ப்படுத்தலாம்..
           இதைப்பற்றி படித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு விஷயம் மனதில் தோன்றியது…
              மெஸ்மரிசம் பற்றிய ஆய்வை இறக்கும் நிலையில் இருக்கும் ஒருவரிடம் யாரும் செய்ததில்லை.. ஆன்மா என்றெல்லாம் சொல்லுகிறோம்.. ஒருவர் கோமா நிலையில் இருந்தால் அவருக்கு ஆன்மா இல்லாமல் போய் விடுமா… உடல் இயக்கம் இல்லாத நிலையில் ஆன்மா இல்லை என்றால் , ஆன்மா என்பது கற்பனையான ஒன்றுதானே.. அப்படியே அது இருந்தால் மரணம் அடையும் கடைசி நிமிடத்தில் அது என்ன நினைக்கும்?
           இதைப்பற்றியெல்லாம் ஆராய வேண்டும் என்றால் , இறக்கும் நிலையில் ஒருவரிடம் ஆய்வு செய்ய வேண்டும்.
சில கேள்விகளுக்கு இந்த ஆய்வு விடை அளிக்கும்..
  • இறக்கும் நிலையில் இருப்பவர் மேல் மெஸ்மரிசம் பவர் வேலை செய்யுமா?
  • அப்படி செய்லபட்டால் அது வழக்கத்தை விட அதிகமாக இருக்குமா , குறைவாக இருக்குமா ?
  • மெஸ்மரிசம் மூலம் சாவை தள்ளி போட முடியுமா ?
இன்னும் பல கேள்விகளுக்கு இந்த ஆய்வு விடையளிக்கும்..

           இந்த நிலையில்தான் எனக்கு,  உடல் நலமில்லாமல் இருக்கும் நண்பர் எர்னஸ்ட் வல்டேமர் பெயர் நினைவுக்கு வந்தது.. அவருக்கும் இந்த ஆய்வில் ஆர்வம் உண்டு.. சில ஆய்வுகளில் என்னுடன் பங்கேற்று இருக்கிறார்.
         அவருக்கு உறவினர்கள் என யாரும் இல்லை.. எனவே இது போன்ற ஆய்வுகளில் அவர் ஈடுபட்டால் தடுக்க யாரும் இல்லை..
             சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், தான் மரணமடையும் நிலை வந்தால் , இந்த ஆய்வுக்கு தன்னை பயன்படுத்தி கொள்ள்லாம் என ஒருமுறை சொல்லி இருந்தார்.
எனவே அவரிடம் இருந்து கடிதம் வந்ததும் உடனடியாக கிளம்பினேன்…
கடிதத்தில் எழுதி இருந்தது இதுதான்…
“ அன்பு நண்பருக்கு ,
ஒரு ஆய்வு குறித்து முன்பு பேசினோம் .. அதற்கான நேரம் வந்து விட்டது.. நாளை இரவுக்குள் நான் மரணமடைந்து விடுவேன் என டாக்டர்கள் சொல்லி விட்டனர்… எனவே உடனடியாக வரவும் 
- வல்டேமர்

                         டனடியாக புறப்பட்டு சென்றேன்.. அவரை சென்ற முறை பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் அச்சமூட்டுவதாக இருந்தது.. முகத்திற்கு பிரேதக்களை வந்து விட்டது. மூச்சு மிக மெல்லிதாக இருந்தது.. நாடித்துடிப்பு மெதுவாக அடங்கி கொண்டு வருவதை உணர முடிந்தது..
              ஆனால் அவர் மனம் நல்ல முறையில் இருந்தது ஆச்சர்யமூட்டும் விஷயம்.. சுய நினைவுடன் பேசவும் செய்தார் . டாக்டர்களை தனியே அழைத்து சென்று விசாரித்தேன்…
“ உடலில் எல்லாம் செயல் இழந்து விட்டது… நாளை இரவுக்குள் இறந்து விடுவார் “ என்றனர்.
“ சரி.. லேட்டாச்சு.. கடைசியா ஒரு முறை பார்த்துட்டு போறோம் “ என்றனர்…
இனி வர வேண்டியதில்லை என அவர்கள் முடிவு செய்து விட்டதை உணர்ந்தேன்.
அவர்கள் இருப்பது நல்லது என நினைத்தேன். “ டாக்டர் ,,, நாளை இரவு அவர் மரணம் அடையும் நேரத்தில் நீங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் “ என்றேன்..
சிறிது யோசித்து விட்டு ஒப்புக்கொண்டனர்.
வல்டேமரை நெருங்கினேன்..
“ ஆராய்ச்சிக்கு தயாரா ? “
” ஹ்ம்ம்.. உன்னை விட எனக்கு ஆர்வமா இருக்கு..சீக்கிரம் துவக்கு “ முனகினார்..
அவரை பார்த்துக்கொள்ள இரு நர்ஸ்கள் இருந்தனர்.. அவர்களைத் தவிர இன்னொருவரும் ஒருவர் சாட்சியாக இருந்தால் நல்லது என நினைத்தேன்..
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ஒரு பாதுகாப்பு வேண்டுமே…ஆகவே எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ மாணவனை வர சொல்லி இருந்தேன்.. என் ஆய்வை மறு நாளுக்கு ஒத்திப்போட்டேன்.

                            சொன்ன நேரத்துக்கு அவன் வந்து விட்டான்..
“ நடப்பதை கவனி… நோட்ஸ் எடுத்துக்கொள் “ என்றேன்..
“ சரி “ என தலை அசைத்தான்… அவனுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்ததால் ஆர்வத்துடன் இருந்தான்.
மரணப்படுக்கையில், இன்னும் சில நிமிடங்களில் இறக்கும் நிலையில் இருந்த நண்பரை நெருங்கினேன்..
மெதுவாக கையை பிடித்தேன்
“ உங்கள் மேல் மெஸ்மரிசம் ஆய்வு செய்யப்போகிறேன் . சம்மதமா “
அவர் மெதுவாக கஷ்டப்பட்டு பேசினார்
“ முழு சம்மதம்.. ஏற்கனவே மிகவும் தாமதமாகி விட்டது..சீக்கிரம் ஆரம்பி “
சொன்னபடி இரவு எட்டு மணிக்கு டாக்டர்கள் வந்து விட்டனர்.
“ இன்னும் முடியலையா “ கையை பிடித்து பார்த்தார் அவர்.. உடல் தன் சூடை இழந்து குளிர தொடங்கி இருந்தது..
“ இன்னும் கொஞ்ச நிமிஷத்துல முடிஞ்சிடும் “ என்ற அவரிடம் என் ஆய்வைப்பற்றி சொன்னேன்…
“ ஒண்ணும் பிராப்ளம் இல்லை… எப்படியும் சாகப்போறாரு…சிக்கிரம் செய்யுங்க ”
என்ற்னர் அவர்கள்..
இதற்குள் நாடித்துடிப்பு வெகுவாக குறைந்து விட்டது.. இன்னும் சில நொடிகள்தான்..
நான் என் மெஸ்மரிசம் சக்தியை பயன்படுத்த ஆரம்பித்தேன்.. எந்த மாற்றமும் தெரியவில்லை..
மனதை ஒன்று குவித்து , அவர் கைகளில் சக்தியை செலுத்தி்னேன்..
வாவ்,, அவர் கைகள் காந்த புலனை ஏற்பதை உணர முடிந்தது… மெதுவாக , கைகள் உடல் பகுதி , தலை என அனைத்தையும் மனதால் தடவிக்கொடுக்க ஆரம்பித்தேன்..
தலை லேசாக நிமிர்வதை பார்க்க முடிந்தது…
குட்.. மெஸ்மரிசம் வேலை செய்கிறது..
” டாக்டர்ஸ்..இப்ப டெஸ்ட் செஞ்சு பாருங்க “  என்றேன்
சோதித்த டாக்டர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்..
”உடல் நிலை நார்மலா இருக்கு… அவர் ஆழ்மயக்கத்துல இருக்காரு “
நடப்பது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது..
எனவே மறு நாளும் அங்கே இருக்க விரும்பினர்.
இதற்குள் நள்ளிரவு ஆகி விட்டதால், ஒரு டாக்டர் மட்டும் கிளம்பி சென்றார்.. மற்றவர்கள் அங்கேயே இருந்தோம்..
அதிகாலை 3 மணிக்கு அவரை மறுபடி சோதித்தேன்…
மூச்சு மெதுவாக- மிக மெதுவாக – வந்து கொண்டு இருந்தது… இன்னும் இறக்கவில்லை..
மனதின் மூலம் அவர் கையை தொட்டேன்.. மெதுவாக அசைத்தேன்.. என் மெஸ்மரிச பவருக்கு அவர் உடல் ஒத்துழைத்தது..
என் கையை அவர் கையின் மேலாக , சில அடிகள் தூரத்தில் வைத்து , என் கையின் காந்த புலனை அவர் கை மேல் பாய்ச்சினேன்,,
இப்போது என் கையை அசைத்தால்., அதற்கேற்ப அவர் கை அசைந்தது..
ஏதாவது பேச விரும்பினேன்..
” நண்பரே..தூங்குறீங்களா? “
பதில் வரவில்லை.. ஆனால் உதடுகள் துடிப்பதை பார்க்க முடிந்தது… கண்கள் திறக்க முயன்றன.. லேசாக திறந்து வெள்ளைப்பாகம் மட்டும் தெரிந்தது..
“ நண்பரே… தூக்கமா ? “ மீண்டும் கேட்டேன்..
மெல்லிய குரலில் பேசினார்
“ ஆமா… ஆழ்ந்த தூக்கம்… எழுப்ப வேண்டாம்.. அப்படியே சாக விரும்புறேன் “
” வலி ஏதாச்சும் இருக்கா ?
“ இல்லை… மரண தேவதை என்னை தழுவிக்கொண்டு இருக்கிறாள் “:
அதற்கு மேல் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை .

                 அதிகாலையிலேயே டாக்டர்கள் வந்து விட்டனர்…
நண்பர் இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்,,,
         “ நண்பரே..இன்னும் தூக்கமா? “
    “ ஆமா… கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கேன் “
டாக்டர்களுக்கு நடப்பதை நம்ப முடியவில்லை…
நேற்றே இறந்திருக்க வேண்டிய ஆள் !!!
சரி.. இப்படி இருந்து அமைதியாக மரணமடையட்டும் என முடிவு செய்தனர் .
கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடல் கட்டை போல விறைக்க தொடங்கியது.. கண்கள் மேலே சொருகிகொண்டது மூடிய இமை வழியே தெரிந்தது… நான் பல மரணங்களை பக்கத்தில் இருந்து பார்த்தவன்.. ஆனால் அங்கு இருந்த சிலருக்கு ஒரு மனிதனின் மரணத்தை பார்ப்பது திகிலாக இருந்திருக்க கூடும்.. வாய் லேசாக திறந்த நிலையில், பற்கள் பயங்கரமாக தெரிந்தன…
    அவர் மரணமடைந்து விட்டது போல தோன்றியது…
     மெதுவாக அவரிடம் கேட்டேன்
“ நண்பரே ..என்ன ஆச்சு ? “
   எந்த அசைவும் இல்லை…மூச்சும் இல்லை… நாடித்துடிப்பும் இல்லை..
இறுதி சடங்குகள் செய்ய நர்ஸ்கள் ஆயத்தம் ஆனார்கள்.
   அவர் அவர் நாக்கு லேசாக நடுங்க ஆரம்பிப்பது  போல தோன்றியது.
கூர்ந்து கவனி்த்தேன்..
எங்கோ ஆழத்தில் இருந்து வருவது போல அவர் குரல் கேட்டது..
“ ஒண்ணும் இல்லை.. தூங்கிகொண்டு இருந்தேன்..இப்ப செத்துட்டேன்…   நான் செத்துப்போய் ரொம்ப நேரம் ஆச்சு “
நண்பரின் ‘பேச்சு “ அங்கு இருந்த அனைவரையும் அதிர வைத்து விட்டது…
மருத்துவ மாணவன் மயங்கி விழுந்தான்…
“ அய்யா சாமி.. எங்களுக்கு இந்த வேலையே வேண்டாம் “ நர்ஸ்கள் சம்பளம் கூட வாங்கிக்கொள்ளாமல் கிளம்பினர்…
“ இப்ப ஆழ்னிலை தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பினால் , அதன் பின் எல்லாம் முடிந்து விடும்… அதனால இப்படியே இருக்கட்டும்… பிறகு வந்து பார்க்கலாம் “:
வேறு நர்ஸ்களை ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினோம்..
மதியம் வந்து பார்த்தபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை…
உடல் இயக்கம் இல்லை.. ஆனால் எனது கேள்விகளுக்கு ஏற்ப உடலில் அசைவுகள் தெரிந்தன…
                           தே நிலையிலே அவர் ஒரு வருடம் இருந்தார்.. நாங்கள் தினந்தோறும் போன் செய்து விசாரித்துக்கொள்வோம்..அவரை பார்க்துக்கொள்ள நர்ஸ்கள் இருந்தனர்..
இனிமேலும் இது நீடிக்க வேண்டாம் என முடிவு செய்தோம்…
அவரை ஆழ்னிலை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடலாம்… ஒருவேளை அவர் குணம் அடைந்து எழ வாய்ப்பு இருக்கிறது..
மருத்துவர்களும் மற்றவர்களும் கூடி இருந்தனர்…
தூக்கம் விலகியதும் அவர் எழுவதை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..
இயற்கையை அல்லது இறைவனின் ஆட்சியை வென்று விட்டேன் என தோன்றியது…
ஒரு வருடம் முன்பே இறந்து இருக்க வேண்டியவர் , இன்னும் சுகமாக படுத்து இருக்கிறாரே !!!
மெதுவாக மெஸ்மெரிச தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பினேன்,.
” நண்பரே..எப்படி இருக்கீங்க உங்களுக்கு என்ன வேணும் ? “
மெதுவாக விழிப்படிந்த படியே அவரிடம் இருந்து கூக்குரல் எழுந்தது..
“ கடவுளே/ எனக்கு வேண்டியது நிம்மதி… நான் தான் ஒரு வருஷம் முன்பே செத்துட்டேனு சொல்லிட்டேனே.. என்னை ஏன் இன்னும் கஷ்டப்படுத்துறீங்க . நான் செத்துட்டேன்.. செத்துட்டேன்.. செத்துட்டேன் .”
மெஸ்மரிச தூக்கம் விலகியதும் கடும் துர் நாற்றம் கிளம்பியது… அவர் உடல் அழுகி ஒழுகத்தொடங்கியது… அழுகிய உடலுக்கு நடுவில் எலும்பு கூடு மட்டும் படுத்து இருந்தது …


image

6 comments:

  1. உண்மைச் சம்பவம் போன்றே உள்ளது. நல்ல மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் பார்வையாளன்.

    ReplyDelete
  2. நன்றி கனாக்காதலரே

    ReplyDelete
  3. அருமையான கதை... சிலிர்க்க வைத்தது... எனக்கு இதுபோன்ற கதைகளை படிப்பதில் மிகுந்த ஆர்வம்... ஆனால் இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை தானே...

    ReplyDelete
  4. "ஆனால் இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை தானே"

    அனைத்தும் கற்பனை என சொல்ல முடியாது...
    இது போன்ற ஆராய்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..

    மருத்துவர்கால் கை விடப்பட்ட \சிலரின் மரணம் இது போன்ற முறைகளால் சற்று தள்ளி போட்ப்பட்டுள்ளன..

    ஆனால், இந்த கதையின் கிளை மேக்ஸ் முற்றிலும் கற்பனை..

    இயற்கையை , மரனத்தை வெல்ல முடியாது என வற்புறுத்தி செல்ல , இந்த அதீதமான கிளைமேக்ஸ் :-)


    .

    ReplyDelete
  5. இது கதையா ? நம்ப முடியவில்லையே. அருமையாக இருந்தது.
    சூஃபிகளின் வரலாறு படித்தீர்களென்றால் இதுவெல்லாம் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு என்று நம்புவீர்கள். ஆனால் மெஸ்மெரிஸம்,ஹிப்னாட்டிஸம் போன்ற டிரெயினிங்லாம் இல்லாமலே இறந்த ஒருவர் உயிருள்ள ஒருவரிடம் பேசுவார், அது இன்னொரு சூஃபிக்குத்தான் கேட்குமே ஒழிய வேறு யாருக்கும் கேட்காது.

    ReplyDelete
  6. ”சூஃபிகளின் வரலாறு படித்தீர்களென்றால் இதுவெல்லாம் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு என்று நம்புவீர்கள்”

    படிக்க வேண்டும் ..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா