Monday, March 7, 2011

கருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

முப்பது ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் நர்ஸ் அருணாவின் கருணை கொலை வழக்கில் நூதனமான தீர்ப்பு வழங்கபட்டது..

நர்சாக பணியாற்றிய வந்தவர் அருணா ஷான்பாக்.. ஒரு நாள் பணியின் போது, ஒரு மனித  மிருகம், அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்த்யது.. இதனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது...
சுய  நினைவு இல்லாமல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்..
எத்தனை நாட்களாக?
நாட்கள் இல்லை... வாரங்கள் இல்லை... மாதங்களும் இல்லை..

முப்பத்து ஆறு ஆண்டுகள் !!!!!

ஒரு மிருகத்தின் ஒரு நாள் வெறி செயல் ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டது...

தன இளமை, கனவுகள், வாழ்க்கை , லட்சியம் அனைத்தையும் தொலைத்து ஒரு பொருள் போல, நாற்காலி மேஜை போல, மருத்துவ மனையில் இருக்கிறார்..

அவர் உடல் மிகவும் பலவீன ம அடைந்து விட்டது.. இனி குணம் அடைய வாய்ப்பில்லை என்ற நிலையில், அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது..
இப்படி கருணை கொலை செய்வது இந்தியாவில் சட்ட விரோதம்...
எனவே தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத பட்டது..

சுய நினவு இல்லாமல் இருக்கும் ஒருவரை கொல்வது அயோக்கியத்தனமானது என்று ஒரு வாதம் வைக்கப்பட்ட்டது... தான் அடைந்து வரும் வேதனையை சொல்லக்கூட முடியாமல் , நினைக்க கூட முடியாமல் இருக்கும் ஒருவரை, வலி இல்லாமல் அமைதியான முறையில், கொல்வது நல்லது என வாதாடினர் சிலர்..
இந்த நிலையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது..

அவரது பரிதாப நிலையை கருத்தில் கொண்டுள்ளோம்... ஆனால் அவரை விஷ ஊசி போட்டோ, வேறு வகையிலோ கொல்ல கூடாது..  அவருக்கு வழங்கப்பட்டும் சிகிச்சையை நிறுத்தி விடுங்கள்.. மருத்துவ கண்காணிப்பில், உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்து விட்டால் அவர் இறந்து விடுவார்..
இது கொலை என்பதில் வராது...

இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்...

அவர் வாழ்வு வேதனையாக அமைந்து விட்டது.. அவர் மரணமாவது இயற்கையாக , அமைதியாக நிகழட்டும் என்கின்றனர் ..
அனால் இனி எந்த ஒரு பெண்ணும்  மிக மிக  சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...

11 comments:

  1. அதுதான், அவருக்கு மரணத்திலாவது அமைதியும் சாந்தியும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  2. இனி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...


    .....கருணை கொலை சரியா தவறா என்று சொல்லும் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை....ஆனால், இந்த நியாயமான வேண்டுகோள் நிறைவேறினால், அன்றுதான் அது சுதந்திர இந்தியா - பெண்களுக்கும்!

    ReplyDelete
  3. //இனி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...//
    வாழ்வு என்பதே இல்லாமல் போய்விட்ட அருணாவிற்கு அமைதியான முடிவைத் தர இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்!

    http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_08.html

    ReplyDelete
  5. நானும் இது பற்றி எழுத நினைத்தேன்...ஏனோ எழுதவில்லை..

    உங்கள் பகிர்விற்கு பாராட்டும் , நன்றியும்..

    ReplyDelete
  6. நானும் இது பற்றி எழுத நினைத்தேன்...ஏனோ எழுதவில்லை.."

    அந்த அளவுக்கு அந்த வலியை உணர்ந்து இருப்பீர்கள்..அத்னால்தான் எழுத முடியவில்லை... அந்த உணர்வுக்கு தலை வணங்குகிறேன்..

    எனக்குமே எழுத முடியவில்லை... அந்த சகோதரிக்கு ஏன் இந்த நிலை.. அவருக்கும் நாம் என்ன செய்ய முடியும்... என்று திகைப்பாக இருந்தது,,

    ReplyDelete
  7. ”நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்!”

    படித்தேன்... விரிவாக எழுதியதற்கு நன்றி//

    இன்னும் படிக்காதவர்கள் நண்பர் கோபியின் அந்த இடுகையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  8. வாழ்வு என்பதே இல்லாமல் போய்விட்ட அருணாவிற்கு அமைதியான முடிவைத் தர இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.”

    உங்களை போன்ற நல்லொர்கள் அவருக்காக கவலை படுகிறார்கள் என்பதைக்கூட அவரால் உணர முடியாது என்பதை நினைத்தால் மனம் நடுங்குகிறது... ஒரே ஒரு நாளாவது அவருக்கு வாழ்வு கிடைக்ககூடாதா என மனம் பைத்தியக்காரத்தனமாக ஏங்குகிறது

    ReplyDelete
  9. ஆனால், இந்த நியாயமான வேண்டுகோள் நிறைவேறினால், அன்றுதான் அது சுதந்திர இந்தியா - பெண்களுக்கும்!”

    ஆம்

    ReplyDelete
  10. அதுதான், அவருக்கு மரணத்திலாவது அமைதியும் சாந்தியும் கிடைக்கட்டும்”

    இத்தனை நல்லவர்களின் அன்பை சம்பாதித்தௌதான் அவரது ஒரே ஆறுதலோ?

    ReplyDelete
  11. //னி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல்//

    இந்த நிலை வருமாவென ஏக்கமாக இருக்கிறது. வரவேண்டும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா