Saturday, June 5, 2010

பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும், " கொடிய" வினவு தோழர்களும்

நான் தினமும் படிக்க விரும்பும் பதிவுகளில் ஒன்று உண்மை தமிழனின் பதிவு.. நல்லவர்..இனியவர். யாரையும் புண்படுத்த நினைக்காதவர் என்பதால், அவர் மீது ஒரு மரியாதை உண்டு ..

ஆனால், தற்போதைய பிரசின்னையை புரிந்து கொள்ளாமல், இதை திசை திருப்பும் வேளையில் இறங்கி இருப்பது சற்று வருத்தமாக இருக்கிறது ..

பிரச்சினையை விளக்க விரும்பவில்லை... அதை அவர் எப்படி பார்க்கிறார் என்பதை மட்டும் சொல்கிறேன்..

இதை இரு பதிவர்களின் சண்டை என்ற அளவில் மட்டும் பார்க்கிறார்.

அல்ல, இது ஒட்டு மொத்தாமாக பெண்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வு.

அந்த பெண் பதிவர் ஒன்றும் தவறாக எழுதவில்லை.. பிரதமரின் பேட்டியையே கிண்டல் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு., சமிபத்தில் கூட , முதல்வரின் குஷ்பு பற்றிய பேச்சை எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.. இதே போல ஒரு பதிவரின் பேட்டியை நகைசுவையோடு கிண்டல் செய்தால் , ஆபாசமாக திட்டுவதா... ? இது அக்கிரமம் அல்லவா..


பெரியவர் டோண்டு , லூசுத்தனமாக ஒன்றை சொல்லி இருக்கிறர் .." அப்படியாவது நையாண்டி செய்யப்பட்டவர் செய்தவர்களுக்கு நெருங்கிய நண்பரா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. அப்படியிருக்க ஏன் இந்த நையாண்டியெல்லாம்? இது என்ன ஒரு மச்சினி அக்கா புருஷனை கிண்டல் செய்யற மாதிரின்னு நினைச்சிருப்பாங்களோ? "

அட பாவிகளா.. என்ன ஒரு ஆணாதிக்க புத்தி,,,, ஒரு சோ ராமசாமி கருணாநிதியை கிண்டல் செய்தால் ரசிக்கிறீர்கள்.. சோனியாவை , மன்மோகனை கேலி செய்தால் புகழ்கிறீர்கள்..

அதே பணியில் ஒரு பெண் விமர்சித்தல் , அது உங்களுக்கு பிடிக்கவில்லை.. ஆபாச திட்டுக்கு அவர்கள்தான் தூண்டுதல் என்பது போல உளறுகிறீர்கள்...

இது போன்ற கருத்துக்கள் எல்லாம் , பெண்களை மிரட்டுவது போலவும், ஒதுங்கி இருக்க சொல்வது போலவும் இருக்கிறது.

( நான் பிராமணர்களை வெறுப்பவன் அல்ல.. அனால் , ஒரு பிரச்சினை என வரும்போது, அவர்கள் கக்கும் விஷம் , பெரியாரின் தேவை இன்னும் இருக்கிறது என தோன்ற வைக்கிறது )


இந்த நிலையில்தான் வினவு தலையிட்டதால் தான் , சற்று தெளிவு ஏற்பட்டது... ஆரம்பத்தில் , இதை இலக்காரமா கத்தான் , ஆணாதிக்க வாதிகள் அணுகினர். சட்ட நடவடிக்கை, டிரவுசர் நடவடிக்கை எல்லாம் முடிந்தால் எடுத்துகொள் என ஏகடியம் பேசினார். யார் பெயரையும் சொல்லாத வெறும் புனைவுதான் என சட்டம் பேசினார்கள் ..

இந்த வகையில் வினவின் தலையீட்டுக்கு, தமிழ் பதிவுலகம் கடமை பட்டுள்ளது...

"ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது"

என மிக சரியான நிலையை அவர்கள் எடுத்துள்ளனர்... ஆம். வெறும் சாரி என்பது மட்டும் இப்போது ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்காது..

சம்பந்தபட்ட நரகல் நடை பதிவரை இழிவு படுத்த வேண்டியதில்லை... அனால், அவர் உட்பட அனைவரும் அமர்ந்து பேசி , இனி மேலாவது பெண்கள் பாதிக்கபட்மல் இருக்க என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்ய , ஒரு கூட்டத்துக்கு உண்மை தமிழன் ஏற்பாடு செய்வதே அனைவருகும் நல்லது..பாதிக்க பட்ட பெண் பதிவர் என்ன நினைக்கிறார் என்பதையும் கேளுங்கள்..

மற்றபடி எல்லா பிரச்சினையும் இணைத்து பேசுவது வினவு தோழர்களுக்கு இழப்பல்ல.. நமக்குதான் இழப்பு.. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளி உலகுக்கு வர ஆரம்பிச்சு இருக்காங்க... அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்குவதுதான் நம் முதல் கடமை..

மற்றவற்றை அடுத்துகவனிக்கலாம்..எல்லாவற்றையும் ஒன்றாக கலப்பது வாதத்துக்கு நன்றாக இருக்கலாம்,, ஆனால், நடைமுறை பயன் இல்லை

பத்திரிக்கை பின் புலம் கொண்ட எழுத்தாளர் ஆதரவு கோஷ்டி, ஜாதி வெறி கோஷ்டி, ஆணாதிக்க கோஷ்டி என்ற முப்பெரும் நோய் கிருமிகளுக்கு எதிராகவும் , சாமான்யர்களுக்கு ஆதரவாகவும்தான் , வினவு தோழர்கள் இருக்கிறார்கள் என்பதை உண்மை தமிழ புரிந்து கொள்ளாததுதான் விந்தை..

துப்பாக்கி கொடிய ஆயுதம்தான்.. அனால், நல்லவர்களை காக்கும் போது , அதை ஆதரிக்க வேண்டும்..

எனவே இந்த விஷயத்தை பொறுத்த வரை, கொடிய வினவு தோழர்களை ஆதரிக்க வேண்டும்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா