Monday, June 21, 2010

கூண்டு கிளி

உண்மையான ஞானி யார் , போலி எது என அறிவு ஜீவிகளும் கூட குழம்பும் கால கட்டத்தில், மிக எளிய லிட்மஸ் டெஸ்ட் ஒன்றை நண்பர் கே.ஆர்.பி.செந்தில் நம் பதிவுக்கான பினஊடத்தில் சொல்லி இருந்தார் .

"உண்மையான சித்தர்கள் யாசிக்க மாட்டார்கள்.. கிடைத்ததை சாப்பிடுவார்கள் அல்லது சாப்பிடாமல் இருப்பார்கள்.."

அருமை... ஆனால், அது சிறிய பின்ஊட்டம் என்பதால் பலர் படிக்கவில்லை... அது நல்ல கருத்து என்பதை விட , தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்பதால், இந்த பதிவு..


சித்தர்கள்., ஞானிகள் என்பவர்களை தேடி நான் அலைந்த காலம் உண்டு.. செந்தில் சொன்னது போல , ஞானிகள் மார்க்கெட்டிங் செய்வத்தில்லை... நம்மிடம் அவர்களுக்கு ஆவது ஒன்றும் இல்லை.. நாம் தான் அவர்களை தேடி செல்ல வேண்டும்... போனதும் நம்மை சேர்த்து கொள்ள மாட்டார்கள்,, விரட்டி அடிக்க பார்ப்பார்கள்... அவர்கள உண்மையானவர்கல்தனா, என சந்தேகம் தோன்றும் அளவுக்கு கூட கொடூரமாக , இரக்கமே இல்லாமல் துரத்தி அடிப்பார்கள்...
அதாவது, நாம் குருவை தேர்ந்தெடுக்க முடியாது.. குருதான் நம்மை தேர்ந்தெடுக்க வேண்டும்...

அப்படி ஒரு சித்தருடன் ஒன்றாக இருந்து பலவற்றை கற்று கொண்ட நண்பர் ஒருவர், ஞானிகள் எதிர்பார்ப்பது நம் காசை அல்ல.. புகழையும் அல்ல... நமக்கு தகுதி இருந்தால் , சொல்லி தருவார்கள்.. பயிற்சி கடுமையாக இருக்கும்.. பொழுது போக்குக்காக எல்லாம் இதை கற்க முடியாது என்றார்...

எதாவது ஒரு பயிற்சி சொல்லி தாருங்களேன் என கேட்டேன்... அங்கு நடப்பதை வெளியே சொல்ல முடியாது... உனக்கு தகுதி இருந்தால், நீயே அழைக்க படுவாய்,,, நீயே கற்பாய்... நட்பு என்பது வேறு.. இது வேறு என்று சொல்லி விட்டார்...

ஒரு முறை மரியாதைக்குரிய , பலராலும் அறியப்பட்ட ஒரு ஞானியை ( பெயர் வேண்டாம் ) , சந்திக்க நானும் நண்பரும் சென்றோம்... இருவரும் முதல் முறையாக செல்கிறோம்... அந்த ஞானி என்னை பார்க்க மறுத்து விட்டார்... நண்பருக்கு எப்படியோ வாய்ப்பு கிடைத்து பார்த்தார்....
அதனால், அவர் மேல் கோபம் இல்லை... சரி, நமக்கு தகுதி இல்லை என நினைத்து கொண்டேன்... எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் , அவர் விரும்பி அழைத்தால்தான் பார்க்க முடியும்..

அப்படி இருந்த ஞானியை, சில சீடர்கள், மார்க்கெட்டிங் சாமியாராக மாற்றினர்...

அவரை தேடி பெரிய மனிதர்கள் வந்தது போய் , மார்க்கெட்டிங் செய்வதற்காக அவர் பணக்காரர்களை தேடி வரும் நிலை ஏற்பட்டது... ஒரு நாத்திகாவதியான நண்பன் வீட்டுக்கு அவர் வரும்போது, (முன்பு அவரை பார்க்கமுடியாத என் ஏமாற்றத்தை தெரிந்த வைத்து இருந்த அவன் , நல்ல எண்ணத்தில் ) என்னை வீட்டுக்கு அழைத்தான்... அவரை பார்த்தல் நான் சந்தோஷ படுவேன் என்பது அவன் எண்ணம்... ஆனால்., அந்த நிலையில் அவரை பார்க்க விரும்பவில்லை...


ஞானி என்ற கம்பீரம் சரிந்து விட்டதாக என் எண்ணம் ..

தன்னை குனபடுத்திய , தனக்கு பயிற்சிகள் அளித்த நித்யனந்தரை , இன்று திட்டுகிறார்கள் என்றால், அங்கு குரு- சிஷ்ய மனோபாவம் இல்லை என்பதே அர்த்தம்... விற்பனையாளன்- வாடிக்கையாளன் என்ற உறவுதான் தெரிகிறது...

எனக்ககேன்னவோ, உண்மை என்பதை , கிளாஸ் எடுத்து சொல்லி கொடுக்க முடியாது என்றே தோன்றுகிறது... கிளாஸ் முடிவில், இவன் ஞானி ஆகிவிட்டன என சான்றிதழ் வேறு கொடுப்பது எல்லாம் அபத்தம்...

உண்மையை என்பதை அவரரவர் தான் கண்டுபிடிக்க முடியும்... அதற்கான வழி ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..

2 comments:

  1. nanba
    everything inside u.if u r not realize the thing within u u cant realize outside.keep ur body flexible be st always with ur back bone .
    all the secreteverything inside ur end part the back bone .kuyyam.we r all just a joule of energy.

    ReplyDelete
  2. ஞானி என்ற கம்பீரம் சரிந்து விட்டதாக என் எண்ணம் .. //
    அசலான வார்த்தைகள்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா