Monday, June 28, 2010

ராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா

மணி ரத்னம் என்றால் நல்ல படமாகத்தான் இருக்கும், என நினைத்து ராவணன் படம் சென்றேன். நல்ல ஆரம்பம்.. நல்ல ஒளி பதிவு என்று சென்றது.

அஜித் நடித்த வாலி போல , பர பரப்பான கதை களம் .. விறு விறுப்பாக இருக்கும் என நினைத்தால், பயங்கரமாக போர் அடித்தது... எந்த விதத்திலும் நன்றாக இல்லாததால் ஆழ்ந்து கவனிக்கவில்லை.. அதை பற்றி எழுதவும் இல்லை,. ( கொஞ்ச நேரம் தூங்கி தொலைத்து விட்டேன் !! )

அதன் பின் பதிவர்களின் விமர்சனம் பார்த்தேன்.. (இப்போதெல்லாம், பத்திரிக்கைகளின் விமர்சனத்தை விட பதிவர்களின் விமர்சனம் தான் நேர்மையாக இருக்கிறது... )

அனைவருமே, சினிமா என்ற முறையில் பார்க்காமல், பழம்குடியினரை இழிவு படுத்துகிறார், வீரப்பன் கதை , முதலாளிகளின் கைபிள்ளை ஆகி விட்டார் என்றெல்லாம் சொல்வவதை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது..

ஒரு பெரிய பிரசினை எடுத்து கொண்டு, மொன்னையாக தீர்வு சொல்லி இருக்கிறார். பிரச்சினையை தட்டையாக அணுகி இருக்கிறார் என்றெல்லாம் பலர் எழுதியாக போது, மணி ரத்னம் எதற்காக தீர்வு சொல்ல வேண்டும்..இது ஒரு முக்கோண காதல் கதை தானே என்று தோன்றியது.

பதிவர்கள் தவறாக விமர்சிக்கிறார்களா அல்லது மணிரத்னம் மேல் தவற என புரியவில்லை...

நாம்தான் படத்தை சரியாக பார்க்கவில்லை போல என நினைத்து மீண்டும் ஒரு முறை நேற்று பார்த்தேன்..

ஞாயிற்று கிழமை , எந்த குப்பை படம் என்றாலும் கூட்டமாக இருக்கும்.. ஆனால் , நேற்று ராவணம் படம் ஓடும் எந்த தியேட்டரிலும் கூட்டம் இல்லை...

இன்னொரு முறை பார்த்த போதுதான், ஒரு நல்ல கதையை வீணடித்து இருக்கிறார் என புரிந்தது...

ராமாயணன், ஒடுக்கப்பட்டோர், முதலாளித்துவம் என்றெல்லாம் குழப்பாமல் , ஒரு ஆகஷன் படமாக எடுத்து இருக்கலாம்..
அல்லது, ராமயணத்தில் வரும் ராவணன் தான் நல்லவன், ராமன் ஓர் அயோக்கியன் என்று உறுதியாக காண்பித்து , திராவிட இயக்க பாணியில் எடுத்து இருக்கலாம்..

அல்லது ஒடுக்கப்பட்டோரின் வேதனை, அவர்கள் போராட்டம் , காதல் வயப்பட்டாலும், கொள்கைக்காக காதலை தியாகம் செய்தல் என்று இருந்தால், விக்ரம் கதாபாத்திரம் மேல் மரியாதை வந்து இருக்கும்..

ஐஸ்வர்யா ராய், மீண்டும் விகரமை போய் சந்தித்து என்ன சாதிக்க போகிறார் என இயக்குநருக்கே புரியவில்லை...

எனவே , கூட்டி கழித்து பார்த்தல், மணிரத்னம் மேல்தான் தவறு, பதிவர்கள் மேல் தவறு இல்லை என தீர்ப்பு வழங்குகிறேன்.

7 comments:

  1. ஒரு குப்பை படத்தை இரண்டு தடவை பார்த்த ஆள் நீங்களாகத்தான் இருக்கும்..

    ReplyDelete
  2. உண்மையில் அதற்காக வெட்க படுகிறேன். வேதனை படுகிறேன்... ஆனால், அந்த படத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என நேரடியாக உணர , இது உதவியது...

    ReplyDelete
  3. yaar எடுத்தாலும் படம் நல்லாருந்தாத்தான் ஓடும்.

    ReplyDelete
  4. This film clearly proves that the credit Mani ratnam had got for his earlier movies must belong to someone else!. The country has been praising the wrong man so far. Unfortunately, the real genius has passed away(we would not have seen the "real" talent of Mani otherwise!)

    ReplyDelete
  5. இதுக்காகவே இரண்டு முறை பார்த்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா