Saturday, December 25, 2010

இளையராஜா செய்தது சரியா?- விவாத தொகுப்பு

கவிதையை மொழி பெயர்ப்பது எளிதல்ல…
அர்த்தம்தான் முக்கியம் என நினைத்து , சில வார்த்தைகளை கூட்டவோ குறைக்கவோ செய்தால் , விமர்சனம் எழும்..
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால், மூல கவிதையின் உணர்ச்சி இதில் இல்லை என அதையும் திட்டுவார்கள்..
அந்த அடிப்படையில் தாகூர் கவிதை மொழி பெயர்ப்பு விவாகாரத்தை பதிவிட்டேன்…
அதில் என் பதிவில் அலசியதை  விட சிறப்பாக அலசியது பின்னூட்டங்கள்தான்..
சிலர் பதிவை மட்டும் பார்த்து விட்டு பின்னூட்டங்களை பார்க்காமல் சென்று விடுவார்கள் ..
அவர்களுக்காகவும், 
ஒரு கட்டுரை எழுத தேவையான உழைப்பை பின்னூட்டத்திற்கு தந்த நண்பர்களுக்கு கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் , அவர்கள் கருத்தை தனி பதிவாக தருவதில் பெருமைப்படுகிறேன்.
தானே சொந்தமாக முயற்சித்த செல்வாவையும், அதை மனமார பாராட்டிய தம்பி கூர்மதியனையும் , ஆக்க பூர்வமான கருத்துக்கள் சொன்ன நண்பர்களையும் பாராட்ட வார்தைகள் இல்லை…



****************************************
மூல கவிதை
Mind without fear


WHERE the mind is without fear and the head is held high

Where knowledge is free

Where the world has not been broken up into fragments

By narrow domestic walls

Where words come out from the depth of truth

Where tireless striving stretches its arms towards perfection

Where the clear stream of reason has not lost its way

Into the dreary desert sand of dead habit

Where the mind is led forward by thee

Into ever-widening thought and action

Into that heaven of freedom, my Father, let my country awake.

-Rabindranath Tagore
இசைஞானி இளையராஜா மொழிபெயர்ப்பு
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ..
சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ..
குடும்பத்தின் குறிகிய தடைப்பாடுகளால் வெளிஉலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு துண்டுகளாக போய்விட வில்லையோ.
வாய்சொற்கள் எங்கே மெய் நெறிகளின் அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ
அடிப்படைதேடி செல்லும் தெளிந்த நீரோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் எனும் பாலை மணலில்
வழிதவறிப் போய்விடவில்லையோ
நோக்கம் விரியவும் ஆக்க வினை புரியவும் இதயத்தை
எங்கே வழி நடத்தி செல்கிறாயோ
அந்த விடுதலை சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே
விழித்தெழுக என் தேசம் !
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு ( திரு நடராஜன் )
எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம்
எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ தலை
எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ அறிவு
எங்கே குறுகிய தேச சுவர்களால்
கூறுபட விடவில்லையோ உலகம்
எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து
வருகின்றனவோ சொற்கள்
எங்கே செம்மைக்கு செல்கிறதோ
அயர்விலா உழைப்பு
மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில்
தெளிந்த பகுத்தறிவு ஓடை
எங்கே பாதை தவறாமலிருக்கிறதோ
எப்போதும் விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும்
எங்கே நீ மனதை செலுத்துகிறாயோ
என் தந்தையே , அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில்
விழிக்கட்டும் என் தேசம்


 

தம்பி கூர்மதியன் said...
//தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல வந்தது தெரிந்தது// இப்படி செய்தால் அதன் பெயர் இது மொழிபெயர்ப்பா.??? ஒன்றின் எழுத்துகளால் பாதிக்கபட்டு அதன் கருத்தை உள்ளே எடுத்துகொண்டு எழுதுவது வேறு.. வரிகள் மாறாது கருத்துகளை மட்டும் கொண்டு வார்த்தைகளை நமது சுதந்திரம் படி மாற்றுவது வேறு... அர்த்தம் மாறாது சிறந்த பெயர்ப்பு அளிப்பது என்பது வேறு...
December 23, 2010 9:15 AM

ANKITHA VARMA said...
மொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசயம்.
December 23, 2010 3:56 PM

S e l v a.. said...
எனக்கு என்னவோ திரு நடராஜனின் மொழி பெயர்ப்பே சிறந்ததாகப் படுகிறது. ராஜ சொல்லவருவது ஒன்றுமே புரியவில்லை.
December 23, 2010 6:12 PM

ஆனந்தி.. said...
திருக்குறளை எத்தனையோ பேர் மொழிபெயர்ப்பு செஞ்சு இருக்காங்க...அதெல்லாம் அப்படியே அசங்காமல் ஒரே வார்த்தையிலா இருக்கு...Ilaiyaraja is not a professional translator..ஆனால் ஆர்வமாய் முயற்சி செய்யும் சில அழகான விஷயங்களை தூரமாய் இருந்து பாராட்டலாம்.. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அது கவிதை நடையில் வந்தால் தான் அழகு..ஒரு உரைநடை கட்டுரையை கவிதையில் மொழிபெயர்த்தால் அது கொஞ்சம் வேறுபாடா தான் தோணும்...தாகூரின் ஒரு கவிதையை இசை தேவன் அழகாய் கவிதை நடையில் கொடுத்து இருக்கிறார்..நடராஜ் சார் ஐ விட இன்னும் breezy ஆ ,அழகா தான் தோணுது...இதயம் சொல்வது தான் mind ..இந்த லாஜிக் கூட யோசிக்காமல் நடராஜ் அவர்கள் ஏன் நொள்ளை சொல்றார் னு தெரில...இளையராஜா அவர்கள் நல்ல lyricst கூட...இளையராஜா sir என்ன செஞ்சாலும் விமர்சனமா??!!...ஓகே..ஓகே..காய்ச்ச மரம் தானே கல்லடி படும்..??!!
December 23, 2010 7:36 PM

Sathish Kumar said...
அந்த தலை சிறந்த கவிஞனின் வார்த்தைகள்....! ஆஹா...ஆஹா.. படித்துக் கொண்டே இருக்கலாம்..! ராஜாவின் எழுத்தில் உயிர்...! ரசித்து மகிழ்ந்தேன்...! தாகூர் எழுதிய காலகட்டத்தை வைத்து பார்த்தால், //அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில் விழிக்கட்டும் என் தேசம்// என்று திரு.நடராஜன் முடித்திருப்பதை போல் ராஜா முடித்திருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...! மிக்க உணர்ச்சி பரவசமானேன் பார்வையாளன்..! ஞாபகப் படுத்தியமைக்கு உமக்கு கோடானுகோடி நன்றிகள்...!
December 23, 2010 7:38 PM

ஆமினா said...
ராஜா எழுதுனத ரசிச்ச அளவுக்கு நடராஜன் எழுதுனது பிடிக்கல. ஏன்னா கவிதை தனமா அது தெரியல. ஆனாலும் மொழிபெயர்ப்பு என வரும் போது எல்லாமே கச்சிதமா இருக்கணும் என்பது தானே இலக்கணம்?!! இலக்கணம் மாறுதோ.....
December 23, 2010 8:30 PM

jegadeeswaran said...
எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம் வேதனையாக இருக்கிறது. இதுதான் மொழி பெயர்ப்பா... மனம் எனும் வார்த்தை தொக்கி நிற்பதை உணரவில்லையா,. how are you?. என்பதை நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்றல்வா மொழிபெயர்கக வேண்டும். அதில் உள்ள படியே செய்கிறேன் என எப்படி இருக்ககின்றீர்கள் நீங்கள் என்று செய்தால் பாராட்டுவோமா. இல்லையே அதைதான் நடராஜன் செய்திருக்கின்றார்... - ஜெகதீஸ்வரன்.
December 23, 2010 11:38 PM

Jana said...
நடராஜன்'s Best.
December 24, 2010 2:30 AM

S e l v a.. said...
மனம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ
தலை எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ
அறிவு எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ
உலகம் எங்கே குறுகிய தேச சுவர்களால் கூறுபட விடவில்லையோ
உண்மையின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ
அயர்விலா உழைப்பு எங்கே செம்மைக்கு விரிந்து செல்கிறதோ
மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில் எங்கே
தெளிந்த பகுத்தறிவு ஓடை பாதை தவறாமலிருக்கிறதோ
விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும் எங்கே நீ மனதை எப்போதும் செலுத்துகிறாயோ
என் தந்தையே , அந்த விடுதலை ஸ்வர்க்கத்தில்
விழிக்கட்டும் என் தேசம் !
செல்வா..
December 24, 2010 4:57 AM

இர.கருணாகரன் said...
பிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகிறோம் எனும் யுக்தியாக இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. வேறொன்றுமில்லை.
December 24, 2010 8:08 PM

தம்பி கூர்மதியன் said...
@பார்வையாளன்: தவறில்லை.. அது உங்களுடைய அல்லது என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பா இருந்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது.. மேலும் ஞானியின் இந்த மொழிபெயர்ப்பும் என்னை பெரிதும் கவருவதாக இல்லை.. தாகூரின் வரிகளை மொழிபெயர்க்கையில் நயம் ஊட்டுவது ''சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு'' தவறு தான்... அதன் பெயர் மொழிபெயர்ப்பு இல்லை.. கருத்தை மட்டும் எடுத்துகொண்டு ராஜா அவருக்கே உரிய பாணியில் எழுதியிருந்தால் எனக்கும் பிடித்திருக்கும்.. கவிதை ஒருவரின் உள்குமுறலாக இருக்கும்போதே அதன் சிறந்த வெளிபாடு இருக்கும்.. தாகூரின் வெளிபாடு அளவுக்கு ராஜாவின் வெளிபாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை.. என்னுடைய வண்டியை எடுத்துட்டு போயி பட்டி, டிங்கரிங் பாக்க ராஜா யார்னு சும்மா கேக்கலாமா.?? யாரும் கோச்சிக்க வேணாம்.. சும்மா சொன்னன்.. மொழிபெயர்ப்பு என்ற பேரில் ராஜா இதை எடுத்து சரியான கருத்தை வெளிகொண்டிருந்தாலும் அதற்கு நயம் கொண்டுவந்த்தை தவறு என்கிறேன்..
December 25, 2010 12:19 AM

தம்பி கூர்மதியன் said...
@ANKITHA VARMA: இருக்கலாம்... @செல்வா: இப்படி சொல்வது சரியில்லை.. ராஜாவினதும் அருமையே.. ஆனால் என் கருத்தை பார்க்கவும்.. @ஆனந்தி: வாங்க தோழி.. திருக்குறளை ராஜா மாதிரி ரொம்ப பேமஸ் ஆனவங்க யார் தப்பா மொழிபெயர்த்தாங்கன்னு சொல்லமுடியுமா.?? உங்கள் இஷ்டத்துக்கு மாத்துறதுக்கு பேர் மொழிபெயர்ப்பு இல்ல மேடம்.. நீங்க அதிகமா புகழ்ற ஆளு இவரு தானே அதான் அவருக்கிட்ட இருக்குற குறைய காட்டுறோம்.. உங்களுக்கு வேற யாரையாவது பிடிக்கும்னா சொல்லுங்க.. அவர பத்தி கிண்டலா ஒரு பதிவு போடுறன்.. உடனே அவர் திறமைய மட்டும் பாருங்கன்னு சொல்லிடாதீங்க.. அந்த பதில் நிராகரிக்கப்படுது.. @ஆமினா: உங்கள் கருத்துகளுக்கு ஒத்துபோகிறேன்.. @jegadeeswaran: //எப்படி இருக்ககின்றீர்கள் நீங்கள்//இதுவும் சரிதான் தோழரே..!!
December 25, 2010 12:27 AM

தம்பி கூர்மதியன் said...
@நடராஜன்: ராஜாவுதும் சிறப்பாக தான் இருக்கிறது... மொழிபெயர்ப்பா இல்லை என்றாலும்... @செல்வா: சிறந்த முயற்சி...
December 25, 2010 12:30 AM
 

7 comments:

  1. எனது பாராட்டுகளை பிரதிபலித்து நீங்கள் மிக பெரியவராகிவிட்டீரே.!!
    ஆஹா.!!! கருத்துகளை அனைவரின் பார்வைக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி... இதில் மேலும் விவாதங்கள் சூடாகும் என்று எண்ணுகிறேன்.. அது வரும் போது பார்க்கலாம்.. தங்களது தாகூர் கவிதை மொழிபெயர்ப்பு பற்றிய வாக்கு பதிவேட்டை பார்த்தேன்.. அதின் என் விருப்பசாவி இல்லையே.. அதாவது ராஜாவின் கவிதை அழகு.. நடராஜனின் பெயர்ப்பு சிறப்பு.. ஆனால் இரண்டு மொழிபெயர்த்தலும் அருமை என்று சொல்லிடமுடியாது என்பது என் கருத்து...

    ReplyDelete
  2. ஹாய் சூப்பர் தோழா கூர்மதி...:))) திருக்குறள் நாமெல்லாம் ஸ்கூல் இல் படிச்சிருக்கோம்...ஆனால் நாம கோனார் தமிழ் உரை வாங்கி பொழிவுரை படிப்போம் ...காரணம் அந்த மொழிபெயர்ப்பின் என்ரிச்மென்ட் தமிழாக்கம்..அந்த பொழிவுரைக்கும் guide இல் தெளிவுரை:)போடுவாங்க...அதை தான் படிச்சிருக்கோம்..ராஜா சார் இன் மொழிபெயர்ப்பு அந்த என்ரிச்மென்ட் தமிழாக்கம் தான்...ஆனால் எனக்கு தெளிவுரை தேவைபடாத அளவுக்கு தான் ராஜா சார் எழுதி இருக்கார்..:)))நான் தாகூர் இன் கீதாஞ்சலி தமிழாக்கம் நூலகத்தில் முன்னர் படிச்சிருக்கேன்...உண்மையில் பெருசா கவரலை..ஆனால் எனக்கு நடராஜ் அவர்களை விட ராஜா சார் இன் மொழியாக்கம் பீல் ஆச்சு...இப்போ தாகூர் சொன்ன கான்செப்ட் எனக்கு புரிஞ்சுருச்சு...மொழியாக்கம் செய்யபடுவது இலக்கண விதிமுறையை கடைபிடிக்க அல்ல...நம் மொழியில் கவிதையின் கருவை ரசிக்க தான்..ஷேக்ஸ்பியரியன் ஆங்கிலம் "thee " விகுதி எல்லாம் தாகூர் கவிதையில்..இதை அழகாவே ராஜா சார் முயற்சி பண்ணிருக்கர்னு தான் எனக்கு தோணுது ....எண்டமூரி வீரேந்திரநாத்தின் மொழியாக்க கதைகள் எல்லாம் படிச்சிருக்கிங்களா கூர்மதி?? நம்ம ஊரு பாணியில் எழுத்தாளர் மாற்றி கொடுத்ததை படிச்சிருக்கிங்களா?? மொழியாக்கம் என்றால் இலக்கணம்...லொட்டு லொசுக்குனு பார்கிறதை விட...அந்த படைப்பை நம்ம மொழியில் புரிஞ்சுக்க கூடிய முயற்சி எடுத்து அதை வழங்கி..நமக்கு அதை படிக்க வாய்ப்பு கிடைப்பதை பாசிடிவ் ஆ :)))எடுத்துக்கலாம்...:)))

    அப்புறம் கட்டாயம் செல்வா அவர்களுக்கு பூங்கொத்து...உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்...கூர்மதி உங்கள் திறமையும் எனக்கு நல்லா தெரியும்...நீங்களும் முயற்சி பண்ணலாம் இன்னும் அழகாய் எனக்கு பிடித்த ராஜா சார் இன் மொழிபெயர்ப்பையும் விட..:))

    ReplyDelete
  3. ஆனந்தி அவர்களே. நீங்கள் சொல்வதில் லாஜிக் இருக்கிறது . என்ன சொல்ல வருகிறார் என்பதை மொழி பெயர்ப்பதே முக்கியம் . அந்த ஆங்கில கவிதையை படித்தபோது , அது சுதந்திர போராட்ட கவிதையா , அல்லது வேறு ஏதாவதா என குழம்பினேன் . இப்போது அதன் ஆழம் புரிகிறது.

    ReplyDelete
  4. @ஆனந்தி: உங்களுக்கு மட்டுமல்ல.. இருக்கும் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்... தாகூருக்கு என்று ஒரு நடை இருக்கிறது, தமிழை விடுத்து வேறு எதுவும் அறியாத பாமரனிடம் ராஜாவின் கவிதையை காட்டினால், ராஜா கூட்டியுள்ள நயங்கள் அனைத்தும் தாகூரின் படைப்பிலும் இருப்பதாகவே எண்ணுவான்.. நான் ஒரு வேட்கையில் சிறிது கோபத்தோடு எழுதும் என் கவிதையை நீங்கள் எடுத்துட்டு போயி என் கோபத்தை மெருகேற்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கிலேயரிடத்து கொடுத்தால் நீங்கள் மெருகேற்றிய பெரும் கோபமே என்னுடையதாக அவர்களுக்கு தெரியும்.. நான் நானாகவே மற்றவரிடத்து செல்ல விரும்புகிறேன்.. என்னை சிறப்பு படுத்தி யாரும் யாருக்காகவும் அளிக்க வேண்டாம்.. அப்படி பார்க்கையில் ராஜா அவர் மக்களுக்காக தாகூரின் படைப்பை எடுத்து செல்லும்போது அவரின் நடையில் எந்த பாதிப்பும் இல்லாமல் தான் எடுத்து செல்லவேண்டும்.. அப்படி பாதிப்பு ஏற்படுமேயானால் அது மொழிபெயர்தது அல்ல.. ராஜாவின் சொந்த படைப்பு.. நான் திரும்ப திரும்ப சொல்றது ஒண்ணுதான்.. ராஜா தாகூரின் உட்கருத்த வாங்கி அவரது நடையில் கொடுத்து இது இந்த குறிப்பிட்ட ஒன்றின் உட்கருத்தை வைத்து எழுதபட்டது என்று சொல்லியிருந்தால் நான் சல்யூட் பண்றன்.. ஆனால் அது நடக்கவில்லையே..!!! நீங்கள் கருத்துகாக பார்கிறீர்கள், நான் தாகூரின் இயல்புக்காக பார்கிறேன்.. சற்று ராஜாவின் விசிறி என்பதை தள்ளிவைத்துவிட்டு யோசித்து பாருங்கள்.. உங்களை போன்ற ஞானிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை பெற்றவர்கள் மட்டுமே இதில் ராஜாவின் நயம் பொருந்தியுள்ளது என்பதை அறிவர்.. ஆனால் என்னை போல தமிழை தவிர வேறு எதுவும் அறியாதவன் என்ன செய்வது.??? ஐயகோ.!!!
    அப்பரம் இவ்வளவு வக்கனையா குறைய சொல்லிபுட்டு நானும் மொழிபெயர்க்க மாட்டன்.. மொழிபெயர்த்தலை நான் விரும்பாதவன்.. வேண்டுமானால் அதன் உட்கருத்தை எனது நடையில் எழுத முயற்சிக்கிறேன்.. நேரம் கிடைத்தால்.. என் மேல் நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கு வணக்கங்கள்..

    ReplyDelete
  5. @பார்வையாளன்: நீங்க சொல்றத பாத்தா நான் சொல்றது எல்லாம் உருப்புடாத கருத்து மாதிரியே சொல்றீங்களே.!! ராஜாவின் ரசிகராக பேசாதீங்க.. கொஞ்சம் அந்த போதையில இருந்து வெளிய வாங்கப்பா..

    ReplyDelete
  6. நீங்க சொல்றத பாத்தா நான் சொல்றது எல்லாம் உருப்புடாத கருத்து மாதிரியே சொல்றீங்களே.!"

    தலைவரே .. அப்படி சொல்லல..

    உங்களால் நேரடியா தாகூர் கவிதையை உணர முடியுது.... எங்களால் உணர முடியவில்லை..
    எனவே சற்று விரிவாக ராஜா மொழி பெயர்த்து இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது...
    இதை படித்து விட்டு, அதன் பின் தகூர் கவிதை படித்தால் நன்றாக புரிகிறது

    ReplyDelete
  7. @பார்வையாளன்:ம்ம்.. கொஞ்சம் விளையாட்டா தான் கேட்டேன்.. இருப்பினும் எனது பெருத்த விளக்கத்துக்கு தங்களது சிறிய பதில் போதவில்லை..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா