Wednesday, November 30, 2011

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.








73 comments:

  1. சார் நீங்க இன்னும் நல்லா சிந்தித்து பார்த்தால் அதில் 1600௦௦ வருசத்துக்கு முந்திய அறிவியல் அறிவு தான் இருப்பது புரியும்

    ReplyDelete
  2. 1600௦௦ வருசத்துக்கு முந்திய அறிவியல் அறிவு தான் இருப்பது புரியும்"

    இல்லை பாஸ்.. இன்னும் பல ஆண்டுகளுக்கு பின் வரக்கூடிய அறிவியல் உண்மைகள் இதில் இருக்கின்றன என்பதையே நான் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். விவாதிக்கலாம்

    ReplyDelete
  3. அன்பின் சகோதரரே...
    உங்களின் மீது வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..
    இப்போதுதான் முதல்முறையாக உங்கள் தளம் வருகிறேன்..

    முதல் வருகையிலேயே,இன்ப அதிர்ச்சியாய் இஸ்லாம் குறித்த பதிவு..அதிலும் நேர்மறையாக..
    இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா?..இப்படி தலைப்பை பார்த்ததும் சரி எதோ வஞ்ச புகழ்சியில் எப்போதும் போல திட்டி தீர்க்கும் பதிவொன்னு நெனச்சேன்..வந்து பாத்தா....எனது புத்தியில் ஒரு குட்டு விழுந்த மாதிரி...உங்க பதிவு....அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...

    இஸ்லாம் குறித்து அவதூறுகளும்,விமர்சனங்களும் பெருகிவரும் இந்த காலத்தில் இப்படி ஒரு பதிவை பார்ப்பது ஆரோக்கியமான ஒன்றாக உணர்கிறேன்...வாழ்த்துக்கள்...
    இஸ்லாத்தின் பார்வையில்,அதன் மீதான நம்பிக்கையில் ஒரு வசனத்தை முஸ்லிம்கள் விளங்குவதை,விட வெளியில் இருந்து பொதுப்பார்வை மூலம் நீங்கள் விளங்கி இருப்பது விளக்கி இருப்பது அருமை...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஆனந்த்,
    மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்த ஒரு பதிவை கொடுத்தமைக்கு நன்றிகள். குர்ஆனை படிக்காமலே / ஆய்வு செய்யாமலே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இஸ்லாத்தை குறித்து எழுதுகிற போக்கு இன்று இணையதளங்களில் விரவிக் கிடக்கிறது. ஆனால் குர்ஆனை படித்தறிந்து அதன் பின்னர் எழுதுவதில் / விமர்சிப்பதில் ஆரோக்கியமான முன்னுதாரணமாக உங்களைப் போன்ற ஒருசிலர் இருக்கிறார்கள். உங்களை இறைவன் நேரான வழியில் செலுத்துவானாக.

    இரும்பை இறக்கினோம் என்று திருமறையின் அத்தியாயம் 57 வசனம் 25 ல் இறைவன் கூறுகிறான். ஆனால் மேலோட்டமாக பார்த்தால் இரும்பு பூமியில் இருந்து தானே வெட்டியெடுக்கப்படுகிறது. எனவே இது அறிவியலுக்கு முரணான வசனம் என பலர் கூறலாம். ஆனால் அறிவியல் பூர்வமாக பார்த்தால் இரும்பு என்ற தனிமம் உருவாக தேவையான வெப்பம் இந்த பூமியில் எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே திருமறையின் வசனம் எந்த காலகட்டத்திலும் பொய்யாகி போகாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் வண்ணம் அமைந்த இந்த பதிவை எழுதிய உங்களுக்கு இறைவன் தனது கருணையை பொழிவானாக.

    ReplyDelete
  5. //ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.
    //

    அறிவியலையும் மார்க்கத்தையும் விரும்பும் நான் அடிக்கடி நினைத்து பார்க்கும் வாக்கியம் ...

    அருமையான கட்டுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  6. //
    என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று//

    நிச்சயமாக... வாழ்வியல் நெறிமுறைகள் எப்போதும் ஒருசாரார்க்கு மட்டுமே சொந்தம் என சொல்வது முட்டாள் தனம் தான். இலக்கியங்களை போல் ஆராய்ந்து அனைவரும் படிக்க வேண்டிய விஷயம் தான்.

    ReplyDelete
  7. Arumai arumai

    // என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று//
    unmaiyana vakiyangal brother thanks for sharing!

    ReplyDelete
  8. மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

    இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?
    -- கவியரசி சரோஜினி நாயுடு

    குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.
    -- கவியரசி சரோஜினி நாயுடு -Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167
    **********

    அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது. - -டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
    **********

    அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, “த ஜெனியுன் இஸ்லாம்.” The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).

    திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னைகுர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.” - சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)
    *****************
    குரான் படிக்கிறார் டோனி பிளேர்
    லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

    தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன்.

    சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம்.

    இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.


    I read the Holy Quran everyday: Tony Blair
    Reading Islam’s holy book ensured he remained ‘faith-literate’ said Blair, adding that he believes being faith-literate is crucial in today’s globalised world.
    Blair believes that knowledge of Islam informs his current role as Middle East envoy for the Quartet of the United Nations, United States, European Union and Russia.
    This isn’t the first time that the former British Premier had spoken so highly of the religion. In 2006 he said the Quran was a ‘reforming book, it is inclusive. It extols science and knowledge and abhors superstition. It is practical and way ahead of its time in attitudes to marriage, women and governance’.
    He praised the Muslim faith as being ‘beautiful’ and that the Prophet Mohammed (PBUH) as being ‘an enormously civilizing force’.
    Last October, Blair’s sister-in-law Lauren Booth raised eyebrows after announcing that she had converted to Islam after what she described as a ‘holy experience’ during a visit to a shrine in Iran.
    SOURCE: http://tribune.com.pk/story/188297/i-read-the-holy-quran-everyday-former-british-pm-tony-blair/
    Tony Blair's sister-in-law converts to Islam

    Source: http://tribune.com.pk/story/67439/tony-blairs-sister-in-law-converts-to-islam/

    ReplyDelete
  9. ஸலாம்
    அருமையான கட்டுரை ... உண்மையில் ... எளிமையான எழுது நடைமுறை ..... ஆக்கம் அருமை ....
    குரான் சொலுகிறது ...

    இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக

    Quran 6:90

    10:101. “வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.

    உங்களுக்கு நேரான வழி கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன் .....

    ReplyDelete
  10. பிச்சை, அறிவியலை ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்தி எதையும் ப்ருவ் பண்ணவேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறன். அதில அப்படிதான் இருக்கு எதுக்கு ஒரு ப்ரூப் வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் அறிவியல் கோணத்தில் பார்க்கணும் என்கிற மாயையில் வெளிவரும் வார்த்தையாய் தோணுது. அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு அர்த்தம் இல்லாமல் ஏதும் இல்லை என்கிறது கூட தவறுதான், அர்த்தங்களை நாம்தான் கொடுக்கிறோம், அர்த்தங்கள் இல்லாமல் கூட இருக்கலாம் அதனால் என்ன?. யாரோ ஒருவன் ஆன்மிக உணர்வில் இறை அருளில் எழுதிய வார்த்தைகளுக்கு அதற்க்கு அறிவியல் அர்த்தம் தேவை இல்லை என்பது எனது கருத்து.

    அறிவியல் அடிப்படையில் மதம் என்கிற கூத்து ஒரு கேலிகூத்து என சொல்லும் பக்குவம் ஏனோ மதப்போதகர்களுக்கு வருவதில்லை ஏனன்றால் அறிவியல் அடிப்படி சிந்தனை தேவை என்பதுதான் நமக்கு நாம் பண்ணிகொண்ட ப்ரோக்ராம்மிங், இந்த ப்ரோக்ரமிங்கை உடைத்தால் ஒண்ணுமில்லை அர்த்தம் தேவை இல்லை, அனுபவம்தான் அவசியம். சாருவின் எழுத்தில் நான் கற்றுக்கொண்டு ஒரு அனுபவம் இது. எந்த லாஜிக்கை வைத்து A joker was Here சிறுகதையை விளக்கமுடியும்?

    அறிவியல் - அது ஆண்மை, அது நேர்கோட்டில் பயணிக்கும், லாஜிக்கா யோசிக்கும் உண்மை இது, பொய் இது என்று வரைமுறை படுத்தும், மதம் அப்படிஇல்லை அது பெண்மை சுற்றி சுற்றி வரும் அந்த சுற்றில் உண்மையாய் தெரிவது பொய்யாகும் பொய்யாய் தெரிவது உண்மையாகும், முடிவில் பயணம்தான் முக்கியம் என உணரவைக்கும், உணரவைக்கும். All Holy books are in my opinion are outcome of spiritual experience which can not be and need not be arranged into scientific mind frame.

    ReplyDelete
  11. //e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது. அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

    அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.///

    தூங்குவது போல் பாசாங்கு செய்யாமல், நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று தைரியமாக சொன்னமைக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்...

    ReplyDelete
  12. அன்பு சகோ
    உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

    சகோ ஒருவர் எனக்கிட்ட மெயில் மூலமாக இப்பதிவு களம் நோக்கி வந்தேன். இஸ்லாமும் - அறிவியலும் குறித்து நடு நிலை சிந்தனையுடன் எழுதி இருக்கிறீர்கள்

    அறிவியல் என்பது- எற்படும் மாற்றத்திற்கான காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே! - ஆக அந்நிலையில் மட்டுமே அதை மெய்பிக்கலாம். பிறிதொரு காலத்தில் அதன் நம்பக தன்மையில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது

    குர்-ஆன் அப்படியல்ல என தெளிவாக உணர்த்தியதற்கு மிக்க நன்றி.,

    ReplyDelete
  13. இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. Good post

    ReplyDelete
  14. நீர் அவர்களிடம் இதற்காக எந்தக்
    கூலியும் கேட்கவில்லை.
    இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர
    வேறில்லை.12.104
    இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர
    வேறில்லை.38.87
    (முஹம்மதே!) அகிலத்தாருக்கு 281
    அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.21.107
    இஸ்லாத்தைப்பற்றிய நேர்மையான பார்வையைச் செலுத்திய சகோ ஆனந்த் அவர்கேள உங்கள் மீது ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக தொடரட்டும் உங்களின் நேர்மையான பார்வை

    ReplyDelete
  15. மிகவும் அருமையாண கருத்துக்கள்... வாழ்த்துகள் சகோதரே

    குர்ஆன் வசனங்கள் என்றுமே மாறது, அனால் அறிவியல் அன்றும் இன்றும் என்றுமே ஒரே மாதிரி இருக்காது.

    ReplyDelete
  16. அய்யா இந்த தொடரையும் படிக்கலாமே?எப்படி அறிவியலுடன் இஸ்லாம் முரண படுகிறது!
    ஆப்ரகாம் 175 வயசு எப்படி வாழ்ந்தார்?இது பற்றி உங்களுக்கு தெரியுமா?சொல்லுங்க!
    *
    இந்த தொடரை படிங்க விளங்கும்!
    http://senkodi.wordpress.com/2010/12/13/senkodi-islam/

    ReplyDelete
  17. குரானின் நமபக்தன்மை என்ன?
    http://www.rajanleaks.com/2010/07/blog-post_23.html

    ReplyDelete
  18. எனக்கு மூணு கேள்விகள்!பிச்சைக்காரன் விளக்க வேண்டும்!வேறு யாரும் இல்லை!
    உங்களிடம் மூணு கேள்விகள் :
    ௧.பரிணாம வளர்ச்சி பத்தி குரான் என்ன சொல்லுது?
    ௨.மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?
    ௩.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?

    ReplyDelete
  19. yahweh என்னும் கடவுள் மற்ற சிறு தெய்வங்களை வழிபட்ட pagans ஐ மிரட்டி கொய்யால என்னைய கும்பிடு இல்லைன்னா உன்னை அழிச்சிடுவேன்னு மிரட்டியது!இந்த வழி வந்த இஸ்லாமும் இதையே சொன்னது!இஸ்லாமில் இருந்து கொண்டு கடவுள் மறுப்பு பேசினால் காபிர் என்று சொல்லி கதையை முடித்து விடுவார்கள்!மேலும் குரான் படிக்கும் பொது நீ இஸ்லாமியன் இல்லைன்னா நரகம் என்று மிரட்டி உங்களையும் அந்த மதத்தில் சேர்க்க ட்ரை பண்ணுவது தெரியும்!

    ReplyDelete
  20. அம்பேதன்December 1, 2011 at 3:37 AM

    /குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//

    ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!, மேலும் குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டது, பிறகு ஏன் கடவுளால் நேரடியாக இறக்கபட்டது என சொல்லி வருகிறீர்கள்!


    //அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
    அது தற்போதைய புத்தக வடிவிலில்லாமல் எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதி வைக்கவும் பட்டிருந்தது.//

    குரானின் மூல வடிவம் முற்றிலுமாக அழிக்கபட்டது அனைத்து இஸ்லாமியருக்கும் தெரிந்ததே, பாதுகாக்கப்படும் என கடவுளாலே உறுதியளிக்கபட்ட குரான் ஒரு மனிதனால் அழிக்கபட்டிருக்கிறது!, இருந்தும் தற்பொழுது இருப்பது கடவுளால் கொடுக்கபட்ட குரான் என்று எப்படி சொல்கிறீர்கள்?

    //யாருடைய மனங்களில் தொகுக்கப்பட்டிருந்ததோ அவர்களில் சிலர் குழுவாக ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட போது அதை சரியானபடி தொகுத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நபிக்கு பின் வந்த உத்தம கலீபாக்களால் உணரப்பட்டு தற்போதைய புத்தக வடிவிலானது.//

    முகமது இறந்த சில வருடங்கள் கழித்து அவரது நண்பர்களுக்கு உணரப்பட வேண்டிய காரணம் என்ன, அது கடவுளால் அவர்களுக்கு சொல்லபட்டது என்றால், முகமது கடைசி நபி என்பது பொய்யாகிவிடுகிறது, அவர்களுக்கா தோன்றியது என்றால் அதிலுள்ள விசயங்களின் உண்மை தன்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

    //கீழள்ளவை நம்பிக்கையாளர்களுக்கே போரடிக்கலாம். நீங்கள் கேட்டதால்தான் ஓரளவுக்கு சுருக்கமாய் விளக்குகிறேன்.//

    செக்கு மாடு அதே பாதையில் தான் சுத்தும் தோழரே! நீங்க எனக்கு சொல்லுங்க!

    //ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது.//

    குரானும் முகமதுவின் சொல்களால் தொகுக்கபட்டது தானே!,

    ReplyDelete
  21. அம்பேதன்December 1, 2011 at 3:38 AM

    //நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது.//

    குரானும் முகமது இறந்து சில ஆண்டுகளுக்கு பின் தொகுக்கபட்டு பின் அதை சொன்ன முகமதுவின் நண்பர்களின் மூலவார்த்தைகள் அழிக்கப்பட்டு விட்டது!


    //அதற்குள்ளாகவே அவற்றில் சிலரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கைச்சரக்குகள் நுழைவிக்கப்பட்டு விட்டது.//

    ஹதீஸில் விருப்பு, வெறுப்பு நுழைந்துவிட்டது என நம்புகிற நீங்கள் குரானை மட்டும் கண்மூடிதனமாக நம்புவது ஏன்!?


    //யூதர்களும் தங்களின் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தனர்.//


    ஆபிரஹாம மதத்தின் ஆரம்பம் யூதர்களிடம் தானே இருக்கு, அவர்கள் யகோவா, கர்த்தர் என அழைப்பவரை தானே நீங்கள் அல்லா என்கிறீர்கள், பழைய ஏற்பாட்டை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் தானே யூதர்கள், உலகம் ஆறேநாளில்!? கடவுளால் படைக்கபட்டது என அவர்களும் தானே நம்புகிறார்கள், அவர்கள் வழிவந்து தானே நீங்களும் விருத்தசேதம்(சுன்னத்) செய்து கொள்கிறீர்கள், உங்களுக்கு முன்னரே தூதர்களை கண்ட யூதர்கள் ஹதீஸில் தவறு செய்திருப்பார்கள் என நம்பப்படுவதின் காரணம்!?

    ReplyDelete
  22. அம்பேதன்December 1, 2011 at 3:38 AM

    //அது யாரிடமிருந்து யாருக்கு சொல்லப்பட்டு பின்னர் யாருக்கு என அந்த வரிசையில் வந்த அனைவருமே நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.//

    நம்பகமானவர் என்பது எந்த அடிப்படையில் முடிவு செய்யபடுகிறது, அப்பொழுது அவருக்கு இருந்த வசதியை பொறுத்தா!?


    //ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டவைகளில் நம்பகமற்ற செய்திகளும் கலந்தே இருந்தன.//

    அதே நம்பகமற்ற செய்திகள் குரானிலும் இருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு!?

    //பின்னர் வந்த இமாம்கள் அவற்றை தரம் பிரித்து வைத்தனர். எது மாதிரியான தரமற்றவைகள் எல்லாம் இருந்தன என்பதையும் பின்னால் வருபவர்களுக்கு பாடமாக இருக்க தரமற்றவைகள் என்ற தலைப்பில் தனி நூலாக தொகுத்தும் வைத்துள்ளனர்.//

    தரமற்றவை, தரமுள்ளைவை என்பதை விட உண்மையானவை, பொய்யானவை என்று தானே இருக்க வேண்டும்! இமாம்களா கூட இருந்து பார்த்தார்கள், குறிபிட்ட ஹதீஸ் பொய்யென்று!?

    //எந்தெந்த வகையில் பலவீனமானவை என ஹதீஸ்கள் ஒதுக்கப்டுகின்றன?
    1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.//

    அடுத்த தலைமுறைக்கு பெற்றொர்கள் சொல்வது வழக்கம் தானே! அப்படி தானே ஒவ்வொரு மதமும் வலுப்பெறுகிறது, உங்கள் பெற்றோர் சொல்லி தானே இஸ்லாம் உங்களுக்கு தெரியும்!

    //2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.//

    தொடர்பு இல்லையென்று இமாம்களுக்கு எப்படி தெரியும்!?


    //3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.//

    முகமதுவின் தோழர் பொய்யே சொல்லமாட்டார் என எந்த நம்பிக்கையில் நம்புகிறீர்கள்!?

    //4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.//

    சமகாலத்தில் வாழ்ந்தார் அல்லது இல்லை என்ற வரலாற்று நிகழ்வுகளை எதை வைத்து நம்புகிறீர்கள், முகமதுவின் நண்பரின் நண்பரே பொய் சொல்லும் பொழுது வரலாற்றை தொகுத்தவன் மட்டும் உண்மையை மட்டுமா சொல்வான்!?


    //5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.//

    பொய்யர் என இனங்கானப்பட உங்களுக்கு இருக்கும் ஆதாரம் மெய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்!?


    //6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.//

    முகமதுவே தனது செயல்களை நியாயப்படுத்தி பல வசனங்களை சொல்லியிருக்கும் பொழுது மற்றவர்கள் சொல்வது மட்டும் எவ்வாறு பொய்யாக இருக்கும்!


    //7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.//

    ஒருவர் சொல்கிறார், அவராக சொன்னால் தான் ஆச்சு, சரியாக ஞாபகமில்லைன்னு, நீங்களே எப்படி தடுமாறுகிறார், அவருக்கு 1512 மே 23 ஆம் தேதி மதியம் மூன்று மணியிலிருந்து ஞாபகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது என சொல்ல இஸ்லாத்தில் இருந்த மந்திரவாதி யார்!?

    //8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.//

    ஹதீஸில் உள்ள விசயம் முக்கியம் ஆயிற்றே, அவர் முதல்முறை சொன்ன பெயர் சரியா, இரண்டாவது முறை சொன்ன பெயர் சரியா என ஆராயாமல் முற்றிலுமாக ஹதிஸை நீக்குவது எப்படி சாத்தியம்!? ஒருவேளை ஒரு குறிபிட்ட தினத்திற்கு பின் முகமது நபிகாளக இருந்து சாதாரண மனிதராக மாறினார் என்னும் முக்கியமான ஹதீஸ் இருந்தால் மொத்த குரானும் பொய் என்று ஆகிவிடும் அல்லவா!?

    ReplyDelete
  23. அம்பேதன்December 1, 2011 at 3:40 AM

    பிறிதொரு காலத்தில் அதன் நம்பக தன்மையில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது//
    .
    .
    ஆமாம் அதான் அறிவியலின் பலம்!ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுக்கலாம்!அவனை கல்லால் அடிக்கவோ அல்லது நரகத்துக்கு பொ என்றோ சொல்ல மாட்டார்கள் அறிவியலில்!ஆனால் மதங்களில் இது புனிதமானது எவனாவது மாற்றம் சொன்னா கொலைதான்!

    ReplyDelete
  24. எனக்கு ஒரே கேள்வி!குரானில் இருந்து நாங்கள் குறைகளை சுட்டி காட்டினால் உடனே இஸ்லாமியர்கள் உங்களுக்கு அரேபிய மொழி தெரியாமல் குரானை மொழிபெயர்ப்பில் படிப்பது(அதுவும் இஸ்லாமியரால் மொழிபெயர்க்கபட்டிருந்தாலும்) பல மாற்று அர்த்தங்களை கொடுக்கும்!ஆகவே நீங்கள் அரபி மொழியில் படித்து விட்டு விமர்சியுங்கள்!
    சரி எனது கேள்வி எத்தனை முச்ல்மிகளுக்கு அரபி தெரியும்?அப்படியே தெரிந்தாலும் குரானில் உள்ளது பழங்காலத்து அரபி மொழி அல்லவா?அதை இப்போதுள்ள அரபி மொழி தெரிந்தவர்கள் புரிந்து கொள்ள இயலாது.ஆக எத்தனை முஸ்லிம்கள் பழைய அரபி மொழியில் எழுதப்பட்ட குரானை படித்துல்லேர்கள்?அதற்கும் மொழிபெயர்ப்புக்கும் என்ன வேறுபாடு?

    ReplyDelete
  25. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?

    http://senkodi.wordpress.com/2011/04/13/man-evolution/

    ReplyDelete
  26. //சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது//

    அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக தோன்றக்கூடிய சில திருக்குர்ஆன் வசனங்கள்கூட‌ விஞ்ஞானிகளே மலைத்து நிற்கும் வண்ணம் மெய்படுத்தப்பட்டே வருகின்றன என்பதை ஒளிவு மறைவின்றி/தயக்கமின்றி, நேர்மையான பார்வையுடன், எளிய உதாரணங்களோடு மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

    //என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று//

    நிச்சயமா சகோ. மனித சமுதாயம் அனைத்துக்குமான ஓர் பொதுவான வேதமே திருக்குர்ஆன்! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (அல்குர்ஆன் 2:185)

    நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும், அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். (அல்குர்ஆன் 2:159)

    ReplyDelete
  27. ஸலாம் சகோ.ஆனந்த்,
    மீண்டும் நல்லதொரு ஆக்கம்.
    பல 'நச்' வரிகள் ஆங்காங்கே விரவிய வண்ணம்..!

    உதாரணமாக... நான் ரசித்தவை சில,

    //கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை//

    //ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.//

    //அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.//

    //ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.//

    //அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, (அதன் ஊடே) அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.//

    ReplyDelete
  28. //என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.//---உங்களைப்பொருத்த வரை என்பது கூட தவறுதான்.

    குர்ஆனே சொல்வது இதைத்தான்..!
    "குர்ஆன்-இது உலக மக்கள் அனைவருக்குமானது" என்று..!

    //இல்லை பாஸ்.. இன்னும் பல ஆண்டுகளுக்கு பின் வரக்கூடிய அறிவியல் உண்மைகள் இதில் இருக்கின்றன//---அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ.

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோ.
    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  29. அன்பு சகோ.,

    இந்த தளத்தை விவாதகளமாக மாற்ற விரும்பவில்லை., . இஸ்லாம் சார்ந்த பதிவு என்றாலே எதிர்ப்பு வரத்தான் செய்யும் அதுவும் non-muslim இஸ்லாம் சார்ந்து எழுதினால் சொல்லவே வேண்டாம் எதிர்ப்பின் திறன் இன்னும் அதிகரிக்கும் என்பது எதிர்ப்பார்த்ததே...

    இஸ்லாத்தை விமர்சிக்கும் எத்தனைப்பேர்கள் தங்கள் கொள்கைக்குறித்து விவாதிக்க வருகிறார்கள்...? இங்கு எத்தனை முகங்கள் முகவரியற்று இஸ்லாத்தை விமர்சிக்கிறீர்கள். குறைந்த பட்ச நேர்மையும் இல்லாமல்..?

    சரி இஸ்லாம் முழுக்க தவறான சிந்தாந்தங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என வைத்துக்கொள்வோம். அதன் வழி பயணிக்காமல் மக்களை தடுத்தால். மக்களை கெட்ட வழி பயணத்திலிருந்து தடுக்க முடியும்- நல்ல வழியில் பயணிக்க என்ன கோட்பாடுகளை வைத்து இருக்கிறீர்கள்...?

    ஒருக்கொள்கையே எதிர்த்தால் அல்லது மறுத்தால் அதற்கு மாற்றுத்தீர்வாக பிறிதொரு கொள்கையே வகுக்க வேண்டும்- கடவுளை சாடும் நாத்திகம் கடவுள் இல்லா நிலையை பயன்பாடுமிக்கதாக ஆக்க என்ன கொள்கையே தன்னகத்தில் கொண்டுள்ளது.

    உண்மையான நாத்திகர்கள் இங்கு இருப்பீர்கள் என்றால் தாராளமாக உரையாட நான் முஸ்லிம் தளம் அழைக்கிறேன்...

    ReplyDelete
  30. assalamu alikum all vere nice & trur mge available for quran

    ReplyDelete
  31. அருமையான பகிர்வு. மறுப்பு சொல்லமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவு. இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகளை அறிந்து எல்லோருக்கும் தெளிவுபடுத்தி பதிவிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  32. இந்த பதிவு பலரின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று புரிகிறது.

    @

    அனானியாகவும்,
    profile மறைத்தும்,
    புதுவிதமான பெயர்களிலும்...
    எங்கிருந்தோ உருவி எடுத்து
    காபி அண்ட் பேஸ்ட் கமென்ட் போடுகிறவர்களுக்கு:-)

    நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்..!

    இதை சவாலாகவே வைக்கிறேன்.

    இஸ்லாமிய வாழ்வியல் மார்க்கத்துக்கு மாற்றாக இதைவிட வேறொரு நல்ல-தவறில்லாத வாழ்வியல் மார்க்கத்தை முதலில் மக்களுக்கு காட்டுங்கள்.

    அப்புறமாக இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சியுங்கள். அதுதான் குறைந்த பட்ச நேர்மை.

    என் காலில் உள்ளது பிஞ்ச செருப்பு என்று நீங்கள் எனக்காக கவலைப்பட்டால்...
    இதைவிட சிறந்த செருப்பு விற்கும் கடையை எனக்கு காட்டுங்கள்..!

    உடனே அங்கே, எனக்கான புது செருப்பை நானே என் காசில் வாங்கிக்கொண்டு... நான் போட்டிருப்பதாக நீங்கள் கருதும் பிஞ்ச செருப்பை குப்பையில் வீசி எரிகிறேன்..!

    இதை மீண்டும் சவாலாகவே சொல்கிறேன்.

    கேட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்காமல், அதற்கு சொல்லப்பட்ட பதிலை ஒருமுறையாவது படித்துவிட்டு அதுபற்றி விவாதியுங்கள்.

    தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானா.. கொத்தனாரா.. போன்ற போக்கற்ற கேள்விகளை விட்டுவிட்டு விவாதிக்கத்தயாராகுங்கள்.

    ReplyDelete
  33. பாத்திரம்December 1, 2011 at 5:47 AM

    இஸ்லாமை சேர்ந்த கவிஞர் ஹெச்.ஜே ரசூல் மத விளக்கம் செய்யப்பட்டு தனது உறவினர் சாவுக்கு கூட செல்ல விடாமல் தடுக்க பட்டார்!பின்னர் நீதிமன்ற தலையீட்டில் அவருக்கு நீதி கிடைத்தது!இதையும் சொல்லுங்கண்ணே!

    ReplyDelete
  34. பாத்திரம்December 1, 2011 at 5:49 AM

    அய்யா வைத்த வாதத்துக்கு பதில் சொல்லுங்க!அதை விடுத்து இஸ்லாமை துறந்தால் எல்லாரும் பொரிக்கி ஆகி விடுவார்கள் எண்பது பதில் அல்லவே?!!

    ReplyDelete
  35. பாத்திரம்December 1, 2011 at 5:50 AM

    இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடு பற்றி என்ன சொல்லுகிறது?நமது நாடு மக்கள் தொகையில் விழி பிதுன்குகிரதே!இதற்கு இஸ்லாமின் தீர்வேன்ன?

    ReplyDelete
  36. //என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.//---உங்களைப்பொருத்த வரை என்பது கூட தவறுதான்.//
    .
    .
    இதுதான் இவரின் தாராள மனம்!இப்படி இஸ்லாமியர் ஒருவர் மற்ற மதத்தின் புனித நூலை பாராட்டுவாரா?இல்லை மற்றவர்களை படிக்க சொல்லுவாரா?

    ReplyDelete
  37. அய்யா எனக்கு ஒரு டவுட்டு !
    கிருத்துவம் இயேசு சிலுவையில் அறையபட்டார்னு சொல்லுது!ஆனால் குரானோ அவர் கொள்ளபட்டாரே அன்றி சிலுவையில் அறையப்படவில்லைன்னு சொல்லுது!எது உண்மை?முதலில் உங்களுக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு வாங்க!நாங்க விவாதத்துக்கு ரெடி!

    ReplyDelete
  38. சாரு மாமா இஸ்லாத்துக்கு ஜால்ரா போட்டா உடனே இங்கு ஒரு பதிவு!கிருத்துவம் பற்றி எழுதுவீங்களா?இல்லை சாரு குறி சொல்ல பயன்படுத்தும் இந்து மதம் பற்றி எப்போ எழுதுவீங்க?

    ReplyDelete
  39. Why i am not a muslim:(written by a muslim)

    அண்ணா இதையும் படிங்க பிச்சை அவர்களே!
    http://dharumi.blogspot.com/2009/11/why-i-am-not-muslim-1.html

    ReplyDelete
  40. @ ராஜா..பாத்திரம்..

    எத்தனயோ பெயரில் வந்து கேட்ட கேள்விகளையே கேட்டாலும்...
    சொல்லப்பட்ட பதில்களை மட்டும் நீங்கள் படிப்பதே இல்லை.

    இணையத்தில் எத்தனையோ பதில்கள் அக்கேள்விகளுக்கு கொட்டிக்கிடக்கின்றன. அதையேல்லாம் முதலில் படியுங்கள்.

    அப்புறம்,

    இங்கே சொல்லப்பட்ட பொய்கள்...

    //குரானோ அவர் கொள்ளபட்டாரே அன்றி சிலுவையில் அறையப்படவில்லைன்னு சொல்லுது!//--எங்கே இப்படி சொல்லப்படுகிறது..? இது அப்பட்டமான பொய். உண்மையை அறிய குர்ஆனை படித்து அந்த வசனத்தை ஐ இங்கே பின்னூட்டமிடவும்..!

    ஏதோ இஸ்லாம் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு எதிரானது போல தொடர்ந்து சித்தரிக்கப்படுகிறது.

    இஸ்லாம் குடும்பக்கட்டுப்பாட்டை ஆதரிக்கவே செய்கிறது. ஆனால், குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைத்தான் எதிர்க்கிறது.

    அபாயகரமான மக்கள் தொகை குறைந்துவரும் ஏகப்பட்ட நாடுகளுக்கு உங்கள் பதில் என்ன..?

    இஸ்லாமுக்கு மாற்று மார்க்கம் இருந்தால் அதை சொல்லிவிட்டு அப்புறமாக இஸ்லாமிய எதிர்ப்பை சொல்லுங்கள் என்றேன்.

    என்னைப்பொருத்த வரை இந்த பதிவின் url என்பது இதுதான்...
    http://pichaikaaran.blogspot.com/2011/11/blog-post_143.html

    என்று நான் சொன்னால்...

    இங்கே "என்னைப்பொருத்த வரை" என்பது தவறுதானே..?

    அதைத்தானே நான் சொன்னேன்..!

    என்னைக்கேவலப்படுத்தி பார்ப்பதில் உள்ள அவசரமும் ஆர்வமும் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக சவாலை சந்திப்பதில் இருக்கட்டும்.

    //இஸ்லாமை துறந்தால் எல்லாரும் பொரிக்கி ஆகி விடுவார்கள் //--இப்படி சொன்னது யார்..?

    இதைவிட நல்லதொன்று இருந்தால்... அப்போது இஸ்லாத்தை துறந்தால்... எதற்கு பொரிக்கி ஆக வேண்டும்..?

    ReplyDelete
  41. அஸ்ஸலாம் அலைக்கும்
    தோழரே , இனைய நண்பர் முலமாக இங்கே நான் வருவது இதுதான் முதல் முறை ,
    கட்டுரையை மிக எளிமையாகவும், ஆணித்தரமாகவும் சொல்லியவிதம் என்னை
    மிகவும் கவர்ந்து உள்ளது //கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை//
    இது ஓர் highlight ஆன வாக்கியம், புரியாதவர்களுக்கு புரிந்தால் சரி

    இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல மாறாக மனித சமுதாயம் அனைத்துக்குமான

    ஓர் பொதுவான வேதமே திருக்குர்ஆன்! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி ...

    ReplyDelete
  42. Anonymous said...

    Why i am not a muslim:(written by a muslim)
    அனானி தமாசு பண்ணாதீங்க
    நீங்க எழுதியதை ஒரு தரம் படித்து பாருங்க
    கீழே நான் எழுதியதும் தமாசா இருக்குதில்லே ??!!
    Why I am not a communist (written by a comrade)

    ReplyDelete
  43. வருகை முதல் முறையானாலும் உங்கள் கட்டுரையை படிக்கும் போது ஒரு நம்பிக்கை தெரிகின்றது.

    மனிதர்களாக பிறந்த நாம் மனிதர்களை கொல்லுவதற்கும் இடையூறு கொடுப்பதற்கும் நாம் ஆயுதமாக தேர்ந்து எடுத்திருப்பது மதத்தை என்பது எனது கருத்து.

    இஸ்லாமை பற்றி மிக தெளிவாக நீங்கள் எழுதியிருந்தாலும் உங்களுக்கு இடையூறுகள் தருவதற்கென சில பேர்கள் உள்ளனர் அவர்களின் வாதமும் சரி கொள்கையும் சரி மனித இனத்திற்கு அப்பாற்ப்பட்டதாகவே இருக்கும்.

    இன்றைக்கு விஞ்ஞானத்தை பற்றி ஆகா..ஓகோ..என்று பேசும் நாம் அந்த விஞ்ஞானம் எப்படி வளந்துச்சுனு பேசுவதில்லை காரணம் அறியாமை.

    இன்றைக்கு எப்படி ராஜன் தமிழன் போன்ற தோழர்கள் குரானை எதிர்க்கின்றார்களோ அது போலத்தான் அமெரிக்க விஞானிகளும் குரான் கூறுவது பொய் என்று நிறுபிக்கவேண்டி குரானை அலசி ஆராய்ந்தனர் இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது தோல்விதான் கடைசியில் பல விஞானிகளும் அறிவு மேதைகளும் இஸ்லாத்தை தழுவினர் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் எதிர்ப்பு இருக்க இருக்கத்தான் சக்தி கூடும்.

    குரான் என்பது உலக மக்கள்களுக்காக இறக்கப்பட்ட அதிசிய பொக்கிஷம்.

    நீங்கள் எந்த மதத்திலேயும் இருந்திட்டு போங்கள் ஆனால் பிறர் மனம் புண்படும் கோணத்தில் பிண்ணூட்டம் இடாதிர்கள்.

    எல்லா மதத்தினரும் சந்தோசமாக வாழனும் என்பதே எனது ஆசை.

    கட்டுரை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. அனைவருக்கும்,

    சலாம்,

    இங்கே செங்கொடி, தருமி என்பவர்கள் பதிவுகள் குறித்து பேசப்படுவதால் அதற்கான முஸ்லிம்களின் பதில்களின் லிங்க்குகளை கொடுத்து விடுகின்றேன்.

    செங்கொடி என்பரின் பதிவுகளுக்கு மறுப்பு:
    http://www.ihsasonline.tk/

    தருமி என்பவர் அப்படி என்ன இஸ்லாத்தை விமர்சித்தார் என்பது தெரியவில்லை. நான் அறிந்தவரை இஸ்லாத்திற்கு எதிரான ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்து தன் பதிவுகளில் வெளியிட்டு வருகின்றார். அந்த புத்தகத்தின் அபத்தங்களை வெளிப்படுத்தி எத்தனையோ விமர்சனங்கள் உலகளாவிய முஸ்லிம்களால் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு,
    http://www.islamawareness.net/FAQ/warraq1a.html

    @அனானி,

    ///Why i am not a muslim:(written by a muslim)///

    செம தமாஸ். முடிஞ்சா மேலே உள்ளே லிங்க் பாருங்க...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  45. இங்கே செங்கொடி, தருமி என்பவர்கள் பதிவுகள் குறித்து பேசப்படுவதால் அதற்கான முஸ்லிம்களின் பதில்களின் லிங்க்குகளை கொடுத்து விடுகின்றேன்.
    ///
    .
    .
    சொல்பவரின் தகுதியை குறை சொல்லாமல் அவர்கள் வைத்த வாதங்களுக்கு பதில் கூறவும்!
    *******************************************

    //குரானோ அவர் கொள்ளபட்டாரே அன்றி சிலுவையில் அறையப்படவில்லைன்னு சொல்லுது!//--எங்கே இப்படி சொல்லப்படுகிறது..? இது அப்பட்டமான பொய். உண்மையை அறிய குர்ஆனை படித்து அந்த வசனத்தை ஐ இங்கே பின்னூட்டமிடவும்..!
    *
    வழக்கம் போல ஹோம்வொர்க் கொடுத்தாச்சா?
    அய்யா இப்போ நான் குரானில் இருந்து எடுத்து சொல்றன்னே வச்சிகிங்க அப்போ நீங்க என்ன சொல்வீங்க?அது மொழிபெயர்ப்பில் வந்த தவறு!ஒரிஜினல் அரபி மொழி குரானை படித்துட்டு வாங்கன்னு!பழைய குருடி கதவை திறடி

    ReplyDelete
  46. அபாயகரமான மக்கள் தொகை குறைந்துவரும் ஏகப்பட்ட நாடுகளுக்கு உங்கள் பதில் என்ன..?//
    .
    .
    அப்படி எந்த நாடு உள்ளது?சொலுங்க?700 கோடி மக்கள் தொகை ரொம்பி வழியுது!இந்தியா சீனா போன்ற நாட்டில் மக்கள் தொகை வழியும் பொது அதை ஈடு கட்ட சில நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதுதான் நல்லது!இப்பவே பலருக்கு ஒரு சொட்டு தண்ணி இல்லை தெரியுமா?ஆப்ரிக்க நாடுகளை பாருங்கள்!அப்புறம் அபாயகரமான மக்கள் தொகை உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லையே!இங்கே குடும்ப கட்டுப்பாடு கொண்டு வருவதில் என்ன தயக்கம்?குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்ய கூடாதுன்னு குரான் சொல்வதாக நீங்கள் சொல்றீங்க!இப்போ இது அர்வியளுக்கு புறம்பான வாதம் இல்லையா?
    *
    *
    இஸ்லாமுக்கு மாற்று மார்க்கம் இருந்தால் அதை சொல்லிவிட்டு அப்புறமாக இஸ்லாமிய எதிர்ப்பை சொல்லுங்கள் என்றேன்.///
    .
    .
    இஸ்லாமுக்கு மாத்ரே இல்லைன்னு சொல்லும் வாதத்தை தான் நான் எதிர்க்கிறேன்!மற்ற மதங்களை முழுக்க படித்துவிட்டீர்களா?பின் எந்த வாதத்தில் அப்படி சொல்றீங்க?தனி மனித ஒழுக்கம் மதங்களால் வந்து விட்டதா?இஸ்லாமிய நாடுகள் செழிப்பாக உள்ளனவா?இல்லை வேறு யூத நாடோ கிறித்துவ நாடோதான் நல்லா இருக்கா?அதுக்காக என்னை காம்றேடுன்னு முத்திரை குத்த வேண்டாம்!

    ReplyDelete
  47. சரி நான் கெட்ட கேள்விக்கு பதில் என்ன?
    அதிகாரபூர்வ குரான் மொழி பெயர்ப்பு என்ன?ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொன்னு சொல்லுதே?

    ReplyDelete
  48. சகோதரர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
    கேள்விப்படுவதையல்லாம் நம்பாமல், ஆராய்ந்து , ஆராய்ந்ததை மறைக்காமல் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  49. 10. A husband has sex with his wife, as a plow goes into a dirt field.

    The Quran in Sura (Chapter) 2:223 says:

    Your women are your fields, so go into your fields whichever way you like . . . . (MAS Abdel Haleem, The Qur’an, Oxford UP, 2004)

    We should make no mistake about this verse. It includes sexual positions. In a footnote to this verse, Haleem says that Muslims in Medina heard from the Jews that "a child born from a woman approached from behind would have a squint."

    The hadith are the reports of Muhammad’s words and actions outside of the Quran. Two reliable hadith collectors and editors are Bukhari (d. 870), Muslim (d. 875). After the Quran, the hadith come second in importance and sacredness among the vast majority of Muslims around the world.

    Since the hadith is explicit, the readers are invited to click here and read for themselves, at their own discretion: Muslim nos. 3363-3365.

    See these parallel hadith here and here.

    We should have no doubt that the husband controlled their sex life. If a woman does not want to have sex, then angels curse her.

    . . . "If a man invites his wife to sleep with him and she refuses to come to him, then the angels send their curses on her till morning." (Bukhari)

    Here is the back-up article. This one also provides back up material. See the section at the beginning "Women Are Men’s Property."

    9. Husbands are a degree above their wives.

    The Quran in Sura 2:228 says:

    . . . Wives have the same rights as the husbands have on them in accordance with the generally known principles. Of course, men are a degree above them in status . . . (Sayyid Abul A’La Maududi, The Meaning of the Qur’an, vol. 1, p. 165)

    Gender inequality shows up in a theological context. This hadith shows that the majority of the inhabitants of hell are women.

    The Prophet said, "I looked at Paradise and found poor people forming the majority of its inhabitants; and I looked at Hell and saw that the majority of its inhabitants were women." (Bukhari, emphasis added; see also these parallel traditions here and here.)

    This parallel hadith explains that the majority of the inhabitants of hell are women because they are ungrateful and harsh towards their husbands. There is no word about the husbands’ ingratitude and harshness. It should be noted that some Muslim missionaries and polemicists assert that since women make up the majority of the world, it only stands to reason that they would be the majority in hell. In reply, however, this misses the point—and may miss the possibility that women may be more spiritual than men. Regardless, the reason that women make up the majority in hell is their harshness and ingratitude. So it has nothing to do with a mathematical majority. Islam clearly does not honor women.

    See this article for details on women in Islamic hell.

    Muhammad was also superstitious (see here for the evidence). This next hadith says that women are part of an evil omen.

    I heard the Prophet saying. "Evil omen is in three things: The horse, the woman and the house." (Bukhari)

    Here is the back-up article. This one is too (scroll down to the Endnotes and see the brief discussion about Muslim women in hell).

    ReplyDelete
  50. 8. A male gets a double share of the inheritance over that of a female.

    The Quran in Sura 4:11 says:

    The share of the male shall be twice that of a female . . . . (Maududi, vol. 1, p. 311)

    For how this religious law works out in early Islam, see these hadith here and here and here.

    Malik (d. 795) is a founder of a major school of law. He composed a law book that is also considered a collection of reliable hadith: Al-Muwatta of Imam Malik ibn Anas: The First Formation of Islamic Law (rev. trans. Aisha Bewley, Inverness, Scotland: Madina Press, 1989, 2001). Malik writes:

    The generally agreed upon way of doing things among us . . . about fixed shares of inheritance (fara’id) of children from the mother or father when one or the other dies is that if they leave male and female children, the male takes the portion of two females.

    This Islamic law is regressive. But in the US, for example, the inheritance is divided equally among all siblings, regardless of the gender. No religious law prohibits this from happening in advance. So American secular law fits into a modern context better, where women have more economic opportunities and freedom.

    This online booklet has a short explanation on women’s inheritance "rights." Click on Chapter 15.

    Along with the previous link, here is the back-up article.

    7. A woman’s testimony counts half of a man’s testimony.

    The Quran in Sura 2:282 says:

    And let two men from among you bear witness to all such documents [contracts of loans without interest]. But if two men be not available, there should be one man and two women to bear witness so that if one of the women forgets (anything), the other may remind her. (Maududi, vol. 1, p. 205).

    It seems that the foundational reason for having two women witnesses is that one of the women may "forget" something. This goes to the nature of womankind. Philosophers teach us that one of the main differences between animals and humans lies in humankind’s rationality. But this verse implies that a woman’s mind is weak.

    This hadith removes any ambiguity about women’s abilities in Sura 2:282:

    The Prophet said, "Isn’t the witness of a woman equal to half of that of a man?" The women said, "Yes." He said, "This is because of the deficiency of a woman’s mind." (Bukhari, emphasis added)

    Here is the back-up article, and so is this one. This article too explains Islam’s view on women’s mental inabilities (scroll down to "Women Are Inferior to Men"), citing many hadith and Muslim commentators.

    ReplyDelete
  51. ஷாஹ் பானு வழக்கின் தீர்ப்பை ராஜீவ் காந்தியை இம்ப்ளூயன்ஸ் செய்து பெறப்பட்ட தீர்ப்பால் இன்றும் இஸ்லாமிய பெண்கள் படும் பாடு:
    http://1.bp.blogspot.com/_jCK-11ctoxI/SzBcFKRGAgI/AAAAAAAAADQ/tX0sHGRbJbk/s1600/21_12_2009_008_003.jpg

    ReplyDelete
  52. பெண்களின் நிலை:
    Muhammad offered women little hope for the afterlife. Indeed, he clearly states that most of the inhabitants of hell are women who were ungrateful to their husbands (though he never suggests that ungrateful husbands will receive similar punishment[12]). This means that, after being admonished, banished to a separate bed, and beaten by her husband, a willful woman can look forward to an eternity in hell:

    The Prophet (the blessing and peace of Allah be upon him) said: "I saw paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women." The people asked: "O Allah’s Apostle! Why is it so?" The Prophet (the blessing and peace of Allah be upon him) said: "Because of their ungratefulness." It was asked whether they are ungrateful to Allah. The Prophet (the blessing and peace of Allah be upon him) said: "They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds."[13]

    [Muhammad said], "O women! Give to charity, for I have seen that the majority of the dwellers of Hell-Fire were women." The women asked, "O Allah’s Apostle! What is the reason for it?" He said: "O women! You curse frequently, and are ungrateful to your husbands. I have not seen anyone more deficient in intelligence and religion than you. O women, some of you can lead a cautious man astray."[14]

    However, even if these women were to stop cursing and to start thanking their husbands, their prospects for the afterlife would still leave much to be desired. According to Muhammad, Muslim women can look forward to an eternity of standing in corners, waiting for men to come and have sex with them:

    Allah’s Apostle (The blessing and peace of Allah be upon him) said: "In Paradise there is a pavilion made of a single hollow pearl sixty miles wide, in each corner of which there are wives who will not see those in the other corners; and the believers will visit and enjoy them."[15]

    Hence, good Muslim women who respect their husbands in this life will have the opportunity to continue their sexual service to their husbands in "Paradise." Apparently, Muhammad considered this to be an appropriate view of Paradise; many women would rightly disagree.

    ReplyDelete
  53. தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானா.. கொத்தனாரா.. போன்ற போக்கற்ற கேள்விகளை விட்டுவிட்டு விவாதிக்கத்தயாராகுங்கள். //
    .
    .
    அப்படிப்பட்ட கேள்விகளை நான் கேட்கவில்லை!உங்கள் பதில்தான் அப்படி இருக்கிறது!
    சரி எல்லா இஸ்லாமியர்களுக்கும் இரண்டு கேள்விகள்:
    (பிச்சைக்காரன் இதை சென்சார் பண்ண வேண்டாம்.ஏற்கெனவே செய்துள்ளீர்கள்)
    ***********************************************
    ௨.மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?
    ௩.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?

    ReplyDelete
  54. எங்கிருந்தோ உருவி எடுத்து
    காபி அண்ட் பேஸ்ட் கமென்ட் போடுகிறவர்களுக்கு:-) //
    .
    .
    நாங்க எங்கிருந்தோ காப்பி பேஸ்ட் பண்ணுறோம்.நீங்க குரானில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யுறீங்க!தட்ஸ் ஆள்!

    ReplyDelete
  55. என்னதான் நான் இணைப்பு கொடுத்தாலும் "அட!இது காம்ரேட் சொன்னது வேஸ்ட் அடுத்து" அட இது அவன் சொன்னதா அட போன்கப்பு என்று சொல்றீங்க!நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் இஸ்லாமிய தளத்துக்கு தானே செல்லுது?அப்போ நானும் "அட உங்க மதத்துக்கு நீங்கதான் சப்போர்ட் பண்றீங்க இதுல என்ன பெரிசு" என்று சொல்லி விட இயலும்!

    ReplyDelete
  56. அப்புறம் ஒரு மனித குலத்துக்கு நல்லது சொல்கிறவர் தான் முதலில் அப்படி நடந்து கொள்ள வேண்டும்!இல்லையா?ஆனால் மற்ற முஸ்லிம்கள் நாளு பெண்கள் வரை கை பிடிக்கலாம்னு சொல்லிட்டு இவர் பதினோரு பெண்களை திருமணம் செய்தார்(சரி இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லுவீங்கன்னு தெரியும் அவர் விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தார் என்று) சரி சாதாரண முஸ்லிம் பதினோரு விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தால் என்ன தவறு?

    ReplyDelete
  57. அப்புறம் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்த முகமது!இது என்ன நியாயம்?

    ReplyDelete
  58. இஸ்லாம் ஆழமான கருத்துகளை கொண்டதுன்னு சொல்றீங்க சரி!பிறகு ஏன் பயந்து கொண்டு இஸ்லாமை விமர்சனம் செய்யும் வலை தளங்களை தடை செய்கிறீர்கள்(இஸ்லாமிய நாடுகளில்)
    *
    மேலும் பாகிஸ்தானில் மத துவேஷ சட்டம்(Blaspehmy law) உள்ளது!இஸ்லாமை விமர்சித்தால் உடனே ஆளை முடித்துவிடுவது ஏன்?சாந்தியும் சமாதானமும் நிலவ வைப்பது இப்படிதானா?ஒரு கிறித்துவ பெண் மற்றும் அவருக்கு ஆதரவளித்த கவர்னர் இரண்டு பெரும் அந்த சட்டத்தால் கொள்ள பட்டிருக்கிறார்கள்!ஏன் இப்படி?விமர்சனங்களை ஏன் சகித்துக்கொள்ள மட்டேன்கிரார்க்ள?வலை தளங்களை ஏன் தடை செய்ய வேண்டும்?மக்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக நிற்கும்போது?(உங்கள் வாதத்தில் சொல்வதானால்)

    ReplyDelete
  59. கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள்!அப்புறம் நோ கமண்ட்ஸ்!
    முதல் கேள்வி இந்தியாவின் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை ரொம்பி வழிந்து கொண்டிருப்பது!இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வென்ன?(இங்கு யாரோ சில நாடுகளில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ளதே எதுக்கு குடும்ப கட்டுபாடுன்ன கேட்டார்!அதற்கு பதில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் தங்களின் உற்பத்தி போக மீதியை மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்!அதுதான் Balance எல்லா நாடுகளிலும் மக்கள் தொகை வழிததுன்னா சோத்துக்கே சிங்கி அடிக்கணும்)
    ***************
    Back to my question இந்திய மக்கள் தொகை பிரச்சனைக்கு இஸ்லாமின் தீர்வென்ன?நாப்பது கோடி பேர் ஒருவேளை சோத்துக்கே சிங்கி அடிக்கிறார்களே!

    ReplyDelete
  60. இரண்டாவது கேள்வி:
    உங்கள் அல்லா மீது சத்தியமாக சொல்லுங்கள் குரான் இறைவன் அருளியதாக சொல்லப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை குரான் மாற்றமே செய்யப்படவில்லையா?ஒரு வார்த்தை கூட மாற்ற படவில்லையா?அடைப்பு குறிகள் அப்பவே இருந்ததா?இருந்ததுன்னா இன்று அதன் இடம் (position)மாற்றப்படவில்லை என சத்தியம் செய்ய தயாரா?

    ReplyDelete
  61. @ வெவ்வேறு பெயரில் வந்து பொய் சொல்பவர்:

    //ஒரு கிறித்துவ பெண் மற்றும் அவருக்கு ஆதரவளித்த கவர்னர் இரண்டு பெரும் அந்த சட்டத்தால் கொள்ள பட்டிருக்கிறார்கள்!//==?!?!?!==பொய்..பொய்...பொய்...பொய்...

    முதலில் பொய் சொல்வதை தயவு செய்து விட்டுவிடுங்களேன்.

    //அய்யா இப்போ நான் குரானில் இருந்து எடுத்து சொல்றன்னே வச்சிகிங்க//---"இயேசு (ஈசா நபி) சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்" என்று முடிந்தால் எந்த குர்ஆன் மொழிபெயர்ப்பில் இருந்தாலும் கொண்டுவந்து காட்டுங்களேன்..! நீங்கள் பொய்யர் என்பதற்கு ஆதாரத்தை நீங்களே எப்படி தருவது என்று பயப்படுகிரீர்களா..?

    ReplyDelete
  62. //எனக்கு மூணு கேள்விகள்!பிச்சைக்காரன் விளக்க வேண்டும்!வேறு யாரும் இல்லை!//--முன்னர் கேட்டதை....

    //சரி எல்லா இஸ்லாமியர்களுக்கும் இரண்டு கேள்விகள்://...என்று இப்போதுதானே எங்களிடம் கேட்டுள்ளீர்கள்..!?!?

    நீங்கள் இதே காபி பேஸ்ட் கேள்வி பின்னூட்டத்தை இன்னும் எத்தனை தளங்களில் எத்தனை பெயர்களில் நீங்கள் போட்டு கேட்டாலும் அத்தனைக்கும் ஒரே பதில் சுட்டிதான்...

    http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.html

    இங்கே உங்களுக்கு ஏற்கனவே விளக்கமாக நான்கு பின்னூட்டங்களில் பதில்கள் உள்ளன..!

    அறிய ஆவல் இருந்தால் அறிந்து கொள்ளவும். sorry for not 'copy-past'ing.

    ReplyDelete
  63. //குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டது, பிறகு ஏன் கடவுளால் நேரடியாக இறக்கபட்டது என சொல்லி வருகிறீர்கள்!//

    --இதுவும்...

    கொத்தனார்தானே தாஜ்மஹாலை கட்டினார்..? அப்புறம் ஏன், 'தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹான் என்று சொல்கிறீர்கள்..?' என்று நான் கேட்டால் சிரிக்க மாட்டீர்கள்...?

    ஜிப்ரீலை நம்பும் உங்களுக்கு கடவுள் நம்பிக்க இல்லை. உங்களிடம் குறைந்த பட்ச லாஜிக் கூட இல்லையே..!?

    //இந்தியாவின் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை ரொம்பி வழிந்து கொண்டிருப்பது!இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வென்ன?//

    எல்லாரையும் மலடாக்கும் தீர்வை இஸ்லாம் எதிர்க்கிறது. வறுமைக்கு பயந்து குழந்தையை -அது கர்ப்பப்பையில் சிசுவாக இருந்தாலும்- கொலை செய்வதை தடுக்கிறது..! (இதற்கு ஆதரவாக நம் நாட்டில் ஸ்கேன் பார்க்கக்கூட தடைச்சட்டம் உண்டு)

    சரி என்னதான் தீர்வு..? இங்கே சென்று படிக்கவும்.

    http://pinnoottavaathi.blogspot.com/2010/10/blog-post_17.html

    அபாயகரமான அளவுக்கு மக்கள்தொகை குறைந்து வரும் நாடுகள் எவை எவை என்றும், தன் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாடுகள் என்னென்ன முயற்சிகள் செய்கின்றன என்றும் அறிய ஆவல் இருந்தால்... அறிய ஆவல் இருந்தால்... அதே பதிவில் சென்று அறிந்து கொள்ளவும். இன்னும் அதிக விபரங்களுக்கு கூகுளில் தேடவும்.

    ReplyDelete
  64. //இந்தியா சீனா போன்ற நாட்டில் மக்கள் தொகை வழியும் பொது அதை ஈடு கட்ட சில நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதுதான் நல்லது!//---அடடா..! என்ன ஒரு சுயநலம்..?

    இதே போல அந்த நாட்டின் அறிவாளிகள் சொன்னால் ஏற்றுகொள்வீர்களா..?


    //இப்பவே பலருக்கு ஒரு சொட்டு தண்ணி இல்லை தெரியுமா? ஆப்ரிக்க நாடுகளை பாருங்கள்!//---உங்களுக்கு இந்தியா மட்டும்தானே உலகம்..? எதற்கு ஆப்ரிக்கா..?

    //அப்புறம் அபாயகரமான மக்கள் தொகை உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லையே!இங்கே குடும்ப கட்டுப்பாடு கொண்டு வருவதில் என்ன தயக்கம்?//---நான் தான் சொல்லிவிட்டேனே... குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கு இஸ்லாம் தடை இல்லை என்று..?

    //குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்ய கூடாதுன்னு குரான் சொல்வதாக நீங்கள் சொல்றீங்க!//--இஸ்லாம் சொல்வதாக சொன்னேன்.

    //இப்போ இது அர்வியளுக்கு புறம்பான வாதம் இல்லையா?//---எப்படி..? உங்களைப்போருத்தவரை மலடாக்குவது என்ற அறிவியல்(?)வழி ஒன்றுதான் குடும்பக்கட்டுப்பாட்டுக்குறிய தீர்வு என்று நீங்கள் நினைத்தால்.. அது உங்களின் அறிவுப்பற்றாக்குறை..!

    //இஸ்லாமுக்கு மாத்ரே இல்லைன்னு சொல்லும் வாதத்தை தான் நான் எதிர்க்கிறேன்!//----ஆதாரத்தோடு எதிர்ப்பை தெரிவியுங்களேன்..! ஏற்றுக்கொள்கிறேன்..!

    //மற்ற மதங்களை முழுக்க படித்துவிட்டீர்களா?பின் எந்த வாதத்தில் அப்படி சொல்றீங்க?//---படித்ததால் தான் முஸ்லிமாக இருக்கிறேன்.

    நீங்களும் முழுக்க அல்ல... ஓரளவேனும் படித்து விட்டு கேள்வி கேளுங்களேன்..!

    //இஸ்லாமிய நாடுகள் செழிப்பாக உள்ளனவா?//--ஹா...ஹா...ஹா... சரி, வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா புருனை போன்றவை எல்லாமே ஓட்டாண்டியாகவே இருந்துவிட்டு போகட்டுமே... 'ஒரு நாடு செழிப்பாக இருப்பது'தான்... 'அந்நாட்டு பெரும்பாண்மை மக்களின் மார்க்கம் சரி' என்பதற்கு அளவுகோலா..?

    உங்கள் அருகில்... கெட்டவன் பணக்காரனாக இல்லையா..? நல்லவன் ஏழ்மையில் இல்லையா..? என்னங்க இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு உங்க விவாதம்..?

    ReplyDelete
  65. நானும் இவர்களை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் ....
    அந்த மூன்று கேள்விகள் ...
    குண்டக்க மண்டக்க தான் கேள்வி எழுப்பயுள்ளார் ...
    அவருக்கு எதிர்குரல் வழியாக பின்னூட்டத்தில் பதில் அழிக்க பட்டுள்ளது ... மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டல் என்ன நியாயம் பொய் பகுத்தறிவாளர்களே !!!!!
    முதலில் அதற்க்கு உண்டான பதில் படியுங்கள் ... அடுத்து அதில் இருந்து கேள்வி எழுப்புங்கள் ...

    .........

    ReplyDelete
  66. //என்னதான் நான் இணைப்பு கொடுத்தாலும் "அட!இது காம்ரேட் சொன்னது வேஸ்ட் அடுத்து" அட இது அவன் சொன்னதா அட போன்கப்பு என்று சொல்றீங்க!நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் இஸ்லாமிய தளத்துக்கு தானே செல்லுது?//

    ---என்ன பண்றது சகோ..? உங்களை மாதிரி ஆட்கள் பலர் பொய் பொய்யா தானே எழுதி வச்சிருக்காங்க..?

    இனி...

    'இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானது' என்று எந்த பெயரில் வந்து நீங்கள் பின்னூட்டம் இட்டாலும்...

    நான் தரப்போகும் லிங்க் இதுதான்...

    http://pichaikaaran.blogspot.com/2011/11/blog-post_143.html

    இப்போ ஓகேவா..?

    //அப்போ நானும் "அட உங்க மதத்துக்கு நீங்கதான் சப்போர்ட் பண்றீங்க இதுல என்ன பெரிசு" என்று சொல்லி விட இயலும்!//---அப்படித்தானே சொல்லிக்கிட்டு இருக்கீங்க..!

    கிபி 610-ல் 'இஸ்லாத்தை தோற்றுவித்தது' முஹம்மது நபி என்றும் அவர்தான் 'முதல் முஸ்லிம்' என்றும் அண்ட புளுகு ஆகாச புளுகைத்தானே நாம் பள்ளிப்பாடங்கள் முதல்... முனைவர் படிப்பு வரை படித்து வந்திருக்கிறோம்..!

    எனில், இனி நாங்கள் என்ன கத்தினாலும் பொய்யாகத்தானே இருக்கும் உங்களுக்கு..?

    ReplyDelete
  67. இறுதியாக,
    இப்பதிவை எதிர்த்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது..!

    உங்களுக்கு பிடிக்காத என்னிடம் விவாதிப்பதை விட்டுவிட்டு, இத்தள (பிச்சைக்காரன்) உரிமையாளர் சகோ.பார்வையாளன் (சகோ.ஆனந்த்)போல உண்மையை அறிய ஆவல் இருந்தால் தேடித்தேடி இஸ்லாம் பற்றி படியுங்கள்.

    இஸ்லாம் பற்றி அறிய நாடினால், இனையத்தில், கூகுளில் எந்த கேள்விக்கும் அறிவுப்பூர்வமான பதில் லாஜிக்களாக உள்ளது.

    உங்களின் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பர்சனல் லைஃப் கேள்விகள் உட்பட..!

    ReplyDelete
  68. சகோதரர் மனிதன்,

    ஸலாம்...

    //சொல்பவரின் தகுதியை குறை சொல்லாமல்//

    சகோதரர், நான் யாருடைய தகுதியையும் குறை சொல்லவில்லை. அப்படி சொன்னதாக அவர்கள் நினைத்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன்.

    //அவர்கள் வைத்த வாதங்களுக்கு பதில் கூறவும்!//

    அவர்கள் வைத்துள்ள வாதத்திற்கு பதில்கள் நான் கொடுத்த லின்க்கில் உள்ளது.

    நன்றி.. .

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  69. //என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.//


    இதைதான் குர் ஆனும் பல இடங்களில் சொல்லுது .அறிவுடையோர் சிந்திக்க மாட்டீர்களா-ன்னு :-)

    நேர்மையான அலசல் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  70. அருமையான கட்டுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  71. எளிமையான நடையில் கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றி

    ReplyDelete
  72. சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)
    [74:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
    [74:1] மறைக்கப்பட்ட இரகசியமே*.

    அடிகுறிப்பு:
    *74:1 கடவுளின் எல்லையற்ற ஞானம் இக்குர்ஆனை முஹம்மதின் மூலமாக வெளிப்படுத்த நாடியது, அதே சமயம் குர்ஆனின் அச்சுறுத்துகின்ற 19ன் அடிப்படையிலான கணித அற்புதம் குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு 1406 சந்திர வருடங்கள் கழித்து, (1406 = 19 ஒ 74 & கி.பி.1974 இக்கண்டுபிடிப்பின் சூரிய வருடமாக இருந்தது) கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. நடந்தவற்றை நினைத்துப் பார்க்கையில், இந்த முழு சூராவும் குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான அற்புதத்தையே குறிக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 1 & 2).
    [74:2] வெளியில் வந்து எச்சரிக்கை செய்வாயாக.
    [74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.
    [74:4] உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*

    அடிகுறிப்பு:
    *74:4 குர்ஆன்தான் இந்த இரகசியக் குறியீட்டைத் தன்னகத்தே கொண்ட ஆடையாக உள்ளது. இது 9:128-9 ஐ நீக்குவதைக் குறிக்கின்றது.
    [74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.
    [74:6] உன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடை வாயாக.
    [74:7] உறுதிப்பாட்டுடன் உன்னுடைய இரட்சகரை நினைவு கூர்வாயாக.
    [74:8] பின்னர், கொம்பு ஊதப்படும் பொழுது.
    [74:9] அது ஒரு சிரமமான நாளாக இருக்கும்.
    [74:10] நம்ப மறுப்பவர்களுக்கு, எளிதானதல்ல.
    [74:11] தனிநபராக நான் படைத்த ஒருவன் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்.
    [74:12] ஏராளமான பணத்தை அவனுக்கு நான் வழங்கினேன்.
    [74:13] காண்பதற்குப் பிள்ளைகளையும்.
    [74:14] ஒவ்வொன்றையும் அவனுக்கு நான் இலகுவாக்கினேன்.
    [74:15] இருப்பினும், அதிகம் பெறுவதற்கு அவன் பேராசைப்படுகின்றான்.
    [74:16] இந்தச் சான்றுகளை ஏற்றுக் கொள்ள அவன் பிடிவாதமாக மறுத்தான்.
    [74:17] அதிகரித்தவாறே அவனை நான் தண்டிப்பேன்.
    [74:18] ஏனெனில் அவன் சிந்தித்தான், பின்னர் தீர்மானித்தான்.
    [74:19] அவன் தீர்மானித்தது துக்ககரமானது.
    [74:20] அவன் தீர்மானித்தது உண்மையில் துக்க கரமானது.
    [74:21] அவன் நோக்கினான்.
    [74:22] அவன் முகம்சுளித்தான் மேலும் முனங் கினான்.
    [74:23] பின்னர் அவன் ஆணவத்துடன் திரும்பிச் சென்றான்.
    [74:24] அவன் கூறினான், “இது திறமையான மாயாஜாலமே அன்றி வேறில்லை!”
    [74:25] “இது மனிதனால் செய்யப்பட்டது”.
    [74:26] நான் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கு வேன்.
    [74:27] எத்தகைய தண்டனை!
    [74:28] முழுமையானது மேலும் விசாலமானது.
    [74:29] மக்கள் அனைவருக்கும் கண்கூடானது.
    குர்ஆனின் பொதுவான வகுக்கும் எண்
    [74:30] அதன் மீது பத்தொன்பது உள்ளது*.

    அடிகுறிப்பு:
    *74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
    [74:31] நரகத்தின் பாதுகாவலர்களாக இருப்பதற்காக வானவர்களை நாம் நியமித்தோம், மேலும் அவர்களுடைய எண்ணை (19) நிர்ணயித்தோம். (1) நம்ப மறுப்பவர்களைக் குழப்புவதற்காக, (2) கிறிஸ்தவர்களையும் மற்றும் யூதர்களையும் (இது ஓர் இறைவேதம் தான் என்று) நம்பச் செய்வதற்காக, (3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக, (4) கிறிஸ்தவர்கள், யூதர்கள், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தே கத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்கு வதற்காக, மேலும் (5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத் தைத் தாங்கியிருப்பவர்களையும், மேலும் நம்ப மறுப்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காக; அவர்கள், “கடவுள் இந்த உருவகத்தின் மூலம் என்ன கூற நாடுகின்றார்?” என்று கூறுவார்கள். கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்கான தொரு நினைவூட்டலாகும்.

    அடிகுறிப்பு:
    *74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  73. சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)
    [74:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
    [74:1] மறைக்கப்பட்ட இரகசியமே*.

    அடிகுறிப்பு:
    *74:1 கடவுளின் எல்லையற்ற ஞானம் இக்குர்ஆனை முஹம்மதின் மூலமாக வெளிப்படுத்த நாடியது, அதே சமயம் குர்ஆனின் அச்சுறுத்துகின்ற 19ன் அடிப்படையிலான கணித அற்புதம் குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு 1406 சந்திர வருடங்கள் கழித்து, (1406 = 19 ஒ 74 & கி.பி.1974 இக்கண்டுபிடிப்பின் சூரிய வருடமாக இருந்தது) கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. நடந்தவற்றை நினைத்துப் பார்க்கையில், இந்த முழு சூராவும் குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான அற்புதத்தையே குறிக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 1 & 2).
    [74:2] வெளியில் வந்து எச்சரிக்கை செய்வாயாக.
    [74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.
    [74:4] உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*

    அடிகுறிப்பு:
    *74:4 குர்ஆன்தான் இந்த இரகசியக் குறியீட்டைத் தன்னகத்தே கொண்ட ஆடையாக உள்ளது. இது 9:128-9 ஐ நீக்குவதைக் குறிக்கின்றது.
    [74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.
    [74:6] உன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடை வாயாக.
    [74:7] உறுதிப்பாட்டுடன் உன்னுடைய இரட்சகரை நினைவு கூர்வாயாக.
    [74:8] பின்னர், கொம்பு ஊதப்படும் பொழுது.
    [74:9] அது ஒரு சிரமமான நாளாக இருக்கும்.
    [74:10] நம்ப மறுப்பவர்களுக்கு, எளிதானதல்ல.
    [74:11] தனிநபராக நான் படைத்த ஒருவன் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்.
    [74:12] ஏராளமான பணத்தை அவனுக்கு நான் வழங்கினேன்.
    [74:13] காண்பதற்குப் பிள்ளைகளையும்.
    [74:14] ஒவ்வொன்றையும் அவனுக்கு நான் இலகுவாக்கினேன்.
    [74:15] இருப்பினும், அதிகம் பெறுவதற்கு அவன் பேராசைப்படுகின்றான்.
    [74:16] இந்தச் சான்றுகளை ஏற்றுக் கொள்ள அவன் பிடிவாதமாக மறுத்தான்.
    [74:17] அதிகரித்தவாறே அவனை நான் தண்டிப்பேன்.
    [74:18] ஏனெனில் அவன் சிந்தித்தான், பின்னர் தீர்மானித்தான்.
    [74:19] அவன் தீர்மானித்தது துக்ககரமானது.
    [74:20] அவன் தீர்மானித்தது உண்மையில் துக்க கரமானது.
    [74:21] அவன் நோக்கினான்.
    [74:22] அவன் முகம்சுளித்தான் மேலும் முனங் கினான்.
    [74:23] பின்னர் அவன் ஆணவத்துடன் திரும்பிச் சென்றான்.
    [74:24] அவன் கூறினான், “இது திறமையான மாயாஜாலமே அன்றி வேறில்லை!”
    [74:25] “இது மனிதனால் செய்யப்பட்டது”.
    [74:26] நான் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கு வேன்.
    [74:27] எத்தகைய தண்டனை!
    [74:28] முழுமையானது மேலும் விசாலமானது.
    [74:29] மக்கள் அனைவருக்கும் கண்கூடானது.
    குர்ஆனின் பொதுவான வகுக்கும் எண்
    [74:30] அதன் மீது பத்தொன்பது உள்ளது*.

    அடிகுறிப்பு:
    *74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
    [74:31] நரகத்தின் பாதுகாவலர்களாக இருப்பதற்காக வானவர்களை நாம் நியமித்தோம், மேலும் அவர்களுடைய எண்ணை (19) நிர்ணயித்தோம். (1) நம்ப மறுப்பவர்களைக் குழப்புவதற்காக, (2) கிறிஸ்தவர்களையும் மற்றும் யூதர்களையும் (இது ஓர் இறைவேதம் தான் என்று) நம்பச் செய்வதற்காக, (3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக, (4) கிறிஸ்தவர்கள், யூதர்கள், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தே கத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்கு வதற்காக, மேலும் (5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத் தைத் தாங்கியிருப்பவர்களையும், மேலும் நம்ப மறுப்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காக; அவர்கள், “கடவுள் இந்த உருவகத்தின் மூலம் என்ன கூற நாடுகின்றார்?” என்று கூறுவார்கள். கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்கான தொரு நினைவூட்டலாகும்.

    அடிகுறிப்பு:
    *74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா